search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழையின்றி கருகி வரும் நெற்பயிர்கள்
    X

    மழையின்றி கருகி வரும் நெற்பயிர்கள்

    • மழையின்றி நெற்பயிர்கள் கருகி வருகின்றன.
    • நிலுவையில் இருக்கும் பயிர் காப்பீடு தொகையை அரசு உடனே வழங்க வேண்டும்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் முக்கியமான தொழிலாக விவசாயம் அதிகளவில் நடைபெறுகிறது.

    பருவ மழை இல்லாமல் போனதால் சீமானேந்தல், குண்டுகுளம், வேப்பங்குளம், கோவிலாங்குளம், முதல்நாடு, பசும்பொன் ஆகிய கிராம பகுதிகளில் நெற்பயிர்கள் கருகி வருகிறது. இதுகுறித்து விவசாயி முருகேசன் கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளாக கமுதி வட்டாரத்தில் சரியான மழையில்லாமல் போனதால் விவசாயம் சரிவர விளைச்சல் இல்லாமல் போய்விட்டது. அதுபோல 3 ஆண்டுகளாக எங்கள் பகுதிக்கு அக்ரி இன்சூரன்ஸ் நிறுவனம் இதுவரை பயிர் காப்பீடு நிதியை வழங்கவில்லை. நிலுவையில் இருக்கும் பயிர் காப்பீடு தொகையை அரசு உடனே வழங்க வேண்டும்.

    கடலில் வீணாக கலக்கும் வைகை ஆற்றின் தண்ணீரை கமுதி பகுதிக்கு கொண்டு வந்தால் விவசாயம் செழிக்கும். அதற்கு கலெக்டர், அமைச்சர், அதிகாரிகள் அனைவரும் கவனத்தில் கொண்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முன்வர வேண்டும் என்றார்.

    Next Story
    ×