search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகசூல்"

    • முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் மழைகாலத்தில் நெற்பயிர்களை பாதுகாக்கலாம்.
    • மகசூல் இழப்பை தவிர்க்க கேட்டு கொள்ளப்படுகிறது.

    சீர்காழி:

    வடகிழக்கு பருவ மழை காலத்தில் பயிர்களை பாதுகாக்க முன்னெச்ச ரிக்கை நடவடி க்கை குறித்து சீர்காழி வேளாண்மை உதவி இயக்குநர் ராஜராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிப்பதாவது:-

    தற்போது பருவ மழையின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார ங்களிலும் மிதமானது முதல் அதிக கனமழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தை எதிர்கொள்ள விவசாயிகள் சில பயிர்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு விவசாயிகள் பின்வரும் வழிமுறைகளை கடைபிடிக்கவேண்டும்.

    மழைநீர் சூழ்ந்துள்ள நெல் வயல்களில் உடனடியாக வடிகால் வசதி ஏற்படுத்தி நீரை வடித்து வேர்பகுதிக்கு காற்றோட்டம் கிடைக்கச் செய்தல் வேண்டும். நீரில் மூழ்கிய நெற்பயிரில் ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை நிவர்த்தி செய்ய ஏக்கருக்கு 22 கிலோ யூரியா 18 கிலோ ஜிப்சம் இவற்றுடன் 4 கிலோ வேப்பம்புண்ணாக்கு கலந்து ஒரு இரவு முழுவதும் வைத்து வயல்களில் தண்ணீர் வடிந்தவுடன் இடவேண்டும். மேலும் போதிய சூரிய வெளிச்சம் தென்பட்டவுடன் ஏக்கருக்கு 2 கிலோ யூரியாவுடன், 1 கிலோ ஜிங்க் சல்பேட் உரங்களை 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து கைத்தெளிப்பான் மூலம் இலை வழி உரமாக தெளிக்க வேண்டும். தண்டு உருளும் பருவம் மற்றும் பூக்கும் பருவத்தில் உள்ள பயிர்களுக்கு ஏக்கருக்கு 4 கிலோ டிஏபி உரத்தை 10 லிட்டர் தண்ணீரில் முதல்நாள் ஊற வைத்து மறுநாள் வடிகட்டி, கரைசலுடன் 2 கிலோ யூரியா மற்றும் 1கிலோ பொட்டாஷ் உரத்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை வேளையில் கைத்தெளிப்பான் கொண்டு தெளித்து மகசூல் இழப்பை தவிர்த்திட கேட்டு கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பயிர் நெருக்கமாக இருப்பதால் சரியாக தூர் கட்டுவதில்லை.
    • கருவி மூலம் விதைப்பு செய்து அதிக மகசூல் பெற கேட்டுக்கொள்கிறேன்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் குருவை தொகுப்பு திட்டம் செயல்படுத்துவதற்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    அதில் மயிலாடுதுறை வேளாண்மை இணை இயக்குனர் சேகர் கலந்து கொண்டு சீர்காழி மற்றும் கொள்ளிடம் வட்டார வேளாண்மை அலுவலர்கள் துணை வேளாண்மை அலுவலர்கள், உதவி விதை அலுவலர்கள் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்களை ஆய்வு செய்தார் குருவை தொகுப்பு திட்டம் அனைத்து விவசாயிகளையும் சென்றடை வதற்கான அறிவுரைகளை வழங்கினார்.

    அதன்பிறகு புங்கனூர் கிராமத்தில் செல்வராஜ் என்ற விவசாயின் வயலில் விதைப்பு கருவி மூலம் விதைப்பு செய்த வயலினை ஆய்வு மேற்கொண்டார்கள் அப்போது விதைப்பு கருவி மூலம் விதைப்பு செய்த வயலில் ஏக்கருக்கு எட்டு கிலோ விதை அளவு போதுமானது மேலும் ஒரே சீரான இடைவெளியில் நெல் பயிர் உள்ளது பயிருக்குப் பயிர் போதுமான இடைவெளி இருப்பதனால் நன்கு தூர் பிடித்துள்ளது. சாதாரண முறையில் விதைப்பு செய்வதால் விதை அளவு அதிகம் தேவைப்படுவதுடன் பயிர் நெருக்கமாக இருப்பதினால் சரியாக தூர் கட்டுவதில்லை

    எனவே அனைத்து விவசாயிகளும் விதைப்பு கருவி மூலம் விதைப்பு செய்து அதிக மகசூல் பெற கேட்டுக்கொள்கிறேன். விதைப்பு கருவி 50 சதவீத மானிய விலையில் வேளாண்மை துறையில் உள்ளது எனவே தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவல ர்களை தொடர்பு கொண்டு 50 சத மானிய விலையில் பெற்றுக் கொள்ளலாம் என கூறினார் ஆய்வின் போது வேளாண்மை உதவி இயக்குனர் சீர்காழி ராஜராஜன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் ராமச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்    

    • இந்த ஆண்டும் மகசூலில் சாதனை படைக்க வேண்டும்.
    • 5.20 லட்சம் ஏக்கரில் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் முப்போகம் சாகுபடி செய்யப்படும். குறுவை சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு இன்று மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதல் -அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இன்னும் ஓரிரு நாட்களில் அந்த தண்ணீர் கல்லணைக்கு வந்து சேரும்.

    அதன் பிறகு அங்கிருந்து பாசனத்துக்காக காவிரி, கொள்ளிடம் ,கல்லணை கால்வாய், வெண்ணாற்றில் தண்ணீர் திறந்து விடப்படும்.

    இதையொட்டி தற்போது டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

    காவிரி நீர் வருவதற்கு முன்பாக கடந்த வாரம் பெய்த மழையை பயன்படுத்தி வயலில் உழவு செய்வது, வரப்புகளை சீரமைப்பது , நாற்றங்கால் தயாரிப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    குறுவை சாகுபடியில் கடந்தாண்டை போலவே இந்த ஆண்டும் மகசூலில் சாதனை படைக்க வேண்டும் என்பதால் காவிரி டெல்டா மாவட்டங்களில் வழக்கமாக மேற்கொள்ளப்படும் 3.60 லட்சம் ஏக்கரை விட 5.20 லட்சம் ஏக்கரில் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு தேவையான விதைகள், உரங்கள் ஆகியவற்றை வேளாண் விரிவாக்க மையங்கள், கிடங்குகள், தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைத்து விற்பனை செய்து விவசாயிகளுக்கு தேவையான ஆலோ சனைகளை வேளாண்மை துறையினர் வழங்கி வருகின்றனர்.

    இதனால் இந்த ஆண்டும் இலக்கை விஞ்சி குறுவை சாகுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • தென்னை மரத்தில் வெள்ளை ஈ தாக்கம் அதிகம் காணப்படுகிறது.
    • மருந்து தெளிக்கும் போது பூச்சிகள் இறக்கும்.

     உடுமலை :

    பூச்சி மேலாண்மையில் அதிக மருந்துகளை தெளிப்பதால் பூச்சிகளின் அடுத்த தலைமுறை நோய் எதிர்ப்பு சக்தி பெற்று பாதிப்பின் அளவை அதிகரித்து விடுகிறது என வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:- சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் தற்போது சற்று அதிகம் உள்ளது. உதாரணமாக தென்னை மரத்தில் வெள்ளை ஈ தாக்கம் அதிகம் காணப்படுகிறது. இப்பூச்சி உறிஞ்சுவதால் ஏற்படும் பாதிப்பை காட்டிலும் அதனால், ஏற்படும் அடுத்த கட்ட விளைவால் மகசூல் பாதிப்பு அதிகம் உள்ளது.

    அதாவது வெள்ளை ஈ சாறு உறிஞ்சும் போது தேன் போன்ற ஒரு திரவத்தை சுரக்கிறது. அதை சுற்றி பூஞ்சைகள் உருவாகி கருப்பு நிறத்தில் மாறிவிடுகிறது. இதற்கு விவசாயிகள் பலர் மருந்துகளை அதிகளவில் தெளித்து விடுகின்றனர். முதன்முறை மருந்து தெளிக்கும் போது பூச்சிகள் இறக்கும். அதன் அடுத்தகட்ட தலைமுறை, எதிர்ப்பு சக்தியை உண்டாக்கி விடுவதால் மருந்து பயனின்றி போகும் நிலை உருவாகும். இதனால் பூச்சியை ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறை வாயிலாக மட்டுமே கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    பூச்சி மேலாண்மையால் எப்படி கட்டுப்படுத்துவது? முதலில் மஞ்சள் நிறத்தில் எண்ணெய் தடவிய அட்டையை வைத்து பூச்சியை ஈர்க்க வேண்டும். இதன் வாயிலாக பாதியை கட்டுப்படுத்தலாம். பல்கலை தரப்பில் ஒட்டுண்ணி தயாரித்து வழங்கப்படுகிறது. அதை பத்து மரத்திற்கு ஒன்று என மரத்தில் கட்டி தொங்கவிடவேண்டும். ஒருவர் ஒரு நிலத்திற்கு இதை செய்வதால் பூச்சிகளை கட்டுப்படுத்த இயலாது. விவசாயிகள் குழுவாக இணைந்து ஒருங்கிணைந்த மேலாண்மையை பின்பற்ற வேண்டியது அவசியம்.

    வாடல் நோய் தென் மேற்கு மலைப்பகுதிகளில் உள்ள இடங்களில் துவங்கி, வேகமாக பிற தோட்டங்களுக்கும் பரவி வருகிறது. ஆரோக்கியமற்ற மரங்களே முதலில் பாதிக்கப்படுகின்றன. இதற்கு மரங்களை வலுப்படுத்த விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். வேளாண் அதிகாரிகள் தோட்டங்களுக்கு சென்று, செயல்முறை விளக்கம் அளித்து வருகின்றனர். விவசாயிகள் பல்கலையில் அளிக்கும் திறன் மேம்பாடு பயிற்சி, ஒட்டுண்ணி போன்றவற்றை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் .

    • சிவகங்கை மாவட்டத்தில் அதிக மகசூல் பெற்ற 3 பட்டுக்கூடு விவசாயிகளுக்கு ரொக்கப்பரிசு கலெக்டர் வழங்கினார்.
    • விவசாயி ராமையாவுக்கு ரூ.15 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பட்டு வளர்ச்சித்துறையின் சார்பில் 2022-23-ம் ஆண்டிற்கான மாவட்ட அளவில் சிறப்பான முறையில் பட்டுப்புழு வளர்த்து பட்டுக்கூடு அதிக மகசூல் பெற்ற 3 பட்டு விவசாயிகளுக்கு ரொக்க பரிசுத்தொகைக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த விவசாயிகளுக்கு கலெக்டர் மதுசூதன் ரெட்டி ரொக்கப்பரிசுக்கான காசோ லைகளை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மேம்பாட்டு வளர்ச்சிக்கான பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறார். அதில், விவசாயத்திற்கு தனிகவனம் செலுத்தி விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    அதன் அடிப்படையில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் காளையார்கோவில் வட்டம், சாத்தனி கிராமத்தில் விவசாயி குமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் மல்பெரி பயிரிட்டு பட்டுப்புழு வளர்த்து பட்டுக்கூடு அதிக மகசூல் பெற்றதற்காக முதல் பரிசு ரூ.25 ஆயிரமும், சிவகங்கை வட்டம், கூத்தாண்டன் கிராமத்தில் விவசாயி அமுதாராணி 2 ஏக்கர் பரப்பளவில் மல்பெரி பயிரிட்டு பட்டுப்புழு வளர்த்து பட்டுக்கூடு வளர்த்து அதிக மகசூல் பெற்றதற்காக 2-ம் பரிசு ரூ.20ஆயிரமும், காளையார்கோவில் வட்டம், சாத்தனி கிராமத்தில் விவசாயி ராமையாவுக்கு 3-ம் பரிசு ரூ.15 ஆயிரமும் வழங்கப்பட்டது என்றார்.

    அப்போது பட்டு வளர்ச்சித்துறை உதவி ஆய்வாளர் முத்துக்குமார் உடனிருந்தார்.

    • சம்பா ரகத்தை விதைப்பு செய்து வெற்றிகரமாக அறுவடை செய்துள்ளார்.
    • 5000 கிலோ மகசூல் செய்த விவசாயியை அனைவரும் பாராட்டுகின்றனர்.

    பூதலூர்:

    தமிழகத்தில் நெல் விவசாயம் முழுவதும் நவீனமயமாக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

    அனைத்துக்கும் இயந்திரங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் ரசாயன உரங்கள் இல்லாமல் இயற்கையான முறையில் வேளாண்மை செய்து அதன் மூலம் தரமான நெல்லை அரிசியை தர வேண்டும் என்று ஒரு பக்கம் முன்னெடுப்புடன் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

    இயற்கை வேளாண்மை முயற்சிகள் விவசாயிகளிடையே முழுமையான தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும் ஒரு சிலர் பரிட்சார்த்தமுறையில் இயற்கை விவசாயத்தை செய்து வருகின்றனர்.

    இது போன்ற ஒரு நிலையில் பூதலூர்- தஞ்சை சாலையில் உள்ள பிள்ளையார் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி குழந்தைவேலு தன் மகன் பார்த்திபனுடன் இணைந்து தன்னுடைய விவசாய நிலத்தில் அரை ஏக்கர் பரப்பில் மருத்துவ குணம் கொண்ட சீரக சம்பா ரகத்தை விதைப்பு செய்து வெற்றிகரமாக அறுவடை செய்துள்ளார்.

    அவர் தஞ்சை அருகே உள்ள நடார் கிராமத்தில் நடைபெற்ற வேளாண் திருவிழாவில் கண்காட்சியில் இலவசமாக வாங்கிய சீரகசம்பாவிதை நெல்லை விதைத்து நல்ல முறையில் அறுவடை செய்துள்ளார்.

    120 நாள் வயதுள்ள சீரகச் சம்பா நெல்லை இவர் தனது வயலின் ஒரு பகுதியில் நேரடி விதைப்பாக விதைப்பு செய்துள்ளார்.விதைப்பு செய்த உடன் எந்தவித ரசாயன உரங்கள் பயன்படுத்தவில்லை.

    ஒரே ஒருமுறை மற்றும் களை எடுத்துள்ளார்.நல்ல நிலையில் வளர்ந்து அறுவடைக்கு தயாரான நிலையில் ஆட்களை விட்டு அறுத்து வயலிலேயே தார்ப்பாய் போட்டு ஆட்களை கொண்டு அடித்து விளைச்சலை கண்டுள்ளார்.இவர் அரை ஏக்கர் பரப்பில் பயிற்செய்த சீரகசம்பா நெல் 16 மூட்டை மகசூல் கண்டுள்ளது.

    எந்தவித செலவும் இல்லாமல் வேளாண் திருவிழாவில் இலவசமாக வாங்கிய விதையை கொண்டு விதைப்பு செய்து மற்றவர்களுக்கு முன்னதாக அறுவடை செய்து ஏறக்குறைய 5000 கிலோ மகசூல் செய்த விவசாயியை அனைவரும் பாராட்டுகின்றனர்.

    • பயறு வகை பயிர்களை ஏக்கருக்கு 10 கிலோ விதை என்ற அளவில் விதைக்க வேண்டும்.
    • 4 கிலோ எஏ.பி உரத்தினை 4-6 லிட்டர் தண்ணீரில் ஊர வைக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வேளாண்மை உதவி இயக்குநர் ஐயம்பெருமாள் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது ;-

    தஞ்சாவூர் வட்டாரத்தில் சம்பா பருவத்தில் சுமார் 14000 ஏக்கர் பரப்பில் நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நெல் தரிசில் உளுந்து பயிர் சாகுபடி செய்ய அனைத்து விவசாயிகளும் முன்வர வேண்டும்.

    நெல் அறுவடைக்கு பின் உளுந்து சாகுபடி செய்வதன் மூலம் குறைந்த நாளில் குறைந்த செலவில் அதிக மகசூல் பெறலாம்.

    தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் பயறு வகை பயிறுகளின் சாகுபடியை ஊக்கப்படுத்தி சாகுபடி பரப்பை அதிகரிக்கும் விதமாக நெல்லுக்குப் பின் உளுந்து சாகுபடி திட்டம் இவ்வாண்டில் சிறப்பு திட்டமாக செயல்படுத்தப்படுகிறது.

    இதன்படி நெல்லுக்கு ப்பின் உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உளுந்து விதை ஏக்கருக்கு 8 கிலோ வீதம் 50 சதவீத மானியத்தில் விநியோகம் செய்யபடுகிறது.

    இவ்வட்டாரத்தில் தஞ்சாவூர் விரிவு, சூரக்கோட்டை, வல்லம் மற்றும் மானங்கோரை வேளாண்மை விரிவாக்க மையங்கள் விதை உளுந்து இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    விவசாயிகள் தங்கள் விபரத்தை உழவன் செயலியில் முன்பதிவு செய்து கொள்ளவேண்டும்.

    நெல் தரிசில் சம்பா, தாளடி சாகுபடிக்குப்பிறகு மார்கழி தை மாதங்களில் பயறு வகை பயிர்கள் சாகுபடியை மேற்கொள்ளலாம். உளுந்து -ஆடுதுறை 3, ஆடுதுறை 5, ஆடுதுறை 6, வம்பன் 6, வம்பன் 8

    பாசிபயிறு - ஆடுதுறை 3. கோ8 ஆகும்.

    சரியான அளவு பயிர் எண்ணிக்கையை பராமரிப்பதால் அதிக விளைச்சல் பெற வாய்ப்புள்ளது.

    எனவே பயறு வகை பயிர்களை ஏக்கருக்கு 10 கிலோ விதை என்ற அளவில் விதைக்க வேண்டும்.

    ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டசிம் அல்லது 4 கிராம் டிரைகோடெர்மா விரிடி உயிர்ப் பூஞ்சாணம் என்ற அளவில் கலந்து 24 மணி நேரம் கழித்து விதைக்கவும்,

    சம்பா மற்றும் தாளடி நெல் அறுவடைக்கு 7-10 நாட்களுக்கு முன் மண் ஈரம் மெழுகுப்பதத்தில் இருக்கும் போது விதைக்க வேண்டும்.

    நெல் தரிசு பயிறுவகைப்பயிர்களை பயிறுகளின் ஆரம்ப கால வளர்ச்சி பருவத்தில் பல்வேறு களைகள் போட்டியிட்டு மகசூலை பாதிப்பதால் களை நிர்வாகம் இன்றியமையாதது நெல் தரிசுப்பயிரில் விதைத்த 18-20 ஆம் நாள் அதாவது சம்பா நெல் அறுவடை செய்த 10 ம் நாள் குயிஸலாபாப் ஈத்தைல் என்ற களைக்கொல்லியை ஏக்கருக்கு 400 மி.லிட்டர் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மி.லிட்டர் அளவில் தெளிப்பதால் வயலில் உள்ள புல் வகைகள், நெல் மறுதாம்பு பயிர மற்றும் அறுவடையின் போது விழுந்து முளைத்த நெல் நாற்றுகள் ஆகியவை நன்கு கட்டுப்படுத்தப்படுவதால் உளுந்து பயிருக்கு மண்ணில் உள்ள எஞ்சிய ஈரம் மற்றும் கிடைக்கப்படுகிறது.

    ஏக்கருக்கு 4 கிலோ எஏ.பி உரத்தினை 4-6 லிட்டர் தண்ணீரில் ஊர வைக்க வேண்டும்.

    பிறகு தெளிந்த கரைசலை மட்டும் எடுத்து 200 லிட்டர் தண்ணீரில கலந்து கைத்தெளிப்பான் கொண்டு இலைகளில் நன்கு படும்படி தெளிக்க வேண்டும்.

    பூக்கும் தருணத்தில்(விதைத்த 25ம் நாள்) ஒரு முறை மற்றும் 15 நாட்கள் கழித்து அதாவது காய்கள் பிடிக்கும் தருணத்தில் விதைத்த 40ம் நாள் மறுமுறையும் தெளிக்க வேண்டும்.

    எனவே, இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி நிறைந்த மகசூலும் வருவாயும் மண்வளத்தையும் கொடுக்கும் உளுந்து சாகுபடியை அனைத்து விவசாயிகளும் மேற்கொண்டு பயனடைய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • 50 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள்.
    • ஏக்கருக்கு 30 முதல் 40 மூட்டைகள் வரை நெல் மகசூல் கிடைக்ககிறது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா கருப்பம்புலம், வடமழை மணக்காடு, கரியாபட்டினம், பிராந்தியங்கரை உள்ளிட்ட பகுதியில் 50 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் எந்திரம் மூலம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    கடந்த ஆண்டு அறுவடை எந்திரம் போதுமானதமாக வராததால் ஒரு மணி நேரத்திற்கு ரூ.2 ஆயிரத்து 100 கூலி கொடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றது.

    ஆனால், இந்த ஆண்டு அறுவடை எந்திரம் கூடுதலாக வந்துள்ளதால் தற்போது ஒரு மணி நேரத்திற்கு ரூ. 1,800 மட்டும் கூலியாக பெறுகின்றனர்.

    இந்த ஆண்டு நெல் விளைச்சல நன்றாக இருப்பதாகவும், ஏக்கருக்கு 30 முதல் 40 மூட்டைகள் வரை நெல் மகசூல் கிடைக்ககிறது எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

    மேலும், அரசு நெல் மூட்டைகளை காலதாமதம் இல்லாமல் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நானோ யூரியா இலை வழியே ஊடுருவி இலை முதல் வேர் வரை சென்று தழைச்சத்தினை அளிக்கின்றது.
    • மண், நீர் மற்றும் காற்று மாசடையாமல் சுற்றுச்சூழலை பாதுகாத்து 8 சதவீத மகசூலை நெற்பயிரில் அதிகரிக்கிறது.

    தரங்கம்பாடி:

    வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அட்மா திட்டம் மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட கிராமம் அகரகீரங்குடி பகுதியில் நானோ யூரியா ட்ரோன் மூலம் தெளிப்பது குறித்து செயல் விளக்கம் வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பையன் தலைமையில் தர கட்டுப்பாடு வேளாண்மை உதவி இயக்கு சுபவீரபாண்டியன் முன்னிலையில் நடைபெற்றது.

    நானோ யூரியா இலை வழியே ஊடுருவி இலை முதல் வேர் வரை சென்று தழைச்சத்தினை அளிக்கின்றது.

    நானோ யூரியா உரத்தின் பயன்பாட்டுத்திறன் குருணை வடிவ யூரியாவை விட அதிகமாக உள்ளது. மண் நீர் மற்றும் காற்று மாசு அடையாமல் சுற்றுச்சூழலை பாதுகாத்து 8 சதவீத மகசூலை நெற்பயிரில் அதிகரிக்கிறது.

    500 மில்லி நானோ யூரியா திரவம் ஒரு மூட்டை யூரியாவுக்கு இணையான பலனை அளிக்கிறது. ஒரு ஏக்கர் நெல் வயலுக்கு 500 மி.லி நானோ யூரியா மற்றும் 20 மி.லி ஒட்டுப்பசை தேவைப்படுகிறது.

    அனைத்து வகையான உதவி பயிர்களுக்கும் யூரியா மேலுறத்திற்கு பதிலாக நானோ யூரியாவை பயன்படுத்தலாம் என்று அட்மா திட்ட வட்டார தொழிற்நுட்ப மேலாளர் திருமுருகன் கூறினார்.

    பின்னர் டிரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பு செயல் விளக்கம் வயலில் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    வேளாண்மை உதவி அலுவலர் சுகுமார், அட்மா திட்ட உதவி மேலாளர்கள் விஜய் மற்றும் மதுமனா ஆகியோர் நிகழ்ச்சி செயல் விளக்க ஏற்பாடுகளை செய்து இருந்தார்கள்.

    • நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறுவது குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
    • 50 ஆதிதிராவிட விவசாயிகளுக்கு மின்கலன் தெளிப்பான், தார்ப்பாய், நானோ யூரியா வழங்கல்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே விளந்திட சமுத்திரம் ஊராட்சியில் இந்திய நெல் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறை, பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் நெற்பயிரில் அதிக மகசூல் பெற ஆதிதிராவிட விவசாயிகளுக்கான ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வேளாண்மை கல்லூரி முதல்வர் புஷ்பராஜ் தலைமை தாங்கினார்.

    மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சேகர் முன்னிலை வகித்தார்.

    வேளாண்மை கல்லூரி பேராசிரியர் சாமிநாதன் வரவேற்று பேசினார்.

    முகாமில் இந்திய நெல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சுந்தரம், வேளாண் கல்லூரி பேராசிரியர் மோகன், வேளாண்மை கல்லூரி பூச்சிகள் துறை பேராசிரியர் கான்டீபன் ஆகியோர் கலந்து கொண்டு நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறுவது குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

    தொடர்ந்து ஒன்றிய குழு துணை தலைவர் உஷா நந்தினி பிரபாகரன், ஊராட்சி மன்ற தலைவர் ரமணி ராஜ் ஆகியோர் 50 ஆதிதிராவிட விவசாயிகளுக்கு மின்கலன் தெளிப்பான், தார்ப்பாய், நானோ யூரியா, பாஸ்போர்ட், யூரியா, அசோஸ்பைரில்லம், ஜிங் சல்பேட் கொண்ட தொகுப்பினை வழங்கினர்.

    இதில் வேளாண் உதவி இயக்குனர் ராஜராஜன், வேளாண் அலுவலர்கள் தமிழரசன், ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வேளாண் கல்லூரி பேராசிரியர் பார்த்தசாரதி நன்றி கூறினார்.

    • ஒரு ஏக்கருக்கு ஒருமுறை மேலுரம் இடுவதற்கு அரை மூட்டை யூரியா.
    • மகசூலும் ஏக்கருக்கு 300 கிலோ முதல், 500 கிலோ வரை கூடுதலாக கிடைக்கிறது.

    மெலட்டூர்:

    அம்மாபேட்டை வட்டாரம், சூழியக்கோட்டை கிராமத்தில் வேளாண்மை துறை மற்றும் இந்திய உழவர் உர கூட்டுறவு நிறுவனம் சார்பில் டிரோன் மூலமாக நானோ யூரியா தெளிப்பு செயல்முறை விளக்கம் மற்றும் வயல்வெளி தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அம்மாபேட்டை உதவி வேளாண் இயக்குனர் மோகன், இந்திய உழவர் உர கூட்டுறவு நிறுவன விற்பனை துணை மேலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் டிரோன் மூலம் நானோ யூரியா தெளிக்கும் வயல்வெளி செயல்முறை விளக்கம் தந்து இப்கோ நிறுவன அதிகாரி சுரேஷ், டிரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பது குறித்து கூறியதாவது,

    விவசாயிகள் உரசெலவை குறைக்கும் வகையில் 500 மில்லி நானோ யூரியா, ஒரு மூட்டை யூரியாவுக்கு சமமானது ஆகும். வழக்கமாக ஒரு ஏக்கருக்கு ஒருமுறை மேலுரம் இடுவதற்கு அரை மூட்டை யூரியா, அரை மூட்டை பொட்டாஷ் பயன்படுத்தப்படுகிறது.

    இதன் செலவு ரூ.1000 வரை செலவாகிறது. அதற்கு பதிலாக அரை லிட்டர் நானா யூரியா மற்றும் அரை லிட்டர் சாகரியா இரண்டையும் கலந்து ஒரு ஏக்கருக்கு தெளிப்பதன் மூலம் உர செலவு பாதியாக குறைகிறது.

    மேலும் நானா யூரியா இலை வழியாக உறிஞ்சப்பட்டு பயிரிநுல் ஊடூருவி செல்கிறது.

    இதன் மூலம் மண் வளம் காக்கப்படுவதோடு, மகசூலும் ஏக்கருக்கு 300 கிலோமுதல், 500 கிலோ வரை கூடுதலாக கிடைக்கிறது. நானோ யூரியா பயன்படுத்துவதால் விவசாயிகளுக்கு உர செலவு பாதியாக குறையும் என்றார்.

    இதில் முன்னோடி விவசாயிகள், உழவர்கள், விவசாய தொழிலாளர்கள், வேளாண் களப்பணியாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • உடன்குடி வட்டாரத்தில் உள்ள செம்மணல் பகுதியில் தற்போது முருங்கை விவசாயம் நடைபெற்று வருகிறது.
    • நல்ல மகசூல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் மரங்களின் கிளைகளை வெட்டி விட்டனர்.

    உடன்குடி:

    உடன்குடி வட்டார பகுதிக்கு உட்பட்ட உதிரமாடன்குடியிருப்பு, மெய்யூர், கந்தபுரம், நேசபுரம். தாங்கையூர் போன்ற செம்மணல் பகுதியில் தற்போது முழு மூச்சுடன் முருங்கை விவசாயம் நடைபெற்று வருகிறது. ஏராளமான பனை, தென்னை மரத்தோட்டங்களில் முருங்கையை ஊடுபயிராக விவசாயம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் தற்போதும் மழை காலம் என்பதால் முதிர்ந்த முருங்கையில் உள்ள கிளைகளை வெட்டி விட்டு வளர்த்தால் நல்ல மகசூல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் தங்கள் மரங்களின் கிளைகளை வெட்டி விட்டனர். பல இடங்களில் புதியதாக முருங்கை கம்புகளை நடவு செய்துள்ளனர்.

    ×