search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நலத்திட்ட உதவி"

    • 435 மனுக்களை விசாரணை செய்ய சம்பந்தப்பட்ட அலுவ லர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
    • பயனாளிகளுக்கு ரூ. 70,73,002 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் திருலோகி ஊராட்சி மாரியம்மன் கோவிலில் "மக்கள் நேர்காணல் முகாம்" நடைபெற்றது. ராமலிங்கம் எம்.பி. முன்னிலை வகித்தார்.

    கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கி பேசியதாவது:-

    இம்முகாமில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம்.

    கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 435 பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவ லர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் 200 பயனாளிகளுக்கு ரூ. 70,73,002 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக அவர் வருவாய்த்துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, சமூக நலத்துறை, சுகாதாரத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி துறையின் சார்பில் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து அமைக்கப்பட்டு இருந்த அரங்குகளை பார்வையிட்டார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் பூர்ணிமா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் முத்து செல்வம், திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் தேவி ரவிச்சந்திரன், ஊராட்சி ஒன்றிய துணை பெருந்தலைவர் அண்ணா துரை, மாவட்ட குழு உறுப்பினர் இளவரசி சின்னசாமி, திருலோகி ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ், திருவிடைமருதூர் வட்டாட்சியர் சுசீலா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் முருகேஷ் வழங்கினார்
    • திருவண்ணாமலையில் சுதந்திர தின விழா கோலாகலம்

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை காவல் துறை ஆயுதப்படை மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் பா.முருகேஷ் தேசிய கொடியை ஏற்றிவைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    வீட்டுமனை பட்டா, நரிக்குறவர் சான்றிதழ், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, திருமணம் மற்றும் முதியோர் உதவித்தொகை, மகளிர் கடன், விவசாயிகளுக்கு இடுபொருட்கள், தையல் இயந்திரம், சலவைப்பெட்டி, சிறு தொழில் கடன் என 191 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 80 லட்சத்து 32 ஆயிரத்து 846 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    இதில் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், கூடுதல் ஆட்சியர் ரிஷப், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் பிரியதர்ஷினி, கோட்டாட்சியர் மந்தாகினி, வட்டாட்சியர் சரளா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    அண்ணாமலையார் கோவில் மாடவீதியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்த கலெக்டர் அண்ணாமலையார் கோவிலில் நடந்த சமபந்தி விருந்தில் கலந்து கொண்டார். தொடர்ந்து தலையாம்பள்ளம் கிராம ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டார்.

    சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கட்டிடம் மற்றும் அதன் அருகில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீர் ஊற்று ஆகியவை மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது.

    • திருமங்கலத்தில் கலைஞர் நினைவுதினத்தையொட்டி நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
    • தெற்குமாவட்ட செயலாளர் மணிமாறன் வழங்கினார்.

    திருமங்கலம்

    தமிழக முன்னாள் முதல் வர் கலைஞரின் 5-ம் ஆண்டு நினைவுநாள் அனுஷ்டிக்கப்பட்டது. இதனையொட்டி மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருமங்கலம் நக ராட்சி அலுவலகத்திலிருந்து மதுரை ரோட்டில் அமைந் துள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகம் வரையில் மாவட்ட செயலாளர் மணி மாறன் தலைமையில் அமைதி பேரணி நடைபெற் றது.

    தொடர்ந்து மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த கலை ஞர் படத்திற்கு மாவட்ட செயலாளர் தலைமையில் தி.மு.க.வினர் மலரஞ்சலி செலுத்தினர். பின்னர் அரிசி மூடை, மளிகை பொருள்கள், சேலை, வேட்டி உள்ளிட்ட ரூ. 20 லட்சம் மதிப்புள்ள நலத் திட்ட உதவிகளை தெற்கு மாவட்ட செயலாளர் மணி மாறன் பொதுமக்களுக்கு வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் அவை தலைவர் நாகராஜன், தலை மை செயற்குழு உறுப்பினர் கள் ஏர்போர்ட்பாண்டி, மாநில விவசாய அணி இணைச் செயலாளர் முன் னாள் எம்.எல்.ஏ. முத்து ராமலிங்கம், துணை செய லாளர் லதா அதியமான், மீனவர் அணி அமைப்பாளர் ஆலங்குளம் செல்வம், ஒன்றிய செயலாளர்கள் தன பாண்டியன், ராமமூர்த்தி, ஆலம்பட்டி சண்முகம், மதன்குமார், நகர செய லாளர் ஸ்ரீதர், துணைசெய லாளர் செல்வம், திருமங் கலம் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார், துணை தலைவர் ஆதவன் அதிய மான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
    • கலையும் கலாச்சாரமும்" 2023- என்ற நிகழ்ச்சி நடந்தது.

    மதுரை

    மதுரை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க அரங்கில் புதிய பாதை-360, வெல்பேர் கிளப் இணைந்து "கலையும் கலாச்சாரமும்" 2023- என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் உதவிகள் மூலம் உணர்வுகளை பெறுவோம் என்ற தலைப்பில் மாணவ-மாணவிகளுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திரைப்பட பாடல் ஆசிரியர் கவிஞர் சினேகன் நடுவராக பங்கேற்ற பட்டிமன்றம் நடந்தது, இந்நிகழ்ச்சிக்கு தென் மாவட்ட திரைப்பட கலைஞர்கள் நலச் சங்கத் தின் தலைவர் டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசி னார். முன்னதாக புதிய பாதை வாசகன் வர வேற்றார்.

    சிறப்பு விருந்தினர்களாக தேசிய மனிதவள உதவும் கரங்கள் நிறுவனர் டாக்டர் முகமது பக்ஸ், தென் மாவட்ட திரைப்பட கலை ஞர்கள் நலச்சங்க பொதுச் செயலாளர் எம்.மணி கண்டன், ஆலோசகர் செல்வவேல் பாண்டி, நடிகர் சங்க நிர்வாகிகள் டாக்டர் சின்னச்சாமி, பிரகாஷ் , மாநகர் காவல் உதவி ஆணையர் (கோவில் சரகம்) பா.காமாட்சி, கோல்டன் சினிமா நிர்வாக இயக்குனர் டி.ஆர்.குமரன் ஆகியோர் பங்கேற்றனர். முடிவில் புதிய பாதை சிமியோன் நன்றி கூறினார்.

    • உலகங்காத்தான் கிராமத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.
    • ரூ.111 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளோம்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே உலகங்காத்தான் கிராமத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு பொதுப் பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளர் தரேஸ் அகமது, எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், மணிக்கண்ணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்த னர்.

    மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு வருவாய்த்துறை, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, கூட்டுறவுத்துறை, வேளாண்மைத்துறை,சமுக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை உள்ளிட்ட 19 துறைகளை சேர்ந்த 15 ஆயிரத்து 495 பயனாளிகளுக்கு ரூ. 110 கோடியே 93 லட்சத்து 83 ஆயிரத்து 916 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

    விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டத் தில் நடைபெறுகின்ற அரசு நலத்திட்ட விழாவில் பங்கேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு நான் பலமுறை தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக வந்திருக்கிறேன், சட்டமன்ற உறுப்பினராக வந்திருக்கி றேன். ஆனால் இன்று உங்களை சந்தித்து நிகழ்ச்சி யில் பங்கேற்றது வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நாள். ஏனென்றால் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வந்திருப்பது இதுதான் முதல் முறை.

    இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் மகளிர், மாணவச் செல்வங்கள், வேளாண் பெருங்குடி மக்கள், திருநங்கைகள் உள்ளிட்ட 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட நபர்களுக்கு ரூ.111 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளோம். தி.மு.க.அரசு 2021 -ம் ஆண்டு அமைந்த பிறகு மக்களுக்கு என்ன திட்டங்கள் வழங்க முடியும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை எப்படி எல்லாம் உயர்த்த வேண்டும் என்ற அடிப்படையில் முதல்-அமைச்சர் ஒவ்வொரு நாளும் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    அதனால்தான் ஒட்டு மொத்த தமிழ்நாடும் நமது முதல்-அமைச்சரை தங்களது குடும்பத்தில் ஒருவராக கருதிக் கொண்டிருக்கிறார்கள். தி.மு.க. அரசு என்பது என்னு டைய அரசு அல்ல. அது மக்களின் அரசு என முதல்- அமைச்சர் அடிக்கடி கூறுவார். ஏனென்றால் இந்த அரசை மக்களாகிய நீங்கள் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு உங்களுடைய அரசாங்கமாக நினைத்து எண்ணற்ற ஆலோசனைகளை கோரிக்கைகளை முன் வைக்கிறீர்கள். தமிழ்நாட்டில் இருக்கிற ஒரு குடும்பம் கூட அரசு நலத்திட்ட உதவிகளை பெறாமல் இருக்கக் கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில் தான் முதலமைச்சர் திட்டங்களை தீட்டி வருகிறார்.

    கடந்த 2 ஆண்டுகளில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48, என்னும் எழுத்தும் என ஏராளமான திட்டங்களை முதல்- அமைச்சர் செயல்படுத்தி யுள்ளார். சொன்ன வாக்குறுதி களை எல்லாம் அரசு திட்டங்களாக மாற்றியதால் தான் என்னால் இன்று தைரியமாக உங்கள் முன்பு நின்று பேச முடிகிறது. விரைவில் அனைத்து மகளிரும் எதிர்பார்க்கும் சிறப்பான திட்டமான கலைஞர் மகளிர் உரிமை திட்டம் என்னும் மகத்தான திட்டம் வருகின்ற செப்டம்பர் 15- ந் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று நமது முதல்-அமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். இதில் தேவையுள்ள ஒரு மகளிர் கூட விடுபடக் கூடாது என்ற அடிப்படையில் தான் கூலி வேலைக்குச் செல்லும் பெண், கட்டிடப் பணிக்கு செல்லும் மகளிர், மீன் விற்க்கும் பெண்கள், வீட்டு வேலைக்குச் செல்லும் மகளிர், சிறு வியாபாரம் செய்யும் மகளிர், விவசாயக் கூலித் தொழிலாளர்களாக இருக்கும் பெண்களுக்கும் இந்த திட்டம் மிகப்பெரிய பயனளிக்கும்.

    சிலர் திட்டமிட்டு இந்த திட்டத்திற்கு எதிராக வதந்திகளை பரப்புகிறார்கள். அதை நம்பாதீர்கள். இந்த திட்டம் உங்களுக்கான திட்டம். மகளிர் வாழ்வில் ஒளியேற்ற வந்துள்ள திட்டம். கடந்த 26 மாதங்களில் முதல்-அமைச்சர் 260- க்கும் மேற்பட்ட திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். இதேபோல் 2 ஆண்டுகளில் 5 ஆண்டுகள் செய்ய வேண்டிய சாதனைகளை செய்துள்ளார்.

    அரசின் நலத்திட்டங்கள் இந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எந்த அளவிற்கு வந்துள்ளது என ஒரு சில எடுத்துக்காட்டுகளை கூற விரும்புகிறேன். மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து மூலம் 3 கோடியே 65 லட்சத்து 30 ஆயிரம் மகளிர் பயனடைந்துள்ளனர். இதில் 26 ஆயிரம் திருநங்கைகள், 3 லட்சத்து 50 ஆயிரம் மாற்று திறனாளிகள் பேருந்தில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்துள்ளனர். மேலும் கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு உட்பட்ட நகை கடன் ரத்து திட்டத்தின் கீழ் 21ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.95 கோடி நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 89 ஆயிரம் பயனாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் விபத்தில் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்து400 பேர் பயன் அடைந்துள்ளனர். ரூ 40 கோடி செலவில் புதிய மின் இணைப்புகள் வழங்கப் பட்டு 6 ஆயிரத்து 500 விவ சாயிகள் பயனடைந்துள்ளனர். ஆதரவற்ற மாற்றுத்திறனாளி ஓய்வூதியமாக 264 பேருக்கு ரூ.63 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது. குறிப்பாக மகளிர் திட்டம் சார்பாக 9 ஆயிரத்து 799 மகளிர் சுய உதவி குழுக் களில் உள்ள 16,508 நபர்களுக்கு ஆயிரம் கோடி கடன் உதவி வழங்கப்பட்டு உள்ளது.

    இன்றைய நிகழ்ச்சியின் மூலம் 54 மாற்றுத்திறனாளி களுக்கு ரூ.13 லட்சம் மதிப்பிலும், 140 பழங்குடியின மக்களுக்கு சாதி சான்றிதழ், 41 அருந்ததியினர் சமுதாய மக்களுக்கு வீட்டு மனை பட்டா, 10 திருநங்கைகள் உள்ளிட்ட 611 பேருக்கு 2 கோடி மதிப்பீட்டில் வீட்டு மனை பட்டா, ஊரக கடன் மற்றும் வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் 470 பேருக்கு 31 கோடி கடனுதவி, கள்ளக் குறிச்சி மாவட்டத்திற்கு மாவட்ட விளையாட்டு அரங்கம் ரூ.15 கோடி மதிப்பில் அமைய உள்ளது. வானாபுரத்தை தலைமையிட மாக கொண்டு ரூ 7.5 கோடி செலவில் புதிய வட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. இவ்வாறு எல்லா தரப்பையும் உள்ளடக்கி வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் நம்முடைய முதலமைச்சர் பார்த்து பார்த்து திட்டங்களை கொடுத்து வருகிறார். எனவே நீங்கள் ஒவ்வொருவரும் அரசின் திட்டங்களுக்கு பக்க பலமாக இருக்க வேண்டும். மேலும் அரசின் திட்டங்களில் நீங்கள் வெறும் பயனாளிகள் மட்டுமல்ல, பங்கேற்பாளர் நீங்கள் தான் எனவே அரசின் திட்டங்களை தூதுவர்களாக செயல்பட்டு உங்கள் நண் பர்கள் மற்றும் குடும்பத்தி னருக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக வருவாய்த்த துறை, பள்ளிக்கல்வித்துறை, மருத்துவத்துறை, கூட்டுற வுத்துறை உள்ளிட்ட 6 துறைகளில் ரூ.19 கோடியே 15 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட 57 கட்டிடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை காணொளி காட்சியில் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், திட்ட இயக்குனர் செல்வராணி, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தங்கம், நகர செயலாளர் சுப்ராயலு, துணைத் தலைவர் ஷமீம்பானு அப்துல்ரசாக், ஒன்றிய குழு தலைவர்கள் அலமேலு ஆறுமுகம், சத்தியமூர்த்தி, தாமோதரன், ராஜவேல், மாவட்டத் துணைச் செயலா ளர் ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி துணை அமைப் பாளர் அருள், ஒன்றிய குழு துணைத் தலைவர்கள் விமலா முருகன், நெடுஞ்செழியன், பேரூராட்சி மன்ற தலை வர்கள் ரோஜா ரமணி, பன்னீர்செல்வம், துரை தாகபிள்ளை, வீராசாமி, மாவட்ட பிரதிநிதி மடம் பெருமாள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ் நன்றி கூறினார்.

    • கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 அடி உயர பிரமாண்ட கொடி கம்பத்தில் கட்சி கொடி ஏற்றி வைத்தார்.
    • பாச்சல் ஊராட்சியில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நிழற்கூடத்தை திறந்து வைத்தார்.

    திருப்பத்தூர்:

    தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் மற்றும் ஜவ்வாதுமலையில் நடைபெறும் கோடை விழாவில் பங்கேற்க உள்ளார்.

    இதில் கலந்துகொள்ள நேற்று வேலூர் வந்த அவர் வேலூர் அரசு சுற்றுலா மாளிகையில் இரவு முழுவதும் தங்கினார்.

    இதனைத்தொடர்ந்து இன்று காலை மாவட்டத்திற்கு கார் மூலம் புறப்பட்டு சென்றார்.

    திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதிக்கு மாவட்டத்தின் எல்லைப்பகுதியான மாதனூரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு மேள தாளங்கள், நாட்டுப்புற கலைஞர்களின் நிகழ்ச்சி, உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் மாவட்ட செயலாளர் க.தேவராஜி எம்.எல்.ஏ. தலைமையில் வரவேற்றனர்.

    அதைத்தொடர்ந்து ஆம்பூரில் சென்னை-பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 அடி உயர பிரமாண்ட கொடி கம்பத்தில் கட்சி கொடி ஏற்றி வைத்தார்.

    அதனை தொடர்ந்து வாணியம்பாடி அருகே தனியார் மண்டபத்தில் தி.மு.க. சமூக வலைதள செயற்பாட்டளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    இதனை தொடர்ந்து வாணியம்பாடியில் தேசிய நெடுஞ்சாலையில் 100 அடி உயர கொடி கம்பத்தில் கழக கொடியேற்றி வைத்தார்.

    தொடர்ந்து செட்டியப்பனூர் கூட்டு ரோட்டில் சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நிழற்கூடத்தையும் திறந்து வைத்தார்.

    ஜோலபேட்டை அருகே மண்டலவாடியில் நடைபெற்ற அரசு நலத் திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுமார் 14,300 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

    அதனை தொடர்ந்து பாச்சல் ஊராட்சியில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நிழற்கூடத்தை திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு திருப்பத்தூர் விருந்தினர் மாளிகையில் மதியம் உணவு அருந்த சென்றார்.

    மாலை 5 மணிக்கு திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்கிறார்.

    ஆய்வு பணிகளை முடித்து விட்டு இரவு 7 மணிக்கு தனியார் மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 1000 கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி பேசுகிறார்.

    அங்கு நிகழ்ச்சியை முடித்து கொண்டு இரவு ஏலகிரிமலையில் ஒய்வு எடுக்கிறார்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் சாலையின் இருபுறங்களுக்கும் கட்சி கொடி கட்டப்பட்டு விழாக்கோலம் பூண்டு உள்ளது.

    அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் மாவட்ட செயலாளர் க.தேவராஜி எம்.எல்.ஏ. மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • கடைக்கோடி பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறது.
    • கூட்டத்தில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதி–யில், ரூ.2.93 கோடி புதிய திட்டப்பணிக்கு கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அடிக்கல் நாட்டி, கல்லல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.43.89 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட் டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப்பொறுப்பேற்று கடந்த இரண்டு ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் சமமான வளர்ச்சியினை ஏற்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கிலும், மாநிலத் திலுள்ள அனைத்து மாவட் டங்களிலும் சீரான வளர்ச் சியை மேம்படுத்த வேண்டும் என்ற அடிப்படையிலும், தொலைநோக்கு பார்வை–யுடன் பல்வேறு சிறப்பு திட்டங்களை தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

    குறிப்பாக, கல்வி, வேலை வாய்ப்பு, பொருளா–தார வசதி மேம்பாடு, அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதி உள்ளிட்ட அனைத்தை–யும் தமிழகம் முழுவதும் மேம்படுத்தி, பிற மாநிலங்க–ளுக்கு முன்மாதிரியான முதலமைச்சராகவும், முதன் மையான முதலமைச்சரா–கவும் தமிழ்நாடு முதல–மைச் சர் திகழ்ந்து வருகிறார்.

    மேலும், வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ற–வாறு, அனைத்து அடிப் படை கட்டமைப்பு வசதிக–ளையும் மேம்படுத்த வேண் டிய கடமையும் அரசிற்கு உள்ளது. அதன–டிப்படை–யில், சிவகங்கை மாவட்டத் தில், மாவட்டத்தின் கடைக் கோடி பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கிவருவது மட்டுமன்றி, அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சிப் பணிகளும் துரி–தமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதனடிப்படையில், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் திருப்பு–வனம் பேரூராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச் சிப்ப–ணிகள் பொது–மக்க–ளுக்கு பயனுள்ள வகையில் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

    குறிப்பாக கண்டரமா–ணிக்கம் ஊராட்சியில் மட்டும் நமக்கு நாமே திட்டம் 15-வது நிதிக்குழு மானியத் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறு–தித்திட்டம், மாவட்ட ஊராட்சி நிதி, ஒன்றிய பொது நிதி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம் பாட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் 2021-22 மற்றும் 2022-23 ஆகிய நிதியாண்டுகளில் மொத்தம் 68 பணிகள் ரூ.5.10 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடதக்கதாகும்.

    இவ்வாறு அவர் பேசி–னார்.

    முன்னதாக நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலர் மணி–வண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இரா.சிவராமன், கல்லல் ஊராட்சி ஒன்றி–யக்குழுத் தலைவர் சொர் ணம் அசோகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சரஸ்வதி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மஞ்சரி லெட்சு–மணன், ஊராட்சி மன்றத்த–லைவர்கள் ராமு (கண்டர–மாணிக்கம்), இளம்பரிதி (கள்ளிப்பட்டு), சுப்பிர–மணியன் (செவரக் கோட்டை), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செழியன், சுந்தரம் அரசு அலுவலர்கள், தொழிலதிபர் மணிகண்டன் (கண்டரமா–ணிக்கம் வளர்ச்சிக்குழு) பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • 21 பயனாளிகளுக்கு ரூ.7.69 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
    • ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன்வழங்கினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட–ரங்கில் கலெக்டர் பா.விஷ்ணு சந்திரன் தலைமை–யில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் குறித்த 297 மனுக்கள் பெற்று மனுதார–ரின் முன்னிலையில் மனுக் களை விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்க–ளிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள உத்தரவிட்டார்.

    இக்கூட்டத்தில் வீட்டு–மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்கு–தல் உள்ளிட்டவை தொடர் பாக பொதுமக்கள் மனுக் களை அளித்தனர். அப் போது கலெக்டர் தெரி–விக்கை–யில், ஒவ்வொரு வாரமும் பொதுமக்க–ளிடம் பெறக்கூடிய மனுக்க–ளுக்கு உரிய நடவடிக்கை மேற் கொண்டு ஒருமாத காலத்திற் குள் மனுதாரர்களுக்கு உரிய தீர்வு வழங்கிட வேண்டும் எனவும்,

    தீர்வு வழங்க முடியாத மனுக்கள் நிலை குறித்து மனுதாரர்களிடம் அலுவலர் கள் எடுத்துரைக்க வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறைசார்ந்த அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

    அதனைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மூலம் முதுகுத் தண்டு வடம் பாதிக்கப்பட்ட வர்களுக்கான சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பெட் ரோல் ஸ்கூட்டர் ரூ.5.90 லட்சம் மதிப்பீட்டில் 6 பய–னாளிகளுக்கும் மற்றும் வருவாய்த்துறையின் மூலம் முதலமைச்சரின் பொது–நிவாரண நிதியின் கீழ் சாலை விபத்தில் காயம–டைந்த 3 நபர்களுக்கு உயிர் சிகிச்சைக்காக தலா ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை–யினையும் கலெக்டர் வழங் கினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந் தராஜூலு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனிப், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலசுந்தரம், மாவட்ட தாட்கோ மேலாளர் தியாகராஜன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறு–பான்மையினர் நல அலு–வலர் சிவசுப்பிரம–ணியன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வெள்ளாளர் முன்னேற்ற கழக மாநில மகளிரணி தலைவி பிறந்தநாள் விழாவை கொண்டாடினார்.
    • தெற்கு வாசல் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    மதுரை

    வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் தென் மண்டல அமைப்பாளரும், மாநில மகளிர் அணி தலைவியு மான அன்னலட்சுமி சகிலா கணேசனின் பிறந்தநாள் விழா மதுரை தெற்கு வாசல் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்ட பத்தில் நடைபெற்றது.

    இதில் ரத்ததான முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவி களை பாராட்டும் விதமாக கல்வி வளர்ச்சி விருதினை வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் ஹரிஹரன் பிள்ளை மற்றும் மாநில பொதுச் செயலாளர் வேளச்சேரி மாதவன், தென்னக மக்கள் இயக்கத் தின் நிறுவனத்தலைவர் அய்யப்பன் கார்த்தி, மாநில ஆலோசனை குழு தலைவர் ஆடிட்டர் முருகேசன் மற்றும் மாநில நிர்வாகிகள் முன்னிலையில் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்வின் வெள்ளா ளர் முன்னேற்றக் கழகத்தின் அனைத்து மாவட்ட நிர்வா கிகள், அனைத்து சமூக உறவுகள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    • 23 வகையான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது
    • 1 மாற்றுத்திறனாளிகளுக்கு ஆவின் பாலகம் அமைக்க ரூ.50 ஆயிரம் உதவித்தொகை

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 2021-2022 ஆம் ஆண்டில் 946 மாற்றுத்திறனாளி களுக்கு ரூ.1,25,84,600 மதிப்பில் 23 வகையான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    அதேபோல் 4548 மாற்றுத்திறனாளி களுக்கு மாதம் ரூ.1,500 வீதம் ரூ.8,18,64,000 மதிப்பில் பராமரிப்பு உதவித் தொகையும், 62 மாற்றுத்திறனாளிகளுக்கு குறுதொழில் அல்லது பெட்டிக்கடை தொடங்க மானியமாக ரூ.11,99,920 உதவித்தொகை வழங்கப்பட்டது.

    மேலும் 2 மாற்றுத்திற னாளிகளுக்கு ஆவின் பாலகம் அமைக்க ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சம் உதவித்தொகையும் என மொத்தம் 5ஆயிரத்து558 மாற்றுத்திறனாளி களுக்கு ரூ.9,57,48,520 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

    2022-2023-ம் ஆண்டில் 726 மாற்றுத்திறனாளி களுக்கு ரூ.1,00,46,800 மதிப்பில் 23 வகையான உதவி உபகரணங்களும், 4,861 மாற்றுத்திறனாளி களுக்கு மாதம் ரூ.2,000 வீதம் ரூ.11,66,64,000 மதிப்பில் பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்பட்டது.

    அதேபோல் 44 மாற்றுத்திறனாளிகளுக்கு குறுதொழில் அல்லது பெட்டிக்கடை தொடங்க மானியமாக ரூ.9,99,920 உதவித்தொகையும், 1 மாற்றுத்திறனாளிகளுக்கு ஆவின் பாலகம் அமைக்க ரூ.50 ஆயிரம் உதவித்தொகையும் என 5,632 மாற்றுத்திறனாளி களுக்கு ரூ.12,82,10,720 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்ப ட்டுள்ளன.

    அந்த வகையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் வேலூர் மாவட்டத்தில் 2021- 2022 மற்றும் 2022-2023-ம் நிதியாண்டுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.22கோடியே 39 லட்சத்து 59ஆயிரத்து 240 மதிப்பில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது என கலெக்டர் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.

    • பயனானிகளுக்கு நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் வழங்கினார்.
    • போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை மற்றும் அதிகாரி கள் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் சட்ட மன்ற பேரவையின் உறுதி மொழி குழு ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி னார். இதில் ஆய்வுக்குழு தலைவர் வேல்முருகன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இதில் குழு தலைவர் வேல்முருகன் பேசியதா வது:-ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒதுக்கப்படும் நிதி உரிய காலத்திற்குள் பணிகளை மேற்கொள்ளும் பொழுது அந்த நிதியின் மூலம் பணிகளை முடித்து விடலாம். காலதாமதம் ஏற்பட்டால் பொருள்களின் விலை மாற்றம் ஏற்படும். அதனால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியிலிருந்து அந்தப் பணியை முழுமையாக முடிப்பது என்பது கஷ்டமாகும். அதனால் கூடுதல் செலவினம் ஏற்படும். இது அரசுக்கு ஒருவகையில் இழப்பு ஏற்படும். இதை தவிர்த்து உரிய உறுதிமொழிகளை உரிய காலத்தில் செய்து அரசுக்கு எந்த வகையிலும் இழப்பீடு வராத வகையில் பார்த்து கொள்வதே இக்குழுவின் பணியாக உள்ளது.

    அரசின் ஒவ்வொரு துறைகளில் இருந்தும் மேற்கொள்ள வேண்டிய பணிகளை திட்டமிட்டப்படி உரிய காலத்திற்குள் முடித்து பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடைந்து அரசுக்கு நற்பெயரை பெற்றுத்தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து 35 பயனாளிகளுக்கு ரூ.3.84 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.

    இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் காதர் பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன்,மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை மற்றும் அதிகாரி கள் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு கட்டுமானத்‌ தொழிலாளர்கள்‌ நல வாரி யம்‌ மற்றும்‌ உடலுழைப்புத்‌ தொழிலாளர்கள்‌ நல வாரியம்‌ மூலம்‌ நாமக்கல்‌ மாவட்ட கண்கா ணிப்புக்குழு கூட்டம்‌ கலெக்டர் உமா‌ தலைமை யில்‌ நடைபெற்றது.
    • தொழிற் சங்க தரப்பு பிரதிநிதிகள்‌, நிர்வாக தரப்பு பிரதிநிதிகள்‌ மற்றும்‌ அரசு தரப்பு பிரதிநிதிகள்‌ அனைவரும்‌ கலந்துகொண்டனர்‌.

    நாமக்கல்:

    நாமக்கல், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தின் கீழ் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரி யம் மற்றும் உடலுழைப்புத் தொழிலாளர்கள் நல வாரியம் மூலம் நாமக்கல் மாவட்ட கண்கா ணிப்புக்குழு கூட்டம் கலெக்டர் உமா தலைமை யில் நடைபெற்றது. கூட்டத்தில் நாமக்கல், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாது காப்புத் திட்டம்), தொழிற் சங்க தரப்பு பிரதிநிதிகள், நிர்வாக தரப்பு பிரதிநிதிகள் மற்றும் அரசு தரப்பு பிரதிநிதிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.

    இதில் தமிழ்நாடு கட்டுமானம், அமைப்புசாரா மற்றும் ஓட்டூநர்கள் நல வாரியங்களில் இது நாள்வரை 3,75,708 பயனாளிகளுக்கு ரூ.195 கோடியே 62 லட்சத்து 47 ஆயிரத்து 812 நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டுள்ளது. மே மாதத்தில் 5,306 பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 31 லட்சத்து 36 ஆயிரத்து 250 நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள் ளது என்று தெரிவிக்கப் பட்டது. வீட்டு வசதித்திட்டம் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரி யத்தில் பதிவு பெற்ற தொழிலாளிக்கு ரூ.4 லட்சம் வழங்குவது தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப் பட்டது,

    ×