search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.22 கோடி நலத்திட்ட உதவி
    X

    மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.22 கோடி நலத்திட்ட உதவி

    • 23 வகையான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது
    • 1 மாற்றுத்திறனாளிகளுக்கு ஆவின் பாலகம் அமைக்க ரூ.50 ஆயிரம் உதவித்தொகை

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 2021-2022 ஆம் ஆண்டில் 946 மாற்றுத்திறனாளி களுக்கு ரூ.1,25,84,600 மதிப்பில் 23 வகையான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    அதேபோல் 4548 மாற்றுத்திறனாளி களுக்கு மாதம் ரூ.1,500 வீதம் ரூ.8,18,64,000 மதிப்பில் பராமரிப்பு உதவித் தொகையும், 62 மாற்றுத்திறனாளிகளுக்கு குறுதொழில் அல்லது பெட்டிக்கடை தொடங்க மானியமாக ரூ.11,99,920 உதவித்தொகை வழங்கப்பட்டது.

    மேலும் 2 மாற்றுத்திற னாளிகளுக்கு ஆவின் பாலகம் அமைக்க ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சம் உதவித்தொகையும் என மொத்தம் 5ஆயிரத்து558 மாற்றுத்திறனாளி களுக்கு ரூ.9,57,48,520 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

    2022-2023-ம் ஆண்டில் 726 மாற்றுத்திறனாளி களுக்கு ரூ.1,00,46,800 மதிப்பில் 23 வகையான உதவி உபகரணங்களும், 4,861 மாற்றுத்திறனாளி களுக்கு மாதம் ரூ.2,000 வீதம் ரூ.11,66,64,000 மதிப்பில் பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்பட்டது.

    அதேபோல் 44 மாற்றுத்திறனாளிகளுக்கு குறுதொழில் அல்லது பெட்டிக்கடை தொடங்க மானியமாக ரூ.9,99,920 உதவித்தொகையும், 1 மாற்றுத்திறனாளிகளுக்கு ஆவின் பாலகம் அமைக்க ரூ.50 ஆயிரம் உதவித்தொகையும் என 5,632 மாற்றுத்திறனாளி களுக்கு ரூ.12,82,10,720 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்ப ட்டுள்ளன.

    அந்த வகையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் வேலூர் மாவட்டத்தில் 2021- 2022 மற்றும் 2022-2023-ம் நிதியாண்டுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.22கோடியே 39 லட்சத்து 59ஆயிரத்து 240 மதிப்பில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது என கலெக்டர் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.

    Next Story
    ×