என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நலத்திட்ட உதவிகள்
    X

    ராமநாதபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சியில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியபோது எடுத்தபடம். அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு உள்ளார்.

    நலத்திட்ட உதவிகள்

    • 21 பயனாளிகளுக்கு ரூ.7.69 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
    • ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன்வழங்கினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட–ரங்கில் கலெக்டர் பா.விஷ்ணு சந்திரன் தலைமை–யில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் குறித்த 297 மனுக்கள் பெற்று மனுதார–ரின் முன்னிலையில் மனுக் களை விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்க–ளிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள உத்தரவிட்டார்.

    இக்கூட்டத்தில் வீட்டு–மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்கு–தல் உள்ளிட்டவை தொடர் பாக பொதுமக்கள் மனுக் களை அளித்தனர். அப் போது கலெக்டர் தெரி–விக்கை–யில், ஒவ்வொரு வாரமும் பொதுமக்க–ளிடம் பெறக்கூடிய மனுக்க–ளுக்கு உரிய நடவடிக்கை மேற் கொண்டு ஒருமாத காலத்திற் குள் மனுதாரர்களுக்கு உரிய தீர்வு வழங்கிட வேண்டும் எனவும்,

    தீர்வு வழங்க முடியாத மனுக்கள் நிலை குறித்து மனுதாரர்களிடம் அலுவலர் கள் எடுத்துரைக்க வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறைசார்ந்த அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

    அதனைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மூலம் முதுகுத் தண்டு வடம் பாதிக்கப்பட்ட வர்களுக்கான சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பெட் ரோல் ஸ்கூட்டர் ரூ.5.90 லட்சம் மதிப்பீட்டில் 6 பய–னாளிகளுக்கும் மற்றும் வருவாய்த்துறையின் மூலம் முதலமைச்சரின் பொது–நிவாரண நிதியின் கீழ் சாலை விபத்தில் காயம–டைந்த 3 நபர்களுக்கு உயிர் சிகிச்சைக்காக தலா ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை–யினையும் கலெக்டர் வழங் கினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந் தராஜூலு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனிப், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலசுந்தரம், மாவட்ட தாட்கோ மேலாளர் தியாகராஜன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறு–பான்மையினர் நல அலு–வலர் சிவசுப்பிரம–ணியன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×