நலவாரியங்கள் மூலம் இதுவரை 3.75 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.195.62 கோடி நலத்திட்ட உதவி

தமிழ்நாடு கட்டுமானத்‌ தொழிலாளர்கள்‌ நல வாரி யம்‌ மற்றும்‌ உடலுழைப்புத்‌ தொழிலாளர்கள்‌ நல வாரியம்‌ மூலம்‌ நாமக்கல்‌ மாவட்ட கண்கா ணிப்புக்குழு கூட்டம்‌ கலெக்டர் உமா‌ தலைமை யில்‌ நடைபெற்றது.தொழிற் சங்க தரப்பு பிரதிநிதிகள்‌, நிர்வாக தரப்பு பிரதிநிதிகள்‌ மற்றும்‌ அரசு தரப்பு பிரதிநிதிகள்‌ அனைவரும்‌ கலந்துகொண்டனர்‌.
 கண்காணிப்புக்குழு கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.
 கண்காணிப்புக்குழு கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.
Published on

நாமக்கல்:

நாமக்கல், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தின் கீழ் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரி யம் மற்றும் உடலுழைப்புத் தொழிலாளர்கள் நல வாரியம் மூலம் நாமக்கல் மாவட்ட கண்கா ணிப்புக்குழு கூட்டம் கலெக்டர் உமா தலைமை யில் நடைபெற்றது. கூட்டத்தில் நாமக்கல், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாது காப்புத் திட்டம்), தொழிற் சங்க தரப்பு பிரதிநிதிகள், நிர்வாக தரப்பு பிரதிநிதிகள் மற்றும் அரசு தரப்பு பிரதிநிதிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.

இதில் தமிழ்நாடு கட்டுமானம், அமைப்புசாரா மற்றும் ஓட்டூநர்கள் நல வாரியங்களில் இது நாள்வரை 3,75,708 பயனாளிகளுக்கு ரூ.195 கோடியே 62 லட்சத்து 47 ஆயிரத்து 812 நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டுள்ளது. மே மாதத்தில் 5,306 பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 31 லட்சத்து 36 ஆயிரத்து 250 நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள் ளது என்று தெரிவிக்கப் பட்டது. வீட்டு வசதித்திட்டம் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரி யத்தில் பதிவு பெற்ற தொழிலாளிக்கு ரூ.4 லட்சம் வழங்குவது தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப் பட்டது,

X

Maalai Malar
www.maalaimalar.com