search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "provided by the Minister"

    • உலகங்காத்தான் கிராமத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.
    • ரூ.111 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளோம்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே உலகங்காத்தான் கிராமத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு பொதுப் பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளர் தரேஸ் அகமது, எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், மணிக்கண்ணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்த னர்.

    மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு வருவாய்த்துறை, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, கூட்டுறவுத்துறை, வேளாண்மைத்துறை,சமுக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை உள்ளிட்ட 19 துறைகளை சேர்ந்த 15 ஆயிரத்து 495 பயனாளிகளுக்கு ரூ. 110 கோடியே 93 லட்சத்து 83 ஆயிரத்து 916 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

    விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டத் தில் நடைபெறுகின்ற அரசு நலத்திட்ட விழாவில் பங்கேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு நான் பலமுறை தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக வந்திருக்கிறேன், சட்டமன்ற உறுப்பினராக வந்திருக்கி றேன். ஆனால் இன்று உங்களை சந்தித்து நிகழ்ச்சி யில் பங்கேற்றது வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நாள். ஏனென்றால் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வந்திருப்பது இதுதான் முதல் முறை.

    இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் மகளிர், மாணவச் செல்வங்கள், வேளாண் பெருங்குடி மக்கள், திருநங்கைகள் உள்ளிட்ட 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட நபர்களுக்கு ரூ.111 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளோம். தி.மு.க.அரசு 2021 -ம் ஆண்டு அமைந்த பிறகு மக்களுக்கு என்ன திட்டங்கள் வழங்க முடியும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை எப்படி எல்லாம் உயர்த்த வேண்டும் என்ற அடிப்படையில் முதல்-அமைச்சர் ஒவ்வொரு நாளும் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    அதனால்தான் ஒட்டு மொத்த தமிழ்நாடும் நமது முதல்-அமைச்சரை தங்களது குடும்பத்தில் ஒருவராக கருதிக் கொண்டிருக்கிறார்கள். தி.மு.க. அரசு என்பது என்னு டைய அரசு அல்ல. அது மக்களின் அரசு என முதல்- அமைச்சர் அடிக்கடி கூறுவார். ஏனென்றால் இந்த அரசை மக்களாகிய நீங்கள் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு உங்களுடைய அரசாங்கமாக நினைத்து எண்ணற்ற ஆலோசனைகளை கோரிக்கைகளை முன் வைக்கிறீர்கள். தமிழ்நாட்டில் இருக்கிற ஒரு குடும்பம் கூட அரசு நலத்திட்ட உதவிகளை பெறாமல் இருக்கக் கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில் தான் முதலமைச்சர் திட்டங்களை தீட்டி வருகிறார்.

    கடந்த 2 ஆண்டுகளில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48, என்னும் எழுத்தும் என ஏராளமான திட்டங்களை முதல்- அமைச்சர் செயல்படுத்தி யுள்ளார். சொன்ன வாக்குறுதி களை எல்லாம் அரசு திட்டங்களாக மாற்றியதால் தான் என்னால் இன்று தைரியமாக உங்கள் முன்பு நின்று பேச முடிகிறது. விரைவில் அனைத்து மகளிரும் எதிர்பார்க்கும் சிறப்பான திட்டமான கலைஞர் மகளிர் உரிமை திட்டம் என்னும் மகத்தான திட்டம் வருகின்ற செப்டம்பர் 15- ந் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று நமது முதல்-அமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். இதில் தேவையுள்ள ஒரு மகளிர் கூட விடுபடக் கூடாது என்ற அடிப்படையில் தான் கூலி வேலைக்குச் செல்லும் பெண், கட்டிடப் பணிக்கு செல்லும் மகளிர், மீன் விற்க்கும் பெண்கள், வீட்டு வேலைக்குச் செல்லும் மகளிர், சிறு வியாபாரம் செய்யும் மகளிர், விவசாயக் கூலித் தொழிலாளர்களாக இருக்கும் பெண்களுக்கும் இந்த திட்டம் மிகப்பெரிய பயனளிக்கும்.

    சிலர் திட்டமிட்டு இந்த திட்டத்திற்கு எதிராக வதந்திகளை பரப்புகிறார்கள். அதை நம்பாதீர்கள். இந்த திட்டம் உங்களுக்கான திட்டம். மகளிர் வாழ்வில் ஒளியேற்ற வந்துள்ள திட்டம். கடந்த 26 மாதங்களில் முதல்-அமைச்சர் 260- க்கும் மேற்பட்ட திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். இதேபோல் 2 ஆண்டுகளில் 5 ஆண்டுகள் செய்ய வேண்டிய சாதனைகளை செய்துள்ளார்.

    அரசின் நலத்திட்டங்கள் இந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எந்த அளவிற்கு வந்துள்ளது என ஒரு சில எடுத்துக்காட்டுகளை கூற விரும்புகிறேன். மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து மூலம் 3 கோடியே 65 லட்சத்து 30 ஆயிரம் மகளிர் பயனடைந்துள்ளனர். இதில் 26 ஆயிரம் திருநங்கைகள், 3 லட்சத்து 50 ஆயிரம் மாற்று திறனாளிகள் பேருந்தில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்துள்ளனர். மேலும் கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு உட்பட்ட நகை கடன் ரத்து திட்டத்தின் கீழ் 21ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.95 கோடி நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 89 ஆயிரம் பயனாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் விபத்தில் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்து400 பேர் பயன் அடைந்துள்ளனர். ரூ 40 கோடி செலவில் புதிய மின் இணைப்புகள் வழங்கப் பட்டு 6 ஆயிரத்து 500 விவ சாயிகள் பயனடைந்துள்ளனர். ஆதரவற்ற மாற்றுத்திறனாளி ஓய்வூதியமாக 264 பேருக்கு ரூ.63 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது. குறிப்பாக மகளிர் திட்டம் சார்பாக 9 ஆயிரத்து 799 மகளிர் சுய உதவி குழுக் களில் உள்ள 16,508 நபர்களுக்கு ஆயிரம் கோடி கடன் உதவி வழங்கப்பட்டு உள்ளது.

    இன்றைய நிகழ்ச்சியின் மூலம் 54 மாற்றுத்திறனாளி களுக்கு ரூ.13 லட்சம் மதிப்பிலும், 140 பழங்குடியின மக்களுக்கு சாதி சான்றிதழ், 41 அருந்ததியினர் சமுதாய மக்களுக்கு வீட்டு மனை பட்டா, 10 திருநங்கைகள் உள்ளிட்ட 611 பேருக்கு 2 கோடி மதிப்பீட்டில் வீட்டு மனை பட்டா, ஊரக கடன் மற்றும் வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் 470 பேருக்கு 31 கோடி கடனுதவி, கள்ளக் குறிச்சி மாவட்டத்திற்கு மாவட்ட விளையாட்டு அரங்கம் ரூ.15 கோடி மதிப்பில் அமைய உள்ளது. வானாபுரத்தை தலைமையிட மாக கொண்டு ரூ 7.5 கோடி செலவில் புதிய வட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. இவ்வாறு எல்லா தரப்பையும் உள்ளடக்கி வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் நம்முடைய முதலமைச்சர் பார்த்து பார்த்து திட்டங்களை கொடுத்து வருகிறார். எனவே நீங்கள் ஒவ்வொருவரும் அரசின் திட்டங்களுக்கு பக்க பலமாக இருக்க வேண்டும். மேலும் அரசின் திட்டங்களில் நீங்கள் வெறும் பயனாளிகள் மட்டுமல்ல, பங்கேற்பாளர் நீங்கள் தான் எனவே அரசின் திட்டங்களை தூதுவர்களாக செயல்பட்டு உங்கள் நண் பர்கள் மற்றும் குடும்பத்தி னருக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக வருவாய்த்த துறை, பள்ளிக்கல்வித்துறை, மருத்துவத்துறை, கூட்டுற வுத்துறை உள்ளிட்ட 6 துறைகளில் ரூ.19 கோடியே 15 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட 57 கட்டிடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை காணொளி காட்சியில் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், திட்ட இயக்குனர் செல்வராணி, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தங்கம், நகர செயலாளர் சுப்ராயலு, துணைத் தலைவர் ஷமீம்பானு அப்துல்ரசாக், ஒன்றிய குழு தலைவர்கள் அலமேலு ஆறுமுகம், சத்தியமூர்த்தி, தாமோதரன், ராஜவேல், மாவட்டத் துணைச் செயலா ளர் ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி துணை அமைப் பாளர் அருள், ஒன்றிய குழு துணைத் தலைவர்கள் விமலா முருகன், நெடுஞ்செழியன், பேரூராட்சி மன்ற தலை வர்கள் ரோஜா ரமணி, பன்னீர்செல்வம், துரை தாகபிள்ளை, வீராசாமி, மாவட்ட பிரதிநிதி மடம் பெருமாள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ் நன்றி கூறினார்.

    ×