search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "beneficiarie"

    • பயனானிகளுக்கு நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் வழங்கினார்.
    • போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை மற்றும் அதிகாரி கள் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் சட்ட மன்ற பேரவையின் உறுதி மொழி குழு ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி னார். இதில் ஆய்வுக்குழு தலைவர் வேல்முருகன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இதில் குழு தலைவர் வேல்முருகன் பேசியதா வது:-ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒதுக்கப்படும் நிதி உரிய காலத்திற்குள் பணிகளை மேற்கொள்ளும் பொழுது அந்த நிதியின் மூலம் பணிகளை முடித்து விடலாம். காலதாமதம் ஏற்பட்டால் பொருள்களின் விலை மாற்றம் ஏற்படும். அதனால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியிலிருந்து அந்தப் பணியை முழுமையாக முடிப்பது என்பது கஷ்டமாகும். அதனால் கூடுதல் செலவினம் ஏற்படும். இது அரசுக்கு ஒருவகையில் இழப்பு ஏற்படும். இதை தவிர்த்து உரிய உறுதிமொழிகளை உரிய காலத்தில் செய்து அரசுக்கு எந்த வகையிலும் இழப்பீடு வராத வகையில் பார்த்து கொள்வதே இக்குழுவின் பணியாக உள்ளது.

    அரசின் ஒவ்வொரு துறைகளில் இருந்தும் மேற்கொள்ள வேண்டிய பணிகளை திட்டமிட்டப்படி உரிய காலத்திற்குள் முடித்து பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடைந்து அரசுக்கு நற்பெயரை பெற்றுத்தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து 35 பயனாளிகளுக்கு ரூ.3.84 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.

    இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் காதர் பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன்,மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை மற்றும் அதிகாரி கள் கலந்து கொண்டனர்.

    ×