search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடைபாதை"

    • பல்லடம் முதல் குண்டடம் வரை 4 வழிச்சாலையாக மாற்றும் பணி தொடங்கப்பட்டு நிறைவடைந்துவிட்டன.
    • ஒத்தக்கடை பகுதியில் மழைநீா் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

    குண்டடம் :

    குண்டடம் அருகே 4 வழிச் சாலைப் பணிகள் முடிவடைந்து சில மாதங்களே ஆகும் நிலையில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் கற்கள் பெயா்ந்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.

    கோவை-மதுரை நெடுஞ்சாலையில் பல்லடம் முதல் குண்டடம் வரை 4 வழிச்சாலையாக மாற்றும் பணி தொடங்கப்பட்டு வே.கள்ளிப்பாளையம் முதல் குண்டடம் வரை பணிகள் நிறைவடைந்துவிட்டன. இதில் மேட்டுக்கடையை அடுத்துள்ள ஒத்தக்கடை பகுதியில் மழைநீா் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாய்க்கும், தாா் சாலைக்கும் இடையில் உள்ள பகுதியில் நடைபாதையில் பாா்க்கிங் டைல்ஸ் எனப்படும் கற்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    அண்மையில் பெய்த மழையில் இங்கு பதிக்கப்பட்டுள்ள கற்கள் அரிக்கப்பட்டு சேதமாகியுள்ளன. பதிக்கப்பட்ட சில நாள்களிலேயே இவ்வாறு ஆகியுள்ளதால் இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு முறையாக டைல்ஸ் கற்கள் பதிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். 

    • நடைபாதை முறையான பராமரிப்பு இல்லாததால் அடித்தளம் மற்றும் பக்கவாட்டு கைப்பிடி சேதம் அடைந்தது.
    • பஸ் நிலையத்திற்குள் சென்று வர வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    உடுமலை :

    உடுமலையின் மையப்ப குதியில் மத்திய பஸ் நிலையம் உள்ளது. இங்கு இருந்து சுற்றுப்புற கிராமங்கள் வெளி மாவட்டங்களுக்கு நாள்தோறும் ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி வெளி மாநிலத்தில் இருந்து வருகை தருகின்ற பஸ்களும் பஸ் நிலையத்திற்குள் வந்து செல்கின்றது. இதன் காரணமாக காலை முதல் மாலை வரையிலும் பஸ் நிலையம் பரபரப்பு காணப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பொதுமக்கள் பஸ் நிலையத்திற்குள் பாதுகாப்பாக வந்து செல்வதற்கு ஏதுவாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபாதை அமைக்கப்பட்டது. பஸ் நிலையத்தின் நுழைவுப் பகுதியில் இருந்து எல்லை முடியும் வரையிலும் பக்கவாட்டு கைப்பிடியுடன் கூடிய நடைபாதை அமைக்கப்பட்டது. சிறிது காலம் பயன்பாட்டில் இருந்து வந்த நடைபாதை முறையான பராமரிப்பு இல்லாததால் அடித்தளம் மற்றும் பக்கவாட்டு கைப்பிடி சேதம் அடைந்தது. இதனால் பொதுமக்கள் நடைபாதையை ஒட்டியவாறு பஸ் நிலையத்திற்குள் சென்று வர வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் போது விபத்துகள் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இது குறித்து அதிகாரிகளும் கண்டு கொள்வதி ல்லை.இதனால் நடைபாதை அமைக்க ப்பட்டதற்கான நோக்கமும் அதற்கான நிதியும் வீணாகி வருகிறது. பொதும க்களுக்காக தொடங்க ப்படுகின்ற எந்த ஒரு திட்டமும் தக்க தருணத்தில் முறையாக சீரமைத்து பயன்பாட்டில் வைத்திருப்பது வேண்டியது சம்பந்தப்பட்ட நிர்வாகத்தின் கடமையாகும். ஆனால் தொடரும் அலட்சியம் காரணமாக ஏதும் அறியாத அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுவது வேதனை அளிக்கிறது.

    எனவே சம்பந்த ப்பட்ட நிர்வாகம் உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்விடுத்து உள்ளனர்.

    • நடைபாதை அமைத்தல் என்பது போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்றன.
    • மக்களுக்கு பொழுதுபோக்கு இடமாக மட்டுமில்லாமல் பயனுள்ள இடமாக சிவகங்கை பூங்கா திகழும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது.

    அந்த வகையில் தஞ்சாவூரில் புகழ்பெற்ற சிவகங்கை பூங்காவில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பராமரிப்பு பணிகள் தொடங்கியது.

    தற்போது பெரும்பாலான பணிகள் முடிவடைந்து விட்டன.

    இந்த நிலையில் சிவகங்கை பூங்காவில் நடைபெறும் பணிகளை இன்று மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்ப தாவது :-

    தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா பாரம்பரியமிக்கது. தஞ்சாவூரில் உள்ள சுற்றுலா தலங்களில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

    கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பராமரிப்பு பணிகள் தொடங்கின. இதில் தமிழ் அன்னை செயற்கை நீரூற்று புதுப்பித்தல், குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் அமைத்தல், மான்கள் இருந்த இடத்தில் சுற்று சுவர், நடைபாதை அமைத்தல் என்பது போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்றன.

    இன்னும் தாவரவியல் பூங்கா அமைக்கப்படவில்லை. இதேபோல் சேர்கள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. மீதமுள்ள பணிகள் விரைவில் முடிவடைந்து விடும்.

    அனைத்து பணிகளும் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டன. பழமை மாறாமல் புதுப்பொலிவுடன் சிவகங்கை பூங்கா மாறி உள்ளது.

    அதிகபட்சமாக இன்னும் 2 அல்லது 3 மாதங்களுக்குள் சிவகங்கை பூங்கா திறக்கப்படும். அதன் பிறகு மக்களுக்கு பொழுதுபோக்கும் இடமாக மட்டுமில்லாமல் பயனுள்ள இடமாக சிவகங்கை பூங்கா திகழும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது மாநகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி, செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் கார்த்திகேயன், மண்டல குழு தலைவர் மேத்தா, கவுன்சிலர் கோபால், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • வணிக வளாக கடைகள் கட்டப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது.
    • பொதுமக்கள் வந்து செல்லும் பகுதி என்பதால் எந்த நேரமும் பரபரப்பாக காணப்படும்.

    உடுமலை :

    உடுமலை நகராட்சியின் சார்பில் நகரின் முக்கிய பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வணிக வளாக கடைகள் கட்டப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. அதில் மத்திய பஸ் நிலையத்தில் கட்டப்பட்டு உள்ள கடைகளும் அடங்கும். பேருந்து நிலையம் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வந்து செல்லும் பகுதி என்பதால் எந்த நேரமும் பரபரப்பாக காணப்படும். இதை சாதகமாகக் கொண்டு கடைகளை ஏலம் எடுத்த உரிமையாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு வியாபாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த சூழலில் மூணாறுக்கு செல்லும் பேருந்து நிற்கும் பகுதியில் அமைக்கப்பட்டு ள்ள வணிக வளாக கடைகள் பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையை ஆக்கிரமிப்பு செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் பஸ் நிலையத்தின் உள்பகுதியில் இருந்து வெளிப்பகுதிக்கு செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்:- பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதியில் நகராட்சி சார்பில் கட்டப்பட்டு உள்ள வணிக வளாகக் கடைகள் பொதுமக்களுக்கு பெரிது உதவிகரமாக உள்ளது.

    குறிப்பாக பஸ்சுக்காக காத்திருக்கும் கிராமப்புற மக்கள் அதிக அளவில் பயன் அடைந்து வருகின்ற னர்.பொதுமக்களை கவர்ந்து விற்பனையை அதிகப்படுத்தி லாபம் ஈட்டும் நோக்கில் ஒரு சிலகடை உரிமையாளர்கள் கடைக்கு முன்புற பகுதியை ஆக்கிரமிப்பு செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் பஸ் நிலையத்தில் இருந்து வெளிப்புறப் பகுதிக்கு செல்ல முடியாமல் சுற்றிச் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. குறிப்பாக காலை மற்றும் மாலை வேலைகளில் பொதுமக்கள் பாதையை பயன்படுத்த முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இது குறித்து அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. எனவே உடுமலை பஸ் நிலைய பகுதியில் பொதுமக்கள் செல்லும் பாதையை ஆக்கிரமித்து விற்பனையில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் கடைகளில் விற்பனையை ஒழுங்குபடுத்துவதற்கு முன் வர வேண்டும் என்று தெரிவித்தனர்.

    • நடைபாதையை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • இந்த நடைபாதையை சரி செய்ய வேண்டும்

    கோத்தகிரி,

    கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட கல்பனா காட்டேஜ் பகுதியில் உள்ள 5-வது வார்டில் சுமார் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் தினசரி உபயோகித்து வரும் நடை பாதை கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் சேதமடைந்தது. இதனை பற்றி சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. பகல் மற்றும் இரவு நேரங்களில் இந்த நடைபாதையில் நடக்கும் பாதசாரிகள் சேதமடைந்த இந்த நடைபாதையின் குழியில் விழுந்து ஏதேனும் பெரும் விபத்து ஏற்படும் முன்னர் இந்த நடைபாதையை சரி செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு தகவல்
    • 1 மாதம் ஆகியும் போலீசார் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் சாங்கோ மெடிக்கல் பின்புறம் சிறிய நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையில் காலை மற்றும் மாலை வேளைகளில் அதிக நெருக்கடியாக இருக்கும். அப்பகுதியில் ஏராளமான கடைகள் மற்றும் வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் மோட்டர் சைக்கிளும் செல்கிறது.ஆகையால் காலை மற்றும் மாலை நேரங்களில் இப்பகுதி மிகுந்த நெருக்கடியாக இருக்கும்.

    இந்த நெருக்கடியான நடைபாதையில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக ஒரு மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த வாகனம் அருகில் ஏதேனும் வீட்டில் உள்ளவர்களுக்கு சொந்தமானதா? இல்லை பழுதானதால் அங்கு நிறுத்தி சென்று விட்டார்களா? இல்லை திருட்டு வாகனமா என்பது தெரியவில்லை.

    போக்குவரத்துக்கு இடையூறாக சில மாதங்களாக அதே இடத்தில் நின்றதால் இது பற்றி அருகில் உள்ளவர்கள் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.ஆனால் 1 மாதம் ஆகியும் போலீசார் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த மோட்டார் சைக்கிளால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கும், இருசக்கர வாகனத்தில் செல்வதற்கும் மிகுந்த சிரமமாக உள்ளது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    • தேவசம்போர்டு நிர்வாகத்துடன் இணைந்து பேரூராட்சி நிர்வாகம் “திடீர்” நடவடிக்கை
    • இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் தற்போது சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் களைகட்டிஉள்ளது. இந்த சீசனை முன்னிட்டு கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறைகடற்கரை பகுதி, காந்தி மண்டபம் பஜார், கடற்கரைசாலை, மெயின் ரோடு, சன்னதி தெரு போன்ற பகுதிகளில் நடைபாதைகளைஆக்கிர மித்து தள்ளுவண்டிமற்றும் உருட்டு வண்டி கடைகள் வைக்கப்பட்டு உள்ளன.

    இதனால் இந்த பகுதிகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதி, காந்தி மண்டபம் பஜார், கடற்கரைசாலை, காந்தி மண்டபம்பஜார், மெயின் ரோடு, பழையபஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு போன்ற பகுதிகளில் நடைபாதைகளை ஆக்கிர மித்து வைக்கப்பட்டிருந்த 150- க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி மற்றும் உருட்டு வண்டி கடைகளை பேரூராட்சி ஊழியர்கள் இன்று காலை அதிரடியாக அகற்றினார்கள்.

    கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் தலை மையில் அகஸ்தீஸ்வ ரம் தாசில்தார் ராஜேஷ் பேரூராட்சி சுகாதார அதிகாரி முருகன் சுகாதார மேற்பார்வையாளர் பிரதீஸ் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த்ஆகியோர்முன்னிலையில்இந்தஆக்கிரமிப்புகடைகள் அகற்றும் பணி நடந்தது. இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில்பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா உத்தரவின்பேரில் கன்னியாகுமரிபோலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் ஏராளமான போலீசார்பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். பலத்தபோலீஸ் பாது காப்புடன் இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.

    • பேரூராட்சி நிர்வாகம் “திடீர்” நடவடிக்கை
    • கன்னியா குமரி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வருகிற 28-ந்தேதி சீசன் கடைகள் ஏலம் விடப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் தற்போது சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் தொடங்கி உள்ளது.

    இந்த சீசனை முன்னிட்டு கன்னியாகுமரி கடற்கரை சாலை மெயின் ரோடு போன்ற பகுதிகளில் நடை பாதைகளை ஆக்கிரமித்து தள்ளுவண்டி மற்றும் உருட்டு வண்டி கடைகள் அமைக்கப்பட்டுஉள்ளன.இதற்கிடையில் கன்னியா குமரி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வருகிற 28-ந்தேதி சீசன் கடைகள் ஏலம் விடப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி கடற்கரை சாலை, காந்தி மண்டபம் பஜார், மெயின் ரோடு, பழைய பஸ் நிலைய ரவுண் டானா சந்திப்பு, போன்ற பகுதி களில் நடைபாதை களை ஆக்கிரமித்து வைக் கப்பட்டிருந்த 150-க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி மற்றும் உருட்டு வண்டி கடைகளை பேரூராட்சி ஊழியர்கள் இன்று காலை அதிரடியாக அகற்றினார்கள்.

    கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் தலைமையில் பேரூராட்சி சுகாதார அதிகாரி முருகன் சுகாதார மேற்பார்வை யாளர் பிரதீஸ் ஆகியோர் முன்னிலையில் இந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் பணி நடந்தது. இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.

    • மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி வருகை எதிரொலி
    • பேரூராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை

    கன்னியாகுமரி:

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. வருகிற7-ந்தேதி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை தேசிய ஒற்றுமை பயணம் என்ற நடைபயணத்தை மேற்கொள்கிறார்.

    இந்த நடை பயணத்தின் தொடக்க விழா வருகிற 7-ந் தேதி மாலையில் கன்னியாகுமரி கடற்கரை சாலையில் நடக்கிறது. அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் ராகுல்காந்தியுடன் ஒரே மேடையில் தமிழக முதல் -அமைச்சர் மு. க. ஸ்டாலினும் கலந்து கொண்டு பேசுகிறார்.

    மேலும் இந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் கலந்து கொண்டு பேசுகிறார்கள். இதற்காக ராகுல்காந்தி வருகிற 7-ந் தேதி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார்.

    அங்குஉள்ள அரசு விருந்தினர் மாளிகையில் அமைந்து உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்கும் அவர் சிறிது நேர ஓய்வுக்கு பிறகு தனது நடைபயணத்தை கன்னியாகுமரியில் இருந்து தொடங்குகிறார்.

    இந்த நிலையில் ராகுல் காந்தியின் பாதயாத்திரை தொடக்க விழா நிகழ்ச்சி நடக்கும் கன்னியாகுமரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி மண்டபம் பஜாரில் நடைபாதையில் இருந்த 100-க்கும் மேற்பட்ட கடைகளும் அகற்றப்பட்டு உள்ளன. கன்னியாகுமரி சிறப்புநிலைபேரூராட்சி நிர்வாகம் இதற்கான அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது.

    • துர்நாற்றம் வீசிவருவதால் நேய்பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • தெருவிளக்கு மற்றும் குடிநீர் வசதி செய்து தரபட்டது குறிப்பிடதக்கது.

    ஊட்டி, :

    கூடலூா் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் முடிக்கப்பட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் டி.என்.வெங்கடேஷ் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

    கூடலூா் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாவனல்லா பகுதியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை மூலம் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட பண்ணை குட்டை, ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.6 லட்சம் மதிப்பில் மசினகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டப்பட்டு வரும் சமுதாயக் கூடம் ஆகியவற்றை பாா்வையிட்டாா்.

    தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அவர்,

    தமிழக அரசின் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் மாணவா்களுக்கு அளிக்கப்பட்டு வரும் பயிற்சியி குறித்து ஆசிரியர்க–ளிடம் கேட்டறிந்தார்.

    பின்னா் மசினகுடி பகுதியிலுள்ள மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரிக்கும் உர கிடங்கினையும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

    ஆய்வின்போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் தாமோதரன், மசினகுடி ஊராட்சித் தலைவா் மாதேவி மோகன், அரசுத் துறை அலுவலா்கள் உள்பட பலா் உள்ளனர்.

    • அதிகாரிகள் குளத்தை அளந்து அது ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தால் கட்டாயம் மீட்டு தருவதாக சமூக ஆர்வலர்களிடம் உறுதி அளித்திருந்தனர்.
    • ஆக்கிரமிப்பாளர்கள் குளத்தின் முழு பகுதியையும் சுத்தம் செய்ய கூடாது என தடுத்ததால் அவர்கள் வசம் இருந்த ஆக்கிரமிப்பு நிலம் கண்டறியப்பட்டுள்ளது.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை நகரம் முழுவதும் கடந்த வாரம் நீர்நிலை மீட்ப்பாளர்கள் குழுவினர் சார்பில் குளத்தை காணவில்லை என்ற போஸ்டர் நகர் முழுவதும் ஒட்டப்பட்டு பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் வட்டாட்சியர் ராமச்சந்திரன் முன்னிலையில் அதிகாரிகள் அளவை செய்து குளம் ஆக்கிரமிப்பில் இருந்தது கண்டறியப்பட்டு எல்லைக் கற்கள் நடப்பட்டது.

    பட்டுக்கோட்டை நகராட்சியில் பகுதியில் உள்ள அய்யனார் கோயில் அருகே கோயிலுக்கு சொந்தமான பக்கிரிச்சி குளம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி சிறிய குட்டை போல் காணப்பட்டது.

    இந்த நிலையில் குளத்தை காணவில்லை என்று பட்டுக்கோட்டை நகர் பகுதி முழுவதும் சில தினங்களுக்கு முன்பு சமூக ஆர்வலர்களால் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், வருவாய்த்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் குளத்தை அளந்து அது ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தால் கட்டாயம் மீட்டு தருவதாக சமூக ஆர்வலர்களிடம் உறுதி அளித்திருந்தனர்.

    இந்த நிலையில் பட்டுக்கோ ட்டைவட்டா ட்சியர் ராமச்ச ந்திரன் தலைமையில் பட்டு க்கோட்டை நகராட்சி ஆணையர் குமார், நகரமை ப்பு அலுவலர் கருப்பையன் மற்றும் வருவாய்த்துறை, அறநிலையத்துறை, நகராட்சி உள்ளிட்ட அதிகாரிகள் அய்யனார் கோயில் மற்றும் அதற்கு சொந்தமான பக்கிரிச்சி குளத்தினை நில அளவை மேற்கொண்டதில், குளம் ஆக்கிரமிப்பில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதன் எல்லைப் பகுதிகளில் எல்லைக் கற்கள் நடப்ப ட்டன.

    பட்டுக்கோட்டை நகராட்சி சார்பில் இந்த குளத்தில் மண்டிக்கிடந்த ஆகாயத்தாமரை செடிகளை அப்புறப்படுத்தி கழிவு நீரை வெளியேற்றி குளத்தைச் சுற்றி நடைபாதை அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடுவதற்காக டெண்டர் விடப்பட்ட பணியை மேற்கொண்ட பொழுது ஆக்கிரமிப்பாளர்கள் குளத்தின் முழு பகுதியையும் சுத்தம் செய்ய கூடாது என தடுத்ததால் அவர்கள் வசம் ஆக்கிரமிப்பில் இருந்த நிலம் கண்டறியப்பட்டுள்ளது.

    இந்தச் சம்பவம் நகரில் ஆக்கிரமிப்பில் உள்ள மேலும் பல குளங்களை சர்வே செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறினர்.

    • இர்வின் பாலத்தில் இருந்து சுற்றுலா மாளிகை வரை கரையின் இருபுறமும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பக்கவாட்டு தடுப்பு கம்பிகளுடன் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
    • நீரின் வேகம் அதிகமாக இருப்பதால் மண் அரிப்பு ஏற்பட்டு நடைபாதை சரிந்துள்ளதாக கூறப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகரின் மையப் பகுதியில் கல்லணை கால்வாய் ஆறு ஓடுகிறது. . இர்வின் பாலத்தில் இருந்து சுற்றுலா மாளிகை வரை கரையின் இருபுறமும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பக்கவாட்டு தடுப்பு கம்பிகளுடன் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நடைபாதையில் தினமும் ஏராளமான பொது மக்கள் நடந்து செல்கின்றனர். பலர் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர்.

    தற்போது கல்லணை கால்வாய் ஆற்றில் விநாடிக்கு 3221 கன அடி வீதம் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

    இந்த நிலையில் ஆற்றின் இடதுபுற கரையில் நடைபாதை சரிந்து பக்கவாட்டு தடுப்பு கம்பியுடன் ஆற்றில் விழுந்துள்ளது. அந்த நேரத்தில் யாரும் நடந்து செல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

    நீரின் வேகம் அதிகமாக இருப்பதால் மண் அரிப்பு ஏற்பட்டு நடைபாதை சரிந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சில மீட்டர் தூரத்திற்கு நடைபாதை தற்போது மிக குறுகியதாக காட்சியளிக்கிறது. அந்த இடங்களில் பிடிமானம் ஏதும் இல்லாததை கண்டு கொள்ளாமல் சிலர் ஆபத்தான முறையில் நடந்து செல்கின்றனர். இதனால் அவர்கள் தவறி விழக்கூடிய அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே முழுவதுமாக கரை உடைப்பு ஏற்பட்டு பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன்னர் அதிகாரிகள் விரைந்து வந்து மண் அரிப்பை சரி செய்து கரையை பலப்படுத்த வேண்டும். நடைபாதையை பலமாக கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×