search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடைபாதை"

    • பதட்டம் நிலவியதால் போலீசார் விரைந்தனர்
    • தாங்களாகவே படிக்கட்டுகளை அமைத்துள்ளனர். இது பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக புகார்கள் உள்ளன.

    குழித்துறை :

    மார்த்தாண்டம் பகுதியில் பம்மத்திலிருந்து வெட்டுமணி வரை 2¾ கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் அடிப்பகுதியில் சாலையின் இரு பக்கங்களிலும் பொது மக்கள் நடந்து செல்ல நடை பாதை அமைக்கப்பட்டது.

    இதில் பொது மக்களுக்கு நடந்து செல்ல வசதியாக பல பகுதிகளில் படிக்கட்டு களும் அமைக்கப்ப ட்டுள்ளது. இதில் உயர்வாக காணப்படும் பகுதிகளில் சில கடை வியாபாரிகள், ஆக்கிரமிப்பு செய்ததோடு தங்களுக்கு வசதியாக கடைகளில் இருந்து நடைபாதைக்கு செல்லும் வழியின் மேற்பகுதிகளில் சீட்டுகளை அமைத்து கடையாக மாற்றி உள்ளனர். மேலும் சாலையிலிருந்து கடைக்கு செல்ல நடை பாதையை உடைத்து, தாங்களாகவே படிக்கட்டுகளை அமைத்துள்ளனர். இது பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக புகார்கள் உள்ளன.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் காந்தி மைதானத்தை தொட்டு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள ஒரு கடைக்கு படி அமைக்க முயன்றனர். அவர்கள் கனரக வாகனம் மூலம் நடைபாதையை உடைத்தனர். மேலும் நடைபாதையின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த கிரில்களையும் உடைத்து எடுத்துள்ளனர்,

    இதை கேள்விப்பட்ட பா.ஜ.க. மாநில வழக்கறிஞர் பிரிவு, குழித்துறை நகர பா.ஜ.க. தலைவர் சுமன், கிள்ளியூர் ஒன்றிய செயலாளர் பிரதாப், உமேஷ் உட்பட நிர்வாகிகள் அங்கு வந்தனர். அவர்கள் நடைபாதையை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்ததோடு போராட்டமும் நடத்தினர்.

    இதையடுத்து சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து நடைபாதையை இடிக்க பயன்படுத்திய கனரக எந்திர வாகனம் மற்றும் உபகரணங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் மார்த்தாண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • நகராட்சிக்கு சொந்தமான கடைக்காரர்கள் தங்களது எல்லையை தாண்டி நடைபாதையை ஆக்கிரமித்து கடைகளை அமைத்துள்ளனர்.
    • கடை முன்பு நிற்கும் பயணிகளை ஆக்கிரமிப்பு கடைக்காரர்கள் திட்டுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, திருப்பதி, திருத்தணி, ஆவடி, ஊத்துக்கோட்டை, செங்குன்றம், பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி, ஸ்ரீபெரும்புதூர் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், பெங்களூர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு விழுப்புரம் கோட்ட அரசு பஸ்கள், மாநகர பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் பயணிப்பதற்காக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவன அலுவலர்கள், பணியாளர்கள், பொது மக்கள் என ஆயிரக்கணக்கானோர் தினமும் திருவள்ளூர் பஸ் நிலையம் வந்து செல்கின்றனர்.

    திருவள்ளூர் பஸ் நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் ஏலம் விடப்பட்டு அவற்றின் மூலம் மாதம் தோறும் குறிப்பிட்ட தொகை வாடகையாக வசூல் செய்யப்படுகிறது. ஆனால் நகராட்சிக்கு சொந்தமான கடைக்காரர்கள் தங்களது எல்லையை தாண்டி நடைபாதையை ஆக்கிரமித்து கடைகளை அமைத்துள்ளனர். இதனால் வெளியூர், உள்ளூர் பயணிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். பஸ் நிலையத்துக்கு கைக்குழந்தையுடன் வரும் பெண்கள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் என பலரும் மழையிலும், வெயிலிலும் நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும் கடை முன்பு நிற்கும் பயணிகளை ஆக்கிரமிப்பு கடைக்காரர்கள் திட்டுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். கடையை மறைத்து நின்றால் வியாபாரம் பாதிக்கிறது என்று கூறுகிறார்கள். இதனால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகிறார்கள். எனவே, திருவள்ளூர் பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு தொல்லை கொடுக்கும் ஆக்கிரமிப்பு கடைகளை நிரந்தமாக அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நீரழிவு மற்றும் ரத்த அழுத்த நோய்களின் தாக்கம் 28 சதவீதம் குறைகிறது.
    • இந்த திட்டமானது ஒவ்வொரு மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் நடத்தப்பட உள்ளது.

    தஞ்சாவூர்:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தினை இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் ஆகியோர் காணொளி காட்சி மூலம் சென்னையில் தொடக்கி வைத்தனர்.

    அதனை தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டம் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தினை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது :-

    உலக சுகாதார அமைப்புகளின் தரவுகளின்படி உடற்பயிற்சி மேற்கொள்வதால் நீரழிவு மற்றும் ரத்த அழுத்த நோய்களின் தாக்கம் 28 சதவீதமும், இதய நோயின் தாக்கம் 30 சதவீதமும் குறைகின்றது என கண்டறியப்பட்டுள்ளது.

    நடைப்பயிற்சி உடலை சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் நல்ல உடல் எடையுடன் இருக்க உதவுகிறது.

    மேலும் நாள்பட்ட உடல் பிரச்சினை மற்றும் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்போம் நலம் பெறுவோம் என்பதற்கு இணங்க பொதுமக்களின் நலன் மற்றும் ஆரோக்கியத்தை பேணிக்காக்கும் பொருட்டு 8 கிலோமீட்டர் நடை பாதை கண்டறியப்பட்டுள்ளது.

    இந்த நடைபாதை 4 கிலோமீட்டர் தூரம் கொண்ட அன்னை சத்யா விளையாட்டரங்கம் முதல் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அரங்கம் தஞ்சாவூர் மாநகராட்சி வரை ஒரு முழு சுற்று சுற்றி 8 கிலோமீட்டர் தூரம் தொடங்கிய இடத்தில் முடிவடைகிறது.

    மேலும் இத்திட்டமானது ஒவ்வொரு மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் நடத்தப்படவுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகரன் , டி. கே. ஜி. நீலமேகம், மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, சுகாதார துறை துணை இயக்குனர்கலைவாணி, மாநகர நல அலுவலர் சுபாஷ் காந்தி, மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல், முன்னாள் கவுன்சிலர் சதாசிவம், கவுன்சிலர் தமிழ்வாணன், விளையாட்டு மேம்பாட்டு பிரிவு அமைப்பாளர் ராணிகண்ணன், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ராஜசேகரன், பொறியாளர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கடைக்காரர்கள் பலர் பஸ் நிலையத்தில் உள்ள நடைபாதையை ஆக்கிரமித்து பொருட் கள் வைத்திருந்தனர்.
    • இலவச கழிப்பறையில் சிறுசிறு குறைபாடு உள்ளது.

    கடலூர்:

    கடலூர் பஸ் நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்த மான 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு மாநகராட்சி மூலம் மாதந்தோறும் வாட கை வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடைக்கா ரர்கள் பலர் பஸ் நிலை யத்தில் உள்ள நடைபாதை யை ஆக்கிரமித்து பொருட் கள் வைத்திருந்தனர். இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் நடை பாதையை பயன்படுத்த முடியாமல் கடும் அவதி அடைந்து வந்தனர். பஸ்கள் நிறுத்தப்படும் இடங்களி லேயே பொதுமக்கள் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் நடைபாதை ஆக்கிரமிப்பு களை அகற்ற வேண்டும் என புகார் அளித்தனர். இதையடுத்து மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ், பஸ் நிலையத்தில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தர விட்டார்.

    அதன் பேரில் மாநகராட்சி வருவாய் ஆய்வாளர்கள் இன்று காலை பஸ் நிலையத்திற்கு சென்று நடைபாதையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்றினர். மேலும் பஸ் நிலையத்துக்குள் பொதுமக்களுக்கு இடை யூறாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களின் காற்றை பிடுங்கி விட்டனர்.இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ் கூறுகையில், பஸ் நிலை யத்தில் நடைபாதைகளை ஆக்கிரமித்து கடை வைப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இலவச கழிப்பறையில் சிறுசிறு குறைபாடு உள்ளது. அவை விரைவில் சீரமைக்கப் படும். மேலும் பஸ் நிலை யத்திற்குள் வாகனங்கள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் பஸ் நிலையத்திற்கு இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களை கொண்டு வருபவர்கள் மீது நட வடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட சம்பவத்தால் கடலூர் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பள்ளி நடைபாதை தளம் திறக்கப்பட்டது.
    • அய்யப்பன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி-மதுரை ரோட்டில் உள்ள டிஇஎல்சி நடுநிலைப் பள்ளியின் நுழைவு வாயில் முதல் வகுப்பறை வரை தனது சொந்த செலவில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நடைபாதைத்தளம் பி. அய்யப்பன் எம்.எல்.ஏ. அமைத்துக்கொடுத்தார். அதன் திறப்பு விழாவில் பள்ளி நிர்வாகி ப. கேசவன் தலைமையில் தலைமையாசிரியர் ஆக்னஸ் வரவேற்றார். சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் எம்.எல்.ஏ.கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

    வார்டு உறுப்பினர் சந்திரன் அமைப்புசாரா ஓட்டுனர் அணி எஸ்.பி.பிரபு நகர செயலாளர் சசிகுமார் ஒன்றிய செயலாளர் ஜான்சன் செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் அழகுமாரி தொகுதி செயலாளர் ராஜா வில்லாணி பாண்டி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் பிரபாகரன் நன்றி கூறினார்.

    • நடை பாதையில் செல்லும் பக்தர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தனர்.
    • தடுப்பு வேலி அமைப்பதால் நிரந்தர தீர்வு காண முடியாது.

    திருப்பதி:

    திருப்பதி அலிபிரி நடைபாதையில் 6 வயது சிறுமியை சிறுத்தை இழுத்துச் சென்று கடித்து கொன்றது.

    இதையடுத்து நடைபாதையில் வனத்துறையினர் வைக்கப்பட்ட இரும்பு கூண்டில் அடுத்தடுத்து 6 சிறுத்தைகள் சிக்கியது.

    இந்நிலையில் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மேட்டு நடைப்பாதையில் வனவிலங்குகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது குறித்து வல்லுனர் குழு ஆய்வு செய்தது.

    விசாகப்பட்டினம் வன விலங்கு சரணாலயத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் ரமேஷ், அசுதேஷ் சிங், சாகன் பிரசாத் மகாஜன் ஆகியோர் அலிபுரி நடைபாதையில் ஆய்வு செய்தனர்.

    அப்போது நடை பாதையில் செல்லும் பக்தர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தனர்.

    சிறுமியை கொன்ற லட்சுமி நரசிம்ம சாமி கோவில் அருகே ஆய்வு மேற்கொண்டனர்.

    இது குறித்து ஆய்வு குழுவினர் கூறுகையில் :-

    நடைபாதையில் தடுப்பு வேலி அமைப்பதால் நிரந்தர தீர்வு காண முடியாது.

    மற்ற வழிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். வனவிலங்குகள் நடைபாதைக்கு வருவதை பக்தர்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாதுகாப்பு முறைகளை செயல்படுத்த முடியும் என தெரிவித்தனர்.

    இதுகுறித்து இன்று தொழில்நுட்ப வல்லுநர்கள் ஸ்ரீவாரி மெட்டு நடை பாதையில் ஆய்வு செய்தனர்.

    • அழகிகுளம், சாமந்தான் குளம் உள்பட பல்வேறு குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளது.
    • குளத்தின் இருபுறமும் நடைபாதை அமைத்து மின் விளக்கு, நாற்காலிகள் போடப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி வார்டு 10-ல் வடவாற்ற ங்கரை பகுதியில் சூரியக் குளம் உள்ளது.

    மாநகரில் முக்கியமான குளமாக விளங்கி வந்தது. ஆனால் கடந்த 35 ஆண்டுகளாக இந்த குளத்தில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்பட்டது.

    இந்த நிலையில் மாநகராட்சியில் ஏற்கனவே அழகி குளம் உள்பட பல்வேறு குளங்கள் தண்ணீர் நிரப்பப்பட்டு நடைபா தைகள் அமைக்கப்பட்டு அங்கு பல்வேறு வசதிகளுடன் புதுப்பொலிவுடன் காட்சியளித்து வருகின்றன.

    அந்த வகையில் சூரிய குளத்தையும் மாற்ற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி மேயர் சண்.ராமநாதன் அந்த குளத்தை ஆய்வு செய்து வடவாறில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுத்தார். மேலும் அவர் குளத்தில் தண்ணீர் நிரப்பி அந்த பணியை தொடங்கி வைத்தார்.

    இது குறித்து அவர் கூறும் போது:-

    தஞ்சை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகின்றன. அழகிகுளம், சாமந்தான் குளம் உள்பட பல்வேறு குளங்கள் தூர்வாரப்பட்டு நவீன முறையில் புதுப்பொலிவுடன் மாற்றப்பட்டுள்ளது. இதே போல் இன்னும் பல்வேறு குளங்கள் சீரமைக்கப்பட உள்ளன.

    அந்த வகையில் வடவாற்றங்கறை சூரிய குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. 35 ஆண்டுகளுக்கு பிறகு இந்த குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது.

    அடுத்த கட்டமாக குளத்தின் இருபுறமும் நடைபாதை அமைத்து மின் விளக்கு, நாற்காலிகள் போடப்படும். இன்னும் பல்வேறு வசதிகள் இந்த சூரிய குளத்தில் அமைக்கப்படும்.

    இதற்காக ரூ.80 லட்சத்திற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்பப்பட்டுள்ளன. நிதி வந்தவுடன் பணிகள் தொடங்கி விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி செயற்பொ றியாளர் ( பொறுப்பு ) ராஜசேகரன், உதவி பொறியாளர்கள் கார்த்திக், ஆனந்தி, மண்டல குழு தலைவர்கள் மேத்தா, புண்ணியமூர்த்தி, ரம்யா சரவணன், கவுன்சிலர் செந்தமிழ் செல்வன், தி.மு.க.பகுதி செயலாளர் கார்த்திகேயன், மாநகரப் பிரதிநிதி பத்மநாதன், அறிவு, கண்ணன், மூவேந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • போக்குவரத்து போலீசார் நடவடிக்கை
    • இதே போல் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கும் போலீசார் அபராதம்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது. இதை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஒரு வழி பாதையில் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் நடைபாதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கும் போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள்.

    வேப்பமூடு முதல் டதி பள்ளி வரை உள்ள சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்துவது வாடிக்கையாக உள்ளது. அந்த வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்று காலை போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்லச்சாமி தலைமை யிலான போலீசார் அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது நடைபாதையில் கார் ஒன்று நிறுத்தப்பட்டி ருந்தது. போலீசார் காரின் வாகன உரிமையாளரை தேடிப் பார்த்தனர்.

    ஆனால் அவரை காணவில்லை. இதையடுத்து அந்த காருக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது. இதே போல் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கும் போலீசார் அபராதம் விதித்தனர். ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேராக வந்தவர்களும் இந்த சோதனையில் சிக்கினார்கள். அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

    • ஏழைகள் அதிகமாக பயன்படுத்தும் நடைபாதைகள் சரி செய்யப்பட வேண்டும்.
    • சில குடியிருப்போர் இது போன்ற திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன் மாநகராட்சி தங்களிடம் ஆலோசனை கேட்க வேண்டும் என்றனர்.

    சென்னை:

    சென்னை தியாகராய நகரில் உள்ளது போல நடைபாதை பிளாசா 13 இடங்களில் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. உலக வங்கி நிதியுதவி உடன் இத்திட்டத்தை செயல்படுத்த இடங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

    மிகப்பெரிய தெருக்கள் அமைக்கும் திட்டத்தின் கீழ் பழைய வண்ணாரப்பேட்டை முதல் புதிய வண்ணாரப்பேட்டை வரை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நடைபாதை பிளாசா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இது போல மாலை பஜார், ரத்தன் பஜார் சாலை, அண்ணாநகர் 3-வது அவென்யூ, கீழ்ப்பாக்கம் கார்டன் ஆகிய சாலைகளை சென்னை மாநகராட்சி அடையாளம் கண்டுள்ளது.

    மேலும் புல்லா அவென்யூ, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை-கதீரட்ரல் ரோடு, எல்டம்ஸ் ரோடு, வேளச்சேரி மெயின் ரோடு, கால்வாய் வங்கி சாலை, மேற்கு கால்வாய் வங்கி சாலை, தாலுகா அலுவலக சாலை, ரேஸ்கோர்ஸ் சாலை, சாஸ்திரி நகர் போன்ற இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை-கதீட்ரல் சாலை 3.5 கி.மீ. அண்ணா நகரில் 2.4 கி.மீ., புல்லா அவனெ்யூ 1.5, கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை-1.3, எல்டம்ஸ் சாலை 1 கி.மீ., மாலை பஜார் மற்றும் ரத்தன் பஜார் சாலை .7 கி.மீ. நீளத்திற்கு நடைபாதை பிளாசாக்கள் அமைக்கப்படுகிறது.

    நடைபாதை பிளாசா மொத்தம் 50 கி.மீ. தூரத்திற்கு அமைகின்றன. இந்த பாதையில் நடந்து செல்வதற்கு இடம், சைக்கிளில் செல்ல தனி வழி, பார்க்கிங் வசதி, சில இடங்களில் இரு வழி வண்டிப்பாதை ஆகியவற்றை உள்ளடக்கி நடைபாதை பிளாசாக்கள் உருவாக்கப்படுகிறது.

    பொதுமக்கள் இந்த நடைபாதை பிளாசாவை பல்வேறு நோக்கத்திற்காக பயன்படுத்தும் வகையில் அமைக்கப்படுகிறது. பொது மக்கள் செல்லும் பாதையை வாகனங்கள் நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

    அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கே.பி.சுப்பிரமணியன் கூறுகையில், இது போன்ற திட்டங்களுக்கு மாநகராட்சி முன்னுரிமை அளிக்க வேண்டும். ஏழைகள் அதிகமாக பயன்படுத்தும் நடைபாதைகள் சரி செய்யப்பட வேண்டும். பாதசாரி பிளாசாக்கள் அதிக செலவை கொண்ட திட்டங்கள் மற்றும் பெரும்பாலான சாலைகளில் பாதைகள் இல்லை. அதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

    மரங்கள் நிறைந்த இடங்களில் வெளியில் இருப்பது அனைவரின் குறிப்பாக குழந்தைகளின் நல்வாழ்வுக்கு அவசியமானது. இத்தகைய பிளாசாக்கள் பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் வெளியில் இருப்பதை அனுபவிக்க வாய்ப்பு அளிக்கின்றன என்று சமூக ஆர்வலர் தெரிவிக்கின்றனர்.

    ஆனாலும் சில குடியிருப்போர் இது போன்ற திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன் மாநகராட்சி தங்களிடம் ஆலோசனை கேட்க வேண்டும் என்றனர்.

    • பாலம் அமைக்கப்பட்ட பிறகும் போக்குவரத்து நெருக்கடி தொடர்ந்தே வருகிறது.
    • தனியார் நிறுவன பொருட்களை பறிமுதல் செய்ய நட வடிக்கை எடுக்க வேண்டும்

    கன்னியாகுமரி :

    குழித்துறை நகராட்சிக்குட்பட்ட மார்த்தாண்டம், நாகர்கோவிலுக்கு அடுத்து, குமரியின் 2-வது பெரிய வர்த்தக நகரமாக விளங்கு கிறது. இங்கு பல்வேறு காரணங்களால் கடுமை யான போக்குவரத்து நெருக் கடி உள்ளது. பாலம் அமைக்கப்பட்ட பிறகும் போக்குவரத்து நெருக்கடி தொடர்ந்தே வருகிறது.

    மேலும் பாலத்தின் கீழ்பகுதியில் உள்ள சாலைகளில் தொடர்ந்து கேபிள் அமைக்கும் பணி மற்றும் குடிநீர் பைப்பு களுக்காக தோண்டப்படும் பள்ளங்களால் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. சாலையோர நடைபாதை வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத அளவில் ஆக்கிரமித்து வைத்துள்ளனர்.

    இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் காந்தி மைதானத்தை சுற்றியுள்ள நடைபாதைகளில், பெருங் கடை வியாபாரிகள் தங்களது நிறுவனங்களுக்கு கொண்டு வரப்படுகின்ற பொருட்களை அடுக்கி வைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல கூட முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    எனவே நடைபாதை களில் இருக்கும் பூக்கடைகள் மற்றும் நடைபாதை கடை களை அப்புறப்படுத்து வதோடு, அங்கு குவித்து வைக்கப்பட்டுள்ள தனியார் நிறுவன பொருட்களை பறிமுதல் செய்ய நட வடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

    • நடை பாதைகள் வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ள தால் பொதுமக்கள் நடந்து செல்ல வழியில்லாமல் அவதியடைந்தனர்.
    • ஜவுளிக்கடை ஒன்றின் முன்பு வைக்கப் பட்டிருந்த மெகா ஜென ரேட்டரை அப்புறப்படுத்தி னர்.

    கடலூர்:

    சிதம்பரத்தில் காவல் துறை சார்பில் நடைபாதை ஆக்கிர மிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. சிதம்பரம் நகரில் 4 வீதிகள் மற்றும் சன்னதிகளில் நடை பாதைகள் வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ள தால் பொதுமக்கள் நடந்து செல்ல வழியில்லாமல் அவதி யடைந்தனர். மேலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு, அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது.

    இந்நிலையில் சிதம்பரம் கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி மேற்பார்வையில், போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் பார்த்தீபன், சட்டம்-ஒழுங்கு சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன் மற்றும் போலீசார் மேலரத வீதியில் நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி னர். ஜவுளிக்கடை ஒன்றின் முன்பு வைக்கப் பட்டிருந்த மெகா ஜென ரேட்டரை அப்புறப்படுத்தி னர். அதே போன்று நடராஜர் கோயில் பிரதான வாயிலான கீழசன்னதியில் சாலையில் உள்ள ஆக்கிர மிப்புகளையும் அகற்றினர். மேலும் நடைபாதையை ஆக்கிரமித்தால், அபராதம் விதிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

    • நூற்றுக்கு நூறு பணிகளை நிறைவேற்ற வேண்டும்.
    • ஆய்வில் மொத்தம் 121 மனுக்கள் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்டப்பேரவை மனுக்கள் குழுவினர் இன்று காலை ஆய்வு மேற்கொண்டனர்.

    தமிழக அரசின் தலைமை கொறடாவும், சட்டப்பேரவை மனுக்கள் குழுத் தலைவருமான கோவி. செழியன் தலைமையிலான இக்குழுவினர் தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் அருகே உள்ள காடவராயன்குளம், வடிகால் வாய்க்கால், சமுத்திரம் ஏரியை ஆய்வு செய்தனர்.

    பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுமக்களிடம் பெறப்பட்ட பொது நலன் குறித்த மனுக்கள் மீது சட்டப்பேரவை மனுக்கள் குழு 9 இடங்களில் கள ஆய்வு மேற்கொள்கிறது.

    இதையடுத்து, மாவட்ட ஆட்சியரகத்தில் பிற்பகலில் மனுதாரர்கள், அரசு அலுவலர்களுடன் கலந்தாய்வு நடை பெறவுள்ளது.

    இந்த ஆய்வில் மொத்தம் 121 மனுக்கள் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

    அனைத்து மனுதா ரர்களையும் மாவட்ட ஆட்சியரகத்துக்கு வரவழைத்து, அனைத்து துறை அலுவலர்களிடம் விசாரணை நடத்தவுள்ளோம்.

    நூற்றுக்கு நூறு பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படையில் இக்கள ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

    சாலை வசதி, குளக்கரை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், தூர் வாருதல் உள்ளிட்டவை தொடர்பான கோரிக்கைகள் அதிகமாக உள்ளன.சமுத்திரம் ஏரி கரையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடைபாதையுடன் கூடிய மேம்பாட்டு பணி 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

    இதில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் படகு சவாரி ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வந்துள்ளது.

    இது தொடர்பாக முழுமையாக ஆய்வு செய்து முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், சட்டப்பேரவை மனுக்கள் குழுச் செயலர் சீனிவாசன், டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ, மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    ×