search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மார்த்தாண்டத்தில் நடைபாதை ஆக்கிரமிப்புகளால் பொதுமக்கள் அவதி
    X

    மார்த்தாண்டத்தில் நடைபாதை ஆக்கிரமிப்புகளால் பொதுமக்கள் அவதி

    • பாலம் அமைக்கப்பட்ட பிறகும் போக்குவரத்து நெருக்கடி தொடர்ந்தே வருகிறது.
    • தனியார் நிறுவன பொருட்களை பறிமுதல் செய்ய நட வடிக்கை எடுக்க வேண்டும்

    கன்னியாகுமரி :

    குழித்துறை நகராட்சிக்குட்பட்ட மார்த்தாண்டம், நாகர்கோவிலுக்கு அடுத்து, குமரியின் 2-வது பெரிய வர்த்தக நகரமாக விளங்கு கிறது. இங்கு பல்வேறு காரணங்களால் கடுமை யான போக்குவரத்து நெருக் கடி உள்ளது. பாலம் அமைக்கப்பட்ட பிறகும் போக்குவரத்து நெருக்கடி தொடர்ந்தே வருகிறது.

    மேலும் பாலத்தின் கீழ்பகுதியில் உள்ள சாலைகளில் தொடர்ந்து கேபிள் அமைக்கும் பணி மற்றும் குடிநீர் பைப்பு களுக்காக தோண்டப்படும் பள்ளங்களால் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. சாலையோர நடைபாதை வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத அளவில் ஆக்கிரமித்து வைத்துள்ளனர்.

    இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் காந்தி மைதானத்தை சுற்றியுள்ள நடைபாதைகளில், பெருங் கடை வியாபாரிகள் தங்களது நிறுவனங்களுக்கு கொண்டு வரப்படுகின்ற பொருட்களை அடுக்கி வைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல கூட முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    எனவே நடைபாதை களில் இருக்கும் பூக்கடைகள் மற்றும் நடைபாதை கடை களை அப்புறப்படுத்து வதோடு, அங்கு குவித்து வைக்கப்பட்டுள்ள தனியார் நிறுவன பொருட்களை பறிமுதல் செய்ய நட வடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

    Next Story
    ×