search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மார்த்தாண்டம் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக நடைபாதையில் 5 மாதங்களாக நிற்கும் மோட்டார் சைக்கிள்
    X

    போக்குவரத்துக்கு இடையூறாக நடைபாதையில் 5 மாதங்களாக நிற்கும் மோட்டார் சைக்கிளை படத்தில் காணலாம்.

    மார்த்தாண்டம் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக நடைபாதையில் 5 மாதங்களாக நிற்கும் மோட்டார் சைக்கிள்

    • மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு தகவல்
    • 1 மாதம் ஆகியும் போலீசார் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் சாங்கோ மெடிக்கல் பின்புறம் சிறிய நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையில் காலை மற்றும் மாலை வேளைகளில் அதிக நெருக்கடியாக இருக்கும். அப்பகுதியில் ஏராளமான கடைகள் மற்றும் வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் மோட்டர் சைக்கிளும் செல்கிறது.ஆகையால் காலை மற்றும் மாலை நேரங்களில் இப்பகுதி மிகுந்த நெருக்கடியாக இருக்கும்.

    இந்த நெருக்கடியான நடைபாதையில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக ஒரு மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த வாகனம் அருகில் ஏதேனும் வீட்டில் உள்ளவர்களுக்கு சொந்தமானதா? இல்லை பழுதானதால் அங்கு நிறுத்தி சென்று விட்டார்களா? இல்லை திருட்டு வாகனமா என்பது தெரியவில்லை.

    போக்குவரத்துக்கு இடையூறாக சில மாதங்களாக அதே இடத்தில் நின்றதால் இது பற்றி அருகில் உள்ளவர்கள் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.ஆனால் 1 மாதம் ஆகியும் போலீசார் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த மோட்டார் சைக்கிளால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கும், இருசக்கர வாகனத்தில் செல்வதற்கும் மிகுந்த சிரமமாக உள்ளது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×