search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Stones"

    • சத்தம் கேட்டதால் ரெயில் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
    • மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு பச்சக்குப்பம் பகுதியில் சோதனை நடத்தினர்.

    ஜோலார்பேட்டை:

    வேலூர் மாவட்டம் காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக 120 ரெயில்கள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன.

    சென்னை, பெங்களூர், கேரளா மற்றும் கோவை, சேலம் பகுதிகளை இணைக்கும் முக்கிய ரெயில்வே பாதையாக இது உள்ளது.

    இந்நிலையில் இன்று ஆம்பூர் அருகே சென்னை ரெயிலை கவிழ்க்க மாபெரும் சதி அரங்கேற்றப்பட்டுள்ளது.

    கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது.

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சக்குப்பம் ரெயில் நிலையம் அருகே வீரவர் கோவில் என்ற இடத்தில் 3.45 மணிக்கு ரெயில் வந்தது. அந்த இடத்தில் கான்கிரீட் கலவையால் செய்யப்பட்ட சிமெண்ட் கல் மற்றும் கருங்கற்களை தண்டவாளத்தில் அடுக்கி வைத்திருந்தனர். ரெயில் அருகே வந்த போதுதான் என்ஜின் டிரைவர் அதை கவனித்தார்.

    அதனால் ரெயிலை உடனடியாக நிறுத்த முடியவில்லை. வேகமாக வந்த ரெயில் தண்டவாளத்தில் இருந்த கற்கள் மீது மோதி தூக்கி வீசியது.

    மேலும் தண்டவாளத்தில் இருந்த சிமெண்டு கற்களை நொறுக்கியபடி ரெயில் சென்றது.

    மற்ற பெட்டிகளில் உள்ள சக்கரங்களும் கற்கள் மீது ஏறி நொறுக்கின. இதனால் பயங்கர சத்தம் கேட்டது. ரெயிலில் தூங்கி கொண்டிருந்த பயணிகள் கண்விழித்தனர்.

    சத்தம் கேட்டதால் ரெயில் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து ரெயிலை என்ஜின் டிரைவர் மெதுவாக இயக்கினார். பச்சகுப்பம் ரெயில் நிலையத்தில் காவேரி எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டது.

    அங்கிருந்து ஆம்பூர் மற்றும் ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு என்ஜின் டிரைவர் தகவல் தெரிவித்தார்.

    பின்னர் என்ஜின் கல் மீது மோதிய பகுதிகளை பார்வையிட்டார். அதில் சிறிய அளவு சேதம் ஏற்பட்டிருந்தது.

    இதனையடுத்து 15 நிமிடம் காலதாமதமாக காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை நோக்கி புறப்பட்டு சென்றது.

    தண்டவாளத்தில் கற்கள் வைக்கப்பட்ட இடத்திற்கு ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர்.

    அவர்கள் தண்டவாளத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கற்களை பார்வையிட்டனர். மேலும் அந்த பகுதியில் போலீசார் நடந்து சென்று ஆய்வு செய்தனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னையில் இருந்து ரெயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் விரைந்து வந்தனர்.

    மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு பச்சக்குப்பம் பகுதியில் சோதனை நடத்தினர்.

    இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஒடிசாவில், 3 ரெயில்கள் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில், 292 பேர் உயிரிழந்தனர். 1100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

    இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் ரெயில்வே அதிகாரிகள் உஷார் படுத்தபட்டனர்.

    ரெயில் என்ஜின் டிரைவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தபட்டனர்.

    திருச்சியில் இருந்து சுமார் 21 கிலோ மீட்டர் தொலைவில் சமயபுரம் அருகே உள்ள வாளாடி ரெயில் நிலையத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தண்டவாளத்தில் லாரி டயர்களை அடுக்கி வைத்து கவிழ்க்க சதி நடந்தது.

    இதில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் பெரும் விபத்தில் இருந்து தப்பியது.

    இதேபோல திருப்பத்தூர் ரெயில்நிலையத்தில் சிக்னல் பெட்டி கற்கள் வீசி உடைக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து அந்த பகுதிகளில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மோப்ப நாய் கொண்டு சோதனை நடத்தினர். இந்த சதி சம்பவங்களில் குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை.தொடர்ந்து விசாரணை நடப்பதாக கூறுகின்றனர்.

    இந்நிலையில் தமிழகத்தில் ரெயில்களை கவிழ்க்க அடுத்தடுத்து நடைபெறும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அசம்பாவிதங்களை தடுக்க கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும். தண்டவாள பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ரெயில்வே போலீசார் தெரிவித்தனர். 

    • பனமரத்துப்பட்டி அடுத்த கூட்டாறு பகுதியில் நேற்று மதியம் கற்கள் லோடு ஏற்றிக்கொண்டு மினி டிப்பர் லாரி சென்று கொண்டிருந்தது.
    • அப்போது கற்கள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்து, பனமரத்துப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அடுத்த கூட்டாறு பகுதியில் நேற்று மதியம் கற்கள் லோடு ஏற்றிக்கொண்டு மினி டிப்பர் லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை தும்பல்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ராஜா, தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினார்.

    அப்போது கற்கள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்து, பனமரத்துப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி குரால்நத்தம் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் வெங்கடாசலம் (வயது 44) என்பவரை கைது செய்தனர்.

    • பல்லடம் முதல் குண்டடம் வரை 4 வழிச்சாலையாக மாற்றும் பணி தொடங்கப்பட்டு நிறைவடைந்துவிட்டன.
    • ஒத்தக்கடை பகுதியில் மழைநீா் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

    குண்டடம் :

    குண்டடம் அருகே 4 வழிச் சாலைப் பணிகள் முடிவடைந்து சில மாதங்களே ஆகும் நிலையில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் கற்கள் பெயா்ந்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.

    கோவை-மதுரை நெடுஞ்சாலையில் பல்லடம் முதல் குண்டடம் வரை 4 வழிச்சாலையாக மாற்றும் பணி தொடங்கப்பட்டு வே.கள்ளிப்பாளையம் முதல் குண்டடம் வரை பணிகள் நிறைவடைந்துவிட்டன. இதில் மேட்டுக்கடையை அடுத்துள்ள ஒத்தக்கடை பகுதியில் மழைநீா் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாய்க்கும், தாா் சாலைக்கும் இடையில் உள்ள பகுதியில் நடைபாதையில் பாா்க்கிங் டைல்ஸ் எனப்படும் கற்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    அண்மையில் பெய்த மழையில் இங்கு பதிக்கப்பட்டுள்ள கற்கள் அரிக்கப்பட்டு சேதமாகியுள்ளன. பதிக்கப்பட்ட சில நாள்களிலேயே இவ்வாறு ஆகியுள்ளதால் இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு முறையாக டைல்ஸ் கற்கள் பதிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். 

    • காடையூா் காடேஸ்வர சுவாமி கோவிலுக்குச் சொந்தமாக பல கோடி மதிப்பிலான நிலங்கள் உள்ளன.
    • 7.41 ஏக்கா் நிலத்தில் எல்லை கற்களை நட்டுள்ளனா்.

    காங்கயம் :

    திருப்பூா் மாவட்டம் காங்கயம் வட்டம், வடசின்னாரிபாளையம் ஊராட்சியில் பல நூறு ஆண்டுகள் பழமையான காடையூா் காடேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குச் சொந்தமாக பல கோடி மதிப்பிலான நிலங்கள் உள்ளன.இவை பெரும்பாலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு ஆக்கிரமிப்பாளா்ளின் கட்டுப்பாட்டில் இருந்து வருவதாகத் தெரிகிறது.

    இந்நிலையில் தமிழக அரசு உத்தரவின்பேரில் இந்த நிலங்களைக் கண்டறிந்து அளவீடு செய்யும் பணியை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனா். திருப்பூா் தனி வட்டாட்சியா் (ஆலய நிலங்கள்) சு.மகேஸ்வரன் தலைமையில் இந்து சமய அறநிலையத் துறை நில அளவையா், செயல் அலுவலா் அடங்கிய குழுவினா் முதற்கட்டமாக வடசின்னாரிபாளையம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காடையூா் காடேஸ்வர சுவாமி கோவிலுக்கு சொந்தமான 7.41 ஏக்கா் நிலத்தில் எல்லை கற்களை நட்டுள்ளனா். அதேபோல, கோவிலுக்கு சொந்தமான அனைத்து நிலங்களும் விரைவில் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்படும் என்று இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். 

    • மயில்ரங்கத்தில் 490 ஆண்டுகள் பழமையான வைத்தியநாதேஸ்வரா் சுவாமி கோயில் உள்ளது.
    • நிலங்களைக் கண்டறிந்து அளவீடு செய்யும் பணி தொடங்கியுள்ளது.

    வெள்ளகோவில் :

    வெள்ளக்கோவில் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த கோயில் நிலங்களை மீட்டு எல்லைக் கற்கள் நடும் பணியை அறநிலையத் துறை புதன்கிழமை தொடங்கியது. வெள்ளக்கோவிலை அடுத்த மயில்ரங்கத்தில் 490 ஆண்டுகள் பழமையான வைத்தியநாதேஸ்வரா் சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்குச் சொந்தமாக பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான 520 ஏக்கா் நிலங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு ஆக்கிரமிப்பாளா்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. அரசு உத்தரவுப்படி இவற்றை மீட்க, நிலங்களைக் கண்டறிந்து அளவீடு செய்யும் பணி தொடங்கியுள்ளது.

    இந்து சமய அறநிலையத் துறை நில அளவையாளா் ராகவேந்திரன், செயல்அலுவலா் சு. இராமநாதன், திருக்கோயில் எழுத்தா் சிவகுமாா் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் முதல்கட்டமாக வெள்ளக்கோவில் கிராமம் கணபதிபாளையம், சுப்பிரமணியக்கவு ண்டன்வலசு கிராமங்களில் ஆக்கிரமிப்பில் இருந்த 50 ஏக்கா் நிலங்களை மீட்டு அந்த இடத்தில் எல்லைக் கற்களை நட்டுள்ளனா்.

    இதேபோல கோயிலுக்குச் சொந்தமான அனைத்து நிலங்களும் விரைவில் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்படும் என்று இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்."

    • இந்த ஆண்டுக்கான பண்டிகை, தலைகுந்தா அருகே உள்ள முத்தநாடு மந்தில் நேற்று கொண்டாடப்பட்டது.
    • தோடர் இன மக்கள் வீரத்தை வெளிப்படுத்தும் வகையில், இளவட்டக்கல்லை தூக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் குரும்பா், இருளா், காட்டுநாயக்கா், பனியா், தோடா், கோத்தா் என ஆறு பண்டைய பழங்குடிகள் வசித்து வருகின்றனா். இதில் தோடரின மக்கள் ஊட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வசித்து வருகின்றனா்.

    இவா்கள் தங்களுடைய மந்துகளில் டிசம்பா் மாத இறுதியிலோ அல்லது ஜனவரி மாதத்திலோ மொா்டுவொா்த் என்ற பாரம்பரியப் பண்டிகையை கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனா்.

    இந்த ஆண்டுக்கான பண்டிகை, தோடரின மக்கள் வசிக்கும் மந்துகளின் தலைமை மந்தான தலைகுந்தா அருகே உள்ள முத்தநாடு மந்தில் நேற்று கொண்டாடப்பட்டது.

    இதில் நீலகிரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள பெரும்பாலான தோடரின மக்கள் கலந்துகொண்டு, முத்தநாடு மந்தில் உள்ள பழமை வாய்ந்த மூன்போ மற்றும் ஓடையாள்போ கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினா்.

    கோவில் வளாகத்து க்குள் செல்ல ஆண்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளதால் தோடரின ஆண்கள் தங்கள் பாரம்பரிய உடையணிந்து வழிபாடு நடத்தினா். மேலும் தங்கள் பாரம்பரிய பாடல்களை பாடி பழங்குடியின தெய்வத்தை வழிபட்டனா்.

    பின்னா் தோடரின இளைஞா்கள் இளவட்டக் கற்களைத் தூக்கி தங்கள் பலத்தை நிரூபித்தனா்.

    இளவட்டக்கல் 100 கிலோ எடைகொண்டதாகவும், முழு உருண்டையாக வழவழவென்று எந்தப்பிடிப்பும் இல்லாமல் கைக்கு அகப்படாத வடிவத்தில் இருக்கும். இளவட்டக் கல்லுக்குக் கல்யாணக் கல் என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

    விழாக் காலங்களில் இந்தப் போட்டி நடைபெறும். ஊட்டியில் தோடர் இன மக்கள் வீரத்தை வெளிப்படுத்தும் வகையில், இளவட்டக்கல்லை தூக்கும் நிகழ்ச்சி நடந்தது. வெண்ணெய் பூசப்பட்ட 75 கிலோ எடை கொண்ட கல்லை தோடர் இன இளைஞர்கள் தூக்கி, அதனை தோலில் வைத்து முதுகுக்கு பின்புறமாக கீழே போட்டு அசத்தினார்கள்.

    இந்த விளையாட்டு நிறைவடைந்ததும் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்தவா்கள் பிரியாவிடை பெற்று தங்களது சொந்த மந்துகளுக்கு புறப்பட்டுச் சென்றனா். 

    • அதிகாரிகள் குளத்தை அளந்து அது ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தால் கட்டாயம் மீட்டு தருவதாக சமூக ஆர்வலர்களிடம் உறுதி அளித்திருந்தனர்.
    • ஆக்கிரமிப்பாளர்கள் குளத்தின் முழு பகுதியையும் சுத்தம் செய்ய கூடாது என தடுத்ததால் அவர்கள் வசம் இருந்த ஆக்கிரமிப்பு நிலம் கண்டறியப்பட்டுள்ளது.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை நகரம் முழுவதும் கடந்த வாரம் நீர்நிலை மீட்ப்பாளர்கள் குழுவினர் சார்பில் குளத்தை காணவில்லை என்ற போஸ்டர் நகர் முழுவதும் ஒட்டப்பட்டு பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் வட்டாட்சியர் ராமச்சந்திரன் முன்னிலையில் அதிகாரிகள் அளவை செய்து குளம் ஆக்கிரமிப்பில் இருந்தது கண்டறியப்பட்டு எல்லைக் கற்கள் நடப்பட்டது.

    பட்டுக்கோட்டை நகராட்சியில் பகுதியில் உள்ள அய்யனார் கோயில் அருகே கோயிலுக்கு சொந்தமான பக்கிரிச்சி குளம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி சிறிய குட்டை போல் காணப்பட்டது.

    இந்த நிலையில் குளத்தை காணவில்லை என்று பட்டுக்கோட்டை நகர் பகுதி முழுவதும் சில தினங்களுக்கு முன்பு சமூக ஆர்வலர்களால் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், வருவாய்த்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் குளத்தை அளந்து அது ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தால் கட்டாயம் மீட்டு தருவதாக சமூக ஆர்வலர்களிடம் உறுதி அளித்திருந்தனர்.

    இந்த நிலையில் பட்டுக்கோ ட்டைவட்டா ட்சியர் ராமச்ச ந்திரன் தலைமையில் பட்டு க்கோட்டை நகராட்சி ஆணையர் குமார், நகரமை ப்பு அலுவலர் கருப்பையன் மற்றும் வருவாய்த்துறை, அறநிலையத்துறை, நகராட்சி உள்ளிட்ட அதிகாரிகள் அய்யனார் கோயில் மற்றும் அதற்கு சொந்தமான பக்கிரிச்சி குளத்தினை நில அளவை மேற்கொண்டதில், குளம் ஆக்கிரமிப்பில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதன் எல்லைப் பகுதிகளில் எல்லைக் கற்கள் நடப்ப ட்டன.

    பட்டுக்கோட்டை நகராட்சி சார்பில் இந்த குளத்தில் மண்டிக்கிடந்த ஆகாயத்தாமரை செடிகளை அப்புறப்படுத்தி கழிவு நீரை வெளியேற்றி குளத்தைச் சுற்றி நடைபாதை அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடுவதற்காக டெண்டர் விடப்பட்ட பணியை மேற்கொண்ட பொழுது ஆக்கிரமிப்பாளர்கள் குளத்தின் முழு பகுதியையும் சுத்தம் செய்ய கூடாது என தடுத்ததால் அவர்கள் வசம் ஆக்கிரமிப்பில் இருந்த நிலம் கண்டறியப்பட்டுள்ளது.

    இந்தச் சம்பவம் நகரில் ஆக்கிரமிப்பில் உள்ள மேலும் பல குளங்களை சர்வே செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறினர்.

    • நொச்சிப்பாளையம் பிரிவில் இருபுறமும் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது.
    • உடுமலையிலிருந்து திருப்பூர் நோக்கி வந்த அரசு பேருந்து மீது கல்லெறிய முயன்றார்.

    வீரபாண்டி :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் சாலையில் நொச்சிப் பாளையம் பிரிவில் இருபுறமும் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இப்பகுதியில் இரவு மது போதையில் வந்த இளைஞர் ஒருவர் உடுமலையிலிருந்து திருப்பூர் நோக்கி வந்த அரசு பேருந்து மீது கல்லெறிய முயன்றார்.

    சுதாரித்துக் கொண்ட பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பொதுமக்களின் உதவியோடு மது போதையில் இருந்த வாலிபரை மடக்கி பிடித்து சரமாரியாக அடித்து, வீரபாண்டி பிரிவு காவல் துறையிடம் ஒப்படைத்தனர். அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நொச்சிபாளையம் பிரிவில் திடீரென ஏற்பட்ட இந்த சம்பவத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையில் இரு புறமும் அரசு மதுபான கடைகள் இயங்குவதே இது போன்ற சம்பவங்களுக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

    • போலீசார் சிங்காரதோப்பு மாசான சுடலைசுவாமி கோவில் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர்.
    • டிப்பர் லாரியில் குண்டு கற்கள் கடத்தி வரப்பட்டது.

    நெல்லை:

    ராதாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் தலைமையிலான போலீசார் சிங்காரதோப்பு மாசான சுடலைசுவாமி கோவில் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் குண்டு கற்கள் இருந்தது.

    அதற்குரிய ஆவணங்களை சரிபார்த்தபோது அனுமதி சீட்டில் தேதி மற்றும் நேரத்தை திருத்தி, போலியாக வைத்து கொண்டு லோடு ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். லாரி டிரைவரான கண்ணநல்லூர் மேலூரை சேர்ந்த குருநாராயணனை(வயதது 30) கைது செய்தனர்.

    ஹாரி கேன் ஹாட்ரிக்கால் கோல் மழை பொழிந்த இங்கிலாந்து 6-1 என பனமாவை துவம்சம் செய்து நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது. #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ‘ஜி’ பிரிவில் இடம்பிடித்துள்ள இங்கிலாந்து அறிமுக அணியான பனாமை எதிர்கொண்டது.

    பலம் வாய்ந்த இங்கிலாந்து தொடக்கம் முதலே கோல் மழை பொழிந்தது. ஆட்டத்தின் 8-வது நிமிடத்தில் ஸ்டோன்ஸ் முதல் கோலை பதிவு செய்தார். 22-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி கேப்டன் ஹாரி கேன் கோல் அடித்தார். 36-வது நிமிடத்தில் லிங்கார்டு கோல் அடித்தார். 40-வது நிமிடத்தில் ஸ்டோன்ஸ் மேலும் ஒரு கோல் அடித்தார். 45-வது நிமிடம் முடிந்து காயத்திற்கான நேரத்தின் முதல் நிமிடத்தில் மற்றொரு பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஹாரி கேன் கோல் அடித்தார். இதனால் இங்கிலாந்து முதல் பாதி நேரத்தில் 5-0 என முன்னிலைப் பெற்றது.

    2-வது பாதி நேரத்திலும் இங்கிலாந்து கையே ஓங்கியது. 62-வது நிமிடத்தில் ஹாரி கேன் மேலும் ஒரு கோல் அடித்தார். ஹாரி கேனின் ஹாட்ரிக் கோலால் 62-வது நிமிடத்தில் இங்கிலாந்து 6-0 என முன்னிலைப் பெற்றது. 62-வது நிமிடத்தில் கோல் அடித்ததும் ஹாரி கேன், லிங்கார்டு உள்பட முன்னணி வீரர்கள் வெளியேறினார்கள்.



    அதன்பின் இங்கிலாந்து ஆட்டத்தில் சற்று வேகம் குறைந்தது. இதை பயன்படுத்தி பனாமா 78-வது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்தது. ப்ரீ ஹிக்கை பயன்படுத்தி அடித்த பந்தை, கோல் எல்லைக்குள் வைத்து பலோய் காலால் உதைத்து கோலாக்கினார்.

    அதன்பின் இரு அணிகளும் கோல் அடிக்காததால் இங்கிலாந்து 6-1 என வெற்றி பெற்றது. முதல் ஆட்டத்தில் 2-0 என வெற்றி பெற்றிருந்ததால், இரண்டு வெற்றியுடன் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
    ×