லாரியில் கற்கள் கடத்தல்; டிரைவர் அதிரடி கைது

பனமரத்துப்பட்டி அடுத்த கூட்டாறு பகுதியில் நேற்று மதியம் கற்கள் லோடு ஏற்றிக்கொண்டு மினி டிப்பர் லாரி சென்று கொண்டிருந்தது.அப்போது கற்கள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்து, பனமரத்துப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
லாரியில் கற்கள் கடத்தல்; டிரைவர் அதிரடி கைது
Published on

சேலம்:

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அடுத்த கூட்டாறு பகுதியில் நேற்று மதியம் கற்கள் லோடு ஏற்றிக்கொண்டு மினி டிப்பர் லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை தும்பல்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ராஜா, தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினார்.

அப்போது கற்கள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்து, பனமரத்துப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி குரால்நத்தம் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் வெங்கடாசலம் (வயது 44) என்பவரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com