search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Corridor"

    • நூற்றுக்கு நூறு பணிகளை நிறைவேற்ற வேண்டும்.
    • ஆய்வில் மொத்தம் 121 மனுக்கள் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்டப்பேரவை மனுக்கள் குழுவினர் இன்று காலை ஆய்வு மேற்கொண்டனர்.

    தமிழக அரசின் தலைமை கொறடாவும், சட்டப்பேரவை மனுக்கள் குழுத் தலைவருமான கோவி. செழியன் தலைமையிலான இக்குழுவினர் தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் அருகே உள்ள காடவராயன்குளம், வடிகால் வாய்க்கால், சமுத்திரம் ஏரியை ஆய்வு செய்தனர்.

    பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுமக்களிடம் பெறப்பட்ட பொது நலன் குறித்த மனுக்கள் மீது சட்டப்பேரவை மனுக்கள் குழு 9 இடங்களில் கள ஆய்வு மேற்கொள்கிறது.

    இதையடுத்து, மாவட்ட ஆட்சியரகத்தில் பிற்பகலில் மனுதாரர்கள், அரசு அலுவலர்களுடன் கலந்தாய்வு நடை பெறவுள்ளது.

    இந்த ஆய்வில் மொத்தம் 121 மனுக்கள் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

    அனைத்து மனுதா ரர்களையும் மாவட்ட ஆட்சியரகத்துக்கு வரவழைத்து, அனைத்து துறை அலுவலர்களிடம் விசாரணை நடத்தவுள்ளோம்.

    நூற்றுக்கு நூறு பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படையில் இக்கள ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

    சாலை வசதி, குளக்கரை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், தூர் வாருதல் உள்ளிட்டவை தொடர்பான கோரிக்கைகள் அதிகமாக உள்ளன.சமுத்திரம் ஏரி கரையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடைபாதையுடன் கூடிய மேம்பாட்டு பணி 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

    இதில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் படகு சவாரி ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வந்துள்ளது.

    இது தொடர்பாக முழுமையாக ஆய்வு செய்து முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், சட்டப்பேரவை மனுக்கள் குழுச் செயலர் சீனிவாசன், டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ, மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • இருவழி புறவழிச்சாலையை 4 வழிச்சாலையாக தரம் உயர்த்த வேண்டுமென இப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்தது.
    • 4 வழிச்சாலையில் போக்கு வரத்து தொடங்கு வதற்கான சாத்தியக்கூறு ஏற்பட்டுள்ளது.

    வாழப்பாடி:

    போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சேலம்–-உளுந்துார்பேட்டை இடையிலான 4 வழி தேசிய நெடுஞ்சாலையில், சேலம் உடையாப்பட்டி, வாழப்பாடி, ஆத்தூர், சின்னசேலம், கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், எலவனாசூர்கோட்டை, உளுந்தூர்பேட்டை ஆகிய 8 இடங்களில் அமைக்கப் பட்டுள்ள புறவழிச்சாலைகள், இரு வழிச்சாலையாகவே உள்ளன.

    இச்சாலைகள் அகலம் குறைவாக அபாயகரமான வளைவுகளுடன் அமைந்து ள்ளதால் இச்சாலையில் பயணிப்போரிடம் 'விபத்து அச்சம்' தொடர்ந்து வருகிறது. குறிப்பாக, வாழப்பாடி பகுதியில் முத்தம்பட்டியில் இருந்து மத்துார் வரையிலான 4 கி.மீ துார புறவழிச்சாலையில், போதிய எச்சரிக்கை பதாகைகள், சாலையோர மின் விளக்குகள் மற்றும் இரவில் ஒளிரும் சாலை யொட்டிகள் அமைக்கப்படா ததால் அடிக்கடி விபத்தும், உயிர்பலியும் ஏற்பட்டு வருகிறது.

    எனவே, இருவழி புறவழிச்சாலையை 4 வழிச்சாலையாக தரம் உயர்த்த வேண்டுமென இப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்தது.

    இந்நிலையில், சேலம்-–உளுந்துார்பேட்டை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள புறவழிச்சாலைகளை, 4 வழிச்சாலையாக தரம் உயர்த்திட மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் மற்றும் தேசிய நெடுஞ் சாலைத்துறை, சுங்கம் வசூலிக்கும் உரிமம் பெற்றுள்ள தனியார் நிறுவனத்திற்கு வலியுறுத்தியது.

    இதனையடுத்து, இருவழிச் சாலைகளை 4 வழிச்சாலை யாக தரம் உயர்த்தும் பணி 3 மாதங்களாக மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

    வாழப்பாடி பகுதியில் புறவழிச்சாலையை 4 வழிச்சாலையாக மாற்றி அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருவதால், வருகிற மே மாதத்திற்குள் 4 வழிச்சாலையில் போக்கு வரத்து தொடங்கு வதற்கான சாத்தியக்கூறு ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள், பயணிகள் மற்றும் வாழப்பாடி பகுதி பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இணைப்புச்சாலை

    வாழப்பாடி பகுதியில் 4 வழிச்சாலை அமைப்பதால், வாழப்பாடி பேரூராட்சி அக்ரஹாரம் பகுதியில் இருந்து நீதிமன்றம் வழியாக கிழக்குகாடு குடியிருப்பு பகுதிக்கு செல்லும் பிரதான சாலை துண்டிக்கப் பட்டுள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல வழியின்றி அவதிக்குள் ளாகியுள்ளனர்.

    எனவே, தேசிய நெடுஞ்சாலையின் தெற்கு புறம் கிழக்குக்காடு புகையி லைக்காரர் தோட்டத்தில் இருந்து தெற்கத்தியார் தோட்டம் வரையும், வடக்குபுறம் ராதாகிருஷ்ணன் தோட்டத்தில் இருந்து பால் கூட்டுறவு சங்கம் வரையும் இணைப்புச்சாலை அமைத்து, பால் கூட்டுறவு சங்கம் அருகில் அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலை சுரங்க பாலத்தோடு கிழக்குக்காடு சாலையை குடியிருப்பு பகுதியுடன் இணைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்களிடையே கோரிக்கை.

    ×