search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rehabilitation after 10 years"

    • துர்நாற்றம் வீசிவருவதால் நேய்பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • தெருவிளக்கு மற்றும் குடிநீர் வசதி செய்து தரபட்டது குறிப்பிடதக்கது.

    ஊட்டி, :

    கூடலூா் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் முடிக்கப்பட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் டி.என்.வெங்கடேஷ் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

    கூடலூா் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாவனல்லா பகுதியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை மூலம் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட பண்ணை குட்டை, ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.6 லட்சம் மதிப்பில் மசினகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டப்பட்டு வரும் சமுதாயக் கூடம் ஆகியவற்றை பாா்வையிட்டாா்.

    தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அவர்,

    தமிழக அரசின் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் மாணவா்களுக்கு அளிக்கப்பட்டு வரும் பயிற்சியி குறித்து ஆசிரியர்க–ளிடம் கேட்டறிந்தார்.

    பின்னா் மசினகுடி பகுதியிலுள்ள மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரிக்கும் உர கிடங்கினையும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

    ஆய்வின்போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் தாமோதரன், மசினகுடி ஊராட்சித் தலைவா் மாதேவி மோகன், அரசுத் துறை அலுவலா்கள் உள்பட பலா் உள்ளனர்.

    ×