search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரியல்மி ஜிடி 2 ப்ரோ"

    • அரசுப் பணிகளுக்காக பல நாட்கள் தயாராகிய போட்டியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • போட்டித் தேர்வு என்பது கண்துடைப்பு அல்ல, இளைஞர்களின் எதிர்காலம்.

    பாஜக மாநில தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாடு அரசுத் துறைகளில், குரூப் 2 மற்றும் 2ஏ பணிகளில் காலியாக உள்ள 5,446 பணியிடங்களை நிரப்புவதற்காக, கடந்த பிப்.25 ஆம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 முதன்மைத் தேர்வில், பலமுறைகேடுகள் நடந்துள்ளதாகத் தேர்வு எழுதிய போட்டியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    அன்று காலை நடைபெற்ற தமிழ் தகுதித்தாள் தேர்வு மையங்களுக்கு, கண்காணிப்பாளர்கள் மற்றும் விடைத்தாள்கள் வர தாமதமாகி உள்ளது. பல மையங்களில் விடைத்தாள்கள் வரிசை எண் மாற்றி வழங்கப்பட்டுள்ளது. தேர்வு ஏற்கனவே தாமதமாக ஆரம்பித்ததால், போட்டியாளர்கள், தங்கள் பதிவெண்களைக் கவனிக்க நேரமில்லாமல், விடைத்தாளில் விடைகளைப் பதிவு செய்திருக்கின்றனர். பின்னர் மீண்டும் விடைத்தாள்களை வரிசை எண் படி மாற்றி வழங்கியிருக்கின்றனர். இந்த குளறுபடிகளிடையே, போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட விடைத்தாள்களில் ஏற்கனவே வினாக்களுக்கான பதில்கள் நிரப்பப்பட்டு இருந்ததாகவும், அவற்றை திருத்த கண்காணிப்பாளர்கள் அனுமதிக்கவில்லை எனவும், போட்டியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால், மீண்டும் தேர்வு தாமதமாகியிருக்கிறது. இதனால், மாலை நடந்த தேர்வும் தாமதமாகத் தொடங்கியிருக்கிறது. தேர்வாணையம் செய்த தவறுகளுக்கு, அரசுப் பணிகளுக்காக பல நாட்கள் தயாராகிய போட்டியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான தேர்வாணையம், இத்தனை அலட்சியப் போக்குடன் செயல்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதைவிட அதிர்ச்சியளிப்பது, தேர்தல் ஆணையத்தின் விளக்கம். 'முற்பகல் தேர்வானது கட்டாயத் தமிழ் தகுதி தேர்வாகும். ஆகையால், இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவது மட்டுமே போதுமானது. இந்த மதிப்பெண்கள் தரவரிசைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது' என்றொரு விளக்கத்தைத் தேர்வாணையம் அளித்திருக்கிறது. பல லட்சம் மாணவர்களின் கனவான ஒரு முக்கியமான தேர்வுக்கு, தேர்வாணையம் தரும் மரியாதை இதுதான். 'கட்டாயத் தமிழ்த் தேர்வு' என்பது வெறும் ஒரு சடங்குதான். அதற்கு எந்த மதிப்பும் இல்லை என்று சொல்லியிருக்கிறது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். திமுக அரசு தரப்பில் இருந்து, இதற்கு யாரும் இதுவரை விளக்கம் தரவில்லை. அரசுப் பணித் தேர்வுகளுக்காகத் தீவிரமாக படித்துப் பயிற்சி எடுத்த இளைஞர்களை, இதைவிட யாரும் அசிங்கப்படுத்திவிட முடியாது. தமிழ்நாட்டு இளைஞர்கள், தங்களின் அத்தனை நாள் உழைப்பை வீணடித்துவிட்ட கோபத்தில் இருக்கிறார்கள். இத்தனை முறைகேடுகளுடன் நடந்த தேர்வு முடிவுகள், நியாயமாக இருக்கப் போவதில்லை என்று வருத்தப்படுகிறார்கள்.

    அது மட்டுமல்லாது, கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள், 2023 பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று உறுதியளித்த திமுக அரசு, இன்னும் தேர்வு முடிவுகளை வெளியிடாமல் காலம் தாழ்த்தி வருகிறது. அரசுப் பணித் தேர்வுகளுக்காக அயராது உழைத்து, தயாராகும் இளைஞர்களின் எதிர்காலத்தோடு விளையாடிக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு அரசு. ஒட்டு மொத்த அமைச்சர்களையும், அதிகாரிகளையும் ஈரோடு இடைத்தேர்தல் பணியில் ஈடுபடுத்தி, அரசு இயந்திரத்தை முடக்கிய திமுக, உடனடியாக பாதிக்கப்பட்ட இளைஞர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். தேர்வாணையத்தின் செயல்பாடுகளில் நம்பிக்கையிழந்துவிட்ட இளைஞர் சமுதாயத்தின் நம்பிக்கையை மீட்க, உடனடியாக, அவர்கள் கோரிக்கையான, மறுதேர்வு நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும். போட்டித் தேர்வு என்பது கண்துடைப்பு அல்ல, இளைஞர்களின் எதிர்காலம் என்பதை உணர்ந்து, இனியாவது, இது போன்ற முறைகேடுகளையும் குளறுபடிகளையும் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பில் வலியுறுத்துகிறேன்".

    • விழுப்புரம் நகரில் 13 மையங்களில் 2450 பேர் குரூப் 2 தேர்வு எழுதினார்கள்.
    • விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் தேர்வெழுதியவர்களுக்கு ரிஜிஸ்ட்ரேஷன் எண்ணில் குளறுபடி ஏற்பட்டது.

    விழுப்புரம்:

    பல்வேறு துறைகளில் குரூப் 2 பிரிவுகளில் உள்ள 5446 காலி பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. இத்தேர்வில் தமிழகத்தில் 9,94,890 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 55,071 பேர் முதல் நிலை தேர்வில் தகுதி பெற்றனர்.

    அதனை தொடர்ந்து முதன்மைத் தேர்வு இன்று தமிழகம் முழுவதும் 20 மாவட்டங்களில் 186 மையங்களில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது.

    இதில் விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் நகரில் 13 மையங்களில் 2450 பேர் தேர்வு எழுதினார்கள். இன்று காலை தமிழ் தகுதி தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதனை தேர்வாணையத் தலைவர் முனியநாதன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    அப்போது விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் தேர்வெழுதியவர்களுக்கு ரிஜிஸ்ட்ரேஷன் எண்ணில் குளறுபடி ஏற்பட்டது. இதனால் தேர்வு தாமதமாக தொடங்கப்பட்டது. இவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்படும் என்றும், எங்கெல்லாம் தேர்வுகள் காலதாமதமாக தொடங்கப்பட்டதோ, அங்கெல்லாம் தேர்வர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்க உத்தரவிட்டுள்ளதாக தேர்வாணையத் தலைவர் முனியநாதன் கூறினார்.

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குரூப் 2 தேர்வு இன்று காலையில் தொடங்கியது. அப்போது அங்கிருந்த அறை எண் 6-ல் தேர்வெழுதியவர்களுக்கு வினாத்தாள் மாற்றி வழங்கப்பட்டது. இதனால் குழப்பமடைந்த தேர்வர்கள் அதிகாரிகளிடம் இது குறித்து முறையிட்டனர். இதையடுத்து வினாத்தாள் குழப்பத்தை அதிகாரிகள் சரி செய்தனர். இதனால் தேர்வு மையத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

    • தேர்வர்கள் எண்கள் மாறி இருந்ததால் தேர்வு எழுத வந்திருந்தவர்கள் குழப்பத்திற்குள்ளானார்கள்.
    • குளறுபடியால் சிறிது நேரம் தேர்வு எழுத வந்தவர்கள் தவிக்க நேரிட்டது.

    சென்னை:

    தமிழகத்தில் குரூப் 2 பிரதானதேர்வு (சனிக்கிழமை) நடைபெற்றது. இந்தத் தேர்வை 55 ஆயிரம் பேர் எழுதினார்கள்.

    மொத்தம் 5 ஆயிரத்து 446 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 முதல் நிலைத் தேர்வு கடந்த ஆண்டு மே 21-ந்தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, பிரதான தேர்வு இன்று நடந்தது.

    காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தாளுக்கான தேர்வு நடந்தது. கேள்வித்தாள்கள் இருந்த பண்டலை பிரித்து வினியோகம் செய்தபோது சிறிது குழப்பம் ஏற்பட்டது.

    தேர்வர்கள் எண்கள் மாறி இருந்ததால் தேர்வு எழுத வந்திருந்தவர்கள் குழப்பத்திற்குள்ளானார்கள். இந்த குளறுபடியால் சிறிது நேரம் தேர்வு எழுத வந்தவர்கள் தவிக்க நேரிட்டது.

    இதன் காரணமாக சில மையங்களில் சற்று தாமதமாக தொடங்கியது. பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை பொது அறிவு, பாடங்கள் தொடர்பான தேர்வு நடைபெற உள்ளது.

    இந்தத் தேர்வை 55 ஆயிரத்து 71 பேர் எழுதி வருகிறார்கள். அவர்களில், 27 ஆயிரத்து 306 பேர் ஆண்கள். 27 ஆயிரத்து 764 பேர் பெண்கள். ஒருவர் மூன்றாம் பாலினத்தவர்.

    இந்தத் தேர்வுக்காக, 20 மாவட்டங்களில் மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. 280 தேர்வுக் கூடங்களில் தேர்வுகள் நடைபெற்றன.

    சென்னையில் 8 ஆயிரத்து 315 பேர் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

    • இரட்டையர்களான ரோகித், ரோசன் இருவரும் 417 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி அடைந்துள்ளனர்.
    • திருப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வை மாவட்டம் முழுவதும் 218 பள்ளிகளை சேர்ந்த 11 ஆயிரத்து 269 மாணவர்களும், 13 ஆயிரத்து 126 மாணவிகளும் என மொத்தம் 24 ஆயிரத்து 395 பேர் எழுதினர். இதில் 10 ஆயிரத்து 726 மாணவர்களும், 12 ஆயிரத்து 833 மாணவிகளும் என மொத்தம் 23 ஆயிரத்து 559 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவர்கள் 95.18 சதவீதமும், மாணவிகள் 97.77 சதவீதமும் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 96.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

    இதில் திருப்பூரை சேர்ந்த இரட்டையர்கள் ஒரே மதிப்பெண் எடுத்துள்ளனர். திருப்பூர் ஸ்ரீநகர் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ்-அக்நெல் தம்பதியினர். இவர்களுக்கு ரோகித் ராஜா மற்றும் ரோஷன் ராஜா என இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் இரட்டையர் ஆவர்.இரு மகன்களும் திருப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தனர்.

    இந்நிலையில் நடந்து முடிந்த பிளஸ் -2 பொதுத் தேர்வில் இரட்டையர்களான ரோகித், ரோசன் இருவரும் 417 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி அடைந்துள்ளனர். நாங்கள் பிறப்பில் மட்டும் இரட்டைப் பிறவி அல்ல. மதிப்பெண்கள் எடுப்பதிலும் ஒரே மாதிரி மதிப்பெண்தான் எடுப்போம் என்று பிளஸ்-2 பொதுத்தேர்வில் இரட்டைப்பிறவியான இருவரும் சொல்லிவைத்தாற் போல் 417 மதிப்பெண் எடுத்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வில் வள்ளலார்மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
    • செல்வராஜ், முனைவர்சண்முகம், சரோஜாஅம்மாள் ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டி கவுரவித்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே கொள்ளுகாரன் குட்டை வள்ளலார் மெட்ரிக்மேல் நிலைப்பள்ளி கடந்த 8ஆண்டுகளாக தொடர்ந்து 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுதேர்வில் 100சதவீத தேர்ச்சி பெற்றுசாதனை படைத்து வருகிறது.மாணவி மதுமிதா 589 மதிப்பெண்களும், மோனிகா 583 மதிப்பெண்களும், காயத்ரி 578 மதிப்பெண்களும், அய்யப்பன் 576 மதிப்பெண்களும், அருள்மணி 576 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர். 550க்கு மேல் 22 மாணவ-மாணவியர்களும் 500க்கு மேல் 68 மாணவ-மாணவியர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதேபோல நடந்து முடிந்த 10ம் வகுப்பு தேர்வில் மாணவி ஜனனி 485 மதிப்பெண்ணும், ஜனா 481 மதிப்பெண்ணும்,எழிலரசி 479 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்து–ள்ளனர் 470 க்கு மேல் 12 மாணவர்களும், 450 க்கு மேல் 29 மாணவர்களும் 400க்கு மேல் 68 மாணவர்களும் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    சாதனைமாணவ, மாணவியர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் தாளாளர்நடராஜன், நண்பர்கள் கல்வி அறக்கட்டளை தலைவர் திருமால்வளவன், வள்ளலார் கிட்ஸ் பள்ளி தாளாளர் சக்கரவர்த்தி,பொருளாளர் ராஜா, வள்ளலார் கல்வியியல் கல்லூரி தாளாளர் ராஜேந்திரன், மற்றும் கண்ணன், ஜனார்த்தனன், சுப்பிரமணியன், மணிவாசகம், சாரங்கபாணி, திருவேங்கடம், சரவணன், செல்வராஜ், முனைவர்சண்முகம், சரோஜாஅம்மாள் ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டி கவுரவித்தனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் பிளஸ்- 2 பொதுத்தேர்வை 10 ஆயிரத்து 754 மாணவர்களும், 11, 626 மாணவிகளும் என மொத்தம் 22 ஆயிரத்து 380 மாணவ மாணவிகள் எழுதினர்.
    • ஈரோடு மாவட்டத்தில் 93.85, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 97.45 என மொத்தம் 95.72 தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் பிளஸ் -2 தேர்வுகள் கடந்த மே மாதம் முதல் வாரத்தில் தொடங்கி மே மாதம் கடைசி வாரத்தில் முடிவடைந்தது. இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தன. விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து மதிப்பெண்களை கணினியில் ஏற்றும் பணியும் முடிவடைந்தது.

    இதைத் தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் காலை பிளஸ்- 2 தேர்வுகள் முடிவுகள் வெளியாகின. ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் பிளஸ்- 2 பொதுத்தேர்வை 10 ஆயிரத்து 754 மாணவர்களும், 11, 626 மாணவிகளும் என மொத்தம் 22 ஆயிரத்து 380 மாணவ மாணவிகள் எழுதினர்.

    இதில் மாணவர்களில் 10 ஆயிரத்து 93 பேரும், மாணவிகளில் 11 ஆயிரத்து 329 பேரும் என மொத்தம் 21, 422 மாணவ -மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 93.85, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 97.45 என மொத்தம் 95.72 தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதில் 108 அரசு பள்ளிகளை சேர்ந்த 4696 மாணவர்களும், 5839 மாணவிகள் என மொத்தம் 10,535 பேர் பிளஸ்- 2 பொது தேர்வை எழுதினர். இதில் 4158 மாணவர்களும், 5,597 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 88.54, மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 95.86, மொத்த தேர்ச்சி விகிதம் 92.60 சதவீதமாகும்.

    பிளஸ் 2 பொதுத் தேர்வை 36 மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் எழுதினர். இதில் 35 மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மாணவ-மாணவிகளுக்கு தேர்வு முடிவுகளை எளிதில் அறியும் வகையில் பள்ளிக் கல்வித் துறை சார்பிலும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    மாணவ மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகளில் சென்று தேர்வு முடிவுகளை தெரிந்து கொண்டனர். மாணவர்களின் செல்போனுக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு இருந்தது. 

    • பிளஸ்-2 பொது தேர்வு முடிவுகள் விழுப்புரம் மாவட்டத்தில் 92.08 சதவீதம் தேர்ச்சி. அடைந்துள்ளனர்.
    • விழுப்புரம் மாவட்டம் முழுவதும் 19,301 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 9,114 பேரும், மாணவிகள் 10,197 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்

    விழுப்புரம்:

    தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. விழுப்புரம் மாவட்ட த்தில் அரசு மற்றும் தனி யார் பள்ளிகள் 189 உள்ளது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் 20,972 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இவற்றில் மாணவர்கள் 10,263 பேர், மாணவிகள் 10,709 பேர் தேர்வு எழுதினர்.

    இன்று வெளியான தேர்வு முடிவில் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் 19,301 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 9,114 பேரும், மாணவிகள் 10,197 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டம் முழுவதும் 92.08 சதவீதம் தேர்ச்சி விகிதமாக அறிவிக்கப் பட்டுள்ளது. அரசு பள்ளி களில் 90.23 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கோட்டக்குப்பம், வீடூர் அரசு பள்ளிகளில் 100 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    • பிளஸ்-2 பொது தேர்வு முடிவுகள் கடலூர் மாவட்டத்தில் 92.82 சதவீதம் தேர்ச்சி. அடைந்துள்ளனர்.
    • கடலூர் மாவட்டத்தில் 29,934 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 14,718 பேரும், மாணவிகள் 15,216 பேர் அடங்குவர். இன்று வெளியான தேர்வு முடிவில் 27,784 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    கடலூர்:

    தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

    கடலூர் மாவட்டத்தில் 29,934 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 14,718 பேரும், மாணவிகள் 15,216 பேர் அடங்குவர். இன்று வெளியான தேர்வு முடிவில் 27,784 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 13,275 பேரும், மாணவிகள் 14,509 பேரும் தேர்வாகி உள்ளனர். தேர்ச்சி விகிதம் 92.82 சதவீதமாகும்.

    கடலூர் மாவட்டத்தில் 108 அரசு பள்ளிகள் உள்ளது. இதில் 12,765 பேர் தேர்வு எழுதினர். இன்று வெளியான தேர்வு முடிவில் 11,325 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 88.72 சதவீதமாகும்.

    • வீட்டில் பதுக்கி வைத்து மதுவிற்ற 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
    • மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் ஸ்ரீபுரந்தான் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரி (வயது 45) என்பவர் மதுவிற்பதாக கிடைத்த தகவலின் படி அவரது வீட்டில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அதேபோல் ஸ்ரீபுரந்தான் செக்கடி தெருவை சேர்ந்த கமலா (45) என்பவரது வீட்டில் சோதனை நடத்தி மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஈஸ்வரி, கமலா ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • குளித்தலை அருகே இருசக்கர வாகனம் மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் உறவினர்கள் 2 பேர் பலியானார்கள்.
    • திருவிழா பார்க்க சென்றவர்கள் பிணமாக வீடு திரும்பியது அவர்களது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

    கரூர்:

    கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள மணத்தட்டை கிராமம் வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் மணிவேல் (வயது 35). பேக்கரி கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் கந்தன் (52), கூலித்தொழிலாளி. இருவரும் உறவினர்கள் ஆவர்.

    அவர்களது உறவினர்கள் அருகிலுள்ள வலையப்பட்டியில் வசித்து வருகிறார்கள். தற்போது அங்கு வைகாசி திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக மணிவேல், கந்தன் இருவரும் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றனர். விடிய, விடிய நடைபெற்ற நிகழ்ச்சிகளை பார்த்து விட்டு இன்று அதிகாலை மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர்.

    இந்தநிலையில் அவர்கள் கரூர்-திருச்சி புறவழிச்சாலையில் குமாரமங்கலம் அருகே வந்தனர். அப்போது பின்னால் ராமநாதபுரத்தில் இருந்து பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

    இதில் மணிவேல், கந்தன் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். தலையில் பலத்த காயம் அடைந்த கந்தன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதைப்பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த ஆம்புலன்ஸ் வேன் மூலம் மணிவேல் மீட்கப்பட்டு குளித்தலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவிழா பார்க்க சென்றவர்கள் பிணமாக வீடு திரும்பியது அவர்களது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதில் மணிவேலுக்கு இன்னும் திருமணமாவில்லை. கந்தனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் 5 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதில் ஒரு மகன் மற்றும் மகளுக்கு திருமணமாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

    • கடையில் திருட முயன்ற சிறுவர்கள் போலீசில் சிக்கினர்.
    • போலீசார் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர்.

    திருச்சி:

    திருச்சி அரியமங்கலம் அம்பிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 40) . இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல் சம்பவத்தன்று வியாபாரத்தை முடித்து விட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

    பின்னர் அதிகாலை மீண்டும் கடையை திறப்பதற்காக வந்துள்ளார். அப்போது இரண்டு சிறுவர்கள் கடையின் பூட்டை உடைத்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் அவர்களை பிடித்து, அரியமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இரண்டு சிறுவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அரியமங்கலம் திடீர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

    • திண்டுக்கல் ஆத்தூர் அணையில் மூழ்கி கடந்த 2 ஆண்டில் 9 பேர் பலியாகி உள்ளனர்
    • அணையில் பாதுகாப்பை மேம்படுத்த அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்

    செம்பட்டி :

    திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே ஆத்தூர் பூஞ்சோலையை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது35). இவர்ஆத்தூர் (கிழக்கு) தி.மு.க. இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். மேலும் சித்த மருந்து விற்பனை செய்து வந்துள்ளார். இவருக்கு பூங்கொடி (30) என்ற மனைவியும் ராகுல் (8) முகேஷ் (5) ஆகிய மகன்களும் உள்ளனர்.

    கடந்த வாரம் ஆத்தூர் பூஞ்சோலையில் கோவில் திருவிழா நடைபெற்றது. இவருடைய அண்ணன் வேல்முருகன் மகள் தர்ஷினி (15) பெரியகுளத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி அங்குள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவரும் திருவிழாவை காண வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று செல்வகுமார் நண்பர் திண்டுக்கல்லைச் சேர்ந்த ரவி என்பவருடைய மனைவி நாகேஸ்வரி இவரது தாயார் மற்றும் 2 குழந்தைகள், செல்வகுமார் வீட்டிற்கு வந்துள்ளனர்.

    பின்னர், இவர்கள் அனைவரும் குடும்பத்துடன் ஆத்தூர் காமராஜர் அணைக்கு குளிக்க சென்றனர். அப்போது, நண்பர் ரவியின் மனைவி நாகேஸ்வரி திடீரென நீரில் மூழ்கினார். இதைப்பார்த்த செல்வகுமார் அவரை காப்பாற்ற முயன்றார்.

    இதில் நாகேஸ்வரி காப்பாற்றப்பட்டார். அப்போது செல்வகுமார் மூழ்கி உயிருக்கு போராடி னார். அவரை காப்பாற்ற அவருடைய அண்ணன் மகள் தர்ஷினி நீரில் நீந்தி சென்று செல்வகுமாரை காப்பாற்ற முயன்றார். அப்போது, செல்வகுமார் மற்றும் தர்ஷினி ஆகிய 2 பேரும் நீரில் மூழ்கி சம்பவ இடத்தில் பலியானார்கள்.

    தகவலறிந்த ஆத்தூர் தீயணைப்பு படையினர் அங்கு சென்று நீரில் மூழ்கி பலியான செல்வகுமார் மற்றும் தர்ஷினி உடலை மீட்டு போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து செம்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 2 ஆண்டில் 9 பேர் ஆத்தூர் அணையில் குளிக்க சென்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். எனவே பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும், அறிப்பு பலகை வைத்து போலீசார் ஒருவரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×