search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "High School Achievement"

    • எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வில் வள்ளலார்மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
    • செல்வராஜ், முனைவர்சண்முகம், சரோஜாஅம்மாள் ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டி கவுரவித்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே கொள்ளுகாரன் குட்டை வள்ளலார் மெட்ரிக்மேல் நிலைப்பள்ளி கடந்த 8ஆண்டுகளாக தொடர்ந்து 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுதேர்வில் 100சதவீத தேர்ச்சி பெற்றுசாதனை படைத்து வருகிறது.மாணவி மதுமிதா 589 மதிப்பெண்களும், மோனிகா 583 மதிப்பெண்களும், காயத்ரி 578 மதிப்பெண்களும், அய்யப்பன் 576 மதிப்பெண்களும், அருள்மணி 576 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர். 550க்கு மேல் 22 மாணவ-மாணவியர்களும் 500க்கு மேல் 68 மாணவ-மாணவியர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதேபோல நடந்து முடிந்த 10ம் வகுப்பு தேர்வில் மாணவி ஜனனி 485 மதிப்பெண்ணும், ஜனா 481 மதிப்பெண்ணும்,எழிலரசி 479 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்து–ள்ளனர் 470 க்கு மேல் 12 மாணவர்களும், 450 க்கு மேல் 29 மாணவர்களும் 400க்கு மேல் 68 மாணவர்களும் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    சாதனைமாணவ, மாணவியர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் தாளாளர்நடராஜன், நண்பர்கள் கல்வி அறக்கட்டளை தலைவர் திருமால்வளவன், வள்ளலார் கிட்ஸ் பள்ளி தாளாளர் சக்கரவர்த்தி,பொருளாளர் ராஜா, வள்ளலார் கல்வியியல் கல்லூரி தாளாளர் ராஜேந்திரன், மற்றும் கண்ணன், ஜனார்த்தனன், சுப்பிரமணியன், மணிவாசகம், சாரங்கபாணி, திருவேங்கடம், சரவணன், செல்வராஜ், முனைவர்சண்முகம், சரோஜாஅம்மாள் ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டி கவுரவித்தனர்.

    ×