என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "in Plus-2 examination"
- ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் பிளஸ்- 2 பொதுத்தேர்வை 10 ஆயிரத்து 754 மாணவர்களும், 11, 626 மாணவிகளும் என மொத்தம் 22 ஆயிரத்து 380 மாணவ மாணவிகள் எழுதினர்.
- ஈரோடு மாவட்டத்தில் 93.85, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 97.45 என மொத்தம் 95.72 தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஈரோடு:
தமிழகத்தில் பிளஸ் -2 தேர்வுகள் கடந்த மே மாதம் முதல் வாரத்தில் தொடங்கி மே மாதம் கடைசி வாரத்தில் முடிவடைந்தது. இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தன. விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து மதிப்பெண்களை கணினியில் ஏற்றும் பணியும் முடிவடைந்தது.
இதைத் தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் காலை பிளஸ்- 2 தேர்வுகள் முடிவுகள் வெளியாகின. ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் பிளஸ்- 2 பொதுத்தேர்வை 10 ஆயிரத்து 754 மாணவர்களும், 11, 626 மாணவிகளும் என மொத்தம் 22 ஆயிரத்து 380 மாணவ மாணவிகள் எழுதினர்.
இதில் மாணவர்களில் 10 ஆயிரத்து 93 பேரும், மாணவிகளில் 11 ஆயிரத்து 329 பேரும் என மொத்தம் 21, 422 மாணவ -மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 93.85, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 97.45 என மொத்தம் 95.72 தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் 108 அரசு பள்ளிகளை சேர்ந்த 4696 மாணவர்களும், 5839 மாணவிகள் என மொத்தம் 10,535 பேர் பிளஸ்- 2 பொது தேர்வை எழுதினர். இதில் 4158 மாணவர்களும், 5,597 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 88.54, மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 95.86, மொத்த தேர்ச்சி விகிதம் 92.60 சதவீதமாகும்.
பிளஸ் 2 பொதுத் தேர்வை 36 மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் எழுதினர். இதில் 35 மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மாணவ-மாணவிகளுக்கு தேர்வு முடிவுகளை எளிதில் அறியும் வகையில் பள்ளிக் கல்வித் துறை சார்பிலும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
மாணவ மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகளில் சென்று தேர்வு முடிவுகளை தெரிந்து கொண்டனர். மாணவர்களின் செல்போனுக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு இருந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
