search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 people died"

    • வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்தனர்.
    • சாணார்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    குள்ளனம்பட்டி:

    சாணார்பட்டி அருகே ஆவிளிபட்டியைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 37). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி.இவருக்கு திருமணமாகி மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று முருகேசன் மட்டும் வீட்டில் தனியாக இருந்த நிலையில் வெகுநேரமாகியும் எழுந்து வெளியே வரவில்லை.இதனால் அக்கம்பக்கத்தினர் வீட்டுக்கு உள்ளே சென்று முருகேசனை எழுப்ப முயற்சித்தனர்.ஆனால் அவர் இறந்து போனது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.அதன்பேரில் அங்குவந்த சாணார்பட்டி போலீசார் முருகேசனின் உடலை பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதேபோல் கூவனூத்து குரும்ப பட்டியை சேர்ந்தவர் சேவுகன் (வயது 50) விவசாயி.இவர் தோட்டத்து வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர்.இந்த 2 சம்பவங்கள் குறித்து சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • தனது உறவினருடன் மோட்டார் சைக்கிளில் ஆண்டிபட்டி - தேனி சாலையில் சென்று கொண்டு இருந்தார்.
    • அப்போது எதிரே வந்த மற்றொரு பைக் இவர்கள் மீது மோதியது.

    தேனி:

    ஆண்டிபட்டி அருகே குள்ளப்புரம் கோவில் புரத்தைச் சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 54). இவர் தனது உறவினர் பழனிச்சாமி (47) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஆண்டிபட்டி - தேனி சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு பைக் இவர்கள் மீது மோதியது. இதில் காயமடைந்த 2 பேரும் தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். ஆனால் வழியிலேயே பழனிச்சாமி இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து ஆண்டிபட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முருகேசன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம் சாயல்குடியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (25). இவர் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். நண்பர்கள் 8 பேருடன் தேனி மாவட்டம் போடி வந்தார். தேவாரம் சாலையில் காரில் சென்று கொண்டு இருந்தபோது எதிர்பாராதவிதமாக கார் தலைகீழாக கவிழ்ந்ததில் பாலமுருகன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் அவருடன் வந்த 8 பேரும் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    இது குறித்து போடி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலியானார்கள்.
    • வில்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே மேலக்கோட்டை நான்கு வழிச்சாலை பகுதியில் மதுரை சுப்ரமணியபுரம் பகுதியைச் ராஜாசந்திரசே கர் என்பவருக்கு சொந்த மான புதிய பட்டாசு கடை அமைக்கும் பணி நடை பெற்று வந்தது.

    ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த முத்து சங்கையா, நல்லூரைச் சேர்ந்த முத்துக் குமார், மூவரசன் ஆகிய மூன்று பேரும் கடையின் அருகே சோலார் மின்வி ளக்கு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப் போது எதிர்பாராத விதமாக மேலே சென்ற மின் வயரில் இரும்பு கம்பி உரசியதால் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு முத்து சங்கையா (வயது 35) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    மற்ற இரண்டு பேரும் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச் சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து தகவலறிந்த திருமங்கலம் போலீசார் இறந்த முத்துசங்கையா உட லைக் கைப்பற்றி திரு–மங்கலம் அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்த னர். இது குறித்து திருமங்க லம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    அதே போல் திருமங்கலம் தாலுகா போலம்பட்டி பகு தியை சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 35). இவருக்கு திருமணமாகி ராஜலெட்சுமி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் கண்டித்தே வன்பட்டி பகுதியில் மின்கம் பத்தில் ஏறி வேலை பார்த்த போது மின்சாரம் தாக்கிய தில் கீழே விழுந்தவர் மின் சார கம்பத்தின் கீழே தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் வைக்கப்பட்டி ருந்த இரும்பு கம்பியில் தலை அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    உடலைக் கைப்பற்றி திருமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து வில்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பைக் மோதியதில் தூக்கி வீசப்பட்டவர் போடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
    • மேலும் இந்த விபத்தில் காயம் அடைந்த மற்றொருவரை போடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டவர் அங்கு உயிரிழந்தார்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி மீனாட்சிபுரம் தெற்கு ஆசாரி தெருவை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது80). போடி விஸ்வாசபுரத்தை சேர்ந்தவர் கணேசன் (35). இவர் அப்பகுதியில் உள்ள உணவகத்தில் பணியாற்றி வந்தார்.

    போடி-மீனாட்சிபுரம் சாலையில் ேமாட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நடந்து சென்ற பொன்னுச்சாமி மீது பைக் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பொன்னுச்சாமி போடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

    மேலும் இந்த விபத்தில் கணேசனும் காயம் அடைந்து டொம்புச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் போடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மணிகண்டன் மொபட்டில் ெசன்றார்.
    • ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே மணிகண்டன் இறந்தார்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டைக்காரன்புதூரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 26). கூலித் ெதாழிலாளி.சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் தம்பம்பதி - கோ ழிப்பண்ணை ரோட்டில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது திடீரென மொபட்டில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் தலை மற்றும் உடலில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய மணிகண்டனை அந்த வழியாக சென்றவர் மீட்டு வேட்டைக்காரன் புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே மணிகண்டன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சிறுமுகை அருகே உள்ள காந்திபுரத்தை சேர்ந்தவர் நாகராஜன் (35). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் மேட்டுப்பாளையம் - சிறுமுகை ரோட்டில் சென்று கொண்டு இருந்தார்.அந்த அந்த வழியாக சென்ற லோடு வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நாகராஜன் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

    • படுகாயம் அடைந்த 3 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
    • அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ேகாவை,

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கோழிகுட்டையை சேர்ந்தவர் லட்சுமணசாமி. இவரது மனைவி ராணி (வயது 23). இவர்களது மகள் பிரியதர்ஷினி (3).

    சம்பவத்தன்று இவர்கள் குடும்பத்துடன் கோமங்கலம் புதூருக்கு சென்றனர். பின்னர் பஸ் நிறுத்தத்தில் இருந்து பொள்ளாச்சி- உடுமலை ரோட்டை கடக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக வந்த கார் கண்இமைக்கும் நேரத்தில் 3 பேர் மீதும் அடுத்தடுத்து மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த 3 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 3 பேரையும் மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராணி பரிதாபமாக இறந்தார்.

    அவரது கணவர் லட்சுமணசாமி, மகள் பிரியதர்ஷினி ஆகியோர் பலத்த காயத்துடன் உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிக்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சூலூர் அருகே உள்ள பட்டணம்புதூரை சேர்ந்தவர் கணபதி (வயது 78).சம்பவத்தன்று இவர் எல்.அண்டு.டி. பைபாஸ் ரோட்டில் பட்டணம்புதூர் பிரிவு அருகே நடந்து சென்றார்.திடீரென ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் கணபதி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவர் சம்பவஇடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் இறந்த கணபதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ரோட்டின் நடுவில் இருந்த தடுப்புச் சுவரில் மோதியது.
    • மொபட் கட்டுபாட்டை இழந்து கீழே விழுந்தார்.

    கோவை,

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள காரி கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் ரவி (வயது 44). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் காரியம்பாளையம் - காரமடை ரோட்டில் சென்றார். அப்போது திடீரென மொபட் கட்டுபாட்டை இழந்து கீழே விழுந்தார். இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய ரவியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரவி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.கிணத்துக்கடவு அருகே உள்ள டி.வி.கே. வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (62). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் கோவை - பொள்ளாச்சி ரோட்டில் சென்றார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் நடுவில் இருந்த தடுப்புச் சுவரில் மோதியது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய கிருஷ்ணகுமாரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கிருஷ்ணகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்
    • கல்லூரி பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

     கோவை,

    கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள சின்ன தொட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் முருகவேல் (வயது 71).

    சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் சிறுமுகை - சாஸ்திரி நகர் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது ரோட்டை திடீரென மூதாட்டி ஒருவர் கடக்க முயன்றார். அப்போது மொபட் மூதாட்டி மீது மோதியது. இதில் நிலைதடுமாறி முருகவேல் மொபட்டில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். மூதாட்டியும் காயத்துடன் உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் முருகவேலை மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும், மூதாட்டியை மேட்டுப்பாைளயம் அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர்.ஆனால் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற முருகவேல் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இது குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இடையர்பாளையம் அருகே உள்ள அன்பு நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (55). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் காளப்பநாயக்கன் சந்திப்பு அருகே சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற தனியார் கல்லூரி பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பாலகிருஷ்ணன் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • விபத்து ஏற்படுத்தி நிற்காமல் தப்பி சென்ற காரை பிடிக்க தீவிரம்
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த சின்ன அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி.இவரது மகன் கோகுல் (வயது 25).இன்னும் திருமணம் ஆகவில்லை. போளூர் அடுத்த வெள்ளூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் வெங்கடேசன் (23).

    நேற்று 2 பேரும் தங்களது பைக்கில் வேலூர் -திருவண்ணாமலை சாலை, காந்திநகர் ஏரிக்கரை மீது வந்து கொண்டு இருந்தனர். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத கார் அடுத்தடுத்து 2 பைக்குகள் மீதும் மோதி விட்டு நிற்காமல் சென்றது.

    இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட கோகுல், வெங்கடேசன் இருவரும் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர்.

    அந்த வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். இது குறித்து கண்ணமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பைக் விபத்தில் வியாபாரி மற்றும் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • இரு விபத்துகள் குறித்தும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    உத்தமபாளையம்:

    உத்தமபாளையம் அருகே உ.அம்மாபட்டியை சேர்ந்தவர் அழகர்(34). தேங்காய் வியாபாரி. சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் திருச்சிக்கு செல்வதாக வீட்டில் கூறிச்சென்றார். உ.புதூர் கடல்பாசி பங்களா ஓணி பிரிவு பகுதியில் சென்றபோது நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் மோதினார்.

    இதில் தூக்கிவீசப்பட்ட அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    போடி அருகே மேலசொக்கநாதபுரத்தை சேர்ந்தவர் பால் வைரமுத்து மனைவி பாண்டீஸ்வரி(24). இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் ராயப்பன்பட்டி-சுருளி தீர்த்தம் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது நிலைதடுமாறி வேகத்தடையில் ஏறியபோது பைக்கில் இருந்து தவறிவிழுந்த பாண்டீஸ்வரி படுகாயமடைந்தார்.

    தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    வேகமாக வந்த வாகனம் மோதி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    தேனி:

    தேனி அருகே முத்துதேவன்பட்டியை சேர்ந்தவர் ரத்தீஷ்குமார் (வயது38).இவர் டிரைவர் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று உடல்நல க்குறைவு ஏற்பட்டதால் தனது மோட்டார் சைக்கிளில் வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த வாகனம் ரத்தீஷ்குமார் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

    இதில் தலை நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கூடலூர் எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்தவர் மீனாட்சி அம்மாள் (வயது80). லோயர்கேம்ப் பகவதியம்மன் கோவில் அருகே சாலையை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானார். இது குறித்து குமுளி போலீசில் அளித்த புகாரின் பேரில்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சுரேந்தர் மோட்டார் சைக்கிளில் கோவில்பாளையம் - துடியலூர் ரோட்டில் சென்றார்.
    • சுரேந்தரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    கோவை,

    சேலம் மாவட்டம் காட்டு குட்டையை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் சுரேந்தர் (வயது 23). இவர் கோவை வெள்ளமடையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் கோவில்பாளையம் - துடியலூர் ரோட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த உயிருக்கு போராடிய சுரேந்தரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவி த்தனர்.

    இது குறித்து கோவி ல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெரிய நாயக்கன் பாளையம் அருகே உள்ள காமாட்சி புரத்தை சேர்ந்தவர் ஆரோக்கிய நாதன். இவரது மனைவி பாக்கிய என்ற மேரி (52).

    சம்பவத்தன்று இவர் கோவை-மேட்டுப்பா ளையம் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மேரியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பெரிய நாயக்கன் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×