search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி அருகே வெவ்வேறு சம்பவங்களில் வாகனம் மோதி  2 பேர் பலி
    X

    கோப்பு படம்.

    தேனி அருகே வெவ்வேறு சம்பவங்களில் வாகனம் மோதி 2 பேர் பலி

    வேகமாக வந்த வாகனம் மோதி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    தேனி:

    தேனி அருகே முத்துதேவன்பட்டியை சேர்ந்தவர் ரத்தீஷ்குமார் (வயது38).இவர் டிரைவர் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று உடல்நல க்குறைவு ஏற்பட்டதால் தனது மோட்டார் சைக்கிளில் வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த வாகனம் ரத்தீஷ்குமார் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

    இதில் தலை நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கூடலூர் எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்தவர் மீனாட்சி அம்மாள் (வயது80). லோயர்கேம்ப் பகவதியம்மன் கோவில் அருகே சாலையை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானார். இது குறித்து குமுளி போலீசில் அளித்த புகாரின் பேரில்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×