search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திறப்பு விழா"

    • அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்
    • ரூ.19.20 லட்சத்தில் கட்டிமுடிக்கப்பட்டது

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பழையகண்டிகை கிராமத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறப்பு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.

    மாவட்ட கவுன்சிலர் சுந்தரம்மாள் பெருமாள், நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு, சயனபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி ஆகியோர் முன்னணிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு ரூ.13.21 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியினை திறந்து வைத்தார்.

    தொடர்ந்து அசநெல்லி குப்பம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.19.20 லட்சத்தில் கட்டிமுடிக்கப்பட்ட 2 வகுப்பறை கட்டிடத்தையும் திறந்து வைத்தார்.

    பின்னர் நெல்வாய் கண்டிகை கிராமத்தில் பள்ளுர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் நடமாடும் ரேஷன் கடையை திறந்து வைத்து விற்பனையினை தொடங்கி வைத்தார்.

    இதில் நெமிலி ஒன்றி யக்குழு துணைத்தலைவர் தீனதயாளன், நெமிலி தாசில்தார் பாலசந்தர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவராமன், பாஸ்கரன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ஆர்.பி.ரவீந்திரன், எஸ்.ஜி.சி.பெருமாள், ஒன்றியகுழு உறுப்பினர்கள் சங்கீதா கதிரவன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சேகர் (அசநெல்லிகுப்பம்), ரேணுகாம்பாள் (நெல்வாய்) பலர் கலந்துகொண்டனர்.

    • ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
    • புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா நேற்று நடந்தது.

    கடையம்:

    ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி கடையம் ஊராட்சி ஒன்றியம் முதலியார் பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.

    இதனை ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பி.எச்.மனோஜ் பாண்டியன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் முதலியார்பட்டி பஞ்சாயத்து தலைவர் அ.முகைதீன்பீவி மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • எதிரிகளின் நெஞ்சாங்கூட்டை இன்றளவும் அதிரவைக்கும் பெயரும் கலைஞர்தான்.
    • ஜூன் 20 அன்று திருவாரூரில் திறக்கப்பட உள்ள கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் திரண்டிட அழைக்கிறேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    நூற்றாண்டு நாயகர் முத்தமிழறிஞர் கலைஞரை நாம் நினைக்காத நாள் இல்லை, எண்ணாத பொழுதில்லை. நெஞ்சம் அவரை நினைக்கும்போதும், அவரது பெயரை அடி மனதிலிருந்து உச்சரிக்கும் போதும் உடன் பிறப்புகளான உங்களுக்கும் உங்களில் ஒருவனான எனக்கும் உற்சாகம் பிறக்கிறது. உத்வேகம் கிடைக்கிறது.

    தமிழர்களின் இதயங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் பெயர், கலைஞர். எதிரிகளின் நெஞ்சாங்கூட்டை இன்றளவும் அதிரவைக்கும் பெயரும் கலைஞர்தான்.

    அவரை நாம் நினைக்க நினைக்க, எத்தகைய பகையும் வஞ்சகமும் சூழ்ச்சியும் எதிர்நிற்க முடியாமல் தெறித்து ஓடும். அத்தகைய மகத்தான தலைவரின் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாடி மகிழ்கிறோம்.

    திராவிட மாடல் அர சாங்கத்தின் சார்பிலான முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு ஒருபுறம், அரை நூற்றாண்டு காலம் அவர் கட்டிக்காத்த ஜனநாயகப் பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலான நூற்றாண்டு கொண்டாட்டங்கள் மறுபுறம், கலைஞர் மீது பற்று கொண்ட தோழமை இயக்கத்தினர் கொண்டாடும் நிகழ்வுகள் என முப்பெரும் விழாவாக கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் வேளையில், கலைஞர் கோட்டம் திறப்பு விழாவுக்காக, அழைப்பதற்காக உங்களில் ஒருவனான நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

    14 வயதில் தமிழ்க்கொடி ஏந்தி, இந்தி ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடி, தனது சளைக்காத போராட்டத்தினால் இந்தியாவுக்கே வழி காட்டும் மூத்த தலைவராக உயர்ந்து நின்ற முத்தமிழறிஞர் கலைஞரை நமக்குத் தந்த திருவாரூரில், அஞ்சுகம் அம்மையார் நினைவிடம் அமைந்துள்ள காட்டூர் பகுதியில் 7 ஆயிரம் சதுர அடியில், 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் உருவாக்கப்பட்டு உள்ளது கலைஞர் கோட்டம்.

    வள்ளுவர் கோட்டத்தைப் போலவே, அவரது திருவாரூரில் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது. கோட்டத்தில் அவரது திருவுருவச் சிலை, அவரது போராட்டமிக்க பொது வாழ்வைச் சித்தரிக்கும் அருங்காட்சியகம், அவரது தந்தை - என் தாத்தா முத்து வேலரின் பெயரிலான நூலகம், 2 திருமண மண்டபங்கள் ஆகியவை சிறப்பாக அமைக்கப்பட்டு உள்ளன. ஜூன் 20 அன்று திருவாரூரில் திறக்கப்பட உள்ள கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் திரண்டிட அழைக்கிறேன்.

    பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார் கலைஞர் கோட்டத்தைத் திறந்து வைக்கிறார். பீகார் மாநில துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் முத்து வேலர் நூலகத்தைத் திறந்து வைக்கிறார். நம் உயிர்நிகர் தலைவர் அவர்களின் திருவுருவச் சிலையை உங்களில் ஒருவனான நான் திறந்து வைக்கிறேன்.

    பகை வெல்லும் பட்டாளமாய் - அறம் காக்கும் அணி வகுப்பாய் உடன்பிறப்புகளே திரண்டிடுவீர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கூடுதல் வகுப்பு கட்டிடம் திறப்பு விழா நடந்தது.
    • துலாவூர் பார்த்திபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தானிப்பட்டி வள்ளல் கருப்பையா-சிவகாமி அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பு கட்டிடம் கட்டித்தரப்பட்டது. இதனை பசும்பொன் தேவர் மக்கள் நல அறக்கட்டளை நிறுவனர்

    கரு.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் மெட்ரிகுலேசன் பள்ளி தாளாளர் ராமேஸ்வரன், கரு.சிதம்பரம், ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன், துலாவூர் பார்த்திபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திறப்பு விழாவில் இருநாட்டு வெளியுறவுத் துறை அதிகாரிகள், தூதர்கள் கலந்து கொள்கிறார்கள்.
    • மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தூதரகங்களை திறக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

    ரியாத்:

    வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா-ஈரான் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது.

    கடந்த 2016-ம் ஆண்டு ஷினயட் மதகுரு நிம்ர்-அல் நிம்ரை, சவுதி அரேபியா தூக்கிலிட்டதற்கு எதிராக ஈரானில் போராட்டங்கள் நடந்தது.

    தலைநகர் தெக்ரான் மற்றும் வடமேற்கு நகரமான மஷாத்தில் உள்ள தூதரகங்கள் தாக்கப்பட்டன. இதையடுத்து ஈரானுடனான உறவை சவுதி அரேபியா துண்டித்தது. இதனால் சவுதி அரேபியாவில் செயல்பட்டு வந்த தங்கள் நாட்டு தூதரகத்தை ஈரான் மூடியது. மேலும் ஏமன் உள்நாட்டு போரில் இரு நாடுகள் இடையே மோதல் அதிகரித்தது.

    இதற்கிடையே சவுதி அரேபியா-ஈரான் இடையேயான உறவை மேம்படுத்த சீனா முயற்சி செய்தது. இதன் பயனாக கடந்த மார்ச் 10-ந்தேதி சவுதி அரேபியா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இரு நாடுகளும் தங்கள் தூதரகங்களை திறக்க 2 மாதம் அவகாசம் வழங்கப்பட்டது.

    இந்நிலையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு சவுதி அரேபியாவில் ஈரான் தனது தூதரகத்தை இன்று திறக்கிறது. திறப்பு விழாவில் இருநாட்டு வெளியுறவுத் துறை அதிகாரிகள், தூதர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    ஈரானில், சவுதி அரேபியா தனது தூதரகத்தை மீண்டும் திறப்பது அல்லது தூதரை தேர்ந்தெடுப்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

    சவுதி அரேபியா, ஈரான் நாடுகள் தங்களது மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உறவை வலுப்படுத்த தூதரகங்களை திறக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் தணியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • நிகழ்ச்சிக்கு செஞ்சி ரோட்டரி சங்கத் தலைவர் பாஸ்கர் செய லாளர் மைக்கேல் ஜெரால்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • பேரூராட்சி கவுன்சிலர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    விழுப்புரம்:

    செஞ்சியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் செஞ்சி ரோட்டரி சங்கம் மற்றும் 9-வதுவார்டு கவுன்சிலர் ஆகியோர் பங்களிப்புடன் ரூ15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கழிப்பறை கட்டிடம் திறப்பு விழா நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிறுபான்மை யினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு புதிய கழிவறை கட்டிடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு செஞ்சி ரோட்டரி சங்கத் தலைவர் பாஸ்கர் செய லாளர் மைக்கேல் ஜெரால்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர்கள் செஞ்சி விஜய குமார் வல்லம் அமுதா ரவிக்குமார், மாவட்ட கவுன்சிலர் அரங்கஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன் , பேரூராட்சி உதவி செயற் பொறியாளர் ராதாகிருஷ்ணன், நகர செயலாளர் கார்த்திக், பேரூ ராட்சி துணைத் தலைவர் ராஜலட்சுமி செயல் மணி மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள், பேரூராட்சி கவுன்சிலர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • எம்.ஆர்.எஸ்.பி பவானி அன் கோ திறப்பு விழா நடந்தது.
    • நான்காவது கிளையை காரைக்குடி செக்காலை ரோட்டில் தொடங்கியது.

    காரைக்குடி

    மதுரையில் ரெடிமேட் கதவுகள், பிளைவுட்ஸ், கண்ணாடிகள், லாமி னேட்ஸ், ஹார்டுவேர் பொருட்களின் புகழ்பெற்ற விற்பனை நிறுவனமான எம்.ஆர்.எஸ்.பி பவானி அன் கோ நிறுவனம் மதுரை, கோவை, சிவகாசி ஆகிய ஊர்களைத் தொடர்ந்து தனது நான்காவது கிளையை காரைக்குடி செக்காலை ரோட்டில் தொடங்கியது.

    இதனை நிர்வாக இயக்குநர்கள் எம்.ஆர்.எஸ்.பிரபாகரன், எம்.ஆர்.எஸ்.பி.பவானி ஆகியோர் தலைமையேற்று திறந்து வைத்தனர். எம்.ஆர்.எஸ்.பி.சிவராஜ் மணிமாலா மற்றும் எம்.ஆர்.எஸ்.பி.வசந்தராஜ் கீர்த்திகா தம்பதியினர் வரவேற்றனர்.

    மதுரை பி.எஸ்.எம்.என் மாரியப்ப நாடார் அன் கோ உரிமையாளர் கணேசன் பொற்செல்வி தம்பதியர் மற்றும் மதுரை எஸ்.வி.எஸ் வெற்றிவேல் நாடார், கோந்து கடை உரிமை யாளர் மோகன் செல்வி தம்பதியர் குத்துவிளக்கு ஏற்றினார்கள்.

    இதில் காரைக்குடி கட்டுமான பொறியா ளர்கள் சங்க நிர்வாகிகள், பில்டர்ஸ் அசோசியேசன் நிர்வாகிகள், ஆர்க்கி டெக்சர் வல்லு நர்கள், தொழிலதிபர்கள், உறவினர்கள், நண்பர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • மிர்சாபூர் கம்பளம், நாகபுரி தேக்கு, திரிபுரா மூங்கில், ராஜஸ்தான் கல் சிற்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
    • அசோகர் சின்னத்துக்கான பொருட்கள் ராஜஸ்தான், மகாராஷ்டிராவில் இருந்து பெறப்பட்டன.

    புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா இன்று நடந்தது. அதன் சிறப்பு அம்சங்கள் வருமாறு:-

    * புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் மொத்த மதிப்பீடு ரூ.1250 கோடி.

    * குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த எச்.பி.சி. நிறுவனத்தை சேர்ந்த பிமல் படேல் என்பவர் இந்த பாராளுமன்ற கட்டிடத்துக்கான வடிவமைப்பை செய்து கொடுத்து உள்ளார்.

    * டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனம் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை கட்டி உள்ளது.

    * 4 மாடிகளுடன் 65 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது.

    * பாராளுமன்ற மக்களவையில் ஒரு மேஜையின் முன் உள்ள இருக்கைகளில் 2 எம்.பி.க்கள் அமர முடியும்.

    * எம்.பி.க்கள் தங்களின் முன்பு உள்ள டிஜிட்டல் தொடுதிரை மூலம் பார்த்து வாசிக்கலாம். தேவையான வற்றை சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

    * அரசியல் சாசன காட்சியகம், கூட்டரங்கம், 6 கமிட்டி அறைகளுக்கான 92 அறைகள் இடம்பெற்று உள்ளன.

    * ஆடியோ, வீடியோ சார்ந்த உபகரணங்கள் மேம்பட்டதாக உள்ளன.

    * அலுவலக அறையில் மத்திய மந்திரிகளுக்காக 92 அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    * மின்சக்தி பயன்பாடு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சில அம்சங்கள் உள்ளன.

    * மழைநீர் சேகரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளது.

    * ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட நீரை மறுசுழற்சி செய்து மறுபடியும் பயன்படுத்தும் அம்சங்களும் உள்ளன.

    * மத்திய மந்திரிகள், எம்.பி.க்கள், அதிகாரிகள் இளைப்பாறுவதற்காக இளைப்பாறும் அறையும் அமைக்கப்பட்டுள்ளது. இது உணவோடு சேர்ந்து உரையாடக்கூடிய இடமாக உள்ளது.

    * பசுமை நாடாளுமன்றம் என்ற முயற்சியும் எடுக்கப்பட்டுள்ளது.

    * 23 லட்சத்து 4 ஆயிரத்து 95 மனித வேலை நாட்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.

    * இந்த கட்டிடத்தின் ஆயுள் காலம் 150 ஆண்டுகள்.

    * கட்டிடக் கலையில் இந்தியாவின் அனைத்து மாநில அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.

    * 75 ரூபாய் நாணயம் மற்றும் தபால்தலை வெளியிடப்பட்டது.

    * மக்களவையில் 888 எம்.பி.க்கள், மாநிலங்களவையில் 384 எம்.பி.க்கள் என மொத்தம் 1272 எம்.பி.க்கள் அமர முடியும்.

    * மிர்சாபூர் கம்பளம், நாகபுரி தேக்கு, திரிபுரா மூங்கில், ராஜஸ்தான் கல் சிற்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    * சிவப்பு-வெள்ளை மார்பிள் ராஜஸ்தானில் இருந்தும், கேஷரியா பச்சை நிற கற்கள் உதய்பூரில் இருந்தும், சிவப்பு நிற கிரானைட் கற்கள் அஜ்மீரில் இருந்தும், வெள்ளை நிற மார்பிள் கற்கள் ராஜஸ்தானில் இருந்தும், ஜல்லிக் கற்கள் உத்தரபிரதேசம், ராஜஸ்தானில் இருந்தும் கொண்டு வரப்பட்டுள்ளன.

    * மேற்கூரைக்கான எக்கு டாமன் டையூவில் இருந்து வரவழைக்கப்பட்டது.

    * பித்தளை வேலைகள் குஜராத்திலும், மேசை, இருக்கைகள் செய்யும் பணி மும்பையிலும் நடந்தது.

    * அசோகர் சின்னத்துக்கான பொருட்கள் ராஜஸ்தான், மகாராஷ்டிராவில் இருந்து பெறப்பட்டன.

    * அரியானாவில் தயாரிக் கப்பட்ட எம்-சானட் மணல் கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்பட்டது. சிமெண்ட் கற்கள் அரியானா, உத்தர பிரதேசத்தில் இருந்து வர வழைக்கப்பட்டன.

    * 2020 டிசம்பர் 10-ந் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு சுமார் 2½ ஆண்டுகளில் கட்டப்பட்டுள்ளது.

    * மக்களவை மயில் வடிவத்திலும், மாநிலங்களவை தாமரை வடிவத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.

    * செங்கோல் நிறுவிய நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து திருவாவடுதுறை உள்ளிட்ட 20 ஆதீனங்கள் பங்கேற்றனர்.

    * செங்கோலை பூஜையில் வைத்து பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் வழிபட்டனர்.

    * மத்திய மந்திரிகள், மாநில முதல்-மந்திரிகள், எம்.பி.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

    * பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கியது.

    * வந்தே மாதரம் பாடலை நாதஸ்வரத்தில் இசைத்த கலைஞர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறினார்.

    * திருவாவடுதுறை, தருமபுரி, மதுரை உள்ளிட்ட 20 ஆதீனங்களிடம் பிரதமர் மோடி தனித்தனியாக ஆசி பெற்றார்.

    * பாராளுமன்ற திறப்பையொட்டி இஸ்லாம், கிறிஸ்தவம், பவுத்தம் உள்ளிட்ட அனைத்து மத பிரார்த்தனை நடந்தது. இதில் சங்கராச்சாரியார்கள், பாதிரியார்கள், மதகுருமார்கள் பங்கேற்ற னர்.

    * பாராளுமன்ற கட்டுமான பணியில் ஈடுபட்ட கட்டுமான பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி பிரதமர் மோடி கவுரவித்தார்.

    * செங்கோலை உருவாக்கிய உம்மிடி ஜுவல்லர்ஸ் அதிபர்களையும் பிரதமர் மோடி கவுரவித்தார்.

    * புதிய பாராளுமன்ற கட்டிடத்துக்கான கல்வெட்டை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

    * சபாநாயகர் இருக்கைக்கு அருகில் கண்ணாடிபெட்டிக் குள் சோழர் காலத்து செங்கோலை பிரதமர் மோடி நிறுவினார். அதன்பிறகு குத்துவிளக்கு ஏற்றினார்.

    * அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே என்னும் தேவார பாடல் ஒலிக்கப்பட்டது.

    • விழாவிற்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார்.
    • அமைச்சர் பொன்முடி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட டி.எடையார் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் உதவி மின் பொறியாளர் அலுவலக கட்டிடம், ஏமப்பூர் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் சித்ரா விஜயன், விக்கிரவாண்டிஎம்.எல்.ஏ. புகழேந்தி, மாவட்ட விழுப்புரம் தொகுதி எம்.எல்.ஏ.லட்சுமணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், துணைத் தலைவர் சீலா தேவி, மாவட்ட கவுன்சிலர் பி.வி.ஆர்.விசுவநாதன், திருவெண்ணைநல்லூர் யூனியன் சேர்மன் ஓம்சிவசக்திவேல், ஒன்றியகுழு துணை தலைவர் கோமதி நிர்மல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஊராட்சி மன்ற தலைவர்கள் ஏமப்பூர் தேவி செந்தில், டி.எடையார் சுந்தரமூர்த்தி வரவேற்றனர். இதில் தமிழக உயர்கல்வி த்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு டி.எடையார் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் உதவி மின் பொறியாளர் அலுவலக கட்டிடம், ஏமப்பூர் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகியவற்றினை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள்எம்.எல்.ஏ. புஷ்பராஜ் முன்னாள் நகர மன்ற தலைவர் ஜனகராஜ், மாவட்ட பிரதிநிதி பக்தவச்சலு மோகன்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கேசவலு ,நந்தகோபாலகிருஷ்ணன், கவுன்சிலர்கள் சுபாஷ், மஞ்சுளா மாவட்ட விவசாய அணி துணை அமைப்பா ளர் விசுவநாதன், ஒன்றிய விவசாய அணி அமை ப்பாளர் வெங்க டேசன், தலைமைக் கழக பேச்சாளர் சிறுவனூர் பரசுராமன், தகவல் தொழில்நுட்ப பிரிவு கிருஷ்ணராஜ் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்  

    • திறப்பு விழா நாளை காலை 10 மணிக்கு நடக்கிறது.
    • மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளர் திட்ட விளக்க உரையாற்றுகிறார்.

    திருப்பூர் :

    திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்குகிறார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலா–ளர் ககன் தீப் சிங்பேடி திட்ட விளக்க உரையாற்றுகிறார்.

    புதிய கட்டிடத்தை திறந்து மருத்துவ சேவையை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள்.

    இதில் சுப்பராயன் எம்.பி., க.செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாநகராட்சி மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    • ஸ்ரீ குமரன் செராமிக்ஸ் அணுஜ் டைல்ஸ் மகால் திறப்பு விழா நடைபெற்றது.
    • குத்துவிளக்கேற்றி விற்பனையை தொடங்கி வைத்தனர்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே சேசம்பட்டி தேசிய நெடுஞ்சாலை கூட்ரோடு பகுதியில், பல லட்சம் சதுரடி பரப்பளவில் டிஸ்ப்ளேவுடன் கூடிய, அரவிந்த் ஸ்ரீ குமரன் செராமிக்ஸ் அணுஜ் டைல்ஸ் மகால் திறப்பு விழா நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு நிர்வாக இயக்குனர்கள் சீனிவாசன், கோகுலகிருஷ்ணன், சம்பத்குமார் ஆகியோர் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் மற்றும் திமுக மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி, தர்மபுரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி வெங்கடேஸ்வரன் மற்றும் அரவிந்த் செராமிக்ஸ் குழும நிர்வாக இயக்குனர் குமார் ஆகியோர் கலந்து கொண்டு, அரவிந்த் ஸ்ரீ குமரன் செராமிக்ஸ் அணுஜ் டைல்ஸ் மஹாலை திறந்து வைத்து பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் குத்துவிளக்கேற்றி, முதல் விற்பனையை தொடங்கி வைத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் தி.மு.க ஒன்றிய செயலாளர் ஏ.எஸ்.சண்முகம், முன்னாள் ஒன்றிய செயலாளர் துரைசாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் புவனேஸ்வரிமூர்த்தி, முருகன், ஆறுமுகம் மற்றும் முத்துவேல், பிரகாஷ், நட்ராஜ், வீரமணி உட்பட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், கட்டிட பொறியாளர்கள், கட்டிட மேஸ்திரிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • புதிய நாடாளுமன்ற திறப்புவிழாவில் தி.மு.க. பங்கேற்க வேண்டும்.
    • முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜூ பேட்டிளித்தார்.

    மதுரை

    மதுரை பரவை பகுதியில் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிய வகுப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. இதில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜூ கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் ஐ.டி. ரெய்டு மிக தாமதமாக நடக்கிறது. இது முன்கூட்டியே நடந்தி ருந்தால் கள்ளச்சாராய மரணம், போலி மதுவால் ஏற்பட்ட மரணம் உள்ளிட்ட வை நடந்திருக்காது. சோத னைக்கு வந்த ஐ.டி. அதிகாரிகளை தாக்குவதன் மூலம் தி.மு.க. வன்முறை கட்சி என்பதை காட்டுகிறது.

    முதல்-அமைச்சர் ஸ்டாலினின் வெளிநாட்டு சுற்று பயணம் இன்ப சுற்றுலா போல தான் இருக்கிறது. அவர் முதலீடுகளை ஈர்க்க செல்லவில்லை. முதலீடு செய்வதற்கு சென்றுள்ளார். உலகம் சுற்றும் வாலிபன் பட எம்.ஜி.ஆர்., போல வித விதமான உடைகளை அணிந்து கொண்டு பின்னி எடுக்கிறார். அதை பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. தி.மு.க. ஒரு விளம்பர அரசு, செயல்படுகிற அரசு அல்ல.

    காவல்துறை டி.ஜி.பி.,யை சுதந்திரமாக செயல்பட விடவில்லை.அவருடைய கை கட்டப்பட்டுள்ளது. அவரை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தால் தமிழ்நாட்டில் மதுவால் பாதிப்புகள் ஏற்பட்டிருக்காது.

    புதிய நாடாளுமன்ற திறப்பு நிகழ்வில் தி.மு.க. பங்கேற்க வேண்டும். செங்கோல் மீது மத சாயம் பூச கூடாது. செங்கோல் விஷயத்தில் உண்மையான தமிழனாக நாம் பெருமைப்பட வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் முர்மு வெற்றி பெறுவதற்கு உதவாத தி.மு.க. இன்று அவர்களை திறப்பு விழாவுக்கு அழைக்கவில்லை என சொல்வது வெளிவேஷம்.

    ஐ.பி.எல்., போட்டியில் சி.எஸ்.கே தான் வெற்றி பெற வேண்டும். தோனி கோப்பையை கைப்பற்ற வேண்டும். ''தல'' என சொல்லப்படுபவர்கள் யாரும் தல இல்லை.உண்மையான தல தோனி ஜெயிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×