search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பரங்குன்றம்"

    • அவன் மீது போர்தொடுத்தார். பெரும் யுத்தகம் ஆரம்பமானது.
    • இதுவே கந்த சஷ்டி விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

    சஷ்டி திதியில் சூரபத்மனை அழித்த முருகப் பெருமான்

    இங்கிருந்து முருகப் பெருமான் வீரவாகு தேவரை சூரபத்மனிடம் தூது அனுப்பி நல்ல அறிவுரைகளைக் கூறச் சொன்னார்.

    ஆனால் வீரவாகுவின் பேச்சினை சூரபத்மன் கேட்கவில்லை.

    அவன் மீது போர்தொடுத்தார். பெரும் யுத்தகம் ஆரம்பமானது.

    முருகப் பெருமானின் பூதசேனைகளும், சூரனின் அசுர சேனைகளும் தொடர்ந்து யுத்தம் செய்தனர். சூரபத்மனின் பிள்ளைகளான பானுகோபன், இரணியன், அக்னிமுகம் மற்றும் தம்பியான சிங்கமுகாசுரன் ஆகியோர் முருகப்பெருமானிடம் போரிட்டு மடிந்தனர்.

    கடைசியாக திருச்செந்தூரில் ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி திதியில் சூரனை அழித்து தன் அவதார காரணத்தை முருகப்பெருமான் முற்றுப்பெறச் செய்தார்.

    இதுவே கந்த சஷ்டி விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

    • அம்பிகையும் தனது சக்தி எல்லாவற்றையும் ஒன்று திரட்டி ஒரு வேலாயுதத்தை முருகனிடம் கொடுத்தாள்.
    • அவன் மீது போர்தொடுத்தார். பெரும் யுத்தகம் ஆரம்பமானது.

    சூரபத்மனை அழிக்க சென்ற கந்தன்

    சிவபெருமான் முருகனுக்கு அசுரனுடன் போர் செய்ய சேனைத் தளபதியாக வீரவாகுவையும், மற்ற சிவகணங்களையும் சிருஷ்டித்தார்.

    அம்பிகையும் தனது சக்தி எல்லாவற்றையும் ஒன்று திரட்டி ஒரு வேலாயுதத்தை முருகனிடம் கொடுத்தாள்.

    சகல சக்திகளுடனும், பரிவாரங்களுடனும் முருகன் அசுரரர்களை அழிக்க புறப்பட்டுச் சென்றார்.

    முதலில் சூரபத்மனின் சகோதரர்களான கஜமுகாசுரன், சிம்மமுகாசுரன், அவன் மகன் பத்மகேசரி ஆகியோரை அழித்தார்.

    பின்னர் தன் படைகளுடன் திருச்செந்தூர் வந்து அங்கு விஸ்வகர்மாவினால் அமைக்கப்பட்ட ஆலயத்தில் தங்கி தேவ குருவாகிய வியாழ பகவானால் பூஜிக்கப்பட்டார்.

    வியாழ பகவானால் பூஜிக்கப்பட்ட காரணத்தால் திருச்செந்தூர் புகழ்பெற்ற குரு தலமாக விளங்குகிறது.

    • ஒவ்வொரு திருமுகத்திலும் உள்ள நெற்றிக்கண்ணிலிருந்து ஜோதிப்பொறி தோன்றியது.
    • அவர் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டார்.

    நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய முருகப் பெருமான்

    சிவபெருமானும் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க தனது ஸத்யோஜாதம், வாமதேவம், தத்புருஷம், ஈசானம், அகோரம் என்ற ஐந்து முகங்களோடு ஞானிகளுக்கு மட்டும் புலப்படும் அதோமுகத்தையும் கொண்டு திகழ்ந்தார்.

    அப்போது ஒவ்வொரு திருமுகத்திலும் உள்ள நெற்றிக்கண்ணிலிருந்து ஜோதிப்பொறி தோன்றியது.

    அதை பார்வதி தேவியாலும் தாங்க முடியாததால் வாயு பகவான் ஏந்திச் சென்று கங்கையில் விழச் செய்தார்.

    கங்கையாலும் அதைத் தாங்க முடியாததால் அக்னி பவான் அதைத் தானே எடுத்து சரவணப் பொய்கையில் தாமரை மலர்களில் சேர்த்தார்.

    அவை ஆறு குழந்தைகளாகத் தோன்றின.

    பார்வதி தேவி பாசத்துடன் அக்குழந்தைகளை ஒன்றாக வாரிச் சேர்த்து அணைக்கவே ஆறுமுகங்களுடனும், பன்னிரண்டு கைகளுடனும் முருகப் பெருமான் தோன்றினார்.

    அவர் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டார்.

    • அடியவர்களின் வினைகளைத் தீர்ப்பது ஒருமுகம்.
    • வேத, ஆகமங்களை முற்றுப் பெறச் செய்வது ஒரு முகம்.

    முருகனின் ஆறுமுகத்தின் செய்கைகள்

    ஏறுமயில் ஏறி விளையாடுவது ஒரு முகம்.

    அடியவர்களின் வினைகளைத் தீர்ப்பது ஒருமுகம்.

    சூரபத்மனை வதைத்து அழியாத பேரின்ப வாழ்வினைத் தருவது ஒருமுகம்.

    உயிர்களின் மன இருளைப் போக்கி ஒளிபடர்வது ஒருமுகம்.

    வள்ளி, தெய்வானைக்கு மோகம் அளிப்பது ஒருமுகம்.

    வேத, ஆகமங்களை முற்றுப் பெறச் செய்வது ஒரு முகம்.

    • முருகன் வடிவம் தமிழ் வடிவமாக அமைந்தது.
    • நீலோத்பலம் ஏந்திய கரத்துடன் தெய்வானை இடது பக்கத்திலும் அமைய காட்சித் தருவார்.

    தமிழ் கடவுள் முருக பெருமான்

    முருகன் வடிவம் தமிழ் வடிவமாக அமைந்தது.

    தமிழ்மொழியில் மெய்யெழுத்துகள் கண்களாகவும், வல்லினம், மெல்லினம், இடையினம் என வழங்கும் எழுத்துக்கள் ஆறு திருமுகங்களாகவும்,

    அகர முதலிய எழுத்துகள் பன்னிரண்டும் தோள்காளாகவும், ஆயுத எழுத்து ஞான வேலாகவும் விளங்குகிறது.

    முருகன் சிவந்த மேனியும், அபயவரதத்துடன் கூடிய கரங்களும், மார்பில் சாய்ந்த வேலும்,திருவடியில் மயிலும், தாமரை ஏந்திய கரத்துடன் வள்ளி தேவி வலது பக்கத்திலும்,

    நீலோத்பலம் ஏந்திய கரத்துடன் தெய்வானை இடது பக்கத்திலும் அமைய காட்சித் தருவார்.

    சிவபெருமானின் ஈசானம், சத்யோஜாதம், வாமேதேவம், அகோரம், தற்புருடம் என்ற ஐந்து முகங்களுடன் அதோமுகம் சேர ஆறுமுகங்களாயின.

    • மலையும், மலை சார்ந்த பகுதியும் குறிஞ்சி எனப்படும்.
    • முருகப் பெருமானை உள்ளன்புடன் உபாசனை செய்யும் பக்தர்களின் வாழ்வு சிறக்கும்.

    குன்று தோறாடும் குமரன்

    மலையும், மலை சார்ந்த பகுதியும் குறிஞ்சி எனப்படும்.

    இக்குறிஞ்சி நிலக்கடவுளாக முருகன் கருதப்படுகிறான். இதன் காரணமாக "குன்று தோறாடும் குமரன்" என்று முருகனை வழிபடுகிறோம்.

    முருகன் என்ற சொல்லுக்கு அழகு, இளமை, மணம், கடவுள் தன்மை என்ற பல பொருள் உண்டு.

    முருகப் பெருமானை உள்ளன்புடன் உபாசனை செய்யும் பக்தர்களின் வாழ்வு என்றும் மலர்ந்திருக்கும்.

    எப்பொழுதெல்லாம் நம் உள்ளத்தில் பயம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் முருகனை நினைத்தால் ஆறுமுகம் தோன்றி நம் அச்சத்தைப் போக்கும்.

    • ஞானவடிவான முருகனை நினைத்தால் ஞானம் கைகூடும் கவலைகள் நீங்கும்.
    • முருகனை வணங்கினால் மும்மூர்த்திகளை வணங்கிய பலன் கிடைக்கும்.

    மும்மூர்த்திகளை வணங்கிய பலன் தரும் முருகன் வழிபாடு

    தமிழ் கடவுள் என்று போற்றப்படும் முருகப் பெருமான், அழகு, வீரம், ஞானம் ஒருங்கே அமையப் பெற்றவர் முருகப் பெருமான் அவதாரமாக உதித்தவர். பிறந்தவர் இல்லை.

    சத்து, சித்து, ஆனந்தம் சச்சிதானந்தமாக முருகப்பெருமான் கைலாச மலையில் வீற்றுள்ளார்.

    முருகனை வணங்கினால் மும்மூர்த்திகளை வணங்கிய பலன் கிடைக்கும்.

    இந்தப் பிறவியில் கைமேல் பலன் தருவது முருகன் திருவருள்.

    ஞானவடிவான முருகனை நினைத்தால் ஞானம் கைகூடும் கவலைகள் நீங்கும். வினைகளும், பயமும் நீங்கும்.

    • திருப்பரங்குன்றத்தில் இன்று மாலை சுப்பிரமணிய சுவாமி வீதி உலா நடக்கிறது.
    • தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளுகிறார்கள்.

    திருப்பரங்குன்றம்

    அறுபடை வீடுகளுன் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிர–மணிய சுவாமி கோவிலில் மாதம் தோறும் வரும் கார்த்திகையின் போது சுப்பிரமணிய சுவாமி தங்க–மயில் வாகனத்தில் எழுத்த–ருளி வீதி உலா வந்து பக்தர் களுக்கு அருள் பாலிப்பது வழக்கம். இதில் ஆடி மாதம் வரும் கார்த்திகை கோலாக–லமாக கொண்டாடப்படும்.

    இன்று ஆடி கார்த்திகை தினத்தை முன்னிட்டு அதி–காலையில் உற்சவர் சன்ன–தியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு பால், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷே–கங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் கோவிலில் இருந்து புறப்பாடகி கார்த் திகை மண்டபத்தில் எழுந்த–ருளினார்.

    அங்கு காலை முதல் மாலை வரை பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் சுப்பிர–மணிய சுவாமி, தெய்வானை இரவு 7 மணி அளவில் சிறப்பு அலங்காரத்தில் தங்க–மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள். விழாவுக் கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    • அடியவர்களின் வினைகளை தீர்க்கின்ற முகம் ஒன்று.
    • பன்னீர் இலையில் விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது

    நமது உடலில் அமைந்துள்ள ஆதாரங்கள் ஆறு. அவை முறையே மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை. இந்த ஆறு ஆதாரங்களிலும் முருகன் வீற்றுள்ளான்.

    மூலாதாரம்-திருப்பரங்குன்றம்

    சுவாதிஷ்டானம்-திருச்செந்தூர்

    மணிபூரகம்-திருவாவினன்குடி

    அநாகதம்-திருவேரகம்

    விசுத்தி-குன்று தோறாடல் (திருத்தணி)

    ஆக்ஞை-பழமுதிர்சோலை

    ஆறுமுகம்

    முருககப் பெருமானை ஆறுமுகம் என்று சொல்லு வோம். அந்த ஆறுமுகம் என்னென்ன?

    1. சிவனுக்கு ஞானமொழியாக, ஓங்காரத்தில் பொருளை விளக்கிய பேசும் முகம் ஒன்று.

    2. வள்ளியைத் திருமணம் செய்ய வந்த முகம் ஒன்று.

    3. அடியவர்களின் வினைகளைத் தீர்க்கின்ற முகம் ஒன்று.

    4. குன்றில் சம்ஹாரம் செய்ய அன்னையிடம் வேல் வாங்கிய முகம் ஒன்று.

    5. சூரனை வதைத்த முகம் ஒன்று.

    6. வாகனமான மயில் மீது ஏறி விளையாடும் முகம் ஒன்று.

    பன்னீர் இலை பிரசாதம்

    திருச்செந்தூரில் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும் முருகப் பெருமானின் திருக்கோவிலில் பன்னீர் இலையில் விபூதிப் பிரசாதம் வழங்கப்படுகிறது. இது வேறெங்கும் காண முடியாத சிறப்பாகும்.

    இத் தலத்தில் நான்கு வேதங்களும் பன்னீர் மரங்களாக மாறிச் செந்தில் முருகனை வழிபடுவதாக ஓர் ஐதீகம் நிலவுகிறது. அதற்கேற்றாற் போல பன்னீர் மரங்கள் மிகுந்த அளவில் இங்குண்டு. விஸ்வாமித்திரரைப் பிடித் திருந்த குன்ம நோய் இந்த பன்னீர் இலை விபூதியால் குணமானதாக நம்பப்படுகிறது.

    முருகன் கண்ட பாக்கிய சாலிகள்

    அகத்தியர், நக்கீரர், சிகண்டி முனிவர், நல்லியக்கோடன், ஒளவையார், முருகம்மையார், பொய்யாமொழிப் புலவர், சிதம்பர சுவாமிகள், ஞாவைரோதயர், பகழிக்கூத்தர், கவிராஜ பிள்ளை, குமரகுருபரர், மார்க்க சகாயதேவர், குணசீலர், ராமலிங்க அடிகள், முருகதாச சுவாமிகள், பாம்பன் சுவாமிகள், தண்டபாணி சுவாமிகள், அருணகிரிநாதர், கச்சியப்பர், வாரியார் சுவாமிகள்.

    • சிவபெருமான் லிங்கத் திருமேனியுடன் அருள் பாலிக்கிறார்.
    • திருப்பரங்குன்றத்தில் திருமணம் செய்து கொள்வது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    முருகப்பெருமான் அவதாரத்தின் நோக்கமே அசூரன் சூரபத்மனையும், அவனது சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பதுதான். அதன்படி, முருகப்பெருமான் அவதாரம் செய்து, சூரபத்மனை அழித்து, அவனை மயில் மற்றும் சேவலாக மாற்றி, மயிலை வாகனமாகவும், சேவலை கொடியாகவும் ஏற்றுக் கொண்டு அருளினார்.

    சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்ததால் தேவர்கள் துயரம் நீங்கினர். முருகப்பெருமானுக்குத் தன்னுடைய நன்றியைச் செலுத்தும் வகையில் இந்திரன் தனது மகளாகிய தெய்வயானையை திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். அதன்தொடர்ச்சியாக, முருகப்பெருமான் - தெய்வானை திருமணம் திருப்பரங்குன்றத்தில் இனிதே நடந்தது.

    திருமண விழாவில் பிரம்மா விவாக காரியங்கள் நிகழ்த்த... சூரிய, சந்திரர்கள் ரத்ன தீபங்கள் தாங்கி நிற்க... பார்வதி பரமேஸ்வரர் பரமானந்தம் எய்தி நிற்க... இந்திரன் தெய்வயானையை தாரை வார்த்து கொடுக்க... முருகப்பெருமான், தெய்வயானையைத் திருமணம் செய்து கொண்டதாக கூறுகிறது திருப்பரங்குன்றத்துப் புராணம்.

    இதுவும் நம் உடல் ஆதாரமான மூலாதா ரத்தை நமக்கு உணர்த்துகிறது. மூலாதாரத்தின் தன்மை ``உல்லாசம்'' என்பதாகும்.அது மட்டுமின்றி முருகப்பெருமான் நல்துணை வடிவம் கொண்டு அருள்பாலிப்பதாக ஐதீகம். முருகன் - தெய்வானை திருமணம் இந்த இரண்டையும் உறுதி படுத்துகிறது.

    பாவங்கள் போக்கும் சரவணப்பொய்கை:

    திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் கிழக்கு பக்கம் சரவணப்பொய்கை அமைந்துள்ளது. இந்த தீர்த்தம் முருகனின் கைவேலினால் உண்டானது என்றும் இந்த தீர்த்தத்தைக் கண்டாலும், அதில் நீராடினாலும் பாவங்கள் நீங்கிவிடும், வேண்டுதல் சட்டென்று நிறைவேறும் என்றும் சொல்கிறார்கள்.

    இக்கோவில் கருவறை மற்ற கோவில்களை போன்று அல்லாமல் பெரிய அளவில் ஐந்து தெய்வத்திரு உருவங்களின் இருப்பிடமாக காணப்படுகிறது. மூலவரான முருகப்பெருமானுக்கு என தனியாக கருவறை இல்லாமல், பாறையில் இடது புறம் முருகப் பெருமான் தெய்வானையுடன் திருமண கோலத்தில் காட்சி தர... அவர்களை அடுத்து, பக்கத்தில் பிற தெய்வ உருவங்கள் உள்ளன. அதாவது, முருகப் பெருமானின் திருமணக்கோலத்தை அனைத்து தெய்வங்களும் காணுமாறு இங்குள்ள கருவறை அமைந்துள்ளது.

    கருவறையின் இடது புறத்தில் கிழக்கு நோக்கியவாறு மலையை குடைந்து சத்திய கிரீசுவரர் என்னும் பெயர் கொண்டவராக சிவபெருமான் லிங்கத் திருமேனியுடன் அருள் பாலிக்கிறார்.

    இக்கோவில் மூலவரை, பாறையினை குடைந்து உருவாக்கி உள்ளதால், அதாவது தனியாக சிலை வடித்து வைக்காத காரணத்தால், இந்த மூலவருக்கு அபிஷேகம் செய்வது கிடையாது. எண்ணெய், புனுகு மட்டுமே சாத்தப்படுகிறது. அதேநேரம், இந்த வேலவனின் கையில் உள்ள வேலுக்கு மட்டுமே அபிஷேகம் உள்ளிட்ட மற்ற எல்லாவற்றையும் செய்கிறார்கள்.

    கருவறையில் முருகப் பெருமான் காலடியில் யானை ஒன்று காணப்படுகிறது. இது, இந்திரனுடைய ஐராவதம் என்றும், இந்திரனின் மகள் என்பதால் தெய்வயானையைப் பிரிய மனமில்லாது முருகனுக்குத் தொண்டாற்ற அது வந்தது என்றும் கூறுகிறார்கள்.

    கருவறையில் முருகப் பெருமானை வழிபட்டுவிட்டு, இடது புறம் உள்ள வாயில் வழியாக கீழே இறங்கினால் கீழ்ப் பகுதியில் குகைக்கோவில் ஒன்று அமைந்துள்ளது. அங்கே அன்னபூரணி, உலக உயிர்களை உணவு அளித்துக் காக்கும் தெய்வமாக காட்சித் தருகிறாள்.

    இந்த நிகழ்வும் கூட மூலாதாரத்துடன் தொடர்புடையது தான். மூலாதார சக்கரத்திற்கு உரிய தேவதை ஸ்ரீ கணேசர். யானைத் தலையைக் கொண்ட குழந்தை. இவர் குழந்தை உள்ளம் கொண்டவர். 'குண்டலினி' என்னும் கவுரி மாதாவை காவல் காத்து வருகிறார். இவர் தான் குண்டலினி மாதாவை விழிப்பு நிலை அடைய வைக்கிறார்.

    இவருடைய கோபக்கனல் தான் வெப்பக்காற்றாக பரவி நரம்பு மண்டலங்கள் மூலமாக எதிர் மறை சக்திகள் நுழையும் போது கைகளில் வெளிப்படுகிறது. எல்லா தடைகளையும் நீக்க கூடிய தெய்வமாக விளங்குகிறார்.

    இவர் தான் எல்லாக் கணங்களுக்கும் அரசனாக இருந்து ஆட்சி செய்கிறார். இத்தடைகளை நீக்கினால் தான் நாம் பரிபூரணத்துவம் பெற முடியும்.

    கணேசரின் ஞானம் மிகவும் பரி பூரணமான ஞானமாகும். அறிவுகளுக்கு எல்லாம் இதயம் போன்றவர். (உண்மையான பொருளை அறிந்து கொள்ளும் திறன் ) கணேஷர் தெய்வ குழந்தை ஆதலால் விளையாட்டுத் தன்மையும், பேரானந்தமமும், கொண்ட குழந்தையாக விளங்குகிறார். அன்பே வடிவானவராகவும் விளங்குகிறார்.

    கோவில் சிறப்புகள்:

    முருகப் பெருமான் தெய்வயானையை திருமணம் செய்து கொண்ட தலம் இது என்பதால், இந்த தலத்தில் திருமணம் செய்து கொள்வது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    மூலாதாரச் சக்கரம் பிறப்பு உறுப்புகள் , கழிவு உறுப்புகள் ஆகியவற்றைப் பாதுகாக்கின்றன. இது மக்களின் பாலுணர்வை வெளிப்படுத்தும் சக்கரம் எனலாம்.

    பாலுணர்வு என்பது மிகவும் மென்மையானது. இது அன்பை வெளிப்படுத்தக் கூடிய ஸ்தூல சரீர உணர்வே ஆகும் . இதை திருமண பந்தத்தின் மூலம் புனிதத் தன்மையுடன் வெளிப்படுத்த வேண்டும் . பிறப்பு - இறப்பு இதன் மூலம் செயல்படுகிறது .

    சமநிலையற்ற பாலுணர்வு நம்மை அடிமைப்படுத்துகிறது. ஆன்ம தரிசனம் பெற்றவர்கள் சரியான சமநிலையில் கற்புடன் வாழ்க்கை நடத்து வதை மூலாதாரமாக கொள்ள வேண்டும் என்று இந்த சக்கரம் நமக்கு உணர்த்துகிறது.

    இக்கோவிலில் மற்ற கோவில்களைப் போன்று சுற்றுப் பிரகாரங்கள் கிடையாது. மூலவரை தரிசிக்க வேண்டும் என்றால் படிக்கட்டுகள் வழியாக மேலே... மேலே... என்று ஏறிக்கொண்டே போக வேண்டும். அத்துடன், கருவறை, மூலவர், உற்சவர் ஆகியோரை வலம் வருவதும் இங்கு முடியாது.

    இக்கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் செய்தால் செல்வம் பெருகி வாழ்வில் வளம் சேரும் என்பது நம்பிக்கை. அதனால், செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானை நினைந்து வீட்டில் தயிர் சாதம் செய்து இங்கே கொண்டு வந்து ஏழை மக்களுக்கு வழங்குவதைப் பலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

    விழாக்கள் விவரம்:

    தைப்பூசம், கார்த்திகைத் திருநாள், தெய்வயானையை மணந்து கொண்ட பங்குனி உத்திர நாள் ஆகியவை சிறப்பான விழாக்களாக இங்க கொண்டாடப்படுகின்றன.

    மேலும், இந்த குன்றத்து முருகப் பெருமான் உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவில் அன்னை மீனாட்சி திருக்கல்யாணத்தை காண மதுரை சென்று திரும்புவதும் முக்கிய விழாவாகும்.

    திருக்கார்த்திகை தீபம் அன்று இங்குள்ள குன்றின் உச்சியில் ஏற்றப்படும் பிரம்மாண்ட தீபத்தை சுற்று வட்டார மக்கள் கண்டு தரிசனம் செய்வது மறக்க முடியாத நிகழ்ச்சியாகும்.

    • முருகனின் அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாக திகழ்வது திருப்பரங்குன்றம்.
    • முருகப் பெருமான் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட தலம்

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்வது திருப்பரங்குன்றம். முருகப் பெருமான் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட தலம் இது.

    அறுபடை வீடுகளை நம் உடல் ஆதாரங்களுடன் ஒப்பிட்ட நம் முன்னோர்கள் இந்த தலத்தை மூலாதாரம் என்று கூறியுள்ளனர்.

    மூலாதாரம் என்பது ஒரு பிரமாண்ட கட்டிடத்துக்கு போடப்படும் அடித்தளம் போன்றது. அதாவது மூலாதார சக்கரம் எல்லாவற்றுக்கும் வேர் போன்று உள்ளது.

    அந்த அடிப்படையில் பார்த்தால் திருப்பரங்குன்றம் தலம், தமிழ்நாட்டில் உள்ள அறுபடை வீடுகளான மற்ற 5 தலங்களுக்கும் அடித்தளமாக உள்ளது.

    பொதுவாக மூலாதாரத்தை நிலத்துடன் தொடர்புடையதாக சொல்வார்கள். திருப்பரங்குன்றம் மலை லிங்க வடிவில் கருதப்பட்டாலும் முருகன் வீற்றிருப்பது தரைப்பகுதியில் உள்ள நிலத்தில்தான்.

    லிங்க வடிவில் இருக்கும் இக்கோவில் அமைந்துள்ள மலையைப் பற்றி சைவ சமயக் குரவர்களில் முக்கியமானவர்களான சுந்தரமூர்த்தி நாயனார், திருஞானசம்பந்தப் பெருமான் ஆகியோர் சிறப்பித்துப் பாடியுள்ளனர். சங்ககாலப் புலவரான நக்கீரர் இத்தலத்து முருகப் பெருமானை வழிபட்டு தனது குறை நீக்கிக்கொண்டார் என்றும் கூறுகிறார்கள்.

    இலக்கியங்களில் தண்பரங்குன்று, தென்பரங்குன்று, பரங்குன்று, பரங்கிரி, திருப்பரங்கிரி பரமசினம், சத்தியகிரி, கந்தமாதனம், கந்த மலை என்று பல்வேறு பெயர்களில் திருப்பரங்குன்றம் அழைக்கப்படுகிறது.

    அமைவிடம்:

    சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த மதுரையில் இருந்து தென்மேற்கில் 9 கிலோமீட்டர் தொலைவில் திருப்பரங்குன்றம் அமைந்துள்ளது. திரு + பரம் + குன்றம் என்பதே திருப்பரங் குன்றம் என்று வழங்கப்படுகிறது. இதில், பரம் என்றால் பரம் பொருளான சிவபெருமானையும், குன்றம் என்பது குன்று வாகிய மலையையும், திரு என்பது அதன் சிறப்பை உணர்த்தும் அடைமொழியையும் குறிக்கிறது.

    இந்த குன்றானது சிவலிங்க வடிவில் காணப்படுவதால், அந்த சிவபெருமானே குன்றின் உருவில் காட்சியளிப்பதாக கருதப்பட்டு வணங்கப்பட்டு வருகிறது. இந்த மலையின் உயரம் சுமார் 190 மீட்டராகும். இந்த மலையை அனுதினமும் வலம் வந்து வழிபட்டால் தொழுவாரின் வினைகள் எல்லாம் தீர்ந்துவிடும் என்று தனது தேவாரத்தில் குறிப்பிடுகிறார் திருஞான சம்பந்தர்.

    அன்னையை நோக்கி தவம்:

    கயிலாயத்தில் ஒருநாள், பார்வதி தேவிக்கு, சிவபெருமான் பிரணவ மந்திரத்தின் உட்பொருளை உபதேசிக்கும்போது, தன் தாயாரின் மடி மீது முருகப்பெருமான் அமர்ந்திருந்தார். தாய்க்கு தந்தையார், பிரணவ மந்திர உபதேசம் செய்தபோது முருகப்பெருமானும் அந்த உபதேசத்தை கேட்டார்.

    புனிதமான மந்திரத்தின் பொருளை குருவின் மூலமாகவே அறிந்து கொள்ளவேண்டும். மறைமுகமாக அறிந்து கொள்ளுதல் முறையாகாது. அது பாவம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

    இந்த குற்றத்திற்கு பரிகாரம் தேடும் பொருட்டு முருகப் பெருமான் திருப்பரங்குன்றத்திற்கு வந்து தவம் செய்தார்.

    இந்த நிகழ்வும் கூட ஒருவகையில் நம் உடல் ஆதாரங்களில் முக்கியமானதுமான மூலாதாரத்தையே உணர்த்துகிறது. அதாவது நம் உடம்பில் முதுகெலும்பின் அடிப்பாகத்தில் உள்ள மூலாதார சக்கரத்தில் தான் உயிர் வாழ வேண்டும் என்ற ஆசையும், பிடிவாதமும் உற்பத்தி ஆவதாக கண்டு பிடித்துள்ளனர். இந்த உலக உயிர்கள் உய்யும் பொருட்டு முருகப் பெருமான் திருப்பரங்குன்றத்துக்கு வந்து பிடிவாதமாக தவம் இருந்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

    மூலாதாரத்துக்கும், திருப்பரங்குன்றத்துக்கும் உள்ள அரிய தொடர்பை உறுதிப்படுத்த இது ஒன்றே போதுமானதாகும்.

    உலக ஆதாரத்தை இயக்க முருகன் இத்தலத்துக்கு வந்ததை தொடர்ந்து சிவபெருமானும், பார்வதிதேவியும் தோன்றி, முருகப் பெருமானுக்கு காட்சி தந்து அருளினார்கள். அவர்கள் இங்கு பரங்கிநாதர் என்றும், ஆவுடை நாயகி என்றும் பெயர் பெற்றார்கள். அவர்களுடைய ஆலயம் இன்றும் திருப்பரங்குன்றத்தில் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் ஆலயம் என்னும் பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.

    எனவே திருப்பரங்குன்றம் செல்லும் பக்தர்கள் முதலில் சிவன்-பார்வதியை தரிசனம் செய்த பிறகே முருகப்பெருமான் ஆலயத்திற்கு செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.

    இதிலும் மூலாதாரத்தின் ஒரு அம்சம் வெளிப்படுகிறது. அதாவது மூலாதார சக்கரம் தூய்மைப்படும் போது குண்டலினி விடு பட்டு மேலெழும்புகிறது. ஆகவே இந்த சக்கரம் குண்டலினியின் தூய்மை யையும் , மங்களத் தன்மையையும் பாதுக்காக்கிறது.

    மூலாதார சக்கரம் மற்ற எல்லா சக்கரங்களுக்கும் வேர் போன்ற தாகும். தெளிவான சிந்தனையுடன், கள்ளம் கபடம் இல்லாமல் இருந்தால் மட்டுமே மூலாதார செயல்படும்.

    மூலாதாரம் என்பது எல்லா உயிரினங்களின் பரிணாம வளர்ச்சிக்கு ஆதாரமானது. இந்த சக்கரம் சக்திகளை பெறும் போது, காந்த ஷக்தியாக வெளிப்படுகிறது. இந்த சக்தியை ஒவ்வொரு வரும் உணரலாம். அதாவது சிவனிடம் இருந்து முருகன் அருள் பெற்றதை இது குறிக்கிறது.

    முருகப்பெருமானுக்கு சிவபெருமான் தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் அன்று காட்சித் தந்தார். அதனால், தைப்பூசம் அன்று சிவபெருமானையும், முருகப் பெருமானையும் வழிபடுகின்றவர்கள் வேண்டும் வரம் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. இந்த தைப்பூச விழா திருப்பரங்குன்றத்தில் 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    • இந்த ஆண்டில் ஆடி மாதத்தில் 2 அமாவாசை வருகிறது.
    • 9-ந்தேதி ஆடிக் கார்த்திகை கொண்டாடப்படுகிறது.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் ஒரு திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால் அம்மனுக்கு உகந்தஆடி மாதத்தில் மட்டும் 5 விழாக்கள் நடைபெறுவது தனி சிறப்பாகும். இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் கார்த்திகை தினத்தன்று தங்க மயில் வாகனத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி நகர் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதில் ஆடி மாத கார்த்திகை விசேஷமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    ஆடி கார்த்திகைக்கு என்று சன்னதி தெருவில் தனி மண்டபமே உள்ளது., ஆண்டுதோறும் ஆடி கார்த்திகை அன்று இந்த மண்டபத்தில்தான் காலை முதல் இரவு வரை தெய்வானையுடன் முருகப்பெருமான் தங்கி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். பின்னர் வழக்கம் போல தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி நகர் உலா வருவார். இந்த ஆண்டு ஆடிக்கார்த்திகை அடுத்த மாதம் ஆகஸ்டு (ஆடி 24-ந் தேதி) 9-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

    இந்தகோவிலை பொறுத்தவரை அம்மனுக்கு உகந்த ஆடிப்பூரம், ஐப்பசி பூரம் என்று ஆண்டுக்கு 2 முறை பூர விழா நடைபெற்று வருகிறது. ஐப்பசி பூரத்தில் தெய்வானை அம்பாளும், ஆடிப்பூரத்தில் கோவர்த்தனாம்பிகையும் எழுந்தருளுவார். இந்த ஆண்டிற்கான ஆடிப்பூரம் வருகின்ற 21-ந்தேதி முதல் நடக்கிறது. மாதந்தோறும் பவுர்ணமி நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கமாக உள்ளது.

    இதேசமயம் ஆடி மாதத்தில் காவல் தெய்வமான கருப்பண்ணசுவாமிக்கு சந்தனம் சாத்திப்படியும், வண்ணமலர்களால் பந்தல்அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜை நடைபெறும். இந்த நாளில் பக்தர்கள் கிரிவலம் வந்து தரிசனம் செய்வார்கள். இந்த ஆண்டிற்கான ஆடி பவுர்ணமி பூஜை வருகின்ற 1-ந்தேதி நடக்கிறது.

    ஆடி மாதத்தில் கடைசி வெள்ளிக்கிழமை அன்று உலக நலனுக்காக 1008 திருவிளக்கு பூஜை நடைபெறுவதும் வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 1008 திருவிளக்கு பூஜை வருகின்ற 11-ந்தேதி நடக்கிறது. எனவே ஆடி மாதத்தில் வருகின்ற 21-ந்தேதி ஆடிப்பூரம், 1-ந் தேதி ஆடி பவுர்ணமி, 9-ந்தேதி ஆடிக் கார்த்திகை, 11-ந்தேதி ஆடிவெள்ளி 1008 திருவிளக்குபூஜை, 16-ந்தேதி ஆடி அமாவாசை என்று 5 விழாக்கள் நடக்கிறது.

    தமிழ் மாத கணக்கின்படி மாதத்திற்கு ஒரு அமாவாசை வருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டில் ஆடி மாதத்தில் 2 அமாவாசை வருகிறது. அதாவது ஆடி மாதத்தின் முதல் நாளான வருகின்ற 17-ந்தேதி முதல்அமாவாசையும், ஆடி மாதத்திலேயே (ஆகஸ்டு16-ந்தேதி) 2-வது அமாவாசையும் வருகிறது. ஆங்கில மாதத்தை பொறுத்தவரை வெவ்வேறு மாதமாக இருப்பினும் தமிழ் மாதத்தை ஒப்பிடும் போதுஒரே மாதமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    திருப்பரங்குன்றம் முருகன்கோவிலை பொறுத்தவரை ஆகஸ்டு 16-ந் தேதி அமாவாசையை விழா கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×