search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருநாவுக்கரசர்"

    • பார்வதி திருக்கைலாயத்தில் சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடியதால் உலகம் இருளில் மூழ்கியது.
    • ஸ்தலவிருட்சம் என போற்றப்படுவது 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாமரம்.

    ஏகாம்பரேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களுள் இதுவும் ஒன்று. இந்தத் தலம் பஞ்ச பூதங்களில் ஒன்றான நிலத்தைக் குறிக்கிறது. இந்தக் கோவிலின் முக்கிய கடவுளான சிவன் ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயரிலும், அம்பிகை காமாட்சி அம்மன் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். மொத்தம் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோவில், 600ஆம் ஆண்டே கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

    இங்கு உள்ள சிவபெருமானை பிருத்வி லிங்கம் என்று அழைப்பர். மேலும் இந்த சிவபெருமான் மண்ணால் ஆனவர். இதனை சுயம்பு என்றும் கூறுவது உண்டு. அதனால் இந்த சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் நடப்பது கிடையாது. மாற்றாக லிங்க வடிவில் உள்ள ஆவுடையாருக்கு அபிஷேகங்கள் நடைபெறும். மேலும் இங்கு மற்ற கோவில்களைப் போல அம்மனுக்கு என்று தனியாக சந்நிதி கிடையாது.

    மற்ற கோவில்களைப் போல் விநாயகர், முருகன் போன்ற கடவுள்களும் இங்கு காட்சி தருகின்றனர். முதல் பிரகாரத்தின் ஈசான மூலையில் நிலாத்துண்ட பெருமாள் சந்நிதி அமைந்த்துள்ளது. மேலும் இந்தக் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது.

    வரலாறு:

    முதன் முதலில் பல்லவர்களே இந்தக் கோவிலை கட்டியுள்ளனர் என்பதற்கு சான்றாக பல்லவர் கால சிற்பங்களும் கல்வெட்டுகளும் இங்கு உள்ளன. பின்னர் சோழர்களால் புனரமைக்கப்பட்டு கோவில் வளர்ச்சியடைந்தது. மேலும் அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர், ஞானசம்பந்தர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற தலம் இது. பழங்கால சமயம் சார்ந்த நூல்களில் இந்தக் கோவில் திருக்கச்சிஏகம்பம் என்னும் பெயரால் குறிப்பிடப்பட்டு வந்தது.

    இந்தக் கோவிலின் கிழக்கு கோபுரமான இராஜ கோபுரம், 58.5 மீட்டர் உயரமும் ஒன்பது அடுக்குகளையும் கொண்டது. இதனை விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயர் கி.பி. 1509 ஆம் ஆண்டு கட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கோவிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தையும் கிருஷ்ணதேவராயரே கட்டியுள்ளார். இந்தக் கோவிலில் மொத்தம் ஐந்து பிரகாரங்கள் உள்ளன.

    ஸ்தல விருட்சம்:

    ஒவ்வொரு கோவிலுக்கு ஸ்தலவிருட்சம் என்று ஒரு மரம் உண்டு, அந்த வகையில் இந்தக் கோவிலில் ஸ்தலவிருட்சம் என போற்றப்படுவது 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாமரம். இந்த மாமரத்தில் நான்கு கிளைகள் உள்ளன. வெவ்வேறு காலங்களில் இந்த மாமரத்தில் உள்ள நான்கு கிளைகளில் நான்கு விதமான மாம்பழங்கள் உருவாகும் என்பது இதன் சிறப்பு. இந்த நான்கு கிளைகளும் ரிக், யஜுர், சாம, அதர்வண எனும் நான்கு வேதங்களை குறிக்கின்றன.

    தல வரலாறு:

    பார்வதி திருக்கைலாயத்தில் சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடியதால் உலகம் இருளில் மூழ்கியது. சிவபெருமான் நெற்றிக்கண்ணைத் திறந்து உலகத்துக்கு வெளிச்சம் தந்தார். இந்த தவறால் பார்வதியை பூலோகத்துக்குச் சென்று தன்னை நோக்கி தவம் இருக்கச் சொன்னார் சிவபெருமான். பார்வதியும் காஞ்சிபுரத்தில் கம்பா நதிக்கரையில் ஒரு மாமரத்தின் அடியில் மணல் லிங்கம் செய்து பூஜித்தார். பார்வதியின் தவத்தை உலகினுக்கு அறியச் செய்ய சிவபெருமான் கம்பா நதியில் வெள்ளத்தை உண்டாக்கினார்.

    பார்வதி தனது மணல் லிங்கத்தை வெள்ளம் அடித்து செல்லாமல் இருக்க கட்டி அணைத்துக் கொண்டார். உடனே சிவபெருமான் அந்த மாமரத்தின் அடியில் தோன்று பார்வதிக்கு அருள் புரிந்து, இரண்டு படி நெல்லைக் கொடுத்து காமாட்சி என்ற பெயரில் காமகோட்டத்தில் 32 அறங்களைச் செய்ய பணித்தார். பார்வதி வழிபட்ட மணல் லிங்கம் தான் பிரித்வி லிங்கம், அந்த மாமரம் தான் ஸ்தல விருட்சம். காமகோட்டம் தான் காமாட்சி அம்மன் கோவில். பார்வதி கட்டித் தழுவியதால் இங்கு உள்ள சிவபெருமானை தழுவக் குழைந்தார் என்றும் அழைப்பர்.

    சுந்தரமூர்த்தி நாயனார் சங்கிலி நாச்சியாரை மணந்தபோது "உன்னைப் பிரியேன்" என்று சிவனை சாட்சியாக வைத்து சத்தியம் செய்தார். அந்த சத்தியத்தை மீறியதால் அவர் கண் பார்வை இழந்தார். இழந்த பார்வையில் இடக்கண் பார்வையை சுந்தரர் இங்கு பதிகம் பாடி பெற்றதாக வரலாறு உண்டு.

    விழாக்கள்:

    இந்தக் கோவிலில் தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும் ஆனித் திருமஞ்சனம், ஆடிக்கிருத்திகை, ஆவணி மூலம், நவராத்திரி, பங்குனி உத்திரம், சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம் போன்ற விழாக்களும் நடைபெறுகின்றன.

    கோவில் திறந்திருக்கும் நேரம்: காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.

    எப்படி செல்வது:

    1) காஞ்சிபுரம் சென்னைக்கு அருகில் உள்ளதால், சென்னை மற்றும் தமிழக்த்தின் பல பகுதிகளில் இருந்து பேருந்து வசதி உள்ளது.

    2) காஞ்சிபுரத்திற்கு சென்னை, திருப்பதி, அரக்கோணம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் இருந்து பயணிகள் ரெயில் இயக்கப்படுகின்றன.

    3) அருகில் உள்ள விமான நிலையம் - சென்னை 56 கி.மீ தொலைவில்.

    • தனது பிறந்த நாளான வருகிற 13-ந்தேதி அன்று வெளியூரில் இருப்பதால் இவ்வாண்டு தனக்கு வாழ்த்து தெரிவிக்க நேரில் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
    • ஆதரவற்ற குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பள்ளிக் குழந்தைகள் மற்றும் ஏழை எளியோருக்கு தங்களால் இயன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    சென்னை:

    காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    எனது பிறந்த நாளான வருகிற 13-ந்தேதி அன்று நான் வெளியூரில் இருப்பதால் இவ்வாண்டு எனக்கு வாழ்த்து தெரிவிக்க நேரில் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    என் மீது அன்பு கொண்ட காங்கிரஸ் நிர்வாகிகள், தோழர்கள், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எனது பிறந்த நாளன்று தங்கள் பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பள்ளிக் குழந்தைகள் மற்றும் ஏழை எளியோருக்கு தங்களால் இயன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ஏழைகளுக்கு வங்கிக் கணக்கில் மாதம் தோறும் பணம் செலுத்தும் ராகுலின் திட்டம் புரட்சிகரமானது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #RahulGandhi #Congress #Thirunavukkarasar

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏழைகளை வாழவைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தை அறிவித்துள்ளார். இந்தியாவில் செலவுக்கு பணம் இல்லை என்று ஒருவர் கூட இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் அவர்களுக்கு வங்கிக் கணக்கில் மாதம் தோறும் பணம் செலுத்தும் புரட்சிகரமான திட்டத்தை அறிவித்துள்ளார்.

    இந்தத் திட்டத்தின்படி ஒவ்வொருவருக்கும் எவ்வளவு பணம் செலுத்தப்படும் என்பதை வெளியாக உள்ள காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்படும்.

    இது மோடி ஏமாற்றியதை போல் அல்ல, தீர ஆராய்ந்து செயல்படுத்தக்கூடிய அம்சங்களின் அடிப்படையில் ராகுல் காந்தி இந்தத் திட்டத்தை எடுத்துள்ளார். மோடி கோடீஸ்வரர்களுக்கு உதவும் எண்ணம் கொண்டவர். ஆனால் ராகுல் காந்தி ஏழைகளுக்கு உதவுபவர். இதுதான் பாஜனதாவுக்கும் காங்கிரசுக்கும் உள்ள வேறுபாடு.

    ராகுல் காந்தி பிரதமரானதும் இந்தத் திட்டம் தான் முதலில் செயல்படுத்தப்படும். நாடு முழுவதும் மோடி அலை ஓய்ந்துவிட்டது.

    ராகுல் அலை தங்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் கூட்டணிக்கான கதவை மோடி திறந்து வைத்துள்ளார். ஆனால் படி தாண்டி செல்ல யாரும் முன்வரவில்லை. நாட்டில் மட்டுமல்ல, தென் மாநிலங்களில் 132 தொகுதிகளில் பா.ஜனதாவுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்கப்போவதில்லை.

     


     

    தமிழக காங்கிரஸில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த விரைவில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்படும்.

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கொண்டு வருவதாக பா.ஜனதா கட்சி கூறுகிறது. ஆனால் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை உருவாக்கியது காங்கிரஸ் அரசு என்பதை பெருமையுடன் சொல்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மேலிட பொறுப்பாளர் சஞ்சய்தத் மாநில துணைத்தலைவர் தாமோதரன், பொதுச் செயலாளர்கள் சிரஞ்சீவி, செல்வம், கிளியனூர் ராஜேந்திரன், மாவட்ட தலைவர்கள் சிவ ராஜசேகர், வீரபாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    பின்னர் சஞ்சய்தத் முன்னிலையில் தமிழக மகளிர் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவி ஜான்சிராணி மற்றும் நிர்வாகிகள் மைதிலி தேவி, மீனாட்சி அன்பரசு, சுசிலா கோபாலகிருஷ்ணன், கோவை கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர். #RahulGandhi #Congress #Thirunavukkarasar

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து திருநாவுக்கரசரை மாற்ற வேண்டும் என கூறிய நடிகை குஷ்புவுக்கு காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. யசோதா கண்டனம் தெரிவித்துள்ளார். #Congress
    சென்னை:

    காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு அளித்த பேட்டியில், “தமிழக காங்கிரஸ் தலைவர் திரநாவுக்கரசர் செயல்பாடு திருப்தியாக இல்லை. 2 மாதத்தில் தலைவர் பதவியில் இருந்து மாற்றம் வரும். திருநாவுக்கரசர் நீக்கப்படுவார்” என்று கூறி இருந்தார்.

    இதற்கு மறைமலைநகரில் நடந்த காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்தார்.

    பொய்யான புகார்களை குஷ்பு தெரிவித்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்று திருநாவுக்கரசர் எச்சரிக்கை விடுத்துள்ளார். என்னை பதவயில் இருந்து நீக்குவேன் என்று கூறுகிறார். என்னை பதவி நீக்கம் செய்ய அவர் யார்? அதற்காக தைரியத்தை அவருக்கு யார் கொடுத்தது? என்று பேசினார்.



    இந்த நிலையில் காங்கிரசின் மூத்த தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான யசோதா கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சியில் செய்தி தொடர்பாளர் பதவி பெரிய பதவி கிடையாது. மாநில தலைவர்தான் பதவிதான் முக்கியமானது. அதன்பிறகு அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவிதான் முக்கியமானது. இந்த பதவியில் முகுல் வாஸ்னிக் உள்ளார்.

    காங்கிரஸ் கட்சியில் குறைபாடுகள் இருந்தால் இதை மாநில தலைவரிடம் சொல்லலாம். இல்லையென்றால் அகில இந்திய பொதுச்செயலாளரிடம் தெரிவிக்கலாம். அல்லது அகில இந்திய கட்சி தலைவர் ராகுல்காந்தியிடம் சந்தர்ப்பம் கிடைக்கும்போது எடுத்து கூறலாம். அதைவிட்டு விட்டு மீடியாவில் குறைகளை சொல்வது தவறு. இது கட்சியை பலவீனப்படுத்தும்.

    காங்கிரஸ் கட்சியைப் பற்றி எதிர்க்கட்சியினர் குறை கூறும்போது அதற்கு பதில் அளிக்க மீடியாவை பயன்படுத்தலாம். ஆனால் உள்கட்சி விவகாரத்தை மீடியாவில் சொல்வது மிகப்பெரிய தவறு.

    நான் காமராஜர் காலத்தில் இருந்து அரசியலில் இருக்கிறேன். எங்களால் எவ்வளவோ பேச முடியும். ஆனாலும் கட்சிக்கு கட்டுப்பட்டு நாங்கள் கட்சி இடும் கட்டளையை செயல்படுத்தி வருகிறேன்.

    சத்தியமூர்த்தி பவன்தான் எங்களுக்கு கோவில் மாதிரி. காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் இது தாயகம் போன்றது. ஆனால் சத்தியமூர்த்தி பவனை குறை கூறுவதை ஏற்க முடியாது.

    குஷ்புவுக்கு காங்கிரசின் பண்பாடு, காங்கிரசின் நடைமுறை எதுவும் தெரியவில்லை. 2 வருடத்துக்கு ஒருமுறை காங்கிரசில் தலைவர்கள் மாறுவது வழக்கம். வாழப்பாடி ராமமூர்த்தி உள்பட பல தலைவர்கள் 6 வருடம் வரை தலைவராக இருந்து இருக்கிறார்கள்.


    எனவே இப்போதைய தலைவரின் நடவடிக்கை பிடிக்கவில்லை என்றால் அமைதியாக இருக்க வேண்டும். உங்களுக்கு வேண்டிய தலைவர் வரும் போது பேசலாம். அதுவரை பொறுத்திருக்க வேண்டும்.

    திருநாவுக்கரசர் குரல் பலமாக இல்லையென்றாலும் அவரது செயல்பாட்டை குறைகூற இயலாது. தினமும் அவர் கட்சிக்காக ஒவ்வொரு ஊருக்கும் சென்று வருகிறார்.

    எதிர்க்கட்சிகாரர்களையும் நாகரீகமாக விமர்சிக்கின்றார். ஆனால் குஷ்பு தேவையில்லாமல் விமர்சிக்கிறார். குஷ்பு ஸ்டார் நடிகையாக இருப்பதால் தொண்டர்களுடன் பழகுவதில் சில சங்கடங்கள் இருக்கலாம். எங்களுக்கு அந்த சங்கடங்கள் கிடையாது.

    ஆனாலும் அநாகீகரிமாக குஷ்பு பேசக்கூடாது. தலைவருக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் காங்கிரசில் இருந்தபோது தலைவர்களை விமர்சிக்கமாட்டார். நாட்டிய பேரொளி பத்மினி, ஜெயசித்ரா ஆகியோர் காங்கிரசில் இருந்தாலும் அவர்கள் இப்படி தலைவர்களை விமர்சித்தது இல்லை. கட்சி கூட்டங்களில் பேச பணம் கேட்டது கிடையாது.

    ஆனால் குஷ்பு ஒரு கூட்டத்தில் பேச ரூ. 1 லட்சம் வரை பணம் வாங்குகிறார். பணம் கொடுக்காத கூட்டத்தில் பேசுவது இல்லை. இது கட்சியில் உள்ள அனைவருக்கும் தெரியும். அவரை பொறுத்தவரை பணம் தேவையில்லாத ஒன்று. நல்ல வசதியாகதான் உள்ளார்.

    எனவே அவர் காங்கிரசுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். கட்சியில் எதையும் எதிர்பார்க்காமல் கட்சிக்காக உழைத்தால் அவருக்கு மரியாதை அதிகரிக்கும்.

    இவ்வாறு யசோதா கூறினார். #Congress #Kushboo #Thirunavukkarasar #Yasodha
    நடிகர் ரஜினிகாந்த் நிச்சயமாக பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைக்க மாட்டார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #Rajinikanth #Thirunavukkarasar
    நாகர்கோவில்:

    குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் செயல்வீரர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது. கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், எச்.வசந்தகுமார், விஜயதரணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கலந்துகொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-

    ‘ஒக்கி‘ புயல் பாதிப்பு ஏற்பட்டபோது குமரி மாவட்டத்துக்கு முதலில் வந்து மக்களை சந்தித்து ஆறுதல் கூறியது ராகுல்காந்தி தான். அதன்பின்னரே பிரதமர் மோடி வந்தார். அகில இந்திய அளவில் மாநில கட்சிகள் பல உள்ளன. ஆனால், பா.ஜனதா கட்சியை விரட்டக்கூடிய அளவுக்கு சக்தி படைத்த ஒரே தேசிய கட்சி காங்கிரஸ் கட்சி தான். நாடாளுமன்ற தேர்தலில் 3-வது அணி என்பது ஒரு மாயை. அந்த அணி உருவாகவே இல்லை. மோடி ஆட்சி, பணக்காரர்களின் நலனுக்காக நடத்தப்படும் ஆட்சி. கிறிஸ்தவர்கள், தலித்கள் தாக்கப்படுகின்றனர்.


    மத சார்பற்ற அரசு என்று கூறிக்கொண்டு ஆட்சி நடத்தும் மத்திய பா.ஜனதா அரசு, இந்து வெறியை புகுத்தி மக்களை துண்டாடுகிறது. அவர்களை பிளவுபடுத்துகிறது. அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தி தான். மத்திய அரசு மாற்றப்பட வேண்டும். அதுபோல் தமிழ்நாட்டிலும் அரசு மாற்றப்பட வேண்டும். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அந்த நாளே தமிழக அரசு கோமா நிலைக்கு சென்றுவிட்டது.

    மோடியும், அமித்ஷாவும் தமிழ்நாட்டில் தலையாட்டி பொம்மை விளையாட்டு காட்டி வருகிறார்கள். முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோரை தலையாட்டி பொம்மை என நினைத்து தமிழகத்தை ஆட்டி படைக்கிறார்கள். ஜெயலலிதா எதிர்த்த திட்டங்களுக்கு எல்லாம் தற்போது தமிழக அரசு அனுமதி அளிக்கிறது. இதை பற்றி கேட்டால் மத்திய அரசுக்கு இணக்கமாக செயல்படுகிறோம் என பதில் கூறுகின்றனர். இது இணக்கமாக செயல்படுவதற்கு அல்ல. மத்திய அரசுடன் சேர்ந்து ஊழல் செய்வதற்கும், அரசை தக்கவைத்து கொள்வதற்கும் ஆகும்.

    அ.தி.மு.க.பிளவுபட்டு கிடக்கிறது. எனவே, தேர்தல் வந்தால் தான் யாருக்கு எத்தனை சதவீத வாக்குகள் கிடைக்கும் என்பது தெரியும். தமிழகத்தில் 2-வது பெரிய கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.


    முன்னதாக திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறுகையில் பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறார். அதனால் தான் மோடி, ராகுல்காந்தியை கடுமையாக விமர்சித்து வருகிறார். காவிரி பிரச்சினையில் கட்சி ரீதியாக பேசி முடிவு எடுக்க முடியாது. சுப்ரீம் கோர்ட்டு மூலமே தீர்வு காண முடியும். நடிகர் ரஜினிகாந்த்தை எனக்கு நன்றாக தெரியும். அவர் நிச்சயமாக பாரதிய ஜனதாவுடன் கூட்டணிக்கு செல்ல மாட்டார். கர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்றார்.  #Rajinikanth #Thirunavukkarasar
    ×