search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தள்ளுபடி"

    • பருத்தி சேலைகள் உள்ளிட்ட ரகங்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • நாகை விற்பனை நிலையத்திற்கு இந்த ஆண்டிற்கு ரூ. 50 லட்சம் இலக்கு நிர்ணயம்.

    நாகப்பட்டினம்:

    நாகையில் கைத்தறி கூட்டுறவு நிறுவனமான கோ - ஆப்டெக்ஸ்சில் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட வருவாய் அலுவலர் பேபி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த ஆண்டு தீபாவளி விற்பனைக்காக காஞ்சிபுரம் பட்டு சேலைகள், சேலம் பட்டு சேலைகள், காட்டன் சேலைகள், பருத்தி சேலைகள் உள்ளிட்ட ரகங்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

    நாகை விற்பனை நிலையத்திற்கு இந்த ஆண்டிற்கு ரூ. 50 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யபட்டுள்ளது. முதல் விற்பனையை மாவட்ட வருவாய் அலுவலர் வாடிக்கையாளருக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

    கோ -ஆப்டெக்ஸ் கடலூர் மண்டலத்தில் ரூ.13 கோடி இலக்கு நிர்ணயம் செய்யபட்டு உள்ளது எனவும், அரசு ஊழியர்களுக்கு தவணை முறை கடன் விற்பனை உள்ளதால் அனைத்து துறை ஊழியர்களும் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் வேண்டுகோள் விடுத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கோ -ஆப்டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளர் சாந்தாராம், நாகை விற்பனை நிலையம் மேலாளர் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கடன் தொகை நிலுவையில்லா சான்று தாட்கோ, மாவட்ட மேலாளர்களால் வழங்கப்படும்.
    • பயனாளிகள் அசல் தொகையினை செலுத்தினால் வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும்.

    திருப்பூர்:

    தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சி கழகம் மற்றும் தேசிய துப்புரவு தொழிலாளர் நிதி மற்றும் வளர்ச்சிக்கழகம் ஆகிய கடன் நிதி உதவி திட்டத்தின் கீழ் 1990-91 முதல் 2011-12 ஆண்டு வரை கடன் உதவி பெற்ற பயனாளிகள் அசல் தொகையினை செலுத்தினால் வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும்.

    தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சி கழகம் மற்றும் தேசிய துப்புரவு தொழிலாளர் நிதி மற்றும் வளர்ச்சி கழகம் ஆகிய திட்டங்களில் பெற்ற கடன் தொகையினை ஒரே முறையில் செலுத்தி நேர் செய்யும் திட்டத்தின் கீழ் அசல் தொகையினை செலுத்தும் பயனாளிகளுக்கு வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்து கடன் தொகை நிலுவையில்லா சான்று தாட்கோ, மாவட்ட மேலாளர்களால் வழங்கப்படும்.

    இத்திட்டம் 31.12.2023 வரை செயல்படுத்தப்படும் எனவும் மேலும் விபரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, அறை எண்:501 மற்றும் 503, 5 -வது தளம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், செல்போன் எண்: 94450 29552, தொலைபேசி எண்: 0421-2971112 மூலம் பெற்றுக்கொள்ளலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    • இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.2.60 கோடி விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    • 30 சதவீதம் அரசு தள்ளுபடியுடன் துணிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர்:

    தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 88 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்கி பேருதவி புரிந்து வருகிறது.

    கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது தமிழக அரசு வழங்கும் 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

    இந்த சிறப்புத் தள்ளுபடி விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், சேலம், ஆரணி, திருபுவனம் போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டுப்புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், கூறைநாடு புடவைகள்

    மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், லினன் புடவைகள் போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேஷ்டி, லுங்கி, துண்டு இரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், மிதியடிகள், நைட்டிஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி இரகங்கள் ஏராளமாகத் தருவிக்கப்பட்டுள்ளன.

    தஞ்சாவூர் வைரம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2023 சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையை இன்று காலை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், குத்துவிளக்கு ஏற்றி தொடக்கி வைத்து பார்வையிட்டார்.

    தஞ்சாவூர் வைரம் விற்பனை நிலையத்தில் கடந்த தீபாவளியில் ரூ.1.18 கோடி இலக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.2.60 கோடி விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், "கோ-ஆப்டெக்ஸ் மாதாந்திர சேமிப்பு திட்டம்" என்ற சேமிப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இதன்படி 11 மாத சந்தா தொகை வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்டு, 12 -வது மாத சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி, மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை 30 சதவீதம் அரசு தள்ளுபடியுடன் துணிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்விழாவில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் அம்சவேணி , மேலாளர் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி (கூடுதல் பொறுப்பு) அய்யப்பன், அரசு அலுவலர்கள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழா ஏற்பாடுகளை தஞ்சாவூர் வைரம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலார்கள் ஸ்ரீதர் , சுரேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

    • ஏப்ரல் 30-ந் தேதிக்குள் செலுத்துபவர்களுக்கு வரி தள்ளுபடி செய்யப்படும்.
    • இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டுமாறு தெரிவித்துள்ளார்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் நகராட்சி ஆணையாளர் ஆர்.மோகன்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- வெள்ளகோவில் நகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களது 2023- 2024ம் நிதியாண்டிற்கான, சொத்து வரியை இந்த மாதம் ஏப்ரல் 30-ந் தேதிக்குள் செலுத்துபவர்களுக்கு 5 சதவீத வரி தள்ளுபடி செய்யப்படும், எனவே இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டுமாறு தெரிவித்துள்ளார்.

    • எம்.சி.எஸ் திட்டத்தை கைவிட வேண்டும்.
    • தள்ளுபடி தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாவட்ட தலைவர் சத்தியசீலன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயலாளர் பரதன் முன்னிலை வகித்தனர். பொருளாளர் தாமரைச்செல்வன் வரவேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில சங்கத்தின் கடலூர் மாவட்ட செயலாளர் பாண்டியன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கண்டன உரையாற்றினார்.

    அப்போது எம்.சி.எஸ் திட்டத்தை கைவிட வேண்டும், தள்ளுபடி தொகையினை வட்டியுடன் வழங்கிட வேண்டும், நகை கடன் ஏலத்தில் நஷ்டம் என்று கூறி பணியாளர்களை பழி வாங்குவதை கைவிட வேண்டும், ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    இதில் துணைத் தலைவர்கள் கிருஷ்ணகுமார், கோபிநாதன், இணை செயலாளர்கள் அரபுபுனிசாபேகம், கோபிநாத் உள்ளிட்ட ஏராளமானர்கள் கலந்து கொண்டனர்.

    • தவணை தவறிய கடன் தொகைக்கான வட்டி-அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படுகிற.
    • சலுகை காலம் 3.3.2023-ல் இருந்து 6 மாதங்களுக்கு அதாவது 2.9.2023 வரை மட்டும் அமலில் இருக்கும்.

    மதுரை

    மதுரை மண்டல துணை பதிவாளர் (வீட்டுவசதி) வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:

    மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அனைத்து வகை கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில் கடன் பெற்று தவணை செலுத்த தவறிய கடன்தாரர்கள் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ஒரு முறை கடன் தீர்வு திட்டத்தின் கீழ், செலுத்த வேண்டிய அசல் மற்றும் வட்டி முழுவதும் செலுத்தும்பட்சத்தில் அவர்கள் செலுத்த வேண்டிய தவணை தவறிய வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும். அதற்கான சலுகை காலம் 3.3.2023-ல் இருந்து 6 மாதங்களுக்கு அதாவது 2.9.2023 வரை மட்டும் அமலில் இருக்கும்.

    அதன் பிறகு இத்திட்டம் செயல்பாட்டில் இருக்காது என அரசு அறிவித்துள்ளது. எனவே தவணை தவறிய அனைத்து உறுப்பினர்களும் இச்சலுகையை தவறாமல் பயன்படுத்தி அசல் மற்றும் வட்டியினை மட்டும் செலுத்தி பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறது.

    மேலும், இச்சலுகை தொடர்பாக விவரங்களுக்கு தொடர்புடைய கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களை நேரில் அணுகவும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட உத்திரவாதம் செய்ய வேண்டும்.
    • சிறு, குறு, நடுத்தர விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

    நாகப்பட்டினம் :

    நாகப்பட்டினத்தில் மத்திய அரசின் விவசாயிகள் விரோத கொள்கைகளை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பாக 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிராக்டர் பேரணி நடைபெற்றது.

    மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரபோஜி தலைமையேற்று பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். புத்தூரில் தெய பேரணியில் பல்வேறு விவசாய சங்கங்கள் பங்கேற்றனர்.

    10-க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் உடன் விவசாயிகள் பேரணியாக அவுரிதிடலில் சென்றனர். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட உத்திரவாதம் செய்ய வேண்டும், சிறு, குறு, நடுத்தர விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், பயிர் காப்பீடு திட்டத்தில் தனியார் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களை வெளியேற்றி விவசாயிகள் பயன்படும் வகையில் மாற்றி அமைத்திட வேண்டும், என்பன உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

    பேரணி அவுரி திடலில் முடிவடைந்தது. அங்கு பொறுப்பாளர்கள் கண்டன உரையாற்றினர்.

    • பிரின்ஸ் எம்.எல்.ஏ.வலியுறுத்தல்
    • மத்திய அரசு கல்வி கடன் வழங்குவதில் கடும் நிபந்தனைகள், கெடுபிடிகள் விதித்து உள்ளது

    கன்னியாகுமரி:

    பிரின்ஸ் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :-

    ஏழை, நடுத்தர மாணவர்கள் பிளஸ் 2 வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்றிருந்தாலும், தொடர்ந்து உயர் கல்வி பயின்றிட பொருளாதார வசதியின்மையால் உயர் கல்வியை துறந்து விடு கின்றனர். இதனால் அம்மாணவர்களின் உயர் கல்வி லட்சியம், தனித்திறமை, ஆற்றல் ஆகியவற்றை சமுதாயத்திற்கு பயன்படுத்த முடியாமல் போய் விடுகிறது.

    ஏழை பெற்றோர்கள் ஏழையாகவே இருந்து விடுகின்றனர்.இதனை போக்கும் வகையில் கடந்த காங். ஆட்சியில் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது.ஏழை மாணவர்கள் படித்து முடித்து நல்ல வேலையில் சேர்ந்த பிறகு வங்கி கல்வி கடனை அடைத்து பயன் பெற்றனர்.

    காங். ஆட்சியில் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்க நிபந்தனைகள் எதுவும் விதிக்கப்பட வில்லை. தற்போது மத்திய அரசு இந்த கல்வி கடன் வழங்குவதில் கடும் நிபந்தனைகள், கெடுபிடிகள் விதித்து உள்ளன. இதனால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.நீட் தேர்வில் வெற்றிப்பெற்ற மாணவர்கள் கூட நிதியுதவி இன்றி மருத்துவ கனவை சிதைத்து உள்ளனர்.சில மாணவர்கள் தற்கொலை செய்துள்ள னர். வழங்கப்பட்ட கட னையும் வசூலிக்க மத்திய அரசு தனியாரிடம் ஒப்ப டைத்துள்ளது. இது அபத்தமானது. கடன் வசூலிக்கும் தனியார் நிறுவனம் மாணவர்களின் பெற்றோர்களிடம் கடுமையாக நடந்து கொள்கிறது.

    ஏழை மாணவர்களும் உயர் கல்வி பயின்றிட மத்திய அரசு கல்வி கடன் வழங்குவதில் நிபந்தனைகளை தளர்த்த வேண்டும். பாரபட்சமின்றி கடன் வழங்க வேண்டும்.கடந்த சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களின் கல்வி கடனை தள்ளுபடி செய்வோம் என கூறியி ருந்தார்.

    மத்திய அரசு தள்ளுபடி செய்யாவிட்டால், மாநில அரசு கல்வி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.ஏழை மாணவர்களுக்கு கல்வி கடன் கிடைக்க பாதிக்கப்பட்ட மாணவர் களை திரட்டி காங். பெரும் போராட்டங்களை நடத்தும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அரசு கடன் தள்ளுபடி, நிவாரணம் போன்ற உதவிகளால் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
    • குத்தகை தொகையை கேட்டு பெறாமல் திடீரென ஏலம் அறிவித்திருப்பது குத்தகை உரிமை சட்டடத்திற்கு எதிரானது.

    நாகப்பட்டினம்:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான குத்தகை நிலங்களை அப்பகுதி விவசாயிகள் பரம்பரையாக சாகுபடி செய்து வருகின்றனர்.

    பல்வேறு இயற்கை இடர்பாடுகளால் சாகுபடி செய்த பயிர் பாதித்து உரிய குத்தகை செலுத்த முடியாத சூழலில் அரசு கடன் தள்ளுபடி, நிவாரணம் போன்ற உதவிகளால் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில்,விவசாயிகள் கோவில் நிர்வாகத்திடம் குத்தகை செலுத்தி வரும் நிலையில் திடீரென அறநிலையத்துறை அதிகாரிகள் நவம்பர் 18-ம் தேதி ஏலம் விடப்படுவதாக பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

    இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், நாகை நாடாளு மன்ற உறுப்பினர் செல்வராசு,
    திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர், மற்றும் தமிழ்நாடு கோவில்மனை குடியிருப்போர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்டோர் நாகை இந்து சமய அற நிலையத்துறை இணை ஆணையரை சந்தித்து நேரில் நிலத்தை ஏலம் விடும் முடிவை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைள் அடங்கிய மனு அளித்தனர்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாகை எம்.பி. செல்வராசு கூறுகையில்; குத்தகையை முடிந்த அளவுக்கு கட்டுவதற்கு விவசாயிகள் தயாராக உள்ள நிலையில், தற்சமயம் சாகுபடி செய்து வரும் நிலத்தை குத்தகை தொகையை கேட்டு பெறாமல் திடீரென ஏலம் அறிவித்திருப்பது குத்தகை உரிமை சட்டடத்திற்கு எதிரானது என்று கூறினார்.

    எனவே, தமிழக அரசு தலையிட்டு ஏலத்தை தடுத்து நிறுத்தி உரிய குத்தகை பெறுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என நாகை எம்.பி. செல்வராசு கோரிக்கை வைத்துள்ளார்.

    • பொது மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே நமது மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக மாற்ற முடியும்.
    • அமைச்சர் மனோதங்கராஜ் பேச்சு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கூட்டுற வுத்துறையின் சார்பில், 69-வது கூட்டுறவு வார விழா மார்த்தாண்டத்தில் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் தலை மையில் பிரின்ஸ் எம்.எல்.ஏ., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள், சிறந்த கூட்டுறவு சங்கங்க ளுக்கு கேடயங்கள் மற்றும் பயனானிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:-

    கன்னியாகுமரி மண்ட லத்தில் 202 கூட்டுறவு சங் கங்களின் வாயிலாகபொது மக்களுக்கு தேவையான கடனுதவிகள் உட்பட பல் வேறு சேவைகள் வழங்கப் பட்டு வருகிறது. மேலும், விவசாயிகளுக்கு தேவை யான பயிர்கடன்கள் விதை, உரங்கள். இடு பொருட்கள் வினியோகம் செய்வதுடன் குறுகியகால மற்றும் மத்தியகால வேளாண் கடன்கள் வழங்கி உணவு உற்பத்தியையும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக் கும் கூட்டுறவு சங்கங்கள் கிராமங்கள்தோறும் தங்க ளது பங்களிப்பை சிறப்பாக செய்து வருகிறது.

    கடந்த ஆண்டுகளில் நமது மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் குப்பைகள் தேங்கியிருந்த நிலை யில் தற்போது அந்த குப்பைகளை படிப்படியாக அகற்றிவருவதோடு, பிளாஸ்டிக் இல்லா மாவட்ட மாக மாற்றுவ தற்கு பல்வேறு முன்னெ டுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு பொது மக்களாகிய நீங்கள் அனைவரும் முழு ஒத்து ழைப்பு வழங்கி னால் மட்டுமே நமது மாவட் டத்தை பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக மாற்ற முடி யும்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்துள்ளப்படி ஆட்சிப்பொறுப் பேற்ற சில மாதங்களிலே தமிழ்நாட்டிற்குட்பட்ட அனைத்து கூட்டுறவுத் துறையின் கீழ் 5 சவரனுக்கு (40 கிராமிற்குட்பட்ட) உட்பட்ட நகைக்கடன் வைத்திருந்த நகைக்கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் குமரி மாவட்டத்திற்குட் பட்ட 24,321 நபர்களுக்கு ரூ.105 கோடி மதிப்பிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான தமிழக அரசுக்கு முழு ஒத்து ழைப்பு வழங்குமாறு கேட்டு கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக, அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை யில் 9-வது கூட்டுறவு வார விழா உறுதிமொழியினை பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், பிரின்ஸ் எம.எல்.ஏ., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கூட்டுறவுத்துறை அலுவலர்கள், பணியாளர் கள், பொதுமக்கள் உள்ளிட் டோர் ஏற்று கொண்டனர்.

    கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவா ளர் சந்திரசேகரன், மத்திய கூட்டுறவு வங்கி (நாகர்கோ வில் கிளை) மேலாண்மை இயக்குநர் குருசாமி, மத்திய கூட்டுறவு வங்கி (தக்கலை சரகம்) துணைப்பதிவாளர் நரசிம்மன், மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் நாகராஜன், கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் முருகே சன், துணைப்பதிவாளர்கள் செந்தில் ஆறுமுகம், குருசாமி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலை வர்கள் பூதலிங்கம் உட்பட பலர்கலந்து கொண்டனர்.

    • பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுகிறது
    • இந்தியாவின் ‘நம்பர்-1 டீலரான ‘வசந்த் அன் கோ’ நிறுவனம் விரைவில் தனது 107-வது கிளையை திறக்க உள்ளது.

    நாகர்கோவில்:

    இந்தியாவின் 'நம்பர்-1 டீலரான 'வசந்த் அன் கோ' நிறுவனம் விரைவில் தனது 107-வது கிளையை திறக்க உள்ளது. இந்த நிலையில் 'வசந்த் அன் கோ' தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்ப னையை தொடங்கியுள்ளது.

    இந்த விற்பனையில். அனைத்து முன்னணி வீட்டு உபயோக பொருட்களும் மிக குறைந்த விலையில், எளிய தவணை முறை வசதி யுடன் கிடைக்கும். ரூ.5 ஆயிரத்துக்கு மேல் பொருட்கள் வாங்குபவர்க ளுக்கு பரிசு போட்டி மூலம் 100 வாடிக்கையாளர்களுக்கு தலா 1 பவுன் வீதம் 100 பவுன் தங்கம் வெல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

    32 'இன்ச்' எல்.இ.டிடிவி.. 'பிரிட்ஜ்', 'வாஷிங் மெஷின்' ஆகிய ரூ.49 ஆயிரத்து 140 மதிப்புள்ள 3 பொருட்கள் தள்ளுபடி விலையில் ரூ.29 ஆயிரத்து 990-க்கு கிடைக் கும். 32 'இன்ச்' எச்.டி. 'ஸ்மார்ட்' டி.வி. உடன் 32 ''இன்ச்' எச்.டி. எல்.இ.டி டி வி.யை ரூ.10 ஆயிரத்து 990 க்கு வாங்கலாம். 32 'இன்ச்' எல்.இ.டி. டி.வி. சிறப்பு விலையாக ரூ.8 ஆயிரத்து

    990-க்கு கிடைக்கும். இதனை மாத தவணையாக ரூ.749 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

    1.5 டன் 4 ஸ்டார் 'ஸ்பிலிட்' 'ஏ.சி.' சிறப்பு விலையாக ரூ.35 ஆயிரத்து 990-க்கு வாங்கலாம். மாத தவணை யாகரூ.3.ஆயிரத்து 83 செலுத் தியும் பெறலாம். 7 கிலோ 'பிரண்ட் லோடு' 'வாஷிங் மெஷின்' சிறப்பு விலையாக ரூ.32 ஆயிரத்து 990-க்கு பெறலாம். 'பிரஷர் 'குக்கர்' மற்றும் 'அயர்ன் 'பாக்ஸ்' ரூ.1,111 மட்டும் கொடுத்து வாங்கலாம். கிரைண்டர், மிக்சி, மின்விசிறி, கியாஸ் அடுப்பு போன்றவைகளும் எளிய தவணை முறை வசதியுடன் தள்ளுபடி விலையில் வாங்கலாம். ரூ.15 ஆயிரத்துக்கும் மேல் 'ஸ்மார்ட் போன்' வாங்கு பவர்களுக்கு 'புளுடூத் ஹெட் செட்', 'பவர் பேங்', 'ஹெட் போன்' போன்றவற்றில் ஏதாவது ஒன்று இலவசமாக வழங்கப்படும்.

    பழைய செல்போன் எந்த நிலையில் இருந்தாலும் ரூ.750-ல் இருந்து 'எக்சேஞ்ச்' செய்துகொள்ளலாம். ரூ.55 செலுத்தி 55 'இன்ச்' எல்.இ.டி. டி.வி., ரூ.65 செலுத்தி 65 'இன்ச்' எல்.இ.டி. டி.வி., ரூ.75 செலுத்தி 75 'இன்ச்' எல்.இ.டி. டி.வி., ரூ.85 செலுத்தி 85 'இன்ச்' எல்.இ.டி.டி.வி.களை தவணை முறையில் வாங்க லாம். ரூ.20 ஆயிரத்துக்கு மேல் 'பர்னிச்சர்' வாங்கி னால் உடனடி தள்ளுபடி யாக ரூ.2 ஆயிரம் கிடைக் கும். 'கிரெடிட்', 'டெபிட்' கார்டுகளுக்கு 'கேஷ் பேக்' மற்றும் தள்ளுபடி உள்ளிட்ட சலுகை வழங்கப்படும்.

    முன்பணம் இல்லாமல் குறிப்பிட்ட ஏ.சி., எல்.இ.டி. 'டி.வி., 'பிரிட்ஜ்', 'வாஷிங் 'மெஷின்', 'வாட்டர் பியூரி பையர்', 'மைக்ரோவேவ் 'ஓவன்', செல்போன், 'டிஸ் வாஷர்', 'ஏர் பியூரிபையர்', 'ஏர் கூலர், 'ஹோம் தியேட்டர்' எடுத்துச்செல்லலாம். வட்டி இல்லாமல் ஏராளமான தவணைமுறை வசதிகள், 36 மாதம் வரை வட்டியில்லா தவணை முறை வசதி ஆகியவையும் வழங்கப்படும்.

    எங்களின் 45 ஆண்டு கால அனுபவம் மற்றும் நற்பெயர் காரணமாக கொள்முதலில் எங்களுக்கு கிடைக்கும் சலுகைகள் அனைத்தையும் நாங்களே தக்க வைத்துக்கொள்ளாமல் அவற்றின் பெரும் பகுதியை வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதை வழக்க மாக கொண்டுள்ளோம். இதன் காரணமாகவே எங்களிடம் எப்போதும் மிக குறைந்த விலை சாத்தியமாக உள்ளது.

    மேற்கண்ட தகவல் 'வசந்த் அன் கோ' நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • நகைக்கடன் தள்ளுபடி செய்தது ஆனால் விவசாயிகளுக்கு வழங்க வில்லை.
    • 50-க்கும் மேற்பட்ட பயனாளிகள் மற்றும் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே குருவிக்கரம்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், 39 பயனாளிகளுக்கு, தமிழக அரசால் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

    ஆனால், பயனாளிகளுக்கு இதுவரை நகை திருப்பி வழங்கப்படவில்லை.

    இதையடுத்து, நகைகளை திருப்பித் தர வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தலைமையில், பயனாளிகள் பல கட்டங்களாக போராட்டம் நடத்தினர்.

    இதையடுத்து வட்டா ட்சியர் த.சுகுமார் தலை மையில் செப்.22 ல், நடைபெற்ற சமாதானப் பேச்சு வார்த்தையில், செப். 28 ஆம் தேதிக்குள், நகை பயனாளிகளுக்கு திருப்பி வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

    இந்நிலையில் உறுதியளித்தபடி 28ம் தேதி பயனாளிகளுக்கு நகை திருப்பி வழங்கப்படாததைக் கண்டித்து, நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு குருவிக்கரம்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் முன்பு 50க்கும் மேற்பட்ட பயனாளிகள் மற்றும் விவசாயிகள், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆர்.எஸ்.வேலுச்சாமி, வீ.கருப்பையா, கோ.ராமசாமி தலைமையில் தொடர் காத்திருப்பு போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்துகூட்டுற வுத்துறை துணைப் பதிவாளர் சுகி.சுவாமிநாதன், பேராவூரணி காவல் ஆய்வாளர் செல்வி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், காலை 12 மணி முதல் மாலை 3 மணி வரை இரண்டு கட்டமாக சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    சமாதானப் பேச்சு வார்த்தையில், விவசாயிகள் சங்க பொறுப்பாளர்கள் ஆர்.சி.பழனிவேலு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆர்.எஸ்.வேலுச்சாமி, வீ.கருப்பையா, உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    அரசுத் தரப்பில், கூட்டுறவு சார்பதிவாளர் மற்றும் கள அலுவலர் சின்னப்பொண்ணு, கள அலுவலர் ராமகிருஷ்ணன் பங்கேற்றனர்.

    இதையடுத்து கூட்டுறவு துணை பதிவாளர் சுகி.சுவாமிநாதன், இரண்டு நாளில் நகைகள் திருப்பித் தரப்படும்" என உறுதி அளித்தார்.

    இதனை ஏற்று போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

    ×