search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்வி கடன்"

    • வருகிற 11-ந் தேதி நடக்கிறது
    • கலெக்டர் முருகேஷ் தகவல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வருகிற 11-ந் தேதி கருணாநிதி அரசு கலைகல்லூரியில் கல்வி கடன் மேளா நடைபெற உள்ளதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடந்தது.

    அப்போது கூட்டத்தில் அவர் தெரிவித்தாவது:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, வேளாண்மைக் கல்லூரி என 31 கல்லூரிகள் உள்ளது. மாவட்டத்தில் உள்ள ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் கல்லூரியில் படிப்பு தொடர வேண்டுமென என்னிடம் கல்விகடன் நிதியுதவி கேட்டு வருகின்றனர்.

    மாவட்ட ஆட்சியருக்கு அரசு வருடத்திற்கு ரூ.10 இலட்சம் நிதி ஓடுக்கீடு செய்கிறது.

    அதன் அடிப்படையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறேன். கிராமப்பகுதிகளில் உள்ள ஏழை, எளிய மாணவர்கள் கல்லூரியில் சேர பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

    இந்த இன்னல்களை போக்கிடும் விதமாக கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு உதவிடும் வகையில் கல்விகடன் மேளா வருகின்ற 11-ந் தேதி கலைஞர் கருணாநிதி அரசு கலைகல்லூரியில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற உள்ளது.

    இந்த முகாம் காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.

    மேலும் மாணவர்களுக்கு https://www.vidyalakshmi.co.in என்ற இணைதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதற்கான மாணவ, மாணவியர்களுக்கு தனி தனியே பதிவு செய்யும் மையம் அமைக்க உள்ளன. இந்த கல்விகடன் மேளாவில் பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி. இந்தியன் ஓவர்சீயஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, என 12 வங்கிகள் கலந்து கொள்ள உள்ளன.

    இவ்வாறு அவர் பேசினர்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி). ரிஷப், , திட்ட இயக்குநர், மகளிர் திட்டம். ஸையித்சூலைமான், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ச.கௌரி, மற்றும் உயர் அலுவலர்கள், கல்லூரி சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கல்வி கடன்களை தாமதமின்றி உடனே வழங்க வேண்டும் என்று கலெக்டர் கூறினார்.
    • வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில், அனைத்து வங்கியாளர்கள் உடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் தாட்கோ, மாவட்ட தொழில்மையம், மகளிர் திட்டம் ஆகிய துறை கள் மூலம் பெறப்பட்ட கடன் விண்ணப்பங்களை முறையாக பரிசீலனை செய்து காலதாமதமின்றி கடன் வழங்க வேண்டும் என்றும், கல்விக்கடன் விண்ணப்பங்களை நிராகரிக்காமல் எந்த வித தாமதமின்றி பரிசீலனை செய்து கடன்களை வழங்கிட வேண்டும் எனவும் கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இதில் மாவட்ட தாட்கோ அலுவலகம் மூலம் 7 பயனா ளிகளுக்கு பால் பண்ணை தொழில் புரிவதற்கும், 4 பய னாளிகளுக்கு வெள்ளாடு கள் வாங்குவதற்கும், 7 பய னாளிகளுக்கு டிராக்டர் வாங்குவதற்கும் என மொத்தம் 18 பயனாளி களுக்கு ரூ.21.8 லட்சம் மதிப்பில் சுய தொழில் புரி வதற்கான மானிய தொகைக்கான ஆணை களை கலெக்டர் வழங்கி னார்.

    கூட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாண்டிசெல்வன் மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • திருவையாறில் நடந்த சாலை விபத்தில் அரவிந்த் எதிர்பாராத விதமாக இறந்தார்.
    • கல்வி கடன் வசூல் செய்ய இறந்த மாணவனுக்கு நேட்டிஸ் அனுப்பியது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அரியலூர்:

    அரியலூர் அருகே திருமானூர் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் விவசாயி. இவரது மகன் அரவிந்த். இவர் பிளஸ்2 தேர்ச்சி பெற்ற பின்பு கரூரிலுள்ள தனியார் கல்லூரியில் என்ஜீனியரிங் படிப்பில் சேர்ந்தார்.

    அப்போது பன்னீர்செல்வம் மகனை தொடர்ந்து படிக்க வைக்க திருமழப்பாடியில் உள்ள வங்கியில் 2013-ம் ஆண்டு ரூ.2 லட்சம் கல்வி கடன் பெற்றுள்ளார். பின்னர் படிப்பை முடித்த அரவிந்தனுக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து அவர் தந்தைக்கு உதவியாக விவசாயம் பார்த்துவந்தார்.

    இதற்கிடையே 2022ம் ஆண்டு திருவையாறில் நடந்த சாலை விபத்தில் அரவிந்த் எதிர்பாராத விதமாக இறந்தார்.

    இருப்பினும் வங்கி நிர்வாகம் கல்வி கடன்களை வசூலிக்க தீவிரம் காட்டியது. இதையடுத்து பன்னீர்செல்வம் வங்கிக்கு சென்று கல்வி கடன் செலுத்த வசதி இல்லை, எனது மகனும் இறந்து விட்டான், கல்வி கடனை ரத்து செய்யவேண்டும் என கோரி மகனின் இறப்பு சான்றிதழ் இணைத்து எழுத்து பூர்வமாக மனு கொடுத்துள்ளார். இந்த மனுவை முதலமைச்சருக்கும், அரசுதுறை அதிகாரிகளுக்கும், வங்கி உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ளார்.

    இந்நிலையில் அரியலூரில் உள்ள சப்-கோர்ட்டில் திருமழப்பாடியில் உள்ள வங்கி நிர்வாகம் இறந்த அரவிந்த் அவரது தந்தை பன்னீர்செல்வம் மீது கல்விகடன் வசூல் செய்ய வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது அசல் வட்டி எனக்கணக்கிட்டு ரூ.5லட்சம் கேட்டு சாலை விபத்தில் இறந்த அரவிந்தன் மற்றும் அவரது தந்தைக்கு கோர்ட்டிலிருந்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    கல்வி கடன் வசூல் செய்ய இறந்த மாணவனுக்கு நோட்டீஸ் அனுப்பியது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கல்விக் கடன் பெற விரும்பும் மாணவா்கள் இணையதளத்தில் விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
    • மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் பங்கேற்று உடனடியாக கல்விக் கடன் வழங்க மாவட்ட முன்னோடி வங்கி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர் : 

    திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு கல்விக்கடன் முகாம் வருகிற 14, 15-ந் தேதிகளில் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் மாவட்டத்தை சோ்ந்த மாணவ, மாணவிகள் கல்விக் கடனுக்காக விண்ணப்பிக்க சிறப்பு கல்விக் கடன் முகாம் வருகிற 14, 15-ந் தேதிகளில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காலை 10மணி முதல் மாலை 5 மணி வரையில் நடைபெறுகிறது.

    இந்த முகாமில் கடன் அனுமதிக் கடிதம் பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கல்விக் கடன் பெற விரும்பும் மாணவா்கள் இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    அதன் பின்னா் முகாம் நடைபெறும் நாளில் விண்ணப்பத்தின் நகல் மற்றும் ஆவணங்களுடன் பங்கேற்கலாம். மேலும் விண்ணப்பத்தின் நகல், மாணவா்கள் மற்றும் பெற்றோா்களின் இரு புதிய புகைப்படம், வங்கிக் கணக்கு புத்தகம், ஆண்டு வருமானச் சான்று, ஜாதிச் சான்று, பான் அட்டை, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றின் நகல்களையும், கல்விக் கட்டண விவரம், 10-ம்வகுப்பு, பிளஸ் 2 சான்றிதழ்கள், இளநிலை பட்டப் படிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள், கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட சோ்க்கைக்கான ஆணை உள்ளிட்ட ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.

    இந்த முகாமில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் பங்கேற்று உடனடியாக கல்விக் கடன் வழங்க மாவட்ட முன்னோடி வங்கி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே, திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அலுவலகத்தை 0421-2971185 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பிரின்ஸ் எம்.எல்.ஏ.வலியுறுத்தல்
    • மத்திய அரசு கல்வி கடன் வழங்குவதில் கடும் நிபந்தனைகள், கெடுபிடிகள் விதித்து உள்ளது

    கன்னியாகுமரி:

    பிரின்ஸ் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :-

    ஏழை, நடுத்தர மாணவர்கள் பிளஸ் 2 வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்றிருந்தாலும், தொடர்ந்து உயர் கல்வி பயின்றிட பொருளாதார வசதியின்மையால் உயர் கல்வியை துறந்து விடு கின்றனர். இதனால் அம்மாணவர்களின் உயர் கல்வி லட்சியம், தனித்திறமை, ஆற்றல் ஆகியவற்றை சமுதாயத்திற்கு பயன்படுத்த முடியாமல் போய் விடுகிறது.

    ஏழை பெற்றோர்கள் ஏழையாகவே இருந்து விடுகின்றனர்.இதனை போக்கும் வகையில் கடந்த காங். ஆட்சியில் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது.ஏழை மாணவர்கள் படித்து முடித்து நல்ல வேலையில் சேர்ந்த பிறகு வங்கி கல்வி கடனை அடைத்து பயன் பெற்றனர்.

    காங். ஆட்சியில் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்க நிபந்தனைகள் எதுவும் விதிக்கப்பட வில்லை. தற்போது மத்திய அரசு இந்த கல்வி கடன் வழங்குவதில் கடும் நிபந்தனைகள், கெடுபிடிகள் விதித்து உள்ளன. இதனால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.நீட் தேர்வில் வெற்றிப்பெற்ற மாணவர்கள் கூட நிதியுதவி இன்றி மருத்துவ கனவை சிதைத்து உள்ளனர்.சில மாணவர்கள் தற்கொலை செய்துள்ள னர். வழங்கப்பட்ட கட னையும் வசூலிக்க மத்திய அரசு தனியாரிடம் ஒப்ப டைத்துள்ளது. இது அபத்தமானது. கடன் வசூலிக்கும் தனியார் நிறுவனம் மாணவர்களின் பெற்றோர்களிடம் கடுமையாக நடந்து கொள்கிறது.

    ஏழை மாணவர்களும் உயர் கல்வி பயின்றிட மத்திய அரசு கல்வி கடன் வழங்குவதில் நிபந்தனைகளை தளர்த்த வேண்டும். பாரபட்சமின்றி கடன் வழங்க வேண்டும்.கடந்த சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களின் கல்வி கடனை தள்ளுபடி செய்வோம் என கூறியி ருந்தார்.

    மத்திய அரசு தள்ளுபடி செய்யாவிட்டால், மாநில அரசு கல்வி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.ஏழை மாணவர்களுக்கு கல்வி கடன் கிடைக்க பாதிக்கப்பட்ட மாணவர் களை திரட்டி காங். பெரும் போராட்டங்களை நடத்தும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பலவேறு கோரிக்கைகள் அடங்கிய 340 மனுக்கள் பெறப்பட்டது.
    • மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்க–ப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் நடைபெற்ற மக்கள் குறை தீரக்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி பேசியதாவது:-

    மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பலவேறு கோரிக்கைகள் அடங்கிய 340 மனுக்கள் பெறப்பட்டது.

    இந்த மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்க–ப்பட்டுள்ளது.

    மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ள–ப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் கருணை அடிப்படையில் சமையலராக ஒரு பயனாளிக்கு பணி நியமன ஆணையினையும், தமிழ் வளர்ச்சி துறை சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளினை முன்னிட்டு மாவட்ட அளவில் நடைபெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா (வருவாய்), ஸ்ரீகாந்த் (வளர்ச்சி), தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப் திட்டம்) தவவளவன், நேர்முக உதவியாளர் சத்துணவு அன்பரசு மற்று அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • 293 மாணவ மாணவிகளுக்கு 44 கோடி ரூபாய் மதிப்பிலான கல்விக் கடன்களை அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார்.
    • தமிழகத்தில் குறிப்பாக மாணவ மாணவிகளுக்கு அதிக கல்விக் கடன் வழங்கிய மாவட்டம் கோவை மாவட்டமாக இருக்க வேண்டும் என சிறப்பான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

    கோவை:

    கோவை கொடிசியா தொழிற்கூட வளாகத்தில் முன்னோடி வங்கிகள் மூலம் மாணவ மாணவிகளுக்கு கல்வி கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் 293 மாணவ மாணவிகளுக்கு 44 கோடி ரூபாய் மதிப்பிலான கல்விக் கடன்களை அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார். இதில் கோவை எம்.பி., பி.ஆர். நடராஜன், கலெக்டர் சமீரன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக் மற்றும் வங்கி அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை மாவட்டத்தில் கல்விக்கடன் விண்ணப்பித்த அனைவருக்கும் கல்வி கடன் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அதன்படி இன்று கோவை மாவட்டத்தில் 293 மாணவ மாணவிகளுக்கு 44 கோடி ரூபாயில் கல்விக் கடன்கள் வழங்கப்படுகிறது.

    இந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் 350 கோடி ரூபாய் அளவிற்கு கல்விக்கடன் வழங்க இலக்கு செய்துள்ளது. வரும் 30 நாட்களில் 100 கோடி ரூபாய் முதற்கட்டமாக கல்விக்கடன் வழங்க உள்ளது.

    எனவே கோவை மாவட்டத்தை பொறுத்தவரை தமிழகத்தில் குறிப்பாக மாணவ மாணவிகளுக்கு அதிக கல்விக் கடன் வழங்கிய மாவட்டம் கோவை மாவட்டமாக இருக்க வேண்டும் என சிறப்பான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

    வங்கி மேலாளர்கள் சிபில் ஸ்கோர் பிரச்சனையால் கல்விக் கடன்களை வழங்காமல் இருக்கக்கூடாது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் முன்னோடி வங்கிகள் விண்ணப்பிக்க கூடிய மாணவ, மாணவர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கல்விக் கடன் அக்கறைகொண்டு விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்க வேண்டும்.

    மாணவச் செல்வங்களுக்கு கல்விக் கடன் கேட்டு தனிப்பட்ட முறையில் வங்கிகளை அணுகும் போது சிரமங்கள் ஏற்பட்டால் கல்வி நிறுவனங்கள் மூலமாக நீங்கள் அணுகலாம் இல்லை என்றால் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான கல்விக்கடனை பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து கடந்த ஓராண்டாக ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடைபெறவில்லை என வானதி சீனிவாசன் மத்திய அமைச்சரிடம் மனு அளித்துள்ள கேள்விக்கு அவர் பதில் அளித்து பேசியதாவது:-

    மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவியேற்ற பின்பு கோவை மாவட்டத்தின் வளர்ச்சிகளில் தனி கவனம் எடுத்து வருகிறார். வ.உ.சி மைதானத்தில் 25 ஆயிரம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற அமைச்சரும் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளார்.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கடந்த காலங்களில் ஏற்பட்ட குளறுபடிகள் விரைவாக முடிக்க உத்தரவை வழங்கியுள்ளனர். ஸ்மார்ட் சிட்டி பணிகள் மிக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு மக்களுக்கு தேவையான கட்டமைப்பை உருவாக்க பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

    குளங்களை பொருத்தவரை பணிகள் செய்கின்ற போது குளத்தின் அளவை குறைத்து உள்ளார்கள் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனை முதல்-அமைச்சர் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி ஆணையாளர் மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×