search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Loan camp"

    • வீட்டுக்கடன் வட்டி 8.55 சதவீதம் முதல், வாகன கடன் வட்டி 8.80 சதவீதம் முதல் வழங்கப்பட உள்ளது.
    • வீட்டுக்கடன் ரூ.1லட்சத்திற்கு இ.எம்.ஐ., ரூ.772 முதல் வழங்கப்படுகிறது.

    திருப்பூர்:

    கனரா வங்கி சார்பில் வீடு மற்றும் வாகன கடன் முகாம் திருப்பூர் எஸ்.எம்.இ.,2 கிளை மற்றும் வெள்ளகோவில், தாராபுரம் கிளையில் நாளை 29-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காைல 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது.

    வீட்டுக்கடன் வட்டி 8.55 சதவீதம் முதல், வாகன கடன் வட்டி 8.80 சதவீதம் முதல் வழங்கப்பட உள்ளது. வாகன கடன் 90 சதவீதம் வரை வழங்கப்பட உள்ளது. பிற வங்கியில் வாங்கிய வீட்டுக்கடனை குறைந்த வட்டி மற்றும் குறைந்த மாத தவணையில் மாற்றி கொள்ளலாம். வாகனக்கடன் ரூ.1லட்சத்திற்கு இ.எம்.ஐ.,ரூ.1599 முதல், வீட்டுக்கடன் ரூ.1லட்சத்திற்கு இ.எம்.ஐ., ரூ.772 முதல் வழங்கப்படுகிறது.

    குறைந்த பரிசீலனை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. விரைவான சேவையுடன் நிறைவான பயன் அடையலாம். பொதுமக்களின் கனவு இல்லம் நனவாக , புதிய மற்றும் பழைய வாகனங்கள் வாங்க இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கனரா வங்கி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.     

    • வங்கிகளின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி கடன் முகாம் நடக்கிறது.
    • கலெக்டர் ஆஷா அஜித் தெரிவி்த்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தை சார்ந்த கல்லூரி பயிலும் மாணவர்கள் பயன்பெரும் வகையில் சிவகங்கை மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து வங்கிகளின் சார்பில் சிறப்பு கல்வி கடன் முகாம் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் (DDC HALL) அடுத்த மாதம் 5-ந் தேதி (செவ்வாய்கிழமை) அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

    எனவே, கல்விக்கடன் பெற விரும்பும் மாணவ மாணவியர்கள் அனைவரும் www.vidyalakshmi.co.in என்ற இணையத்தளத்தில் தங்களு டைய விண்ணப் பத்தினை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து, முகாம் நடைபெறும் நாளன்று விண்ணப்பத்தின் நகல், மாணவ- மாணவிகள் மற்றும் பெற்றோரின் 2 தற்போதைய புகைப்படம், வங்கி பாஸ் புத்தக நகல், இருப்பிட சான்று நகல், வருமான சான்று நகல், ஜாதி சான்று நகல், பான்கார்டு நகல், ஆதார் அட்டை நகல், கல்லூரியில் இருந்து பெறப்பட்ட சான்றிதழ் மற்றும் கல்விக் கட்டண விவரம், பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மற்றும் இளநிலை பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள், முதல் பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று மற்றும் கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட சேர்க்கைக்கான ஆணை உள்ளிட்ட ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம்.

    இம்முகாமில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப் பங்கள் வங்கியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, பரிசீலனை செய்து மாணாக்கர்களுக்கு உடனடி கடன் ஆணைகள் வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை மாணாக்கர்கள் பயன்படுத்திக்ககொண்டு , இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

    • கல்விக் கடன் பெற விரும்பும் மாணவா்கள் இணையதளத்தில் விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
    • மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் பங்கேற்று உடனடியாக கல்விக் கடன் வழங்க மாவட்ட முன்னோடி வங்கி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர் : 

    திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு கல்விக்கடன் முகாம் வருகிற 14, 15-ந் தேதிகளில் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் மாவட்டத்தை சோ்ந்த மாணவ, மாணவிகள் கல்விக் கடனுக்காக விண்ணப்பிக்க சிறப்பு கல்விக் கடன் முகாம் வருகிற 14, 15-ந் தேதிகளில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காலை 10மணி முதல் மாலை 5 மணி வரையில் நடைபெறுகிறது.

    இந்த முகாமில் கடன் அனுமதிக் கடிதம் பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கல்விக் கடன் பெற விரும்பும் மாணவா்கள் இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    அதன் பின்னா் முகாம் நடைபெறும் நாளில் விண்ணப்பத்தின் நகல் மற்றும் ஆவணங்களுடன் பங்கேற்கலாம். மேலும் விண்ணப்பத்தின் நகல், மாணவா்கள் மற்றும் பெற்றோா்களின் இரு புதிய புகைப்படம், வங்கிக் கணக்கு புத்தகம், ஆண்டு வருமானச் சான்று, ஜாதிச் சான்று, பான் அட்டை, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றின் நகல்களையும், கல்விக் கட்டண விவரம், 10-ம்வகுப்பு, பிளஸ் 2 சான்றிதழ்கள், இளநிலை பட்டப் படிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள், கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட சோ்க்கைக்கான ஆணை உள்ளிட்ட ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.

    இந்த முகாமில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் பங்கேற்று உடனடியாக கல்விக் கடன் வழங்க மாவட்ட முன்னோடி வங்கி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே, திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அலுவலகத்தை 0421-2971185 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கி மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது.
    • கடன் விண்ணப்பங்களை கே.சிகருப்பண்ணன் எம்.எல்.ஏ. 30-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வழங்கினார்.

    கவுந்தப்பாடி:

    ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் நகர கூட்டுறவு வங்கிகள் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது.

    ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் என். கிருஷ்ணராஜ் தலைமையில் நடந்தது. முன்னதாக கிளை மேலாளர் வேலுமணி வரவேற்றார்.

    கடன் விண்ணப்பங்களை  கே.சி.கருப்பண்ணன் எம்.எல்.ஏ. 30-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் பவானி யூனியன் சேர்மன் பூங்கோதை, கவுந்தப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் பாவா தங்கமணி, மேலாளர்கள் லோகமுத்து, தர்மலிங்கம், கவுந்தி டெக்ஸ் மேலாளர் தண்டபாணி, டாக்டர் மனோகரன், ஜான், தட்சிணாமூர்த்தி, ஜெகதீஷ், ஆறுமுகம், வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள். முடிவில் மேற்பார்வையாளர் ராஜேஸ்வரன் நன்றி கூறினார்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் உதவித்தொகை வழங்கும் முகாம் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பெருந்துறை கிளையில் நடைபெற்றது.
    • இந்த முகாமில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் உதவித்தொகை வழங்கும் முகாம், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பெருந்துறை கிளையில் நடைபெற்றது.

    கிளை மேலாளர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

    முகாமில் சிறப்பு அழைப்பாளராக பெருந்துறை ஜெயக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு கடன் உதவி தொகை மற்றும் உதவித்தொகைக்கான விண்ணப்பங்களை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் அப்புகுட்டி (எ) வெங்கடாஜலபதி, பெருந்துறை பேரூராட்சி கவுன்சிலர் அருணாச்சலம், கல்யாணசுந்தரம், மாவட்ட பொருளாளர் மணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

    ×