search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகையில், விவசாயிகள் டிராக்டர் பேரணி
    X

    டிராக்டர் பேரணி நடைபெற்றது.

    நாகையில், விவசாயிகள் டிராக்டர் பேரணி

    • குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட உத்திரவாதம் செய்ய வேண்டும்.
    • சிறு, குறு, நடுத்தர விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

    நாகப்பட்டினம் :

    நாகப்பட்டினத்தில் மத்திய அரசின் விவசாயிகள் விரோத கொள்கைகளை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பாக 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிராக்டர் பேரணி நடைபெற்றது.

    மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரபோஜி தலைமையேற்று பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். புத்தூரில் தெய பேரணியில் பல்வேறு விவசாய சங்கங்கள் பங்கேற்றனர்.

    10-க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் உடன் விவசாயிகள் பேரணியாக அவுரிதிடலில் சென்றனர். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட உத்திரவாதம் செய்ய வேண்டும், சிறு, குறு, நடுத்தர விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், பயிர் காப்பீடு திட்டத்தில் தனியார் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களை வெளியேற்றி விவசாயிகள் பயன்படும் வகையில் மாற்றி அமைத்திட வேண்டும், என்பன உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

    பேரணி அவுரி திடலில் முடிவடைந்தது. அங்கு பொறுப்பாளர்கள் கண்டன உரையாற்றினர்.

    Next Story
    ×