search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகைக்கடன்"

    • பொது மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே நமது மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக மாற்ற முடியும்.
    • அமைச்சர் மனோதங்கராஜ் பேச்சு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கூட்டுற வுத்துறையின் சார்பில், 69-வது கூட்டுறவு வார விழா மார்த்தாண்டத்தில் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் தலை மையில் பிரின்ஸ் எம்.எல்.ஏ., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள், சிறந்த கூட்டுறவு சங்கங்க ளுக்கு கேடயங்கள் மற்றும் பயனானிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:-

    கன்னியாகுமரி மண்ட லத்தில் 202 கூட்டுறவு சங் கங்களின் வாயிலாகபொது மக்களுக்கு தேவையான கடனுதவிகள் உட்பட பல் வேறு சேவைகள் வழங்கப் பட்டு வருகிறது. மேலும், விவசாயிகளுக்கு தேவை யான பயிர்கடன்கள் விதை, உரங்கள். இடு பொருட்கள் வினியோகம் செய்வதுடன் குறுகியகால மற்றும் மத்தியகால வேளாண் கடன்கள் வழங்கி உணவு உற்பத்தியையும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக் கும் கூட்டுறவு சங்கங்கள் கிராமங்கள்தோறும் தங்க ளது பங்களிப்பை சிறப்பாக செய்து வருகிறது.

    கடந்த ஆண்டுகளில் நமது மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் குப்பைகள் தேங்கியிருந்த நிலை யில் தற்போது அந்த குப்பைகளை படிப்படியாக அகற்றிவருவதோடு, பிளாஸ்டிக் இல்லா மாவட்ட மாக மாற்றுவ தற்கு பல்வேறு முன்னெ டுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு பொது மக்களாகிய நீங்கள் அனைவரும் முழு ஒத்து ழைப்பு வழங்கி னால் மட்டுமே நமது மாவட் டத்தை பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக மாற்ற முடி யும்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்துள்ளப்படி ஆட்சிப்பொறுப் பேற்ற சில மாதங்களிலே தமிழ்நாட்டிற்குட்பட்ட அனைத்து கூட்டுறவுத் துறையின் கீழ் 5 சவரனுக்கு (40 கிராமிற்குட்பட்ட) உட்பட்ட நகைக்கடன் வைத்திருந்த நகைக்கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் குமரி மாவட்டத்திற்குட் பட்ட 24,321 நபர்களுக்கு ரூ.105 கோடி மதிப்பிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான தமிழக அரசுக்கு முழு ஒத்து ழைப்பு வழங்குமாறு கேட்டு கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக, அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை யில் 9-வது கூட்டுறவு வார விழா உறுதிமொழியினை பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், பிரின்ஸ் எம.எல்.ஏ., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கூட்டுறவுத்துறை அலுவலர்கள், பணியாளர் கள், பொதுமக்கள் உள்ளிட் டோர் ஏற்று கொண்டனர்.

    கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவா ளர் சந்திரசேகரன், மத்திய கூட்டுறவு வங்கி (நாகர்கோ வில் கிளை) மேலாண்மை இயக்குநர் குருசாமி, மத்திய கூட்டுறவு வங்கி (தக்கலை சரகம்) துணைப்பதிவாளர் நரசிம்மன், மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் நாகராஜன், கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் முருகே சன், துணைப்பதிவாளர்கள் செந்தில் ஆறுமுகம், குருசாமி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலை வர்கள் பூதலிங்கம் உட்பட பலர்கலந்து கொண்டனர்.

    • மக்களை தேடி மருத்துவம், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி திட்டம்,
    • இன்னுயிர் காப்போம்- நம்மைக்காக்கும் 48 திட்டம், விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டம்

    நாகர்கோவில் :

    ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட் பட்ட காஞ்சிரவிளை பகுதியில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொது மக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.

    தமிழ்நாடு முதல்-அமைச் சர் தொடங்கி வைத்த திட்டங்களான முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக் கும் திட்டம், மக்களை தேடி மருத்துவம், கூட்டுறவு வங்கி களில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி திட்டம், நரிக்குற வர்கள் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கி யது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழையினால் பாதிக்கப்பட்ட இடங்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டதை நேரில் பார்வையிட்டது.

    இன்னுயிர் காப்போம்- நம்மைக்காக்கும் 48 திட்டம், விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டம், கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம், நமக்கு நாேம திட்டம் மற்றும் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம், காணி பழங்குடியி னர்களுக்கு நில உரிமை ஆணை வழங்கியது. மீனவர் களின் நலன் கருதி பனிக் கட்டி நிலையங்களை திறந்து வைத்தல், மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கடனுதவிகள் வழங்கியது.

    முதல்-அமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டம் திட்டம், பதிய வேளாண் காடு வளர்ப்புத் திட்டம், மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை களில் பணியின்போது காலமானவர்களின் வாரிசு தாரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கியது. பள்ளி மாணவ-மாணவியருக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

    ×