என் மலர்
நீங்கள் தேடியது "Jewelery Loan Waiver"
- 2026 ஜனவரி ஒன்றாம் தேதி முதல் புதிய விதிகளை செயல்படுத்தலாம் என்பது சலுகை அல்ல.
- ரூ.2 லட்சம் வரையிலான கடன்களுக்கு மட்டும் புதிய விதிகளில் இருந்து விலக்கு என்பது பயனளிக்காது.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
நகைக்கடன் விதிகள் குறித்த தளர்வுகள் போதுமானவை அல்ல: இப்போதுள்ள நடைமுறையே தொடர வேண்டும்!
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நகைக்கடன் வழங்குவதற்கான 9 வழிகாட்டுதல்கள் அடங்கிய புதிய வரைவு விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டிருந்த நிலையில் அவற்றில் இரு தளர்வுகளை செய்யும்படி மத்திய நிதியமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
புதிய விதிகள் நடைமுறைக்கு 2025-ஆம் ஆண்டு வரை செயல்படுத்தக்கூடாது; ரூ. 2 லட்சம் வரையிலான நகைக்கடன்களுக்கு இந்த விதிகளில் இருந்து விலக்களிக்கப்பட வேண்டும் என்பது தான் அந்த பரிந்துரைகள் ஆகும். இவை போதுமானவை அல்ல.
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வரைவு விதிகளுக்கு இன்னும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை; அவை இன்னும் இறுதி செய்யப்படவில்லை; அவை எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இத்தகைய சூழலில் 2026 ஜனவரி ஒன்றாம் தேதி முதல் புதிய விதிகளை செயல்படுத்தலாம் என்பது சலுகை அல்ல.
அதேபோல், கிராமப்புறங்களில் கல்வி, குடும்பத் தேவைகள் மற்றும் வங்கிக் கடன் பெற முடியாத பல தேவைகளுக்கு நிதி ஈட்டுவதற்கான ஒரே வாய்ப்பு நகைக்கடன் தான். அவ்வாறு கடன் பெறும் போது ரூ.2 லட்சம் வரையிலான கடன்களுக்கு மட்டும் புதிய விதிகளில் இருந்து விலக்கு என்பது பயனளிக்காது.
இவை அனைத்தையும் விட பாட்டாளி மக்கள் கட்சி எழுப்ப விரும்பும் வினா என்னவென்றால், புதிய விதிகளை நடைமுறைப்படுத்துவதற்கான தேவை எங்கிருந்து வந்தது? ஒவ்வொரு தனிநபரும் எவ்வளவு நகைக்கடன் பெறுகிறாரோ, அதை விட குறைந்தது 40% கூடுதல் மதிப்பு உள்ள நகைகளை ஈடாக வைக்கிறார்.
நகைக்கடனை குறித்த காலத்தில் செலுத்தத் தவறினால் அவற்றை ஏலத்தில் விட்டு பணமாக்கவும் விதிகளில் வகை செய்யப்பட்டிருக்கிறது. அவ்வாறு இருக்கும்போது புதிய விதிகள் தேவையற்றவை. அதனால், எந்த பயனும் இல்லை, பாதிப்புகள் தான் அதிகம்.
தங்க நகைக்கடன் என்ற தத்துவமே நடைமுறை சிக்கல்கள் இல்லாமல் எளிதாக கடன் வாங்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது தான். புதிய விதிகளின் மூலம் அதை சிக்கலாக்கக்கூடாது.
எனவே, நகைக்கடன்கள் தொடர்பாக இப்போதுள்ள நடைமுறைகளே தொடர வேண்டும். அது சாத்தியமில்லை என்றால், வரைவு விதிகளின் பிரிவுகள் 2, 4, 6 ஆகியவற்றை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 5 பவுன் நகை கடன் தள்ளுபடிக்கு, சேலம் உள்பட 4 மாவட்டங்களுக்கு ரூ.206.66 கோடி விடுவிக் கப்பட்டுள்ளது.
- இந்த தொகையை அரசே கூட்டுறவு நிறுவனங்களுக்கு தவணை முறையில் வழங்குகிறது.
சேலம்:
கூட்டுறவு சங்கங்களில் 5 பவுன் நகை கடன் தள்ளுபடிக்கு, சேலம் உள்பட 4 மாவட்டங்களுக்கு ரூ.206.66 கோடி விடுவிக் கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் 2021-ம் ஆண்டு மார்ச் வரை வழங்கப்பட்ட 5 பவுனுக்கு உட்பட்ட தங்க நகை கடன்களை தமிழ்நாடு அரசு தள்ளுபடி செய்து, உத்தரவிட்டது.
இதற்கான நிபந்தனைகளில் கீழ் தேர்வான ரூ.14.62 லட்சம் பேரின், ரூ.5013 கோடி மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த தொகையை அரசே கூட்டுறவு நிறுவனங்களுக்கு தவணை முறையில் வழங்குகிறது. அதன்படி 2021-2022ம் ஆண்டு ரூ.1215 கோடி வழங்கப்பட்டது.
நடப்பு நிதியாண்டில் ரூ.1000 கோடி வழங்கப் பட்டது. தற்போது 2-ம் கட்டமாக ரூ.1000 விடுவித்து தமிழ்நாடு அரசு உத்தர விட்டுள்ளது. மாவட்ட வாரியாக கூட்டுறவு சங்கங்கள் வாரியாக இத் தொகை ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
இத்தொகையினை மத்திய கூட்டுறவு வங்கி களின் மேலாண்மை இயக்குனர்கள் அச்சங்கங் களுக்கு உடனடியாக விடுவிக்க அறிவுறுத்தப் படுகிறார்கள் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, சேலம் மாவட்டதுக்கு ரூ.112.63 கோடியும், நாமக்கல் மாவட்டத்துக்கு ரூ.46.99 கோடியும் விடுவிக்கப் பட்டது. இதேபோல், தர்மபுரி மாவட்டத்துக்கு ரூ.29.60 கோடியும், கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு ரூ.19.44 கோடியும் என மொத்தம் ரூ.208.66 கோடி நகைகடன் தள்ளுபடிக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. இத்தொகை மத்திய கூட்டுறவு வங்கியில் இருந்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங் களுக்கும் நகர கூட்டுறவு வங்கிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.






