search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழகம்"

    • ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் அஜித் ராம் அபாரமாக பந்து வீசினார்.
    • இதனால் சவுராஷ்டிரா அணி 2-வது இன்னிங்சில் 206 ரன்னில் சுருண்டது.

    சென்னை:

    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் தமிழ்நாடு, சவுராஷ்டிரா அணிகள் மோதும் கடைசி லீக் ஆட்டம் (பி பிரிவு) சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்தது.

    முதலில் ஆடிய தமிழக அணி முதல் இன்னிங்சில் 324 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. பாபா இந்திரஜித், விஜய் சங்கர், ஷாருக்கான் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.

    அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய சவுராஷ்டிரா அணி 192 ரன்னில் ஆல் அவுட்டானது. சிராக் ஜானி 49 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

    தமிழக அணி சார்பில் எம்.சித்தார்த், அஜித் ராம் தலா 3 விக்கெட்டும், சந்தீப் வாரியர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    132 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தமிழக அணி 36.1 ஓவர்களில் 133 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 37 ரன்னும், பாபா இந்திரஜித் 28 ரன்னும் எடுத்தனர்.

    சவுராஷ்டிரா அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா 7 விக்கெட்டும், தர்மேந்திரசிங் ஜடேஜா 3 விக்கெட்டும் சாய்த்தனர். காயம் காரணமாக 5 மாத இடைவெளிக்கு பிறகு களம் திரும்பிய முதல் போட்டியிலேயே ரவீந்திர ஜடேஜா அசத்தியுள்ளார்.

    இதையடுத்து, சவுராஷ்டிரா அணி வெற்றிபெற 266 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. சவுராஷ்டிரா அணி ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 4 ரன்கள் எடுத்துள்ளது.

    இந்நிலையில், நேற்று கடைசி நாள் ஆட்டம் நடந்தது. சவுராஷ்டிரா அணி சார்பில் ஹர்விக் தேசாய் பொறுப்புடன் ஆடி சதமடித்து 101 ரன்னில் ஆட்டமிழந்தார். அர்பித் வாசவதா 45 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், சவுராஷ்டிரா அணி 206 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 59 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு வெற்றி பெற்றது.

    தமிழ்நாடு சார்பில் அஜித் ராம் 6 விக்கெட்டும், சித்தார்த் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது அஜித் ராமுக்கு வழங்கப்பட்டது.

    • ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா அபாரமாக பந்து வீசினார்.
    • இதனால் தமிழக அணி 2-வது இன்னிங்சில் 133 ரன்னில் சுருண்டது.

    சென்னை:

    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் தமிழ்நாடு, சவுராஷ்டிரா அணிகள் மோதும் கடைசி லீக் ஆட்டம் (பி பிரிவு) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்துவருகிறது.

    முதலில் ஆடிய தமிழக அணி முதல் இன்னிங்சில் 324 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. பாபா இந்திரஜித், விஜய் சங்கர், ஷாருக்கான் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.

    அதன்பின் முதல் இன்னிங்சை ஆடிய சவுராஷ்டிரா அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் 3 விக்கெட்டுக்கு 92 ரன்கள் எடுத்து இருந்தது. சிராக் ஜானி 14 ரன்னுடனும், சேத்தன் சகாரியா 8 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இந்நிலையில், 3-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. சேத்தன் சகாரியா 9 ரன்னிலும், கேப்டன் ரவீந்திர ஜடேஜா 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பொறுப்புடன் ஆடிய சிராக் ஜானி 49 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

    இறுதியில், சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 192 ரன்னில் ஆட்டம் இழந்தது.

    தமிழக அணி தரப்பில் எம்.சித்தார்த், அஜித் ராம் தலா 3 விக்கெட்டும், சந்தீப் வாரியர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    132 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தமிழக அணி 36.1 ஓவர்களில் 133 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 37 ரன்னும், பாபா இந்திரஜித் 28 ரன்னும் எடுத்தனர்.

    சவுராஷ்டிரா அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா 7 விக்கெட்டும், தர்மேந்திரசிங் ஜடேஜா 3 விக்கெட்டும் சாய்த்தனர்.

    வலது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக 5 மாத இடைவெளிக்கு பிறகு களம் திரும்பிய முதல் போட்டியிலேயே ரவீந்திர ஜடேஜா அசத்தியுள்ளார்.

    சவுராஷ்டிரா அணி வெற்றிபெற 266 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    2-வது இன்னிங்சை தொடங்கிய சவுராஷ்டிரா அணி ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 4 ரன்கள் எடுத்துள்ளது.

    இன்று 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. சவுராஷ்டிரா அணி வெற்றிபெற மேலும் 262 ரன்கள் தேவைப்படுகிறது. அந்த அணி கைவசம் 9 விக்கெட்டுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • விவேகானந்தர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்கிறார்
    • சுவாமி விவேகானந்தரின் முழு உருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

    கன்னியாகுமரி:

    தமிழக பா.ஜ.க. தலை வர் அண்ணாமலை வருகிற 12-ந்தேதி கன்னியாகுமரி வருகிறார். அவர் கன்னியாகுமரி விவேகானந்த புரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தரின் முழு உருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

    இதையொட்டி கன்னி யாகுமரிக்கு வரும் தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோ சிப்பதற்காக அகஸ்தீஸ்வரம் தெற்கு மற்றும் வடக்கு ஒன்றிய பாரதிய ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் நேற்று மாலை நடந்தது.

    கூட்டத்துக்கு அகஸ்தீஸ்வ ரம் ஒருங்கிணைந்த ஒன்றிய பார்வையாளர் சி.எஸ்.சுபாஷ் தலைமை தாங்கினார். குமரி மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் தர்மராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் முத்துராமன், பொதுச் செயலாளர் சொக்கலிங்கம், அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டார தலைவர் சுயம்பு லிங்கம், தெற்கு வட்டாரத் தலைவர் சுயம்பு உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-

    கன்னியாகுமரிக்கு வருகிற 12-ந்தேதி வரும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. மேற்கண்ட தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    • கவர்னர் தமிழகம் என்று குறிப்பிட்டதில் தவறில்லை என பா.ஜ.க. ராம. சீனிவாசன் அறிக்கை வெளியிட்டார்.
    • இதில் திராவிடம் என்ற தேவையற்ற இனவாதத்தை தி.மு.க. தான் கலப்படம் செய்து வருகிறது.

    மதுரை

    தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர் ராம. சீனிவாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

    தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்பது பொருத்தமானது என்று கவர்னர் ரவி சொன்னதை வைத்து, தி.மு.க. வினரால் பெரிய கருத்து மோதல் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்தத் தருணத்தில் நான் சில கருத்துக்களை முன் வைக்க விரும்புகிறேன். முதலில் தமிழ்நாடு என்ற வார்த்தை, இலக்கி யங்களில் இல்லை. தொல்காப் பியத்தில் தமிழ்நாட்டின் வட எல்லையாக இமயமலையும், தென் எல்லையாக கடலும் சொல்லப்பட்டுள்ளது.

    இந்தியாவின் முதல் தேசிய கவியான பாரதியார் முதன்முதலில் தமிழ்நாடு என்று குறிப்பிட்டார். 'கல்வி சிறந்த தமிழ்நாடு, உயர் கம்பன் பிறந்த தமிழ்நாடு' என்ற பாடல் வரிகளை தமிழுக்கு அறிமுகப் படுத்தியவர் பாரதிதான். அதற்கு முன்னதாக இந்த வார்த்தை எங்கும் இல்லை.

    நாம் அன்றாடம் பாடும் தமிழ்தாய் வாழ்த்தில் கூட, தமிழ்நாடு என்று இல்லை. 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்றுதான் வரிகள் உள்ளன. 1950-ம் ஆண்டுக்கு முன்பு இந்தப் பகுதி, சென்னை மாகாணம் என்று தான் அழைக்கப்பட்டது. தமிழ்நாடு என்பதே அண்மைக்கால கருத்தாக்கம்தான்.

    முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா வில் பேசும்போது, 'ஏ தாழ்ந்த தமிழகமே' என்று தான் குறிப்பிட்டார். இதே தலைப்பில் அண்ணா சொற்பொழிவு புத்தகமாகவும் வந்துள்ளது. கருணாநிதியும் எழுத்துக் களில் ஆயிரக்கணக்கான இடங்களில் தமிழக என்கிற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். ஆனால் இதையே ஒரு கவர்னர் சொல்லும் போது அவர்கள் பொங்கி எழுகிறார்கள்.

    அண்ணா தாழ்ந்த தமிழ கமே என்று சொல்லும் போது வராத கோபம், கவர்னர் தமிழகம் என்று சொல்லும் போது ஏன் வருகிறது? கவர்னர் என்ன பேசி னாலும் எதிர்ப்பது என்பது தான், ஆளுங்கட்சியின் வழக்கமாக உள்ளது. சட்டமன்றத்தில் கவர்னர் பேசும்போது உரையின் நிறைவாக ஜெய்ஹிந்த் என்றும், ஜெய் தமிழ்நாடு என்றும் சொல்லி ஒரு புதிய மரபை தோற்றுவித்தவர்.

    ஆகவே தமிழ்நாடு என்ற கருத்தாக்கத்தை உருவாக்கியது, தமிழுக்கு என்று ஒரு மாநிலத்தை உருவாக்கியது, தமிழகம் என்றும் அழைக்கலாம் என்று புரிய வைப்பது தேசியவாதிகள் தான்.

    இதில் திராவிடம் என்ற தேவையற்ற இனவாதத்தை தி.மு.க. தான் கலப்படம் செய்து வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
    • 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், தி.மலை, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், நாமக்கல், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • 2 நாட்கள் நடக்கிறது
    • பல்வேறு வகையான போட்டிகளில் பங்கேற்பதற்கு தேர்வு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி ராஜேஷ் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் வருகிற ஏப்ரல் மாதம் வரை நடைபெற வுள்ள பல்வேறு வகை யான விளையாட்டுப் போட்டிகளுக்கு தமிழ் நாடு அணிக்கான வீரர்கள், வீராங்க னைகள் தேர்வு கீழ்க்கா ணும் விளையாட்டுகள் விவரப்படி நடைபெற உள் ளது. தேர்வு நடைபெறும் தேதி, இடம், நேரம் விவரம் வருமாறு:-

    வருகிற 14-ந்தேதி காலை 7 மணிக்கு சென்னை ஜவகர் லால் நேரு உள் விளையாட்ட ரங்கத்தில் கூடைப்பந்து போட்டிக்கு மாணவர்கள் 12 பேரும் மாணவிகள் 12 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். 13-ந்தேதி காலை 7 மணிக்கு சென்னை ஜவகர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில் கால்பந்து போட்டிக்கு மாணவிகள் 20 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    13-ந்தேதி காலை 7 மணிக்கு திருச்சி அண்ணா விளை யாட்டரங்கத்தில் வளை கோல்பந்து போட் டிக்கு மாணவர்கள் 18 பேர் தேர்வு செய்யப் பட உள்ளனர்.

    13-ந்தேதி காலை 7 மணிக்கு சிவகங்கை மாவட்ட விளை யாட்டு அரங்கத்தில் கோ-கோ போட்டிக்கு மாணவிகள் 15 பேர் தேர்வு செய்யப்பட உள் ளனர். 13-ந்தேதி காலை 7 மணிக்கு சென்னை ஜவகர்லால் நேரு விளையாட்டரங் கத்தில் கையுந்து பந்து போட் டிக்குமாணவர்கள் 12 பேரும், மாணவிகள் 12 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    வயது வரம்பை பொறுத் தவரையில் 1-1-2004 அன்று அல்லது அதற்குப் பின்னர் பிறந்த விளையாட்டு வீரராக இருத்தல் வேண்டும். ஆதார் கார்டு அல்லது பாஸ்போர்ட். பள்ளியில் பயில்வதற்கான சான்றிதழ், பிறப்பு சான்றி தழ் (குறைந்தபட்சம்) 5 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட தாக இருத்தல் வேண்டும். (அதாவது 2012 ஜனவரி மாதம் 1-ந் தேதி அல்லது அதற்கு முன் நக ராட்சி அல்லது கிராம பஞ்சாயத்தால் வழங்கப் பட்டது).

    தமிழ்நாடு அணி தேர்வு செய்யப்பட்ட பின்னர் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு உத்தரவாதம் அளிக்க இயலாது. தேர்வு போட்டிக்கு தினப்படி, பயணப்படி வழங்கப்பட மாட்டாது. எனவே இந்த தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் வீரர், வீராங்க னைகள் தேர்வு நடை பெறும் இடங்களில் குறிப் பிட்ட நாளில் தகுந்த ஆவ ணங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழகம் முழுவதும் ஜனவரி மாதம் 21-ந் தேதி முதல் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும் என நல்லசாமி கூறினார்.
    • கள் இறக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் நாங்கள் போலீசாரை கேள்வி கேட்போம்

    புதுக்கோட்டை

    தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில செயலாளர் நல்லசாமி புதுக்கோட்டையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ''தமிழகம் முழுவதும் வருகிற ஜனவரி மாதம் 21-ந் தேதியில் இருந்து கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும். கள் இறக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் நாங்கள் போலீசாரை கேள்வி கேட்போம். கள்ளுக்கான தடையை அகற்றும் போராட்டத்தில் இளைஞர்கள், பொதுமக்கள் பங்கேற்பார்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல் இதுவும் வெற்றி பெறும். தென்னை மரங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் நீராவுக்கான நிபந்தனைகளை தளர்த்த வேண்டும். தமிழகத்தில் பனை, தென்னை, ஈச்சமரங்கள் இருந்தால் அவற்றில் இருந்து நீராகவோ, கள்ளாகவோ, பதநீராகவோ இறக்கியும், விற்றும், குடித்தும் கொள்ளலாம் எனவும், மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக சந்தைப்படுத்தி உள்நாட்டிலும், பன்னாட்டிலும் விற்க வழி செய்யலாம். இவ்வாறு செய்தால் தமிழகத்திற்கு வருமானம் கிடைக்கும். தமிழகம் முதல் மாநிலமாக மாறும். முதல்-அமைச்சர் விரைவில் இந்த அறிவிப்பை வெளியிடுவார் என நம்புகிறோம்''. இவ்வாறு அவர் கூறினார்.

    • வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • இருமொழிக்கொள்கை இருக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு கூறினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் திருப்பூர் யூனியன் மில் சாலையில் உள்ள ஸ்ரீசக்தி திரையரங்கம் அருகில் நடந்தது. இதற்கு வடக்கு மாவட்ட செயலாளரும், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான செல்வராஜ் தலைமை தாங்கி பேசினார். வடக்கு மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான தினேஷ் குமார், தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு. நாகராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் கழக துணைப் பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்.பி., தலைமை கழக பேச்சாளர் தாம்பரம் ஜின்னா ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் அந்தியூர் செல்வராஜ் எம்.பி. பேசியதாவது :- இந்தி திணிப்பு எதிர்ப்பு என்பது தி.மு.க.வின் முதன்மை கொள்கையாகும். இந்தி எதிர்ப்பு போராட்டம் திருப்பூரில் நடைபெற்றுள்ளது. இந்தியை மக்களிடம் திணிக்கக்கூடாது. இருமொழிக்கொள்கை இருக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு கூறினார். ஆனால் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்கிறது. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் குலக்கல்வி திட்டத்தை புகுத்தும் வகையில் பாடங்கள் அமைந்துள்ளது.

    இந்தியை எந்த காலத்திலும் திணிக்க அனுமதிக்க மாட்டோம். தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்து வருகிறார். கனமழை பெய்தபோதும் சென்னையில் மழைநீர் தேங்காத வகையில் சிறப்பான நடவடிக்கை எடுத்துள்ளார். தொழில் நகரான திருப்பூரில் நூல் விலை உயர்வால் தொழில் பாதிக்கப்பட்டது. முதல்-அமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக நூல் விலை படிப்படியாக குறைந்து தொழில் நடக்கிறது. தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததை தி.மு.க. அரசு நிறைவேற்றி வருகிறது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் வெல்ல இப்போது இருந்தே பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மண்டல தலைவர்கள் உமா மகேஸ்வரி, தம்பி கோவிந்தராஜ், தெற்கு மாநகர பொருளாளர் முத்துகிருஷ்ணன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜ், நிர்வாகிகள் திலகராஜ், சிவபாலன், கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • திருமாவளவன், சீமான் ஆகியோரை கண்டித்தும், இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • பால் விலை, சொத்து வரி, மின் கட்டண உயர்வு என, விலைவாசி உயர்வில் மக்கள் சிக்கி தவிக்கின்றனர்.

    திருப்பூர் :

    தி.மு.க., - எம்.பி., ராஜாவின் அவதுாறு பேச்சை கண்டித்தும், தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பேசி வரும் திருமாவளவன், சீமான் ஆகியோரை கண்டித்தும், இந்து மக்கள் கட்சி சார்பில், திருப்பூர் குமரன் சிலை முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்துக்கு பின் அர்ஜுன் சம்பத் நிருபர்க ளிடம் கூறியதாவது:-

    பால் விலை, சொத்து வரி, மின் கட்டண உயர்வு என, விலைவாசி உயர்வில் மக்கள் சிக்கி தவிக்கின்றனர். பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் மூலம், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ., - இந்து மக்கள் கட்சி மீது அவதுாறு பரப்புகின்றனர்.அவதுாறு பரப்புபவர்களை கைது செய்ய வேண்டும்.தி.மு.க., ஆட்சியில், பொங்கல் பரிசு வழங்கியதில் ஊழல் நடந்தது. அந்த நிறுவனங்களுக்கே மீண்டும் பொருட்கள் வாங்க உத்தரவிடுகின்றனர். விமர்சனங்களை தாங்கி கொள்ள முடியாத அரசு, குற்றச்சாட்டுகளை சுட்டி காட்டினால் திருத்தி கொள்ள தயாராக இல்லை. அடக்குமுறையை கையாள்கின்றனர்.

    இவ்வாறு, அவர் கூறினார்.

    • அரசு நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெற வேண்டும்.
    • மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் நடத்தப்பட்டது

    நாகர்கோவில்:

    நாகர் கோவில் மாநக ராட்சிக்குட் பட்ட வடசேரி பஸ் நிலை யத்தில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொது மக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக்கண் காட்சி நேற்று நடைபெற் றது.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அரவிந்த் தெரி வித்ததாவது:-

    தமிழக அரசு ஏழை எளிய கிராமப்புற மக்களுக் காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு முதல் மைச்சர் தொடங்கிவைத்த திட்டங்களான, முதல மைச்சரின் விரிவான மருத் துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்கும் திட் டம், மக்களை தேடி மருத்து வம், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி திட்டம், குறவர்கள் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கி யது, கன்னியாகுமரிமாவட் டத்தில் கனமழையினால் பாதிக்கப்பட்ட இடங்கள் போர்க்கால அடிப்படை யில் சீரமைக்கப்பட்டதை நேரில் பார்வையிட்டது.

    இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட் டம், விவசாயிகளுக்குபுதிய மின் இணைப்புகள் வழங் கும் திட்டம், கலைஞரின் வரும்முன் காப்போம் திட் டம், நமக்கு நாமே திட்டம் மற்றும் நகர்ப்புற வேலை வாய்ப்புத்திட்டம், காணி பழங்குடியினர்களுக்கு நிலஉரிமை ஆணை வழங்கியது. மீனவர்களின் நலன் கருதி பனிக்கட்டி நிலை யங்களை திறந்து வைத்தல், மகளிர் சுய உதவிக்குழுவி னர்களுக்கு கடனுதவிகள் வழங்கியது. முதலமைச்ச ரின் ஊட்டம் தரும் காய்க றித் தோட்டம் திட்டம், புதிய வேளாண் காடு வளர்ப்புத் திட்டம்,

    மின் சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணி யின்போது காலமானவர்க ளின் வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கியது. பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இலவச மிதி வண்டிகள் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு திட் டங்கள் குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பாக அமைக் கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியினை பொது மக்கள் பார்வையிட்டு அர சின் திட்டங்களை தெரிந் துகொண்டு அனைத்துத் திட்டத்தின்கீழ் வழங்கப்ப டும் அரசு நலத்திட்ட உத விகளை பெற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவி த்தார்.

    • பெரியாரின்,அண்ணாவின் கனவுகளை நனவாக்கும் வகையில் திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது.
    • டெல்லியில் ஆட்சியிலிருக்கும் திமிரில் இன்றைக்கு சில ஆட்டுக்குட்டிகள் கத்துகின்றன.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள காரணம் பேட்டையில், தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில், பெரியார், அண்ணா, ஆகியோரது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பெரியார் சுப்பிரமணி தலைமை வகித்தார். அங்ககுமார், குமாரவேல், முன்னிலை வகித்தனர். திருமூர்த்தி வரவேற்றார். இதில் கலந்துகொண்டு நாஞ்சில் சம்பத் பேசியதாவது:-

    பெரியாரின்,அண்ணாவின் கனவுகளை நனவாக்கும் வகையில் திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது.டெல்லியில் ஆட்சியிலிருக்கும் திமிரில் இன்றைக்குச் சில ஆட்டுக்குட்டிகள் கத்துகின்றன.பயந்து நடுங்கும் கட்சியல்ல தி.மு.க. இந்த நாட்டில் நன்றாக உள்ள கட்சியை உடைத்து,அதில் உள்ள குள்ள நரிகளை வைத்து ஆட்சியை பிடிக்கும் பா.ஜ.க.வின் நரித்தனம் தமிழகத்தில் பலிக்காது.இவ்வாறு அவர் பேசினார். இந்தக் கூட்டத்தில் தி.மு.க. சுற்றுச்சூழல் அணி மாநில அமைப்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி, தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன், மற்றும் மு.சுப்பிரமணியம், காவி.பழனிச்சாமி, சூரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முளகுமூட்டில் தொடங்கி களியக்காவிளை சென்றடைகிறார்
    • வழி நெடுக செல்பி எடுத்து தொண்டர்கள் உற்சாகம்

    நாகர்கோவில்:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3,500 கிலோமீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொண்டு உள்ளார்.

    கன்னியாகுமரியில் கடந்த 7-ந் தேதி பாதயாத்திரை தொடங்கிய ராகுல் காந்தி நேற்று இரவு முளகுமூடு பகுதியில் தங்கினார். இன்று 4-வது நாளாக முளகுமூட்டில் இருந்து தனது பாதயாத்திரையை தொடங்கினார். முன்னதாக பள்ளி வளாகத்தில் ராகுல் காந்தி தேசிய கொடி ஏற்றி வைத்தார். பின்னர் பள்ளி குழந்தைகளுடன் கலந்துரை யாடியதுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

    இதைத்தொடர்ந்து காலை 7.05 மணிக்கு பாதயாத்திரை தொடங்கியது. வெள்ளை சீருடையுடன் தேசிய கொடியை ஏந்தியவாறு நிர்வாகிகள் முன் சென்றனர். தொடர்ந்து செண்டை மேள கலைஞர்கள் முன் செல்ல ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொண்டார்.

    மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரி திக் விஜய் சிங், மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ், விஜய்வசந்த் எம்.பி., ஜோதிமணி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் ராபர்ட் புரூஸ் ஆகியோரும் உடன் வந்தனர்.முளகுமூடு பகுதியில் ஏராளமான சிலம்பாட்ட கலைஞர்கள் ராகுலை வரவேற்க காத்திருந்தனர். அவர்கள் ராகுல்காந்தியை கண்டதும் சிலம்பம் ஆடினர்.

    அதனை ரசித்த ராகுல் காந்தி பின்னர் சிலம்ப கலைஞர்களை அருகில் அழைத்து பாராட்டினார். இதுபோல சாலையோரம் நின்ற சிறுமி ஒருவரை அழைத்து ராகுல் காந்தி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

    ராகுல் காந்தி பாத யாத்திரை மேற்கொண்ட சாலையின் இருபுறமும் தொண்டர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர். வீடுகளின் மாடிகளில் இருந்தும் பெண்கள் குழந்தைகள் ராகுல் காந்தியை பார்த்து கை அசைத்தனர். ராகுல்காந்திக்கு ஒவ்வொரு சந்திப்பிலும் செண்டை மேளம், சிங்காரி மேளம், மயிலாட்டம், ஒயிலாட்டத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    ராகுல்காந்தி பயணம் செய்த பாதையோரம் ஏராள மான பள்ளி மாணவிகளும் அவரை பார்க்க காத்திருந்தனர். ராகுல்காந்தி வந்ததும் அவர்கள் உற்சாகமாக கோஷம் எழுப்பினர். அவர் களில் சிலர் செல்போன்களை உயர்த்திக் காட்டி செல்பி எடுக்க வேண்டுமென்று கேட்டனர்.

    அவர்களை பார்த்து புன்முறுவல் செய்த ராகுல்காந்தி, பாதுகாப்பு அரணை தாண்டி சென்று மாணவிகளுடன் செல்பி எடுத்துக் கொண்டார். விருப்பம் நிறைவேறிய மகிழ்ச்சியில் மாணவிகள் உற்சாகம் அடைந்தனர்.

    இன்று காைல முளகுமூட் டில் தொடங்கிய ராகுலின் பாத யாத்திரை மார்த்தாண்டம் நேசமணி கல்லூரியில் காலை 9.10 மணிக்கு சென்றடைந்தது. அங்கு ஓய்வு எடுக்கும் ராகுல்காந்தி இன்று மாலை 3 மணிக்கு களியக்காவிளை சென்று அடைகிறார்.

    ராகுல்காந்தி மேற்கொண் டுள்ள இந்திய ஒற்றுமை பயணம் தமிழகத்தில் 4 நாட் கள் நடப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது. அதன்படி, கன்னியாகுமரியில் கடந்த 7-ந்தேதி தொடங்கிய பாத யாத்திரை இன்று குமரி மாவட்ட எல்லையான களியக்காவிளை சென்று அடைகிறது. இன்றிரவு களியக்காவிளை அருகே கேரள எல்லை பகுதியான செறுவாரக்கோணத்தில் நிறைவு செய்கிறார். அதன்படி, ராகுலின் தமிழக சுற்றுப்பயணம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

    நாளை முதல் ராகுல்காந்தியின் கேரள பாத யாத்திரை தொடங்கு கிறது. அங்கு 18 நாட்கள் அவர், பாத யாத்திரை மேற் கொள்கிறார். இன்று கேரள எல்லையை நெருங்க நெருங்க ராகுலுக்கு தமிழிலும், மலையாளத்திலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    ×