என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழக அணி வீரர்-வீராங்கனைகள் தேர்வு
    X

    கோப்பு படம் : தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் 

    தமிழக அணி வீரர்-வீராங்கனைகள் தேர்வு

    • 2 நாட்கள் நடக்கிறது
    • பல்வேறு வகையான போட்டிகளில் பங்கேற்பதற்கு தேர்வு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி ராஜேஷ் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் வருகிற ஏப்ரல் மாதம் வரை நடைபெற வுள்ள பல்வேறு வகை யான விளையாட்டுப் போட்டிகளுக்கு தமிழ் நாடு அணிக்கான வீரர்கள், வீராங்க னைகள் தேர்வு கீழ்க்கா ணும் விளையாட்டுகள் விவரப்படி நடைபெற உள் ளது. தேர்வு நடைபெறும் தேதி, இடம், நேரம் விவரம் வருமாறு:-

    வருகிற 14-ந்தேதி காலை 7 மணிக்கு சென்னை ஜவகர் லால் நேரு உள் விளையாட்ட ரங்கத்தில் கூடைப்பந்து போட்டிக்கு மாணவர்கள் 12 பேரும் மாணவிகள் 12 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். 13-ந்தேதி காலை 7 மணிக்கு சென்னை ஜவகர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில் கால்பந்து போட்டிக்கு மாணவிகள் 20 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    13-ந்தேதி காலை 7 மணிக்கு திருச்சி அண்ணா விளை யாட்டரங்கத்தில் வளை கோல்பந்து போட் டிக்கு மாணவர்கள் 18 பேர் தேர்வு செய்யப் பட உள்ளனர்.

    13-ந்தேதி காலை 7 மணிக்கு சிவகங்கை மாவட்ட விளை யாட்டு அரங்கத்தில் கோ-கோ போட்டிக்கு மாணவிகள் 15 பேர் தேர்வு செய்யப்பட உள் ளனர். 13-ந்தேதி காலை 7 மணிக்கு சென்னை ஜவகர்லால் நேரு விளையாட்டரங் கத்தில் கையுந்து பந்து போட் டிக்குமாணவர்கள் 12 பேரும், மாணவிகள் 12 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    வயது வரம்பை பொறுத் தவரையில் 1-1-2004 அன்று அல்லது அதற்குப் பின்னர் பிறந்த விளையாட்டு வீரராக இருத்தல் வேண்டும். ஆதார் கார்டு அல்லது பாஸ்போர்ட். பள்ளியில் பயில்வதற்கான சான்றிதழ், பிறப்பு சான்றி தழ் (குறைந்தபட்சம்) 5 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட தாக இருத்தல் வேண்டும். (அதாவது 2012 ஜனவரி மாதம் 1-ந் தேதி அல்லது அதற்கு முன் நக ராட்சி அல்லது கிராம பஞ்சாயத்தால் வழங்கப் பட்டது).

    தமிழ்நாடு அணி தேர்வு செய்யப்பட்ட பின்னர் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு உத்தரவாதம் அளிக்க இயலாது. தேர்வு போட்டிக்கு தினப்படி, பயணப்படி வழங்கப்பட மாட்டாது. எனவே இந்த தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் வீரர், வீராங்க னைகள் தேர்வு நடை பெறும் இடங்களில் குறிப் பிட்ட நாளில் தகுந்த ஆவ ணங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×