search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடுப்பு சுவர்"

    • சாமந்தான்பேட்டையில் தூண்டில் வளைவுடன் சிறு துறைமுகம் அமைக்கப்படும்.
    • கீச்சாங்குப்பம் பகுதிகளில் 14 கோடி ரூபாய் செலவில் பாதுகாப்பு தடுப்புச் சுவர் அமைக்கப்படும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாகப்பட்டினம் சாமந்தான்பேட்டையில் தூண்டில் வளைவுடன் சிறு துறைமுகம் அமைக்க வேண்டும் என்பதும், நாகூர் கீழப் பட்டினச்சேரியில் கடல் அரிப்பு தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என்பதும் நீண்டகால கோரிக்கைகள்.

    சட்டமன்றத்தில் இது குறித்து நான் பலமுறை பேசியதோடு, அமைச்சரிடமும் வலியுறுத்தி வந்தேன். முதலமைச்சரிடமும் கோரிக்கை கடிதம் அளித்தேன்.

    நமது தொடர் முயற்சியின் விளைவாக, சட்டமன்றப் பேரவையில் 05-04-2023 அன்று நடைபெற்ற மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மானியக் கோரிக்கையின் போது, அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், நாகப்பட்டினம் சாமந்தான்பேட்டையில் 40 கோடி ரூபாய் செலவில் சிறிய மீன்பிடித் துறைமுகம் மற்றும் நாகூர் பட்டினச்சேரி - கீச்சாங்குப்பம் பகுதிகளில் 14 கோடி ரூபாய் செலவில் பாதுகாப்பு தடுப்புச் சுவர் அமைக்கப்படும் என்று அறிவிப்பு செய்தார்.

    இதற்காக நாகை தொகுதி மக்களின் சார்பில் முதலமைச்சருக்கும், அமைச்சருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இவ்வாறு ஷா நவாஸ் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.

    • மேம்பாலத்தில் இருந்து வந்த கார் சரக்கு வேன் பின்புறம் மோதி நின்றது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வேன், காரை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர்.

    திருப்பூர் :

    திருப்பூர் பல்லடம் சாலை எப்போதும் போக்குவரத்து நிறைந்த சாலையாகும். இன்று பகல் 12 மணியளவில் வாகனங்கள் இடைவிடாமல் இயங்கி கொண்டிருந்தன. இந்தநிலையில் திருப்பூரில் உள்ள டையிங் நிறுவனத்தை சேர்ந்த சரக்கு வேன் ஒன்று பல்லடம் நோக்கி சென்று கொண்டிருந்தது. திருப்பூர் பழைய பஸ் நிலையம் பல்லடம் சாலை தபால் நிலையம் அருகே வந்த போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்தார். அவர் மீது மோதாமல் இருக்க சரக்கு வேன் டிரைவர் வேனை ஓரமாக திருப்பினார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் ேமாதி நின்றது. இதில் அதிர்ஷ்டவசமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் உயிர் தப்பினர். டிரைவர் சுதாரித்து செயல்பட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

    இதனிடையே விபத்து நிகழ்ந்த போது மேம்பாலத்தில் இருந்து வந்த கார் சரக்கு வேன் பின்புறம் மோதி நின்றது. காரில் வந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். இந்த விபத்தில் கார் மற்றும் வேனின் முன்பகுதி லேசான சேதமடைந்தது. இந்த விபத்து காரணமாக திருப்பூர் பல்லடம் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கார், பஸ்கள் என ஏராளமான வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நின்றன. இதனால் அவசர வேலையாக சென்றவர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வேன், காரை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். அதன்பிறகு போக்குவரத்தை சீர் செய்தனர். சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது.

    திருப்பூர் பல்லடம் சாலையில் எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும். மேலும் வாகனங்கள் மேம்பாலத்தில் இருந்து கீழ் இறங்கும் போது பழைய பஸ் நிலைய பகுதியில் இருந்து வாகனங்களும், மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்களும் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கிறது. மேலும் அந்த பகுதியில் வாகன ஓட்டிகள் விதிமுறைகளை பின்பற்றாமல் செல்வதால் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுகிறது. விபத்துகள் நிகழாமல் தடுக்க அங்குள்ள தனியார் ஓட்டல் அருகே வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. அதேப்போல் மேம்பாலத்தில் இருந்து இறங்கும் பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.    

    • இதற்கு அடுத்தபடியாக ஏராளமான விவசாயிகள் காய்கறி விவசாயம் செய்து வருகின்றனர்.
    • ஓடை முழுவதும் மண் அடைந்து, புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து காணப்பட்டது.

    அரவேணு,

    கோத்தகிரி பகுதி மக்களுக்கு தேயிலை விவசாயமே பிரதானமான தொழிலாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஏராளமான விவசாயிகள் காய்கறி விவசாயம் செய்து வருகின்றனர்.

    இவர்கள் மலை காய்கறிகள் மட்டுமின்றி ஏற்றுமதி தர வாய்ந்த இங்கிலீஷ் காய்கறிகளையும் பயிரிட்டு கணிசமான லாபம் ஈட்டி வருகின்றனர்.

    கூக்கல்தொரை விவசாயிகள் உயிலட்டி நீர்வீழ்ச்சியில் இருந்து வரும் தண்ணீரையும், ஓடேன் ஓடையை நம்பி எரிசிபெட்டா, ஓடேன்துறை கிராம விவசாயிகளும், காக்காசோலை ஓடையை நம்பி அப்பகுதி விவசாயிகளும், குருகுத்தி ஓடையை நம்பி குருகுத்தி, காவிலோரை, நெடுகுளா விவசாயிகளும் உள்ளனர்.

    கடந்த சில ஆண்டுகளாக இந்த ஓடைகள் உரிய முறையில் தூர் வாரப்படாததால், ஓடை முழுவதும் மண் அடைந்து, புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து காணப்பட்டது.

    மேலும் ஓடையை சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.

    இதனால் ஓடை சுருங்கியதுடன், மழை காலங்களில் மழை நீரை சேமித்து வைத்து கோடை காலங்களில் தண்ணீரை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இந்த ஓடைகளை தூர் வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்ட வேளாண் பொறியியல் துறை சார்பில் நில அளவை செய்து, ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீரோடையை நன்கு தூர் வார முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து கலெக்டரின் உத்தரவின் பேரில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யபட்டு பணிகள் தொடங்கின.

    முதற்கட்டமாக நில அளவை செய்யபட்டு, விவசாயிகள் ஆக்கிரமிப்பு செய்திருந்த அரசு நிலம் மீட்கப்பட்டது.தொடர்ந்து பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஓடேன் ஓடை, காக்கா சோலை ஓடை மற்றும் குருகுத்தி ஓடை ஆகியவை ஆழமாக தூர்வாரப்பட்டன.

    மேலும் ஓடைப் பராமரிப்பு திட்டத்தின் கீழ் காங்கிரீட்டாலான தடுப்புச் சுவர் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகள் நிறைவு பெற்றால் வரும் கோடை காலத்தில் விவசாயிகளுக்கு, விவசாயம் மேற்கொள்ள தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இது குறித்து வேளாண் பொறியியல் துறை உதவி கோட்ட பொறியாளர் பாலன் கூறியதாவது:-

    கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஓடைகள் தூர் வாரப்படாமலும், ஆக்கிரமிப்பு செய்யபட்டு இருந்ததால், மழைக் காலங்களில் நீர் பெருக்கெடுத்து, அடிக்கடி தாழ்வான விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்கள் சேதமாகி வந்தது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வந்தது.

    இதையடுத்து வேளாண் பொறியியல் துறை சார்பில் ஓடைகளை தூர் வார முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யபட்டு ஓடேன் ஓடையில் 2200 மீட்டர் நீளத்திற்கும், காக்கா சோலை ஓடையில் 1500 மீட்டர் நீளமும், குருகுத்தி ஓடையில் 2020 மீட்டர் நீளமும் தூர் வாரும் பணிகள் நடைபெற்றது.

    தற்போது ஓடை பராமரிப்பு நிதி திட்டத்தின் கீழ் ஓடையின் பக்கவாட்டில் தடுப்புச் சுவர்கள் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் விரைவில் நிறைவு பெறும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மோட்டார் சைக்கிளில் சென்ற போது பரிதாபம்
    • ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    நாகர்கோவில்:

    காவல்கிணற்றில் இருந்து திருவனந்தபுரத்திற்கு நான்கு வழி சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.இந்த பணிகள் இன்னும் நிறைவு பெறவில்லை.ஒரு சில இடங்களில் மட்டும் பணிகள் நிறைவடைந்து உள்ளது.

    வெள்ளமடம் பகுதியில் நான்கு வழி சாலை பகுதியில் சாலையில் சிமெண்ட் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தது. எனவே அந்த பகுதியில் உள்ள சிமெண்ட் தடுப்புகளை மாற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அந்த பகுதியில் உள்ள சிமெண்ட் தடுப்பு சுவர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

    இது பற்றி தகவல் தெரிந்ததும் ஆரல்வாய் மொழி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனால் இன்னும் பலியானவர் யார் என்ற விவரம் தெரியவில்லை. விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

    • ஜூலை மாதம் இறுதியில் கடல் சீற்றம் தணிந்ததும் மலை மற்றும் கடல் பகுதியில் சூறைக்காற்று வீசியது
    • மீன் ஏலக்கூடத்தின் அஸ்திவாரம் பகுதி முழுவதும் மணலரிப்பு ஏற்பட்டு கட்டிடம் இடிந்து கடலில் விழுந்தது

    கன்னியாகுமரி :

    கடந்த ஜூலை மாதத்தில் குமரி கடல் சீற்றமாக காணப்பட்டது.ஜூலை மாதம் இறுதியில் கடல் சீற்றம் தணிந்ததும் மலை மற்றும் கடல் பகுதியில் சூறைக்காற்று வீசியது.இதனால் மீன்பிடித்தொழில் பாதிக்கப்பட்டது.

    கடந்த 6-ந் தேதிவரை கடலில் பலத்த காற்று வீசியதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. கடந்த 8-ந் தேதி முதல் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று மதியம் குளச்சல் அருகே கொட்டில்பாடு மீனவர் கிராமத்தில் திடீர் கடல் சீற்றம் ஏற்பட்டது.ராட்சத அலைகள் எழுந்து அலை தடுப்பு சுவரை தாண்டி விழுந்தது.

    இதனால் கொட்டில்பாடு கிழக்கு பகுதியில் சுமார் 50 மீட்டர் நீளத்திற்கு அலை தடுப்பு சுவர் கற்கள் சரிந்து உள்ளது.மேலும் மணற்பரப்பில் பெரும் மணலரிப்பு ஏற்பட்டுள்ளது. அப்பகுதி தென்னை மரங்களின் வேர் பகுதிவரை மணலரிப்பு ஏற்பட்டுள்ளதால் மரங் கள் சாயும் நிலையில் காணப்படுகிறது. மேற்கு பகுதியில் கட்டப்பட்ட மீன் ஏலக்கூடத்தின் அஸ்திவாரம் பகுதி முழுவதும் மணலரிப்பு ஏற்பட்டு கட்டிடம் இடிந்து கடலில் விழுந்தது.ஆலயம் அருகில் ஏற்பட்டுள்ள அரிப்பால் கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அங்கு கடந்த மாதம் ஏற்பட்ட கடலரிப்பில் நிரப்பப்பட்ட மணல்கள் முழுவதும் கடல் இழுத்து சென்று உள்ளது.எனவே அங்கு நிலையான உறுதியான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தகவல்
    • தேங்காப்பட்டணத்தில் ஆறும் கடலும் கலக்கும் பகுதியில் தற்போது மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி:

    தேங்காப்பட்டணத்தில் ஆறும் கடலும் கலக்கும் பகுதியில் தற்போது மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது. மீன்பிடி துறைமுகத்துக்காக கடலும் ஆறும் சேரும் கழிமுக பகுதியில் உள்ள இயற்கை மணல் திட்டுகள் அழிக்கப்பட்டதால் வறட்சி காலங்களில் கடல் நீர் எளிதில் ஆற்று நீருடன் கலந்து ஆற்று நீர் உப்பு நீராக மாறியதுடன் கரையோர பகுதி குடி நீர் கிணறுகள் உப்பு நீராக மாறியது. அதுமட்டுமின்றி குமரி மாவட்டத்தில் 80 சதவீத மக்கள் பயன்படுத்துகின்ற குழித்துறை ஆற்றில் உள்ள பல குடிநீர் கிணறுகளில் உப்பு நீர் புகுந்ததால் சுமார் 2 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் உப்பு கலந்த குடிநீர் குடிக்கும் துயரநிலைக்கு தள்ளப்பட்டனர்.

    இதனால் கரை யோரப்பகுதி குடிநீர் கிணறுகள் மற்றும் ஆற்றில் உள்ள குடி நீர்திட்ட கிணறுகளை பாதுகாக்க பரக்காணியில் தடுப்பணை கட்ட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று நபார்டு திட்டம் ரூ.16 கோடியில் தடுப்பணை கட்டும் பணியானது கடந்த 3ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி தற்போது நிறைவடைந்துள்ளது.

    குமரி மாவட்டத்தை பொறுத்தவரையில் ஒவ்வொரு ஆண்டும் 2 முறை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கல் தடுப்பணையின் மறு பகுதியான ஈழகுடி விளாகம் பகுதியில் இருந்த பல வீடுகளும், ஆற்றின் கரை பகுதிகளும் சரிந்து விழுந்தது.

    மேலும் அடுத்துள்ள கணியம்விளை, மரப்பாலம், கலிங்கராஜபுரம் போன்ற கிராமங்களிலும் தண்ணீர் புகுந்தது. இதனால் தடுப்பணையின் மறுபகுதியிலும் மண் போட்டு நிரப்ப வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் இது வரையிலும் நிரப்பாத காரணத்தால் தற்பொழுது தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் தடுப்பணை யில் மறுபுறம் வழியாகவும் ஆற்றுநீர் பாய்ந்து கொண்டி ருக்கிறது. தண்ணீர் இப்படி திசைமாறி சென்றால் வைக்கல்லூர் கிராமமே தண்ணீரில் மூழ்கும் நிலை உள்ளது. இந்த நிலையில் பணி நிறைவடைந்த பரக்காணி தடுப்பணையை பார்வையிட ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. வந்திருந்தார். அந்த பகுதியை பார்வை யிட்ட பின்னர் அவர் கூறியதாவது:-

    பரக்காணியில் தற்போது தடுப்பணை பணிகள் நிறைவு பெற்றுள்ளது. தடுப்பணையின் மறுபகுதி யில் வெள்ள பெருக்கினால் பாதிப்பு ஏற்படுவதாக புகார் எழுந்ததின் பேரில் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளை சந்தித்து மனு அளிக்கப்பட்டது.

    இதையடுத்து அந்த பகுதியில் ஆற்றின் கரையோரம் தடுப்பு சுவர் அமைக்க முதல்கட்ட ஆய்வு பணிகள் நடந்தது. அடுத்த கட்டமாக மதிப்பீடு தயார் செய்து நிதி ஒதுக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கால தாமதமின்றி அந்த பகுதியில் தடுப்பு சுவர் அமைக்கப்படும். மேலும் கரையோரப்பகுதி குடி நீர் கிணறுகளை பாதுகாக்கும் வகையில் முஞ்சிறை அருகே மங்காடு பகுதியில் மேலும் ஒரு தடுப்பணை அமைப்பதற்கான நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என கூறினார். நிகழ்ச்சியில் வட்டார தலைவர் வழக்கறிஞர் பால்ராஜ், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செய லாளர் ஜோர்தான், மாவட்ட செயலாளர் ஷேக் முகம்மது மற்றும் ரகுபதி, லாசர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஓமலூரில் இருந்து செங்கல் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திற்கு லாரி சென்று கொண்டிருந்த்து.
    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே வைக்கப்பட்டு இருந்த சென்டர் மீடியனில் மோதியது.

    கோபி:

    சேலம் மாவட்டம் ஓமலூரில் இருந்து செங்கல் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திற்கு லாரி சென்று கொண்டிருந்த்து.லாரியை ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டியை சேர்ந்தவர் நடராஜ் (35) என்பவர் ஓட்டிச்சென்றார்.

    லாரியில் டிரைவருடன் அதே பகுதியை சேர்ந்த லோடு மேன்கள் ராஜேந்திரன், ராஜமாணிக்கம், மணிகண்டன், மாரியப்பன் ஆகியோரும் சென்று கொண்டிருந்தனர்.

    லாரி இன்று அதிகாலை கோபிசெட்டிபாளையம் கள்ளிப்பட்டி பிரிவு அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே வைக்கப்பட்டு இருந்த சென்டர் மீடியனில் மோதியது.

    மோதிய வேகத்தில் லாரியின் முன் பகுதி முழுமையாக நொறுங்கியது. அதைத்தொடர்ந்து இன்று காலை மற்றொரு லாரி வரவழைக்கப்பட்டு லாரியில் இருந்த செங்கல்கள் மாற்றப்பட்டு லாரி கிரேன் மூலமாக அகற்றப்பட்டது.

    லாரி விபத்துக்குள்ளான இடத்தில் பெட்ரோல் பங்க் உள்ளது. அதே இடத்தில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் போக்குவரத்து மாற்றப்பட்டு உள்ளது.

    லாரி ரோட்டின் தடுப்பு மீது மோதிய போது எதிரே வாகனங்கள் வந்திருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டு இருக்கும். அதிர்ஷ்டவசமாக வாகனங்கள் எதுவும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    கரட்டடிபாளையத்தில் இருந்து குள்ளம்பாளையம் வரை 5 கிலோ மீட்டர் தூரத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சென்டர் மீடியனில் 25 க்கும் மேற்பட்ட லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது.

    நெடுஞ்சாலை–த்துறையினர் சென்டர் மீடியன் குறித்து பெரும்பாலான இடங்களில் எச்சரிக்கை வழிகாட்டு பலகை, பிரதிபலிக்கும் ஸ்டிக்கர் ஒட்டாமல் உள்ளதாலேயே விபத்து ஏற்படுவதாக வாகன ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.

    • குளத்தில் ஆகாயத் தாமரை, செடி, கொடிகள் மரங்கள் வளர்ந்து குளம் இருக்கும் இடமே தெரியவில்லை. குளத்தை தூய்மை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.
    • குளத்தின் தென்கரையில் தடுப்பு சுவர் அமைக்க டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்க உள்ளதாகவும் மேலும் வெட்டு குளம், உப்பு குட்டை தூர்வாரும் பணிகள் நடைபெற்று தடுப்பு சுவர் கட்டும் பணி நடந்துவருகிறது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சி பகுதியில் 108 குளம் மற்றும்ஏரி, உள்ளது. இதில் நகரின் மைய பகுதியில் உள்ள மாரியம்மன்கோவில் தெருவில் அக்னி தீர்த்தம் எனப்படும் அரியாண்டி குளம் உள்ளது. இந்த குளம் 11.5 ஹெக்டேர் பரப்பளவில் இருந்தது. தற்போது பலராலும் ஆக்கிரமிப்பு செய்யபட்டு குளத்தின் பரப்பளவு குறைந்தது.

    குளத்தில் ஆகாயத் தாமரை, செடி, கொடிகள் மரங்கள் வளர்ந்து குளம் இருக்கும் இடமே தெரியவில்லை. குளத்தை தூய்மை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.

    அதன் எதிரொலியாக கோட்டாட்சியர் ஜெயராஜ பெளலின், தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் வருவாய்துறையினர் கணக்கில் உள்ளப்படி 18-க்கும் மேற்பட்ட குளங்களை கண்டறிந்து ஆக்கிரமிப்புதாரர்களுக்கு முறைப்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டு குளத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுத்தனர்.

    இந்நிலையில் அரியாண்டி குளத்தை நகராட்சி தலைவா் புகழேந்தி, துணைத் தலைவர் மங்களநாயகி, ஆணையர் ஹேமலதா, பொறியாளார் முகமது இப்ராஹீம், வார்டு கவுன்சிலர் திருக்குமரன் மற்றும் தன்னார்வலர்கள் பொதுமக்கள் உதவியுடன் குளத்தில் உள்ள செடி, கொடிகள் , ஆகாயத் தாமரையும் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    தொடர்ந்து அந்த குளத்தின் தென்கரையில் தடுப்பு சுவர் அமைக்க டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்க உள்ளதாகவும் மேலும் வெட்டு குளம், உப்பு குட்டை தூர்வாரும் பணிகள் நடைபெற்று தடுப்பு சுவர் கட்டும் பணி நடந்துவருகிறது என நகராட்சி ஆணையர் ஹேமலாதா தெரிவித்தார்.

    • தீயணைப்புத் துறையினர் எச்சரிக்கை
    • பெண் ஒருவர் நடந்து சென்றார்.


    ஊட்டி :

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த 5 நாட்களாக இடைவிடாமல் பெய்து வரும் நிலையில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்து வருகின்றன. இந்நிலையில் இன்று காலை சுமார் 11 மணி அளவில் கூடலூர் அத்திப்பள்ளி சாலையில் உள்ள ஆற்றின் கரையோரத்தில் பெண் ஒருவர் நடந்து சென்றார். அந்தப் பெண் நடந்து சென்ற ஒரு சில மணி நொடியில் ஆற்றின் தடுப்பு சுவர் இடிந்து ஆற்றில் விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக அந்த பெண் உயிர் பிழைத்தார். தொடர்ந்து லேசான காற்றுடன் கூடலூர், பந்தலூர் பகுதியில் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் வாகனங்களை மரத்தின்கீழ் நிறுத்த கூடாது என தீயணைப்புத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • களியக்காவிளை அருகே திருத்தோபுரம் பகுதியில் பஸ் வந்த போது அதன் முன் பக்க டயர் வெடித்தது.
    • ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.

    கன்னியாகுமரி:

    திருவனந்தபுரத்தில் இருந்து இன்று காலை கேரள அரசு பஸ் கன்னியாகுமரிக்கு புறப்பட்டு வந்தது. எர்ணா குளத்தைச் சேர்ந்த சோம சுந்தரம் பஸ்சை ஓட்டி வந்தார். களியக்காவிளை அருகே திருத்தோபுரம் பகுதியில் பஸ் வந்த போது அதன் முன் பக்க டயர் வெடித்தது.

    இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி சாலையில் வைத்திருந்த தடுப்பு சுவரில் மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி சேதமடைந்தது. பஸ்சின் கண்ணாடியும் உடைந்து நொறுங்கியது.ஓட்டு நரின் சாமர்த்தியத்தால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.

    ×