search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிமெண்ட்"

    • கடலில் 80 மீட்டர் நீளத்துக்கு 1140 சிமெண்ட் பிளாக்குகள் மூலம் நிரப்பப்படுகிறது
    • பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி விவேகா னந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை போன்றவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள் நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து ரசித்து வரு கிறார்கள்.

    இவற்றை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது. இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    இந்த படகுகளை நிறுத்து வதற்காக கன்னியாகுமரி வாவதுறை கடற்கரை பகுதியில் படகுத்துறை உள்ளது. இங்கு விவேகா னந்த கேந்திர பணியாளர்கள் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு பணிக்கு செல்வதற்காக பயன்படுத்தப்பட்டுவரும்"ஏக்நாத்"என்ற படகும் நிறுத்தி வைக் கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையில் வட்ட கோட்டைக்கு இயக்கப்படும் தாமிரபரணி, திருவள்ளுவர் ஆகிய 2 புதிய அதிநவீன சொகுசு படகுகளும் தற்போது படகு துறையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. படகுத்துறையில் ஒரே இடத்தில் 6 படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதால் கடும் இட நெருக்கடி ஏற்பட்டு உள் ளது. இதனால் விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல் லும் மற்ற 3 படகுகளும் இந்த படகுத் துறைக்குள் வந்து செல்வ தற்கு மிகவும் சிரமப்படு கின்றன. சில சமயங்களில் விபத்துக்கள் நேரிட வாய்ப்பு கள் இருந்து வருகிறது.

    இதைத் தொடர்ந்து படகு துறையில் ஏற்பட்டுஉள்ள இட நெருக்க டியை சமா ளிக்க படகுத் துறையின் தெற்கு பக்கம் உள்ள கடல் பகுதியில் கூடுதலாக ஒரு புதிய படகு தளம் அமைக்க சுற்றுலாத்து றை நடவ டிக்கை மேற்கொண்டு உள்ளது. புதிய படகு தளம் ரூ.7 கோடி செல வில் அமைக்க திட்டமிடப் பட்டு உள்ளது. இதற்கான திட்ட மதிப் பீட்டை மீன்வ ளத்துறை பொறியியல் பிரிவைச் சேர்ந்த பொறி யியல் வல்லு னர்கள் தயா ரித்து உள்ள னர்.

    இதைத் தொடர்ந்து படகு தளம் அமைப்ப தற்காக 1140 சிமெண்ட் பிளாக்குகள் கன்னியா குமரிஅருகே உள்ள மாதவபுரம் பகுதியில் தயாரிக் கப்பட்டது. இந்த ஒவ்வொரு சிமெண்ட் பிளாக்குகளும் 4 டன் முதல் 7½ டன் வரை எடை கொண்டதாக அமைக்கப் பட்டு உள்ளது.

    இந்த சிமெண்ட் பிளாக்குகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கனரக வாகனங்களில் கிரேன் மூலம் ஏற்றப்பட்டு கன்னியா குமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுதுறை வளாகத்தில் கொண்டு வந்து வைக்கப் பட்டது.

    இந்த நிலையில் புதிய படகு தளம் அமைக்கும் பணி தொடங்கிஉள்ளது. 80 மீட்டர் நீளம் (264அடி) 20 மீட்டர் அகலத்தில் இந்த புதிய படகு தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது." ட " வடிவில் இந்த புதிய படகு தளம் அமைக்கப்படு

    கிறது. இதுவரை 150 சிமெண்ட் பிளாக்குகள் 40 டன் எடை திறன் கொண்ட ராட்சத கிரேன் மூலம் கடலில் இறக்கி வைக்கப்பட்டு உள்ளது.

    கடலில் 3 மீட்டர் ஆழத்துக்கு இந்த சிமெண்ட் பிளாக்குகள் இறக்கி வைக்கப்பட்டு இந்த புதிய படகுதளம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கடலுக்கு அடியில் இந்த சிமெண்ட் பிளாக்கு களை இறக்கி வைக்கும் பணியை கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள 133 அடி உயரதிருவள்ளுவர் சிலையை நிறுவும் பணியில் ஈடுபட்ட இம்மானுவேல் அண்டர் வாட்டர் என்ஜினி யரிங் நிறுவனம் மேற் கொண்டு வருகிறது.

    • ரூ.1.83 கோடி செலவில் கட்டிடம் கட்ட டெண்டர் விடப்பட்டது.
    • பணியில் இருக்கும் ஊழியர்கள் மீது காரைகள் பெயர்ந்து விழும் சூழல் நிலவுகிறது.

    சீர்காழி:

    சீர்காழி புதிய பஸ் நிலையம் அருகாமையில் தாசில்தார் அலுவலகம் இயங்கிவந்தது. 94 வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள், மாணவர்கள் உள்ளிட்டோர் பல்வேறு சான்றிதழ் தேவைகளுக்காக தாசில்தார் அலுவலகம் வந்து செல்கின்றனர்.

    பழமையான இந்த கட்டிடத்தை அகற்றி வேறு புதிய கட்டிடம் கட்ட கடந்த அ.தி.மு.க ஆட்சியில் 2018-ம் ஆண்டில் ரூ.1.83 கோடி செலவில் கட்டடம் கட்ட டெண்டர் விடப்பட்டது.

    இதனையடுத்து தாசில்தார் அலுவலகம் பிடாரி தெற்கு வீதியில் உள்ள சட்டைநாதர் தேவஸ்தானத்திற்கு சொந்தமான திருமண அரங்கில் இடம் மாற்றம் செய்யப்பட்டு அது முதல் இயங்கிவருகிறது.

    அதன்பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு மறு மதிப்பீடு செய்யப்பட்டு ரூ.4 கோடி வரை கூடுதல் நிதி கோரப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டு வருவதால் புதிய கட்டடம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டது.

    இதனிடையே கடந்த 6 ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் தாசில்தார் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி ஏதும் இல்லாத நிலையில் உள்ளது.

    அலுவலகத்தின் உள்ளேயும் ஆஸ்பெட்டாஸ் கூரை உடைந்தும், அதன் கீழ் உள்ள தெர்மாகோல் பால்சீலிங் வேலைபாடுகள் உடைந்தும் தொங்கிகொண்டுள்ளது.

    வளாகத்தின் சுற்றி புதர்கள் மண்டி கிடப்பதால் பாம்புகள் அவ்வபோது உள்ளே புகுந்து அச்சத்தை ஏற்படுத்திவருகிறது.

    தற்போது துணை வட்டாட்சியர்கள் அலுவலக கான்கிரீட் மேற்கூரைகள் சிமென்ட் காரைகள் அவ்வபோது பெயர்ந்து திடிரென கீழே விழுந்து அச்சத்தை ஏற்படுத்துகிறது.பணியில் இருக்கும் அலுவலர்கள், ஊழியர்கள் வந்து செல்லும் பொதுமக்கள் மீது சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழும் ஆபத்தான சூழல் நிலவுகிறது.

    இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தாமு.இனியவன் கூறுகையில், சீர்காழி தாசில்தார் அலுவலகத்திற்கு நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்லும் நிலையில் மேற்கூரை சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் வேறு கட்டடத்திற்கு வட்டாட்சியர் அலுவலகத்தை மாற்றிடவும், உடனடியாக புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்திடவும் வேண்டும் என்றார்.

    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ கோரிக்கை
    • ஒரு மூட்டை சிமெண்டின் விலை 300 முதல் 320 ரூபாய் என்ற விலையில் தான் விற்பனை செய்யப்படுகிறது.

    மார்த்தாண்டம்,அக்.14-

    தமிழக காங்கிரஸ் கட்சி யின் துணை தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சிமெண்ட் விலை மூடை ஒன்றுக்கு 150 ரூபாய் வரை அதிகரித்துள்ளதால், கட்டுமானத் தொழில்கள் முடங்கும் நிலை ஏற்பட்டு ள்ளது. நாட்டின் பொருளா தார வளர்ச்சியில் விவ சாயத்திற்கு அடுத்த படியாக தொழிலாளர்களின் வாழ்வில் பெரும் பங்கு வகிப்பது கட்டுமானத் துறை யாகும். கட்டுமான தொழிலில் சிமெண்டின் பயன்பாடு முக்கிய பங்கு வகிக்கிறது.

    கடந்த 7 நாட்களுக்கு முன்பு சிமெண்ட் மூடை ரூ.300 முதல் ரூ.320-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் செயற்கையான முறையில் சிமெண்ட் தட்டுப்பாட்டை உருவாக்கி அதிரடியாக தாறுமாறாக விலையை உயர்த்தி உள்ளனர். இதன் மூலம் சிமெண்ட் மூடை ஒன்றுக்கு 100 முதல் 150 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. இதனால் தற்போது மூடை ரூ.450 வரை விற்பனை செய்யப்படு கிறது.

    இதற்கு முன்பு எல்லாம் சிமெண்ட் ஒரு மூடைக்கு 10 ரூபாய் தான் அதிகரிக்கும். ஆனால் தற்போது சிமெண்ட் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் எதுவும் விலை உயராத நிலையில் சிமெண்ட் விலை உயர்த்தப் பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    இந்த விலை உயர்வால் குமரி மாவட்டத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் காங்கிரீட் வீடுகள் கட்ட இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அரசின் இலவச வீடு திட்டத்தில் வீடு கட்டும் பயனாளிகளும், வங்கிக்கடன் உதவி பெற்று வீடு உள்ளிட்ட கட்டிடப்பணி கள் செய்து வருவோரும், ஒப்பந்த அடிப்படையில் கட்டிட வேலை எடுத்து செய்வோரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதனால் குமரி மாவட்டத் தில் உள்ள ஆயிரக்கணக்கான கட்டுமான தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் பக்கத்து மாநிலங்களான கேரளா மற்றும் ஆந்திராவில் ஒரு மூட்டை சிமெண்டின் விலை 300 முதல் 320 ரூபாய் என்ற விலையில் தான் விற்பனை செய்யப்படுகிறது.

    ஆகவே சிமெண்டை அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் கொண்டு வந்து குமரி மாவட்டத்தில் 150 ரூபாய் வரை உயர்த்தபட்டுள்ள சிமெண்ட் விலை உயர்வை குறைக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சிமெண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு ஒரு குழுவை ஏற்படுத்தி அக்குழுவினர் கட்டுமான பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தொடங்கி வைத்தார்
    • கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சிக்குட்பட்ட 8-வது வார்டு பகுதியான லூர்துமாதா தெருவில் உள்ள சானல் ரோட்டில் பேரூராட்சி பொது நிதியில் இருந்து ரூ.9 லட்சத்து 80 ஆயிரம் செலவில் புதிதாக தடுப்புச்சுவர் கட்டி சிமெண்ட் காங்கிரீட் தளம் அமைக்கப்பட உள்ளது. இந்த பணியின் தொடக்க விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் கலந்துகொண்டு புதிதாக அமைக்கப்பட உள்ள தடுப்பு சுவருடன் கூடிய சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் ஆனி ரோஸ்தாமஸ், ஆட்லின் சேகர், அரசு ஒப்பந்ததாரர் சுதாபாஸ்கர், முன்னாள் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் தாமஸ், தி.மு.க. நிர்வாகிகள் அன்பழகன், புனிதன், புஷ்பராஜ், சகாயம், நிசார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • மோட்டார் சைக்கிளில் சென்ற போது பரிதாபம்
    • ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    நாகர்கோவில்:

    காவல்கிணற்றில் இருந்து திருவனந்தபுரத்திற்கு நான்கு வழி சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.இந்த பணிகள் இன்னும் நிறைவு பெறவில்லை.ஒரு சில இடங்களில் மட்டும் பணிகள் நிறைவடைந்து உள்ளது.

    வெள்ளமடம் பகுதியில் நான்கு வழி சாலை பகுதியில் சாலையில் சிமெண்ட் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தது. எனவே அந்த பகுதியில் உள்ள சிமெண்ட் தடுப்புகளை மாற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அந்த பகுதியில் உள்ள சிமெண்ட் தடுப்பு சுவர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

    இது பற்றி தகவல் தெரிந்ததும் ஆரல்வாய் மொழி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனால் இன்னும் பலியானவர் யார் என்ற விவரம் தெரியவில்லை. விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

    • சேலம் கருப்பூர் அருகே சிமெண்ட் ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • விபத்தில் படுகாயம் அடைந்த டிரைவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள நான்கு கால் காலம் பகுதியில் ெரயில்வே மேம்பால பணி நடந்து வருகிறது.

    இதற்காக சேலம் கருப்பூர் பகுதியில் இருந்து ஒரு டிராக்டரில் சிமெண்ட் மூட்டைகள் ஏற்றிய ஒரு டிராக்டர் புறப்பட்டது. இந்த டிராக்டரை முருகேசன் (வயது 24)என்பவர் ஓட்டி சென்றார்.

    கருப்பூர் கோகுல் கிரானைட் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சாலையில் இருந்த வேகத்தடையில் டிராக்டர் ஏரி இறங்கிய போது நிலை தடுமாறி சாலையோரம் கவிழ்ந்தது. இதில் சிமெண்ட் மூடிகளுக்குள் சிக்கிய முருகேசன் பலத்த காயமடைந்தார் .அவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு உயிருக்கு போராடிய நிலையில் தீவிர சிகிச்சையில் அவர் உள்ளார். இதனை அறிந்த உறவினர்கள் கதறி துடித்தனர் .சம்பவம் குறித்து கருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதனை அறிந்த உறவினர்கள் கதறி துடித்தனர் .சம்பவம் குறித்து கருப்பூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×