search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரி மோதியது"

    • லாரி மின்கம்பம் மற்றும் புங்கை மரத்தின் மீது மோதியதில் புங்கைமரம் அடியோடு சாய்ந்தது சாலையின் குறுக்கே விழுந்தது.
    • உடனடியாக மின்சாரம் நின்றதால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருந்து முந்திரி தொலும்புகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று இரவு புறப்பட்டது. இது பண்ருட்டி தட்டாஞ்சாவடி காளி கோவில் அருகே சென்ற போது சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பம் மற்றும் புங்கை மரத்தின் மீது மோதியது. இதில் புங்கைமரம் அடியோடு சாய்ந்தது சாலையின் குறுக்கோ விழுந்தது. மேலும், மின்கம்பத்தில் இருந்த கம்பிகள்அறுந்து சாலையில் தொங்கியது. உடனடியாக மின்சாரம் நின்றதால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

    இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வர பத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். தொடர்ந்து அங்கு வந்த மின் வாரிய ஊழியர்கள் மின் கம்பியை சரிசெய்து மின் இணைப்பு வழங்கினர்.

    • நெப்போலியன் கல்லூரி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.
    • மணிவண்ணன் ஓட்டி வந்த லாரி எதிர்பாராத விதமாக கார் மீது வேகமாக மோதியது.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே நிரவி பாத்திமா பகுதியை சேர்ந்தவர் நெப்போலியன் (வயது 35). இவர் நாகை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ராஷிணி (33) காரைக்கால் ஒ.என்.சி பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 

    இவர்களது சொந்த ஊர் மன்னார்குடி வேலை காரணமாக காரைக்காலில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் நெப்போலியன் தனது காரில் நாகை மாவட்டத்திலுள்ள தனியார் கல்லூரிக்கு வேலைக்கு சென்று விட்டு மீண்டும் இரவு வீடு திரும்பினார். இதனையடுத்து காரைக்காலில் இருந்து நாகை மாவட்டத்திற்கு லாரி ஒன்று சென்றது. இந்த லாரியை மயிலாடுதுறை மாவட்டவத்தை சேர்ந்த மணிவண்ணன் (36) ஓட்டிச் சென்றார்.

    அப்போது காரைக்கால் நிரவி அருகே நெடுஞ்சாலையில் நெப்போலியன் காரில் வந்தபோது எதிரே மணிவண்ணன் ஓட்டி வந்த லாரி எதிர்பாராத விதமாக கார் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொருங்கியது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து அருகில் இருந்தவர்கள் காருக்குள் சிக்கிகொண்ட நெப்போலியனை மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 

    அங்கு நெப்போலியனை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்த விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காரைக்கால் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து ேபாலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லாரி வளைவில் திரும்பும் போது தடுப்பு சுவர் மீது மோதி நின்றது.
    • இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயம் இன்றி தப்பினார்.

    அந்தியூர்:

    மும்பையில் இருந்து நூல் மூட்டைகளை ஏற்றி கொண்டு ஒரு லாரி கோபிசெட்டி–பாளையத்துக்கு சென்று கொண்டு இருந்தது. இந்த லாரியை கோவை மாவட்டம் மேட்டுபாளையத்தை சேர்ந்த சக்தி வடிவேல் (40) என்பவர் ஓட்டி வந்தார்.

    இதை தொடர்ந்து லாரி இன்று அதிகாலை அந்தியூர் பஸ் நிலையம் பகுதியில் இருந்து அத்தாணி ரோட்டில் கோபிசெட்டிபாளையம் சென்றது.

    அப்போது லாரி ஒரு வளைவில் திரும்பும் போது திடீரென எதிர்பாராத விதமாக ரோட்டின் நடுவில் உள்ள தடுப்பு சுவர் மீது மோதி நின்றது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயம் இன்றி தப்பினார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போக்குவரத்தை சரி செய்து அந்த லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    இது குறித்து அந்தியூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அந்தியூர்-அத்தாணி ரோடு மிகவும் வளைவான பகுதியாக காணப்படுகிறது. இங்கு தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இரவு மற்றும் நள்ளிரவில் வரும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    இந்த பகுதியில் ஏற்கனவே லாரி மற்றும் கார் தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. அதே இடத்தில் 3-வது முறையாக தடுப்பு சுவர் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது.

    எனவே இந்த வளைவான பகுதியில் உள்ள தடுப்பு சுவர்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    • டிப்பர் லாரி ஒன்று திடீரென்று திரும்பிய போது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • மோட்டார் சைக்கிள் முழுவதும் லாரிக்கு அடியில் சிக்கி சேதம் அடைந்தது.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் இருந்து புதுப்பாளையம் நோக்கி மீராஷா (வயது 50) என்பவர் இன்று மதியம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருப்பாதிரிப்புலியூரில் இருந்து கம்மியம்பேட்டை சாலைக்கு செல்வதற்காக டிப்பர் லாரி ஒன்று திடீரென்று திரும்பிய போது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் வந்த மீராஷா தூக்கி வீசப்பட்டார். ஆனால் மோட்டார் சைக்கிள் முழுவதும் லாரிக்கு அடியில் சிக்கி சேதம் அடைந்தது. அப்போது சாலையில் சென்ற பொதுமக்கள் அலறியதால் டிரைவர் லாரியை உடனடியாக நிறுத்தினார்‌. இதனை தொடர்ந்து காயம் அடைந்த மீராஷா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பெரும் பரபரப்பு நிலவியது.

    • ஓமலூரில் இருந்து செங்கல் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திற்கு லாரி சென்று கொண்டிருந்த்து.
    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே வைக்கப்பட்டு இருந்த சென்டர் மீடியனில் மோதியது.

    கோபி:

    சேலம் மாவட்டம் ஓமலூரில் இருந்து செங்கல் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திற்கு லாரி சென்று கொண்டிருந்த்து.லாரியை ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டியை சேர்ந்தவர் நடராஜ் (35) என்பவர் ஓட்டிச்சென்றார்.

    லாரியில் டிரைவருடன் அதே பகுதியை சேர்ந்த லோடு மேன்கள் ராஜேந்திரன், ராஜமாணிக்கம், மணிகண்டன், மாரியப்பன் ஆகியோரும் சென்று கொண்டிருந்தனர்.

    லாரி இன்று அதிகாலை கோபிசெட்டிபாளையம் கள்ளிப்பட்டி பிரிவு அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே வைக்கப்பட்டு இருந்த சென்டர் மீடியனில் மோதியது.

    மோதிய வேகத்தில் லாரியின் முன் பகுதி முழுமையாக நொறுங்கியது. அதைத்தொடர்ந்து இன்று காலை மற்றொரு லாரி வரவழைக்கப்பட்டு லாரியில் இருந்த செங்கல்கள் மாற்றப்பட்டு லாரி கிரேன் மூலமாக அகற்றப்பட்டது.

    லாரி விபத்துக்குள்ளான இடத்தில் பெட்ரோல் பங்க் உள்ளது. அதே இடத்தில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் போக்குவரத்து மாற்றப்பட்டு உள்ளது.

    லாரி ரோட்டின் தடுப்பு மீது மோதிய போது எதிரே வாகனங்கள் வந்திருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டு இருக்கும். அதிர்ஷ்டவசமாக வாகனங்கள் எதுவும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    கரட்டடிபாளையத்தில் இருந்து குள்ளம்பாளையம் வரை 5 கிலோ மீட்டர் தூரத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சென்டர் மீடியனில் 25 க்கும் மேற்பட்ட லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது.

    நெடுஞ்சாலை–த்துறையினர் சென்டர் மீடியன் குறித்து பெரும்பாலான இடங்களில் எச்சரிக்கை வழிகாட்டு பலகை, பிரதிபலிக்கும் ஸ்டிக்கர் ஒட்டாமல் உள்ளதாலேயே விபத்து ஏற்படுவதாக வாகன ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.

    • அந்தியூர் நோக்கி வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக கார்த்தி வந்த மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
    • இந்த சம்பவம் குறித்து அந்தியூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள சிந்தகவுண்டம்பாளையம் அடுத்த காட்டுபாளையம் ஏரி தோட்டத்தை சேர்ந்தவர் சொக்கப்பன். இவரது மகன் கார்த்தி ( 19). டிப்ளமோ படித்துள்ளார்.

    இந்த நிலையில் கார்த்தி சம்பவத்தன்று அந்தியூர் அருகே உள்ள பாட்டப்பன் கோவிலுக்கு செல்வதற்காக மோட்டார்சைக்கிளில் சின்னபருவாச்சியில் அந்தியூர்-பவானி ரோட்டை கடக்க முயன்றார்.

    அப்போது அந்தியூர் நோக்கி வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக கார்த்தி வந்த மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

    இதில் படுகாயமடைந்த கார்த்தியை அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர், மேல் சிகிச்சைக்காக அவர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை கார்த்தி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். 

    ×