search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "the barrier"

    • லாரி வளைவில் திரும்பும் போது தடுப்பு சுவர் மீது மோதி நின்றது.
    • இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயம் இன்றி தப்பினார்.

    அந்தியூர்:

    மும்பையில் இருந்து நூல் மூட்டைகளை ஏற்றி கொண்டு ஒரு லாரி கோபிசெட்டி–பாளையத்துக்கு சென்று கொண்டு இருந்தது. இந்த லாரியை கோவை மாவட்டம் மேட்டுபாளையத்தை சேர்ந்த சக்தி வடிவேல் (40) என்பவர் ஓட்டி வந்தார்.

    இதை தொடர்ந்து லாரி இன்று அதிகாலை அந்தியூர் பஸ் நிலையம் பகுதியில் இருந்து அத்தாணி ரோட்டில் கோபிசெட்டிபாளையம் சென்றது.

    அப்போது லாரி ஒரு வளைவில் திரும்பும் போது திடீரென எதிர்பாராத விதமாக ரோட்டின் நடுவில் உள்ள தடுப்பு சுவர் மீது மோதி நின்றது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயம் இன்றி தப்பினார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போக்குவரத்தை சரி செய்து அந்த லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    இது குறித்து அந்தியூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அந்தியூர்-அத்தாணி ரோடு மிகவும் வளைவான பகுதியாக காணப்படுகிறது. இங்கு தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இரவு மற்றும் நள்ளிரவில் வரும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    இந்த பகுதியில் ஏற்கனவே லாரி மற்றும் கார் தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. அதே இடத்தில் 3-வது முறையாக தடுப்பு சுவர் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது.

    எனவே இந்த வளைவான பகுதியில் உள்ள தடுப்பு சுவர்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×