search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாமந்தான்பேட்டை, பட்டினசேரியில் மீன்பிடி துறைமுகம்- கடல் அரிப்பு தடுப்பு சுவர்
    X

    அமைச்சர் ராதாகிருஷ்ணனுடன் நாகை எம்.எல்.ஏ ஷா நவாஸ்.

    சாமந்தான்பேட்டை, பட்டினசேரியில் மீன்பிடி துறைமுகம்- கடல் அரிப்பு தடுப்பு சுவர்

    • சாமந்தான்பேட்டையில் தூண்டில் வளைவுடன் சிறு துறைமுகம் அமைக்கப்படும்.
    • கீச்சாங்குப்பம் பகுதிகளில் 14 கோடி ரூபாய் செலவில் பாதுகாப்பு தடுப்புச் சுவர் அமைக்கப்படும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாகப்பட்டினம் சாமந்தான்பேட்டையில் தூண்டில் வளைவுடன் சிறு துறைமுகம் அமைக்க வேண்டும் என்பதும், நாகூர் கீழப் பட்டினச்சேரியில் கடல் அரிப்பு தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என்பதும் நீண்டகால கோரிக்கைகள்.

    சட்டமன்றத்தில் இது குறித்து நான் பலமுறை பேசியதோடு, அமைச்சரிடமும் வலியுறுத்தி வந்தேன். முதலமைச்சரிடமும் கோரிக்கை கடிதம் அளித்தேன்.

    நமது தொடர் முயற்சியின் விளைவாக, சட்டமன்றப் பேரவையில் 05-04-2023 அன்று நடைபெற்ற மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மானியக் கோரிக்கையின் போது, அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், நாகப்பட்டினம் சாமந்தான்பேட்டையில் 40 கோடி ரூபாய் செலவில் சிறிய மீன்பிடித் துறைமுகம் மற்றும் நாகூர் பட்டினச்சேரி - கீச்சாங்குப்பம் பகுதிகளில் 14 கோடி ரூபாய் செலவில் பாதுகாப்பு தடுப்புச் சுவர் அமைக்கப்படும் என்று அறிவிப்பு செய்தார்.

    இதற்காக நாகை தொகுதி மக்களின் சார்பில் முதலமைச்சருக்கும், அமைச்சருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இவ்வாறு ஷா நவாஸ் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.

    Next Story
    ×