search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடுப்பு சுவர்"

    • கலெக்டர் அலுவலகத்தில் மனு
    • வேலூரில் 2 பேர் பலி எதிரொலி

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் புகார்களை மனுக்களாக அளித்தனர். பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    காட்பாடி சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வீரத்தமிழர் முன்னணி செயலாளர் விஜய் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது;-

    மோட்டூர் சர்க்கரை ஆலை பஸ் நிலையம் அருகே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் கொடி கம்பத்தை நட்டோம்.

    தற்போது கம்பம் பழையதாக உள்ளது. இதனால் பெயிண்ட் அடிப்பதற்காக பிடுங்கி புதுப்பித்த பின்பு திரும்பவும் அதே பகுதியில் நட்டோம்.

    ஆனால் காட்பாடி தாசில்தார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் கொடிக்கம்பத்தை அகத்திவிட்டனர். எனவே கொடிக்கம்பத்தை மீண்டும் நடுவதற்கு ஆணையிட வேண்டும் என கூறியிருந்தார்.

    தொரப்பாடியை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் மண்டல தலைவர் மதியழகன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது;-

    வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 4-வது மண்டலம் தொரப்பாடி நேதாஜி தெரு, பலராம முதலி தெரு, அண்ணாமலை கவுண்டர் தெரு, திரவுபதி அம்மன் கோவில் தெரு, எம்.சி ரோடு, கஸ்பா இப்ராஹிம் சாஹெப்தெரு உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் கால்வாய், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரிவர செய்து தருவதில்லை.

    குப்பைகள் சரிவர வாரவில்லை. கொசு தொல்லைகள் மற்றும் தெருநாய்களின் தொல்லைகள் மிக அதிகமாக உள்ளது. நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

    எனவே இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    கஸ்பா ஆரன்பாளையம் வசந்தபுரம் பகுதி பொதுமக்கள் கூட்டமாக வந்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் கீழ் கஸ்பா பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டது.

    இதனை கஸ்பா, வசந்தபுரம், ஆர்.என். பாளையம், சதுப்பேரி, சிறுங்காஞ்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர்.

    குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு இந்த மேம்பாலம் மிகவும் உதவியாக உள்ளது. இந்த பாலத்தின் பக்கவாட்டு தடுப்பு சுவர் உயரம் குறைவாக உள்ளது. இதனை உயர்த்தி கட்ட வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். ஆனால் எந்தெந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் கடந்த 12-ந் தேதியன்று தீபாவளி பண்டிகை தினத்தன்று தொரப்பாடி பகுதியைச் சேர்ந்த 2 இளைஞர்கள் இந்த மேம்பாலத்தின் பக்கவாட்டுச் சுவரில் மோதி நிலைதடுமாறி மேலிருந்து கீழே விழுந்தனர். 40 அடி உயரமுள்ள பாலத்தின் மீது விழுந்ததில் கொடூரமாக தலை சிதறி உயிழந்தனர்.

    எனவே பாலத்தின் இருபுறமும் உள்ள தடுப்பு சுவரின் உயரத்தை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    • ராஜபாளையம் அருகே தடுப்பு சுவரில் மோதி ராணுவ வீரர் பலியானார்.
    • தீபாவளி பண்டிகைக்காக தனது 2-வது மனைவி வீட்டிற்கு சென்றிருந்தார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் காளிமுத்து (வயது37), முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி ரோஷி என்ற சூர்யபிரபா. இவர் வ.உ.சி. நகரில் குடியிருந்து வருகிறார். தீபாவளி பண்டிகைக்காக ராஜபாளையம் அருகே உள்ள செந்தட்டியாபுரத்தில் உள்ள தனது 2-வது மனைவி குருலட்சுமி வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு பண்டிகையை முடித்து விட்டு தனது முதல் மனைவியை பார்ப்பதற்காக காரில் புறப்பட்டார். அவர் ராஜபாளையம்-சத்திரப்பட்டி ரோட்டில் வந்தபோது திடீரென சாலையில் இருந்த தடுப்பு சுவரில் மோதியது. இதில் படுகாயமடைந்த காளி முத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது சகோதரி பரமேஸ்வரி ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து காளிமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைத்தார்
    • கிள்ளியூர் வட்டம், ஏழுதேசம் “அ“ கிராமம், பரக்காணி என்னுமிடத்தில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் வட்டத்திற்குட்பட்ட வைக்கலூர் பகுதியில் மழையால் சேதமடைந்த பகுதிகளை அமைச்சர் மனோதங்கராஜ் நேரில் பார்வையிட்டார். பின்னர், தடுப்புசுவர் அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    பத்மனாபபுரம் கோட்டம், கிள்ளியூர் வட்டம், ஏழுதேசம் "அ" வருவாய் கிரா மத்திற்குட்பட்ட வைக்கலூர் பகுதியில் கடந்த 15.10.2023 அன்று இரவு பெய்த கனமழையின் காரணமாக 16.10.2023 அன்று சிற்றார் அணையிலிருந்து 1000 கன அடி தண்ணீர் திறந்து விட்ட காரணத்தினால் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் பெருக்கெ டுத்து பரக்காணி தடுப்பணை ஓரமாக தண்ணீர் வரப்பெற்று புருஷோத்தமன் நாயர், சுனில்குமார் ஆகியோரின் வீடுகள் சேதமடைந்ததோடு, கடந்த 2021-ம் ஆண்டு பெய்த கனமழையின்போது சுமாதேவி வீடும் சேதமடைந்தது.

    மேலும் கிள்ளியூர் வட்டம், ஏழுதேசம் "அ" கிராமம், பரக்காணி என்னுமிடத்தில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. அந்த இடத்தில் அரிப்பு ஏற்படாதவாறு தண்ணீர் நிரம்பியுள்ள பட்டா நிலத்தில் மண் நிரப்புதல் மற்றும் தடுப்பணை மேலும் நீட்டித்து கட்டுவது தொடர்பான திட்டப்பணி பொதுப்பணி துறையில் நிலுவையில் உள்ளது. இந்த பணியினை விரைந்து முடித்திடக்கோரி அப்பகுதி மக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம் வழங்க கோரியும், கரைகள் அரிப்பு ஏற்படாமல் இருக்க தடுப்பு சுவர் கட்ட வேண்டியும் அப்பகுதி மக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    அதனடிப்படையில் கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் அறிவுறுத்தலுக்கிணங்க பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் பாதிக்கப்பட்ட இடத்தினை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, மழை வெள்ளத்தால் வீடுகளை இழந்த 3 குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் இலவச வீட்டுமனை பட்டா வழங்க மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை சமர்ப்பித்தார்கள். அந்த அறிக்கையினை மாவட்ட கலெக்டர் தமிழ்நாடு அரசுக்கு உடனடியாக அனுப்பியதை தொடர்ந்து கனமழையினால் வீடுகளை இழந்த வைக்கலூர் பகுதியை சேர்ந்த 3 குடும்பத்தினருக்கும் கொல்லங்கோடு நக ராட்சிக் குட்பட்ட கலிங்கராஜபுரம் பகுதியில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது.

    மேலும், கடந்த ஆண்டு பெய்த கனமழையின்போதும் வைக்கலூர் பகுதி அதிக அளவு சேதமடைந்திருந்தது.

    தாமிரபரணி ஆற்றுப்படுகைக்குட்பட்ட வைக்கலூர், ஆற்றங்கரை பகுதியில் அமைந்திருந்த 2 வீடுகள் சேதமடைந்து சாலைகள் அரிப்பு ஏற்பட்டதன் அடிப்படையில், ஆற்றோர பகுதிகளில் உள்ள சாலைகளை சீரமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள நெடுஞ்சா லைத்துறை மற்றும் நீர்வளம் ஆதாரத்துறை யினருக்கு அறிவுறுத்தப்பட் டது.

    அதனடிப்படையில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் 2021-22 கீழ் ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்று தடுப்பு சுவர் அமைப்பதற்கான பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    அதனைத்தொடர்ந்து, மனோதங்கராஜ், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் முன்னிலையில் திருவட்டார் வட்டம், மேக்கோடு கிராமத்தில் புதிதாக அமையவுள்ள ஊழியர்களின் மாநில காப்பீடு மருத்துவமனைக்கான இடத்தினை பார்வையிட்டார்கள்.

    நிகழ்ச்சியில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., பொதுப்ப ணித்துறை (நீர்வளம்) துணை செயற்பொறியாளர் பொறியாளர் பாஸ்கர், திருவட்டார் தாசில்தார் முருகன், கொல்லங்கோடு நகராட்சி உறுப்பினர் கமலாசனன் நாயர், ஷீபா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நிரந்தர அலை தடுப்பு சுவர் அமைக்க வேண்டுகோள்
    • பாதுகாப்பு கருதி வீட்டை விட்டு வெளியேறிய மக்கள் உறவினர் வீடுகளில் தஞ்சம்

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றமாக காணப்படும்.

    இந்த ஆண்டும் கடந்த சில நாட்களாக கடல் சீற்றம், உள் வாங்குதல் போன்ற மாற்றங்கள் ஏற்பட்டு வரு கின்றன. நேற்று முதல் குளச்சல் அருகே கொட்டில் பாட்டில் கடல் சீற்றமாக உள்ளது. ராட்சத அலைகள் எழுந்து அலை தடுப்பு சுவரை தாண்டி விழுகிறது.

    கடந்த ஆண்டு பழைய ஆலயத்தின் அருகில் ஏற்பட்ட அலை தடுப்பு சுவர் கற்கள் சரிந்து விழுந்த பகுதியில் சுமார் 25 அடி ஆழத்திற்கு பள்ளம் விழுந்ததில் மேற்கு சாலையில் துண்டிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது ஏற்பட்ட கடல ரிப்பில் பழைய ஆலயம் அருகில் கிழக்கு பகுதியில் மேலும் ஒரு சாலை துண்டிக் பப்பட்டுள்ளது. ஊருக்குள் கடல் நீர் புகும் அபாயமும் ஏற்பட்டது.

    இதனால் கிழக்கு பகுதியில் உள்ள சுமார் 10 வீட்டினர், வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்கள் வீட்டில் தஞ்சமடைந்து உள்ளனர்.

    கொட்டில்பாடு கிழக்கு பகுதியில் உள்ள வீடுகளை பாதுகாக்க நிரந்தர அலை தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    • போலீசிடம் இருந்து தப்பிக்க கனிமவளங்கள் அதிகாலையில் கொண்டு செல்லப்படுகிறது.
    • டிரைவர்கள் வேகமாக லாரியை ஓட்டுவதால் பல இடங்களில் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுகிறது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு டாரஸ் லாரிகளில் கனிமவளங்கள் ஏற்றி கொண்டு செல்லப்படுகிறது. பல இடங்களில் அதிகபாரம் ஏற்றி செல்வதால் போலீசாரால் அபராதம் விதிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்படுகிறது.

    மேலும் பல லாரிகள் அனுமதி இல்லாமல் கனிமவளங்கள் கொண்டு செல்வதாக சப்-கலெக்டர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால் போலீசிடம் இருந்து தப்பிக்க கனிமவளங்கள் அதிகாலையில் கொண்டு செல்லப்படுகிறது.

    இந்நிலையில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு கனிமவளங்கள் கொண்டு சென்ற லாரி ஒன்று வேகமாக வந்து டிரைவரின் கட்டுபாட்டை மீறி அழகியமண்டபம் சென்டர் மீடியனில் மோதி அருகில் உள்ள கடை பக்கம் வந்து நின்றது. அப்போது ஒரு சிலர் மட்டுமே பஸ்சுக்காக காத்திருந்ததால் அலறி அடித்து ஓடினர். மேலும் அருகில் சுமார் 25-க்கு மேற்பட்ட ஆட்டோக்கள் வரிசையில் நின்றன. அதிஷ்டவசமாக இவர்கள் மீது மோதாமல் உயிர் தப்பியுள்ளனர்.

    விடிவதற்கு முன்பே செல்ல வேண்டும் என டிரைவர்கள் வேகமாக லாரியை ஓட்டுவதால் பல இடங்களில் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுகிறது. போலீசார் இதனை கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • பேண்ட் வாத்திய இசைக்குழுவில் இவர் வேலை பார்த்து வந்தார்
    • சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் பார்வதிபுரம் இலந்தையடி பகுதியை சேர்ந்தவர் பால்தாஸ் (வயது 75). பேண்ட் வாத்திய இசைக்குழுவில் இவர் வேலை பார்த்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. சம்பவத்தன்று பால்தாஸ் இலந்தையடி பகுதியில் உள்ள தடுப்புச்சுவர் மீது அமர்ந்திருந்தார்.

    இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பால்தாசுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பால்தாஸ் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது மகன் ரமேஷ் வடசேரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ் பெக்டர் திருமுருகன் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது
    • கலெக்டர் உத்தரவு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் போக்குவ ரத்திற்கு பயன்படுத்தப்படும் சாலைகளில் அமைந்துள்ள தரைமட்ட கிணறுகளால் பெரும்பாலான இரு சக்கர வாகனங்கள் மற்றும் இதர வாகனங்கள் கிணறு தெரியாமல் விபத்து நடக்கிறது. இதன் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

    எனவே இதை தடுக்கும் விதமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு சொந்தமான நிலங்கள், வீட்டுமனைகள் ஆகியவற்றில் போக்குவரத்துக்கு இடையூராக சாலைகளுக்கு ஓரமாக உள்ள அனைத்து தரைமட்ட கிணறுகளுக்கு தரைமட்டத்திலிருந்து குறைந்தபட்சம் சுமார் 3 அடி உயரம் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும், இந்த தடுப்புச்சுவரை ஒரு மாத காலத்திற்குள் கட்டி முடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • மழைநீர் அத்திப்பட்டு புதுநகர் வழியாக சென்று கொசஸ்தலை ஆற்றில் கலக்கிறது.
    • நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையாக அளவீடு செய்து அமைக்க வேண்டும்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் 2000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. வல்லூர் கொண்டக் கரை குருவி மேடு கவுண்டர் பாளையம், வெள்ளி வாயில் சாவடி, உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து வெளிவரும் மழைநீர் அத்திப்பட்டு புதுநகர் வழியாக சென்று கொசஸ்தலை ஆற்றில் கலக்கிறது.

    ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் அத்திப்பட்டு புது நகர் தாழ்வான பகுதி என்பதால் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து பொது மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்த நிலையில் அங்குள்ள தாங்கல் நீர்நிலை இடத்தில் கன மழையால் வெள்ள நீர் ஊருக்குள் புகாமல் இருக்க பொதுமக்களை பாதுகாத்திடும் வகையில் வல்லூர் தேசிய அனல் மின் நிலைய சமூக மேம்பாட்டு நிதி 50 லட்சம் ரூபாய் மதிப்பில் தடுப்புச் சுவர் அமைக்கப்படுகிறது. இந்த தடுப்பு சுவர் 50 அடி அகலத்திற்கு மட்டுமே 400 மீட்டர் தூரம் அமைக்கப்படுவதால் 100 அடி அகலத்திற்கு முழுவதுமாக தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.

    நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையாக அளவீடு செய்து அமைக்க வேண்டும். தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கட்டுமான பணி நடைபெறும் இடத்தை முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்

    இதனால் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளாமல் ஒப்பந்ததாரர்கள் நிறுத்தி விட்டுச் சென்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • அமைச்சர் எ.வ.வேலுவிடம் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு
    • சாலையை விரிவாக்கம் செய்து உயர்ந்த தரத்துடன் முழுமையாக சீரமைக்க வேண்டும்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சி களில் கலந்து கொண்ட பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் அமைச்சர் எ.வ.வேலுவிடம் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. ஒரு கோரிக்கை மனு வழங்கினார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலையான பரசேரி - திங்கள்நகர் - புதுக்கடை சாலை கடைசியாக 2016-ம் ஆண்டு சீரமைக்கப்பட்டது. இந்த சாலையின் நடுப்பகுதியில் பதிக்கப்பட்டுள்ள சுனாமி கூட்டு குடிநீர் திட்டத்தின் ராட்சத சிமெண்ட் குழாயில் நீர் அழுத்தத்தால் ஏற்படும் உடைப்புகளாலும், புயல், மழை காரணங்களாலும் சாலை முழுவதுமாக பழுதடைந்துள்ளது.

    இந்த சாலை மாவட்டத்தின் மிக முக்கியமான போக்குவரத்து சாலை. இந்த சாலையில் பரசேரி-–திக்கணங்கோடு, திக்கணங்கோடு-–கருங்கல் என இரு கட்டங்களாக சாலைகள் சீரமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    ஆனால், மிகவும் பழுதடைந்துள்ள கருங்கல்-புதுக்கடை சாலை எந்த திட்டத்திலும் இதுவரை சேர்க்கப்படவில்லை. ஆகவே, கருங்கல்-– புதுக்கடை வரை சாலையை விரிவாக்கம் செய்து உயர்ந்த தரத்துடன் முழுமையாக சீரமைக்க வேண்டும்.

    ஏழுதேசம் மற்றும் ஆறுதேசம் கிராமங்கள் வழியாக செல்லும் கன்னியாகுமரி பழைய உச்சக்கடை சாலை கணபதியான்கடவு முதல் விரிவிளை வரையுள்ள சாலையை விரிவாக்கம் செய்யும் பணியை விரைவாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட வள்ளவிளை –எடப்பாடு– இரவிப்புத்தன்துறை சாலை மற்றும் முள்ளூர்துறை-அரையன்தோப்பு-தேங்காப்பட்டணம் சாலை ஆகிய 2 சாலைகளும் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக கடல் சீற்றத்தால் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த 2 சாலைகளும் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திற்கு செல்லும் மிகமுக்கியமான சாலைகளாகும். இந்த 2 சாலைகளையும் ரூ.29 கோடி மதிப்பீட்டில் கடலரிப்பு தடுப்புச்சுவர் அமைத்து நிரந்தரமாக சாலை சீரமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு நடைபெற்ற மானிய கோரிக்கை எண் 21 -ல் அறிவிக்கப்பட்டது. ஆனால் திட்டம் அறிவித்து நிதி ஒதுக்கீடு செய்து ஒரு வருடம் முடிந்த பிறகும் இதுவரை கடலரிப்பு தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் தொடங்கப்படவில்லை. ஆகவே கடல் சீற்றம் தொடங்கும் முன்பு பொதுமக்கள் நலன்கருதி கடலரிப்பு தடுப்புச்சுவர் அமைத்து இந்த 2 சாலைகளையும் சீரமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் முஞ்சிறையிலிருந்து மங்காடு வழியாக கோழிவிளை செல்லும் மங்காடு சாலை சீரமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டதாலும், புயல், மழை காரணங்களாலும் சாலை பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. ஆகவே, மங்காடு சாலையை சீரமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு பணி நிமித்தமாக அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் வருகைதரும் போது அவர்கள் தங்குவதற்காக எந்தவித வசதியும் இல்லை. இதனால் அவர்கள் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாகர்கோவிலில் உள்ள அரசு பயணிகள் விடுதியில் தங்க வேண்டிய நிலை காணப்படு கிறது. ஆகவே கிள்ளியூர் பகுதியில் பயணியர் தங்கும் விடுதி அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள கோ ரிக்கை களுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுத்த கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • விஜய்வசந்த் எம்.பி. பார்வையிட்டார்
    • நிதி ஒதுக்கி 4 ஆண்டுகள் ஆன பிறகும் இதுவரை பணி தொடங்கப்படவில்லை.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி வா வத்துறை புனித ஆரோக்கி யநாதர் ஆலயத்தின் கிழக்கு பக்கம் கடற்கரையில் அமைந்துள்ள கடல் அரிப்பு தடுப்பு சுவர் கடல் சீற்றத்தினால் மிகவும் சேதம் அடைந்த நிலையில் உள்ளது. இதனால் மீனவர்கள் மீன்பிடித்தொழிலை பாதுகாப்பான முறையில் செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள்.

    அது மட்டும் இன்றி இந்த கடல் அரிப்பு தடுப்பு சுவரில் நின்றபடி சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து வரும் சுற்றுலா பயணிகளின் உயிருக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை. எனவே கடல் அரிப்பினால் சேதமடைந்த தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும் என்று அரசுக்கு கன்னியாகுமரி வாவத்துறை தூய ஆரோக்கியநாதர் ஆலய பங்குபேரவையினர் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அதன் பயனாக வாவத்துறை கடற்கரையில் கடல் அரிப்பினால் சேதமடைந்த தடுப்பு சுவரை ரூ.91 லட்சத்து 50 ஆயிரம் செலவில் மறுசீரமைப்பு செய்ய திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இந்த சேதமடைந்த கடல் அரிப்பு தடுப்பு சுவரை மறுசீரமைப்பு செய்ய நிதி ஒதுக்கி 4 ஆண்டுகள் ஆன பிறகும் இதுவரை பணி தொடங்கப்படவில்லை.

    இந்த நிலையில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி எம்.பி. விஜய்வசந்த் கடல் சீற்றத்தினால் சேதம் அடைந்த வாவத்துறை கடல் அரிப்பு தடுப்புச்சுவரை நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது வாவத்துறை புனித ஆரோக்கியநாதர் ஆலய பங்குத்தந்தை லிகோரியஸ், பங்குபேரவை துணை தலைவர் வர்கீஸ் மற்றும் பங்குப்பேரவை நிர்வாகிகள் வாவத்துறையில் கடல் அரிப்பினால் சேதம் அடைந்த தடுப்பு சுவரை உடனடியாக கட்டி தரும்படி விஜய்வசந்த் எம்.பி.யிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவைப்பெற்று கொண்ட விஜய்வசந்த் எம்.பி. வாவத்துறையில் கடல் அரிப்பினால் சேதம் அடைந்த தடுப்பு சுவரை மறுசீரமைத்து கட்டித்தர உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக மீனவர்களிடம் உறுதி அளித்தார்.

    ஆய்வின்போது குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் தாமஸ், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி வார்டு கவுன்சிலர் ஆனிரோஸ் தாமஸ்,உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • ரூ.4 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணி நடைபெற்றது.
    • இதனால் குடியிருப்பு பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.


    ஊட்டி,

    குன்னூர் மேட்டுப்பா ளையம் சாலையில் பர்லியார் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு வசிக்கும் பெரும்பாலானோர் வியாபாரத்தை நம்பி உள்ளனர். பர்லியார் குடியிருப்பு பகுதி பர்லியார் ஊராட்சியின் 9-வது வார்டிற்கு உட்பட்டது ஆகும். இந்த குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர கோரிக்கை விடுத்து இருந்தனர்.

    இதில் மழை காலங்களில் வீடுகளுக்கு பின்புறம் மண்சரிவு ஏற்படாமல் தடுக்க தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக இருந்தது. இதன்படி ரூ.4 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணி நடைபெற்றது. தடுப்பு சுவர் கட்டும் பணி கடந்த 10 நாட்களுக்கு முன்பு நிறைவு பெற்றது. இந்தநிலையில் கடந்த 3 நாட்களாக குன்னூர் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.

    இந்த மழையில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. சுவர் இடிந்ததால் பொதுமக்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு பின்புறம் கற்கள் மற்றும் மண் விழுந்து உள்ளது. எதிர்வ ரும் நாட்களில் குன்னூர் பகுதியில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. அவ்வாறு மழை பெய்தால் மழைத் தண்ணீர் செல்ல வழியின்றி வீடுகளுக்குள் புகும் நிலை உள்ளது. இதனால் வீடுகளுக்கு சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. தடுப்பு சுவர் கட்டி 10 நாட்கள் ஆன நிலையில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    தரமற்ற கட்டுமான பணியே இடிந்து விழ காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளார்கள். எனவே அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு தரமான முறையில் தடுப்புச்சுவர் விரைவில் அமைத்துத்தர வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்

    • பாலத்தின் இரண்டு பக்கத்தில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு இருந்தது.
    • வாகனங்கள் அடிக்கடி பாலத்தில் இருந்து தவறி விபத்தில் சிக்குகின்றன.

    உடுமலை :

    உடுமலை அருகேயுள்ள குடிமங்கலம் ஒன்றியம் விருகல்பட்டி தரை மட்ட பாலம் சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

    பாலத்தின் இரண்டு பக்கத்தில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் சில மாதங்களிலேயே அது ்உடைந்து விழுந்தது. சரியான முறையில் கட்டப்படவில்லை என்று அப்போது பொதுமக்கள் புகார் கூறினர். இந்நிலையில் இரவு - பகல் என இந்த பாலத்தில் கடந்து செல்லும் வாகனங்கள் அடிக்கடி பாலத்தில் இருந்து தவறி விபத்தில் சிக்குகின்றன. இதற்கு காரணம் தடுப்புச் சுவர் இல்லாதே என வாகன ஓட்டிகள் கூறுகின்றனர். பாலத்தில் காணப்படும் சிறிய தூண்களால் எந்த பயனும் இல்லை. முழுமையாக தடுப்பு சுவர் அமைத்தால் மட்டுமே விபத்துக்களை தடுக்க முடியும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு தடுப்புச் சுவர் அமைக்க உரிய நடவடிக்கை வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×