search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் தரைமட்ட கிணறுகளுக்கு தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்
    X

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் தரைமட்ட கிணறுகளுக்கு தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்

    • உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது
    • கலெக்டர் உத்தரவு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் போக்குவ ரத்திற்கு பயன்படுத்தப்படும் சாலைகளில் அமைந்துள்ள தரைமட்ட கிணறுகளால் பெரும்பாலான இரு சக்கர வாகனங்கள் மற்றும் இதர வாகனங்கள் கிணறு தெரியாமல் விபத்து நடக்கிறது. இதன் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

    எனவே இதை தடுக்கும் விதமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு சொந்தமான நிலங்கள், வீட்டுமனைகள் ஆகியவற்றில் போக்குவரத்துக்கு இடையூராக சாலைகளுக்கு ஓரமாக உள்ள அனைத்து தரைமட்ட கிணறுகளுக்கு தரைமட்டத்திலிருந்து குறைந்தபட்சம் சுமார் 3 அடி உயரம் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும், இந்த தடுப்புச்சுவரை ஒரு மாத காலத்திற்குள் கட்டி முடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×