search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தங்க தமிழ்செல்வன்"

    விஜயபாஸ்கரை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என தங்கதமிழ்செல்வன் கூறினார். #ThangaTamilselvan #Vijayabaskar #GutkhaScam
    ஆண்டிப்பட்டி:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் ஆண்டிப்பட்டியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    குட்கா விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடக்கிறது. இதற்கு முன்பு நடந்த சோதனைக்கே அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் தற்போது நடக்கும் சோதனை மூலமும் எந்த நடவடிக்கையும் எடுக்காது.

    மக்கள் மீது அக்கறை இருந்தால் அவரை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். தான் குற்றமற்றவர் என விஜயபாஸ்கர் நிரூபித்த பிறகு மீண்டும் அவரை அமைச்சராக்கலாம்.

    திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலுக்கு பிறகு அ.ம.மு.க. இருக்காது என ஓ.பி.எஸ் கூறுகிறார். எங்களிடம் பண பலமோ, படை பலமோ கிடையாது. தேர்தலில் நாங்கள் வெற்றிபெற்ற பிறகு அ.தி.மு.க. மற்றும் இரட்டை இலையை எங்களிடம் ஒப்படைத்து விட்டு அவர்கள் விலகி விடுவார்களா?

    தேனி மாவட்டம் கண்டமனூர், கடமலைக் குண்டு, தேவதானப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடந்த கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது. இது குறித்து மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    நீதிமன்றத்தை அவமதித்ததாக எங்களை குற்றம் சாட்டுகின்றனர். கூட்டுறவு சங்க தேர்தல் வி‌ஷயத்தில் நீதிமன்றம் கூறிய விதிமுறைகளை பின்பற்றாத அரசு மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

    இவ்வாறு அவர் கூறினார். #ThangaTamilselvan #Vijayabaskar #GutkhaScam
    திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு பிறகு அமமுக பலம் அதிமுகவுக்கு புரியும் என்று தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். #thangatamilselvan #admk

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் வரும் செப்டம்பர் 15-ந்தேதி அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

    பொதுகூட்டம் நடைபெறும் இடத்தை தினகரன் ஆதரவாளர் தங்க.தமிழ்செல்வன் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது :-

    வருகிற செப்டம்பர் 15-ந் தேதி புதுக்கோட்டையில் நடக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் துணை பொது செயலாளர் தினகரன் கலந்து கொள்ள உள்ளார். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை விமர்சனம் செய்தது தவறு என்று உணர்ந்ததால் மன்னிப்பு கேட்டேன்.

    தற்போது 3-வது நீதிபதி முன்பு விசாரணை நடந்து வருகிறது. வழக்கின் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக அமையும் என்பதில் ஐயமில்லை. வழக்கில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்த பிறகு ஆட்சியை கலைக்காமல் புதிய முதலமைச்சர் நியமனம் செய்யப்பட்டு ஆட்சி தொடரும்.

    திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க. தனித்து போட்டியிடும். அ.தி.மு.க., பா.ஜ.க. வோடு கூட்டணி வைத்து போட்டியிட்டாலும் அ.ம.மு.க.தான் வெற்றி பெறும். அப்போது அ.ம.மு.க. தான் டாப்பு. அ.தி.மு.க. டூப்பு என்பது தெரியவரும்.

    அதன் பின்னர் ஆட்சியையும் கட்சியையும் எங்களிடம் அவர்கள் ஒப்படைத்து விட்டு செல்ல வேண்டும்.

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் அ.தி. மு.க. நீதிமன்றத்தில் மேல் முறையீடு தாக்கல் செய்தது. ஆனால் கருணாநிதி இறந்த பிறகு அண்ணா சமாதியில் அவரது உடல் அடக்கம் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகு அ.தி.மு.க. மேல்முறையீடு செய்யாதது ஏன். இதிலிருந்து தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி அமைத்து செயல்பட்டு வருவது தெரிய வருகிறது. சமீப காலமாக பா.ஜ.க.வோடு தி.மு.க. நெருங்கி வருகிறது

    தி.மு.க. தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளதற்கு முதலில் அவருக்கு வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #thangatamilselvan #admk

    தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை ஏன் வாபஸ் பெறவில்லை? என்பதற்கு தங்க தமிழ்செல்வன் விளக்கம் அளித்துள்ளார். #thangatamilselvan
    சென்னை:

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தமிழக கவர்னரிடம் மனு கொடுத்த டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சட்டசபை சபாநாயகர் உத்தரவிட்டார்.

    இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதி மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்கள். அதில், சபாநாயகரின் உத்தரவை சரி என்று தலைமை நீதிபதியும், தவறு என்று நீதிபதி எம்.சுந்தரும் கூறியிருந்தனர்.

    இதையடுத்து டி.டி.வி.தினகரனின் ஆதரவாளரும், வழக்கில் ஒரு மனுதாரருமான தங்க தமிழ்செல்வன், தலைமை நீதிபதியை கடுமையாக விமர்சனம் செய்து, ஊடகங்களுக்கு பேட்டிகொடுத்தார்.

    இதையடுத்து அவர் மீது, ஐகோர்ட்டில், கோர்ட்டு அவமதிப்பு வழக்கை பெண் வக்கீல் ஸ்ரீமதி என்பவர் தாக்கல் செய்தார். இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு ஏற்பது குறித்து தமிழக அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் இந்த வழக்கை பரிசீலித்துவிட்டு, தங்க தமிழ்செல்வனை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டார்.

    அதன்படி, தங்க தமிழ்செல்வன் நேற்று மாலையில் வக்கீல்கள் தமிழ்மணி, டி.மோகன் ஆகியோருடன் ஆஜரானார். அப்போது தலைமை நீதிபதி குறித்து தெரிவித்த விமர்சனத்துக்கு, நிபந்தனையற்ற மன்னிப்பை அவர் கோரினார்.

    இதற்கு பதில் அளித்த அட்வகேட் ஜெனரல், நிபந்தனையற்ற மன்னிப்பை எல்லாம் ஐகோர்ட்டில் தான் கேட்கவேண்டும் என்று கருத்து கூறினார். இதையடுத்து, கோர்ட்டு அவமதிப்பு புகாருக்கு விளக்கம் அளிக்க தங்க தமிழ்செல்வன் தரப்பில் 6 வார காலஅவகாசம் கேட்கப்பட்டது. இந்த கோரிக்கையை அட்வகேட் ஜெனரல் ஏற்றுக்கொண்டார்.

    இதையடுத்து ஐகோர்ட்டை விட்டு வெளியில் வந்த தங்க தமிழ்செல்வன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    என் மீது தொடரப்பட்ட கோர்ட்டு அவமதிப்பு வழக்கு குறித்து விளக்கம் அளிக்க நேரில் ஆஜராகும்படி அட்வகேட் ஜெனரல் உத்தரவிட்டார். அதன்படி இன்று (நேற்று) ஆஜரானேன். பின்னர் இந்த வழக்கிற்கு விளக்கம் அளிக்க காலஅவகாசம் கேட்டதால், ஆகஸ்டு 29-ந்தேதி நேரில் ஆஜராகும்படி அட்வகேட் ஜெனரல் உத்தரவிட்டார்.

    தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நான் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறுவேன் என்று முன்பு கூறினேன். தற்போது வழக்கை வாபஸ் பெறவேண்டிய சூழ்நிலை இல்லை. இந்த வழக்கை தற்போது விசாரிக்கும் 3-வது நீதிபதி எம்.சத்தியநாராயணன் மீது நம்பிக்கை உள்ளது. இந்த வழக்கு விரைவாக முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால், வழக்கை வாபஸ் பெறவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #thangatamilselvan
    என் மீது வழக்கு போட்டு தமிழக அரசு மிரட்டி பார்க்கிறது என்று தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.#Thangatamilselvan

    தேனி:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை, ஆலோசனை கூட்டம் தேனியில் நடந்தது. கூட்டத்தில் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் பேசியதாவது:-

    எம்.எல்.ஏ. தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு குறித்து பேசியதற்காக என் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அதற்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா மீது செல்லமேஸ்வர் உள்பட சக நீதிபதிகள் குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். அவர்கள் மீது ஏன் அவமதிப்பு வழக்கு தொடரப்படவில்லை.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு 6 மாதம் அவகாசம் கொடுத்தும் மத்திய அரசு அமைக்கவில்லை. ஆனால் அதற்கு ஏன் அவமதிப்பு வழக்கு தொடரவில்லை.


    உள்ளாட்சி, கூட்டுறவு சங்க தேர்தல் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறிய போதும் தமிழக அரசு எதையும் செய்யவில்லை. அப்போது தமிழக அரசு மீது ஏன் வழக்க தொடரவில்லை.

    ஆண்டிப்பட்டி தொகுதி மக்கள் எம்.எல்.ஏ. இல்லாமல் அவதிப்படும் ஆதங்கத்தில் பேசியதை அவமதிப்பு என்கின்றனர்.

    தமிழக அரசு என் மீது வழக்கு போட்டு மிரட்டி பார்க்கிறது. என்னை கைது செய்யவும் வாய்ப்பு உள்ளது. சென்னை- சேலம் 8 வழிச்சாலை அமைக்க விவசாய நிலங்களை அழிப்பது தேவையற்றது. சென்னை கன்னியாகுமரி சாலையை 8 வழிச்சாலையாக அமைக்கலாம்.

    இவ்வாறு அவர் பேசினார். #Thangatamilselvan

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பு குறித்து தலைமை நீதிபதியை விமர்சித்தது தொடர்பாக தங்க தமிழ்செல்வனுக்கு அரசு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. #ThangaTamilSelvan
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்றக்கோரி கவர்னரிடம் மனு கொடுத்த தங்கத்தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. உள்பட அ.தி.மு.க.வின் 18 எம்.எல்.ஏ.க்கள் கடந்த ஆண்டு சட்டசபையில் இருந்து அதிரடியாக தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

    சபாநாயகர் தனபால் சபை விதிகளைக் குறிப்பிட்டு, விளக்கம் கேட்ட பிறகே இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.

    டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் அந்த 18 பேரும் தங்களை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தனர். தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோரது பெஞ்சில் இரு தரப்பு விசாரணைக்கு பிறகு கடந்த 14-ந்தேதி இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.



    தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தனது தீர்ப்பில், “18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும்” என்று தீர்ப்பளித்தார். மற்றொரு நீதிபதி சுந்தர், “சபாநாயகர் உத்தரவு செல்லாது” என்று தீர்ப்பளித்தார். இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு அளித்த காரணத்தால் இந்த வழக்கு விசாரணை மூன்றாவது நீதிபதியிடம் (நீதிபதி சத்தியநாராயணன்) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பை, தகுதி நீக்கம் செய்யப்பட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான தங்கதமிழ்ச்செல்வன் மிகக் கடுமையாக விமர்சனம் செய்தார். குறிப்பாக அவர், “மத்திய-மாநில அரசுகள் நீதிமன்றங்களை விலைக்கு வாங்கி விட்டன” என்று பகிரங்கமாக குற்றம் சுமத்தினார்.

    இதற்கு நீதிமன்ற அமைப்புகள் கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்தன. இந்த நிலையில் பெண் வக்கீல் ஸ்ரீமதி சென்னை ஐகோர்ட்டில் தங்க தமிழ்ச்செல்வன் மீது கோர்ட்டு கிரிமினல் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில் கூறி இருப்பதாவது:-

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில், மாறுபட்ட தீர்ப்பு வெளியானதை, தங்க தமிழ்ச்செல்வன் மிக, மிக தரக்குறைவான வகையில் மீடியாக்களில் விமர்சனம் செய்துள்ளார். தமிழ் தொலைக்காட்சி சானல் ஒன்றுக்கு ஜூன் 23, 24-ந்தேதிகளில் அவர் அளித்த பேட்டியில், “அ.தி.மு.க. அரசு தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க உதவவே ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது. இது விலை கொடுத்து வாங்கப்பட்ட தீர்ப்பு போல தெரிகிறது” என்று கூறினார்.

    மேலும் சென்னை ஐகோர்ட்டையும் தலைமை நீதிபதியையும் அவர் மிகவும் கொச்சைப்படுத்தும் வகையிலும் கீழ்த்தரமாகவும் விமர்சித்தார். மத்திய-மாநில அரசுகளுடன் சேர்ந்து நீதிபதிகள் சதி செய்ததாகவும், மத்திய-மாநில அரசுகளின் கைகளில் நீதிபதிகள் அடகு வைக்கப்பட்டு விட்டதாகவும் குறிப்பிட்டார்.

    தங்க தமிழ்ச்செல்வனிடம் பேட்டி கண்ட தொலைக்காட்சி நிருபர், “உங்கள் குற்றச்சாட்டுக்கள் கோர்ட்டு அவமதிப்புக்கு உள்ளானால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார். அதற்கு தங்க தமிழ்ச்செல்வன், “என் மீது நடவடிக்கை எடுக்கட்டும் பார்க்கலாம்” என்று வெளிப்படையாக சவால் விட்டார்.

    இது அவர் கோர்ட்டு நடவடிக்கைகளில், நிர்வாகத்தில் குறுக்கீடு செய்து தடை உண்டாக்குவது போல உள்ளது. எனவே தங்க தமிழ்ச் செல்வன் மீது கோர்ட்டு கிரிமினல் அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு வக்கீல் ஸ்ரீமதி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

    அவரது மனுவை அரசு தலைமை வக்கீல் விஜய் நாராயணனுக்கு ஐகோர்ட்டு பதிவாளர் அனுப்பி வைத்தார். அரசு தலைமை வக்கீலின் ஒப்புதலை ஐகோர்ட்டு பதிவாளர் கேட்டுள்ளார். அரசு வக்கீல் ஒப்புதல் கொடுத்தால்தான் இந்த வழக்கை பதிவாளரால் விசாரணைக்கு பட்டியலிட முடியும்.

    கோர்ட்டு அவமதிப்பு வழக்குகளை பொறுத்தவரை சிவில் அவமதிப்பு வழக்கு, கிரிமினல் அவமதிப்பு வழக்கு என இரு வகை உள்ளது. கோர்ட்டு சிவில் அவமதிப்பு வழக்குகளில் கோர்ட்டே தீர்ப்பளித்து விடும். ஆனால் கோர்ட்டு கிரிமினல் அவமதிப்பு வழக்கில் அரசு தலைமை வக்கீலின் ஒப்புதல் பெற வேண்டும் என்று சட்ட விதி உள்ளது.

    இதனால்தான் வக்கீல் ஸ்ரீமதி தொடுத்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கு, அரசு தலைமை வக்கீலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து அரசு தலைமை வக்கீல் விஜய் நாராயணன், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வனுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பியுள்ளார். அதில் அவர், “18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் வழக்கில் நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பு பற்றி விமர்சித்து பேசியது பற்றி 2 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். இதற்காக நேரில் ஆஜராக வேண்டும். அல்லது வக்கீல் மூலம் பதில் அளிக்கலாம்” என்று கூறியுள்ளார்.

    தங்கதமிழ்ச்செல்வன் இந்த நோட்டீசுக்கு ஜூலை 2-வது வாரத்துக்குள் விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு அவரிடம் விசாரணை நடத்தப்படும். அதைத் தொடர்ந்து, தங்க தமிழ்ச்செல்வன் மீது கோர்ட்டுகள் அவமதிப்பு சட்டம் 1971 பிரிவு 15-ன் கீழ் நட வடிக்கை எடுப்பது பற்றி உத்தரவிடப்படுமா? என்பது தெரிய வரும். #ThangaTamilSelvan
    தங்க தமிழ்செல்வன் தனித்து விடப்படவில்லை என்று மோகனூரில் தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். #ttvdinakaran #thangatamilselvan #edappadipalanisamy

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூரில் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் கூறிய பதில்கள் வருமாறு:-

    கேள்வி: 17 எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என சொல்லப்பட்டு இருக்கிறது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?

    பதில்: சபாநாயகர் தீர்ப்பு சட்டத்திற்கு புறம்பானது. 18 எம்.எல்.ஏ.க்களும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என அப்போது இருந்த கவர்னரிடம் மனு கொடுத்தார்கள்.

    இதனால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தற்போது 3- வது நீதிபதி அமைத்திருக்கிறார்கள். எப்படியும் சுப்ரீம் கோர்ட்டு தான் இறுதி தீர்ப்பு வழங்க போகிறது. அதனால் தான் சுப்ரீம் கோர்ட்டுக்கே போக முடிவு எடுத்து கடந்த 21-ந்தேதி அன்று மனு தாக்கல் செய்தோம். இன்றைக்கு மனுவிசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர்களின் கோரிக்கையை ஏற்று அதை புதன்கிழமைக்கு மாற்றி இருகிறார்கள். நிச்சயம் நல்ல தீர்ப்பு வரும் என காத்திருக்கிறோம்.


    கேள்வி: தங்க தமிழ்செல்வன் மட்டும் மனு தாக்கல் செய்யவில்லை. மற்றவர்கள் எல்லாம் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். அவர் தனித்து விடப்பட்டு இருக்கிறாரா?

    பதில்: தங்க தமிழ்செல்வன் தனித்து விடப்படவில்லை. 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் 17 பேர் சபாநாயகர் தீர்ப்பு தவறு என்பதை சட்ட ரீதியாக நிருபிப்பதற்காக போராடுகிறோம். சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று இருக்கிறோம்.

    இதில் நம்பிக்கை இல்லை என்று ஒரு வாரத்திற்கு முன்பாகவே தங்க தமிழ்செல்வன் சொன்னார். மனுவை திரும்ப பெற போகிறேன். தேர்தல் வரட்டும் சந்திக்கிறேன் என்று சொன்னார். என்னுடைய அனுமதி பெற்றுத்தான் செய்கிறார் என்று தமிழ்நாட்டு மக்களுக்கு எல்லோருக்கும் தெரியும்.

    கேள்வி: நீதிமன்ற விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளின் தலையீடு இருக்கிறதா?

    பதில்: அதெல்லாம் காலம் உங்களுக்கு நிருபிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ttvdinakaran #thangatamilselvan #edappadipalanisamy

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்த வழக்கை வாபஸ் பெறுவது பற்றி தங்க தமிழ்செல்வன் பரிசீலனை செய்து வருகிறார்.
    சென்னை:

    தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்த வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி சபாநாயகரின் நடவடிக்கை செல்லும் என்று தீர்ப்பு கூறி இருந்தார். நீதிபதி சுந்தர் செல்லாது என்றும் தீர்ப்பு கூறினார். இதனால் 3-வது நீதிபதி விமலா விசாரணைக்கு வழக்கு சென்றுள்ளது.

    இதுபற்றி தங்க தமிழ் செல்வன் கூறியதாவது:-

    நான் நீதிபதிகளின் தீர்ப்பை மதிப்பவன். ஆனால் எங்கள் வழக்கில் எந்த காலக்கெடுவும் சொல்லாமல் தீர்ப்பு கூறியதால் தான் அதை விமர்சிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    3-வது நீதிபதியை நியமித்து 10 நாளில் வழக்கை முடிக்குமாறு கூறி இருந்தால் மதித்திருப்பேன். எங்களுக்கும் தீர்வு கிடைத்திருக்கும். அதை ஏன் சொல்லவில்லை என்பதுதான் எங்கள் கேள்வி.

    நாங்கள் எம்.எல்.ஏ.வாக இருக்கிறோமா? இல்லையா? என்று தெரிந்து கொள்ள 9 மாதம் காத்து இருந்திருக்கிறோம். இன்னும் எங்களுக்கு தெளிவாக விடை கிடைக்கவில்லை.

    அதன்படி நியாயத்தை எதிர்பார்த்து நீதிமன்றத்தை நாடினோம். ஆனால் அங்கும் மாத கணக்கில் வழக்கு நடந்தால் என்ன பிரயோஜனம்? எங்கள் பதவி காலமே முடிந்து விடும்.

    அதனால்தான் வழக்கை வாபஸ் பெறப்போவதாக கூறி இருந்தேன். ஆனால் இப்போது அதுவும் முடியுமா? முடியாதா? என்ற கேள்வி எழுகிறது.

    ஏனென்றால் வழக்கை வாபஸ் பெற எந்த நீதிபதியிடம் மனு கொடுப்பது என்ற சிக்கல் ஏற்பட்டுள்ளது. மனுவை ஏற்க மறுத்தால் யாரை அணுகுவது என்ற நிலை ஏற்படும்.

    அப்படியே மனு ஏற்கப்பட்டாலும் உடனே இடைத்தேர்தலை நடத்த மாட்டார்கள். பாராளுமன்ற தேர்தல் வரை தேர்தல் நடத்தாமல் காலம் கடத்தி விடுவார்கள்.

    அப்படியே தேர்தல் நடந்தாலும் நான் இடைத்தேர்தலில் நிற்க முடியுமா? முடியாதா? என்ற சட்ட சிக்கலை ஏற்படுத்தி விடுவார்கள்.

    தேர்தலில் நின்றாலும் தேர்தல் அதிகாரி மூலம் எனது மனுவை நிராகரிக்க செய்து விடுவார்கள்.

    இந்த அளவுக்கு எப்படி வேண்டுமானாலும் முடிவெடுக்க சட்டத்தில் இடம் உள்ளதால் யோசிக்க வேண்டி உள்ளது.

    சட்ட நிபுணர்களும் 3 விதமான கருத்தை கூறி உள்ளதால் வழக்கை வாபஸ் பெறுவதில் பொறுமையை கடைபிடிப்பது நல்லது என்று நினைக்கிறேன்.

    அடுத்த வாரம் பெங்களூர் செல்கிறேன். அப்போது கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவை சிறைக்கு சென்று சந்தித்து பேச உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எண்ணம் பலிக்காது என்று தங்க தமிழ்செல்வன் பேட்டியில் கூறியுள்ளார். #Thangatamilselvan #EdappadiPalaniswami

    சென்னை:

    தமிழக சட்டப்பேரவையின் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் அந்த வழக்கு 3-வது நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதை நீதிபதி விமலா விசாரிக்க உள்ளார்.

    இந்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஆண்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச் செல்வன் தன்னுடைய வழக்கை நாளை மறுநாள் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்.

    இதகுறித்து ‘மாலைமலர்’ நிரூபரிடம் அவர் கூறியதாவது:-

    நான் எனது தொகுதி மக்களை நேற்று சந்தித்து பேசினேன். இந்த தொகுதியில் வளர்ச்சி திட்டங்கள் நடைபெற எம்.எல்.ஏ. இருக்க வேண்டும். அல்லது உள்ளாட்சி பிரதிநிதிகள் இருக்க வேண்டும். ஆனால் எந்த மக்கள் பிரதிநிதியும் தொகுதியில் இல்லாததால் உங்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாத நிலை உள்ளது.

    அதனால் ஐகோர்ட்டில் நடந்துவரும் எனது வழக்கை வாபஸ் பெற்றால் இடைத்தேர்தல் மூலம் எம்.எல்.ஏ.வை தேர்ந்தெடுக்கலாம் என்றேன்.

    அதற்கு அங்குள்ள மக்கள் இடைத்தேர்தல் வந்தால் நீங்கள்தான் தேர்தலில் நிற்க வேண்டும் என்றனர்.

    என்னை பொறுத்தவரை தொகுதிக்கு ஒரு எம்.எல்.ஏ. வேண்டும். அது நானாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி நான் தேர்தலில் நிற்க சட்ட சிக்கலை உருவாக்குவார்கள் என்றேன். மக்கள் எனது கருத்தை ஏற்றுக் கொண்டனர்.

    எனவே இடைத்தேர்தல் நடத்துவதற்கு வசதியாக நாளை மறுநாள் (வியாழன்) சென்னை உயர்நீதிமன்றத்தில் 3-வது நீதிபதி விமலாவை சந்தித்து வழக்கை வாபஸ் பெறும் மனுவை கொடுக்க உள்ளேன்.


    தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந்தால் பாராட்டுக்குரியது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார்.

    அவர் என்னதான் ஆசை வார்த்தை கூறி அழைத்தாலும் ஒரு ஆள் கூட போக மாட்டார்கள். 18 பேரும் தினகரன் பக்கம் உறுதியாக உள்ளோம்.

    எனவே எடப்பாடியின் பேச்சு வெற்றுஜம்பம். அவரது எண்ணம் பலிக்காது. நிறைவேறாது. நாங்கள் பனங்காட்டு நரி. எந்த சலசலப்புக்கும் அஞ்ச மாட்டோம்.

    சட்டம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. ஏற்கனவே எங்களை தகுதி நீக்கம் செய்து விட்டார்கள். இப்போது மறுபடியும் வந்தால் வரவேற்கிறோம் என்றால் சட்டத்தை வளைக்க போவதாக சொல்கிறாரா?

    அல்லது 3-வது நீதிபதியிடம் எங்களுக்காக பரிந்து பேச போகிறாரா? என்பது தெரியவில்லை. மனம் திருந்தி வந்தால் ஏற்றுக் கொள்வதாக ஒரு அமைச்சர் கூறுகிறார். அப்படி என்றால் நீதி எங்கே போகிறது? நீதியை வளைக்க இவர்கள் துணிந்து விட்டார்கள் என்றுதான் கருத வேண்டி உள்ளது.

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் தனித் தனியாக வழக்கு தொடர்ந்துள்ளதால் நான் எனது வழக்கை வாபஸ் பெறுவதில் உறுதியாக உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Thangatamilselvan #EdappadiPalaniswami

    எந்த தேர்தல் வந்தாலும் பா.ஜனதா, அ.தி.மு.க. ஆகிய கட்சிகளை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார். #Thangatamilselvan #ADMK #BJP

    கோவை:

    கோவையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    திவாகரன் கட்சி ஆரம்பித்து இருப்பதால் எங்களுக்கு எந்த பிரச்சினையயும் இல்லை. மக்கள் தான் தீர்ப்பு சொல்வார்கள். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் யாரும் அதிருப்தி இல்லை. ஆட்சியை தக்க வைத்தால் போதும் என்ற நிலையில் தற்போதை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு சொல் படி கேட்டு நடந்து வருகிறது. எந்த தேர்தல் வந்தாலும் பா.ஜனதா, அ.தி.மு.க .ஆகிய கட்சிகளை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் என்பது தேவையில்லாதது. இதற்காக எதற்கு ரு. 10 ஆயிரம் கோடி செலவு செய்யப்படுகிறது.


    இந்த திட்டத்திற்கு பதிலாக சென்னை-கன்னியாகுமரி இடையே 8 வழி சாலை அமைக்க வேண்டியது தானே?.

    18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பை நீதிமன்றம் உடனே வழங்க வேண்டும். தீர்ப்பு எதுவாக இருந்தாலும் மக்கள் மன்றத்தை நாட நாங்கள் தயாராக உள்ளோம்.

    காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் கிடைக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. காவிரி டெல்டா முக்கியமா? அல்லது சென்னை - சேலம் 8 வழிச்சாலை முக்கியமா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #Thangatamilselvan #ADMK #BJP

    ×