search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சொகுசு கார்"

      கன்னியாகுமரி:

      ஐரேனிபுரம் பகுதியில் வட்டவழங்கல் அதிகாரி புரந்தரதாஸ் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ரெதன் ராஞ்குமார் கொண்ட குழு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

      அப்போது சந்தேகத்துக்கு இடமாக சொகுசு கார் ஒன்று வந்துக் கொண்டிருந்தது அந்த காரை நிறுத்து மாறு சைகை காட்டினர். டிரைவர் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றார். தொடர்ந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று காப்பிக்காடு பகுதியில் வைத்து காரை மடக்கி பிடித்தனர். ஆனால் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். காரை சோதனை செய்து பார்த்த போது சுமார் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

      இந்த ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.பிறகு காரில் இருந்து கைப்பற்றப்பட்ட அரிசியை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும் கடத்தல் காரை வட்டாட்சியர் அலுவலகத்தி லும் ஒப்படைக்கப்பட்டது. தப்பி ஓடிய டிரைவர் யார்? என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

      • தப்பி சென்ற மர்ம நபர்களுக்கு வலை வீச்சு
      • திருவட்டார் போலீசார் விசாரணை

      கன்னியாகுமரி:

      குலசேகரம் அருகே மாஞ்சக்கோணம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 42). இவர் ரப்பர் ஷீட் மொத்த வணிகம் செய்து வருவதுடன், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வருகிறார்.

      இவரது ரப்பர் கடை மற்றும் குடோன் பிணந்தோடு பகுதியில் உள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை மர்ம நபர்கள் 2 பேர் ஒரு காரில் வந்து ரமேசின் குடோன் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த 2 பண்டல் ரப்பர் ஷீட்டுக்களை திருடியுள்ளனர். இதனை ரமேஷ் செல்போனில் இணைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா வழியாக நாகர்கோவிலில் இருந்தவாறு கவனித்தார்.

      இதையடுத்து அவர் உடனடியாக குடோன் அருகில் உள்ள தனது வேலையாட்களுக்கு தகவல் கூறினார். அவர்கள் விரைந்து வந்து குடோனுக்கு சென்று அவர்களை பிடிக்க முயன்ற போது மர்ம நபர்கள், ரப்பர் ஷீட்டையும் ஓட்டி வந்த காரையும் விட்டு, விட்டு தப்பியோடி விட்டனர்.

      இது குறித்து ரமேஷ் குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் போலீசார் மர்ம நபர்கள் விட்டு சென்ற காரை பறிமுதல் செய்தனர். மேலும் மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

      திருவட்டார் அருகே தெங்குவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜப்பன் (61). இவருக்கு சொந்தமாக ரப்பர் மரங்கள் உள்ளது. இவர் வீட்டின் பின்பக்கம் அதனை உலற வைத்திருந்தார். ரப்பர் ஷீட்டுகளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.1500 ஆகும்.

      இதுகுறித்து திருவட்டார் போலீசில் ராஜப்பன் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் விசாரணை நடத்தி புலியிறங்கி பகுதியை சேர்ந்த பாலஸ் (55) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • திற்பரப்பு அருவிக்கு சென்று விட்டு திரும்பி வரும்போது அதிவேகமாக வந்து விபத்தை ஏற்படுத்தியுள்ளனர்
      • திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

      கன்னியாகுமரி:

      திருவட்டார் அருகே குலசேகரத்தில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி அதிவேகமாக வந்த கார் தள்ளுவண்டியில் மோதியதில் தள்ளுவண்டி வியாபாரி மற்றும் காரில் இருந்தவர்கள் உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.

      இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

      குலசேகரத்தை அடுத்த வலியாற்று முகத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 36) இவரது மனைவி சித்ரா (32) இவர் உடல்நிலை சரியில்லாமல் நடப்பதற்கு சிரமப்பட்டு வந்தார். இவர்களுக்கு ஒரே மகன் உள்ளார். புலியிறங்கி பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கீழ்த்தளத்தில் வாடகைக்கு குடியிருக்கின்றனர். வாடகைக்கு குடியிருக்கும் வீட்டின் முன்புறம் நிறுத்தி வைத்திருக்கும் தள்ளு வண்டியில் கணவனும் மனைவியும் கூழ், மோர் மற்றும் பலகார வியாபாரம் நடத்தி வந்தனர்.

      இவர்களின் வருமானத்துக்கான ஒரே ஆதாரம் இந்த தள்ளுவண்டி கூழ், மோர், பலகார வியாபாரம்தான். இதை வைத்து குடும்பம் நடத்தினர்.

      நேற்று மதியம் உணவருந்த சித்ரா வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது தள்ளு வண்டியில் பிரகாஷ் மட்டும் வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருந்தார். தள்ளு வண்டியின் முன் புறம் காஞ்சிரகோடு பகுதியை சேர்ந்த ரெனால்டு ஜெபா என்பவர் கூழ் குடித்துக் கொண்டிருந்தார். அப்போது குலசேகரம் - மார்த்தாண்டம் ரோட்டில் அதிவேகமாக வந்து கொண்டிருந்த சிவப்பு நிற சொகுசு கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தள்ளுவண்டி யையும், கூழ் குடித்துக்கொண்டிருந்த ரெனால்டு ஜெபாவையும் இடித்துக் கொண்டு அருகில் உள்ள காம்பவுண்டை ஒட்டி நின்றிருந்த ரப்பர் மரத்தில் மோதி நின்றது. தள்ளு வண்டியும், காரின் முன்பக்க இடதுபுறமும் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் விபத்துக்குள்ளான சொகுசுகார் தற்போதுதான் புதியதாக எடுக்கப்பட்டது. காரின் முன்பகுதியில் இருந்த இரண்டு ஏர்பேக் ஓப்பன் ஆனதால் வண்டியில் இருந்தவர்கள் அதிர்ஷ்ட வசமாக உயிர்பிழைத்தார் கள். ரோட்டோரம் இதைப்பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கார் மோதியதில் தள்ளுவண்டியின் உள்புறம் நின்றிருந்த பிரகாஷ்க்கு இடுப்பின் கீழ்பகுதி மற்றும் கால்களில் படுகாயம் ஏற்பட்டது. அவரை அருகிலிருந்த வர்கள் குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரகாஷ் அனுப்பி வைக்கப்பட்டார்.

      இந்நிலையில் காரில் முன்புறம் இருந்தவர்க ளுக்கும். பின்புறம் இருந்தவர்களுக்கும் காயம் ஏற்பட்டது. அவர்கள் குலசேகரம் மற்றும் மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட னர். ரெனால்டு ஜெபா குலசேகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கக் பட்டார்.

      போலீஸ் விசாரணையில் வெள்ளிச்சந்தையைச் ேசர்ந்த அஜித்குமாருக்கு சமீபத்தில் திருமணமாகி உள்ளது. இராணுவத்தில் பணியாற்றும் இவர் உறவினர் வீட்டு விருந்துக்கு நேற்று வந்தார். மனைவியை உறவினர் வீட்டில் விட்டு விட்டு இவர்கள் நண்பர்கள் குளச்சல் அரவிந்த் (17), கொல்வேல் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (27), விஜூ (23), வினீத் (25) ஆகியோருடன் காரில் திற்பரப்பு அருவிக்கு சென்று விட்டு திரும்பி வரும்போது அதிவேகமாக வந்து புலியிறங்கியில் தள்ளுவண்டியில் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது. சம்பவம் குறித்து திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருவட்டார் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதர் சம்பவ இடத்தை பார்வையிட்டு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்தியில் பிரகாஷ்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

      • சைமன் காலனி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமாக வந்த கேரள மாநில பதிவு எண் கொண்ட சொகுசு காரை தடுத்து நிறுத்தினர்.
      • காருடன், ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி உடையார் விளை அரசு கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது.

      கன்னியாகுமரி :

      குமரி மாவட்ட எல்லை வழியாக கேரளாவுக்கு அரிசி உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க போலீசாரும், வருவாய் துறையினரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

      இதில் அவ்வப்போது ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. தொடர்ந்து அந்தப் பகுதியில் ரோந்துப் பணியும் நடந்து வருகிறது. இந்த நிலையில் கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் சுனில் குமார் தலைமையிலான அலுவலக பணியாளர்கள் நேற்றிரவு குளச்சல் பகுதியில் தீவீர ரோந்து சென்றனர்.

      அவர்கள் சைமன் காலனி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமாக வந்த கேரள மாநில பதிவு எண் கொண்ட சொகுசு காரை தடுத்து நிறுத்தினர்.

      அப்போது காரை நிறுத்தி விட்டு ஓட்டுநர் தப்பி ஓடி விட்டார். பின்னர் காரை சோதனை செய்தபோது, அதில் சுமார் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதனை கேரள மாநிலத்திற்கு கடத்தி செல்ல முயற்சித்தது தெரிய வந்தது.

      இதையடுத்து காருடன், ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி உடையார் விளை அரசு கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது. தப்பி ஓடிய டிரைவர் யார்? அவர் யாருக்காக ரேஷன் அரிசியை கடத்தினார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய டிரைவரையும் தேடி வருகின்றனர்.

      • சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர சோதனை
      • அரிசியை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கில் ஒப்படைப்பு

      கன்னியாகுமரி:

      தமிழக கேரள எல்லை ப்பகுதி வழியாக தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் மற்றும் மானிய மண்ணெண்ணைய் கடத்து வது தொடர்ந்து நடந்து வருகிறது.

      இதனால் சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

      இந்த நிலையில் இன்று சப்-இன்ஸ்பெக்டர் ராஜக்க பெருமாள் தலைமையில் போலீசார் தீவிர சோதனை யில் ஈடுபட்டு வந்தனர்.

      அப்போது சோதனை சாவடி வழியாக சந்தேகப்படும் படி சொகுசு கார் ஒன்று வந்துக்கொ ண்டிருந்தது. அந்த காரை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டினர். போலீசாரை பார்த்ததும் டிரைவர் காரை சாலையில் நிறுத்தி விட்டு ஓடிவிட்டார் இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரை சோதனை செய்து பார்த்த போது 2 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டு பிடிக்க பட்டது.

      இந்த ரேஷன் அரிசி கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசார் கடத்தல் காரையும் ரேசன் அரிசியையும் உணவு தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

      அவர்கள் கடத்தல் அரிசியை பறிமுதல் செய்து காப்பிக்காடு அரசு நுக ர்வோர் வாணிப கிடங்கிலும் கடத்தல் காரை தாலுகா அலுவலகத்திலும் ஒப்படை த்தனர். தப்பியோடிய டிரைவர் யார் என்று விசா ரணை நடத்தி வருகின்றனர்.

      • சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று பிடித்தனர்
      • டிரைவர் காரில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார்.

      கன்னியாகுமரி:

      குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வருவாய்த்துறை அதிகாரிகளும் போலீசாரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

      இந்த நிலையில் தக்கலை வழியாக கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கல்குளம் வட்ட வழங்கல் அதிகாரிக்கு தகவல் வந்தது.இதையடுத்து வட்ட வழங்கல் அதிகாரி சுனில் குமார் வருவாய் ஆய்வாளர் சாமினி ஆகியோர் தலைமையிலான குழுவினர் நேற்று இரவு தக்கலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது வேகமாக வந்த சொகுசு கார் ஒன்றை தடுத்து நிறுத்தினார்.

      ஆனால் டிரைவர் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றார். சந்தேகம் அடைந்த அதிகாரிகள் காரை பின் தொடர்ந்து துரத்தினார்கள்.சினிமா படப்பாடியில் சேசிங் சம்பவம் நடந்தது.சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று விளவங்கோடு ஞாரான்விளை பகுதியில் வைத்து காரை மடக்கினார்.அப்போது டிரைவர் காரில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார்.அதிகாரிகள் காரை சோதனை செய்தபோது சாக்கு மூட்டைகளில் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முதல் கட்ட விசாரணையில் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது.

      இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை கல்குளம் வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை குளச்சல் அரசு கிட்டங்கியில் ஒப்படைத்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய கார் யாருடையது ரேஷன் அரிசி எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சினிமா படம் பாணியில் நடந்த இந்த சேசிங் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

      • அபராதத்தை ரத்து செய்யக்கோரிய நடிகர் விஜய் மனு மீது இன்று ஐகோர்ட் தீர்ப்பளிக்கிறது.
      • அனைத்து வாதங்களும் முடிந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக உள்ளது.

      சென்னை:

      நடிகர் விஜய் கடந்த 2005-ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து சொகுசு காரை இறக்குமதி செய்திருந்தார். இந்தக் காருக்கான நுழைவு வரியை அவர் செலுத்த தாமதப்படுத்தியதாக கூறி வணிக வரித்துறை அபராதம் விதித்தது.

      இதற்கிடையே, விஜய் தரப்பில், ஏற்கனவே நுழைவு வரி செலுத்தப்பட்டுவிட்டது. அதிகப்படியான அபராதம் விதித்ததை எதிர்த்தே வழக்கு தொடர்ந்துள்ளேன். ஆகவே அபராதம் விதிப்பது தொடர்பான நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கூறி மனு தாக்கல் செய்தார்.

      இந்த மனு மார்ச் 14-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் விஜய்யின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்யவேண்டும் என வணிகவரித்துறை கூறியது. இது குறித்து மேலும் சில விபரங்களைக் கேட்ட நீதிபதி, நடிகர் விஜய் வழக்கின் தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

      இந்நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக உள்ளது.

      • உடனே மின் தடை ஏற்பட்டது
      • பரசேரி மின் வாரிய அலுவலக ஊழியர்கள் மின் கம்பத்தை சீரமைத்தனர்.

      கன்னியாகுமரி:

      கன்னியாகுமாரி மாவட்டம் நித்திரவிளை பகுதியிலிருந்து நேற்று மாலை நாகர்கோவிலுக்கு ஒரு சொகுசு கார் சென்று கொண்டிருந்தது.

      கார் கண்டன்விளை மொட்டவிளையை கடந்து பேயன்குழி அருகே செல்லும்போது திடீரென கட்டுப்பாடு இழந்து நிலைதடுமாறி தாறுமாறாக ஓடியது. சிறிது நேரத்தில் சாலையோரம் நின்ற மின் கம்பத்தில் மோதி ஒரு வீட்டு காம்பவுண்டு சுவரில் மோதி நின்றது.

      அப்போது அருகில் இருந்த ஒரு கடையின் முன்பக்கம் சேதமடைந்தது.கார் மின் கம்பத்தில் மோதியதில் மின் கம்பம் முறிந்து விழுந்தது. உடனே மின் தடை ஏற்பட்டதால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தில் காரை ஓட்டி வந்த நபருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.

      தகவலறிந்த பரசேரி மின் வாரிய அலுவலக ஊழியர்கள் விரைந்து சென்று மின் கம்பத்தை சீரமைத்து மின் விநியோகம் செய்தனர். பேயன்குழியில் சாலையில் தாறுமாறாக ஓடிய காரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

      ×