search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஷீட்டு"

    • தப்பி சென்ற மர்ம நபர்களுக்கு வலை வீச்சு
    • திருவட்டார் போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே மாஞ்சக்கோணம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 42). இவர் ரப்பர் ஷீட் மொத்த வணிகம் செய்து வருவதுடன், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வருகிறார்.

    இவரது ரப்பர் கடை மற்றும் குடோன் பிணந்தோடு பகுதியில் உள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை மர்ம நபர்கள் 2 பேர் ஒரு காரில் வந்து ரமேசின் குடோன் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த 2 பண்டல் ரப்பர் ஷீட்டுக்களை திருடியுள்ளனர். இதனை ரமேஷ் செல்போனில் இணைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா வழியாக நாகர்கோவிலில் இருந்தவாறு கவனித்தார்.

    இதையடுத்து அவர் உடனடியாக குடோன் அருகில் உள்ள தனது வேலையாட்களுக்கு தகவல் கூறினார். அவர்கள் விரைந்து வந்து குடோனுக்கு சென்று அவர்களை பிடிக்க முயன்ற போது மர்ம நபர்கள், ரப்பர் ஷீட்டையும் ஓட்டி வந்த காரையும் விட்டு, விட்டு தப்பியோடி விட்டனர்.

    இது குறித்து ரமேஷ் குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் போலீசார் மர்ம நபர்கள் விட்டு சென்ற காரை பறிமுதல் செய்தனர். மேலும் மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

    திருவட்டார் அருகே தெங்குவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜப்பன் (61). இவருக்கு சொந்தமாக ரப்பர் மரங்கள் உள்ளது. இவர் வீட்டின் பின்பக்கம் அதனை உலற வைத்திருந்தார். ரப்பர் ஷீட்டுகளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.1500 ஆகும்.

    இதுகுறித்து திருவட்டார் போலீசில் ராஜப்பன் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் விசாரணை நடத்தி புலியிறங்கி பகுதியை சேர்ந்த பாலஸ் (55) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×