search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களியக்காவிளை அருகே  சொகுசு காரில் கேரளாவிற்கு கடத்த முயன்ற 2 டன் ரேசன் அரிசி பறிமுதல்
    X

    களியக்காவிளை அருகே சொகுசு காரில் கேரளாவிற்கு கடத்த முயன்ற 2 டன் ரேசன் அரிசி பறிமுதல்

    • சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர சோதனை
    • அரிசியை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கில் ஒப்படைப்பு

    கன்னியாகுமரி:

    தமிழக கேரள எல்லை ப்பகுதி வழியாக தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் மற்றும் மானிய மண்ணெண்ணைய் கடத்து வது தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதனால் சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று சப்-இன்ஸ்பெக்டர் ராஜக்க பெருமாள் தலைமையில் போலீசார் தீவிர சோதனை யில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது சோதனை சாவடி வழியாக சந்தேகப்படும் படி சொகுசு கார் ஒன்று வந்துக்கொ ண்டிருந்தது. அந்த காரை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டினர். போலீசாரை பார்த்ததும் டிரைவர் காரை சாலையில் நிறுத்தி விட்டு ஓடிவிட்டார் இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரை சோதனை செய்து பார்த்த போது 2 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டு பிடிக்க பட்டது.

    இந்த ரேஷன் அரிசி கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசார் கடத்தல் காரையும் ரேசன் அரிசியையும் உணவு தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    அவர்கள் கடத்தல் அரிசியை பறிமுதல் செய்து காப்பிக்காடு அரசு நுக ர்வோர் வாணிப கிடங்கிலும் கடத்தல் காரை தாலுகா அலுவலகத்திலும் ஒப்படை த்தனர். தப்பியோடிய டிரைவர் யார் என்று விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×