என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சிறுமி கற்பழிப்பு"
- ஜோதிடரின் அத்துமீறல் நாளுக்குநாள் அதிகரித்தபடியே இருந்துள்ளது.
- உடலளவில் பாதிக்கப்பட்ட சிறுமி, தனது நிலை குறித்து தன்னுடைய நண்பர்கள் சிலரிடம் கூறியிருக்கிறார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கம் டி.வி.புரம் பகுதியை சேர்ந்தவர் சுதர்சனன் (வயது56). ராணுவ வீரராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற இவர், தற்போது ஜோதிடராக இருந்து வருகிறார்.
பல ஆண்டுகளாக ஜோதிடம் பார்த்து வருவதால் அந்த பகுதியில் பிரபலமாக இருந்திருக்கிறார். இவரது நண்பர் ஒருவர் வைக்கம் பகுதியில் வசித்து வருகிறார். இதனால் அவர்களது வீட்டுக்கு சுதர்சனன் அடிக்கடி சென்று வந்திருக்கிறார்.
ஜோதிடரின் நண்பருக்கு 15 வயதில் ஒரு மகளும், மகனும் உள்ளனர். தந்தையின் நண்பர் என்பதால் ஜோதிடரின் வீட்டுக்கு சிறுவன்-சிறுமி இருவரும் அடிக்கடி சென்று வந்திருக்கிறார்கள். இந்நிலையில் சம்பவத்தன்று அவர்கள் இருவரையும் ஜோதிடர் தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்.
அவர்களும் வழக்கம் போல் ஜோதிடரின் வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள். அப்போது சிறுவனை இறைச்சி வாங்கி வருமாறு கூறி வீட்டில் இருந்து வெளியே ஜோதிடர் அனுப்பியிருக்கிறார். சிறுவன் சென்றபிறகு, வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு குடிக்க குளிர்பானம் கொடுத்துள்ளார்.
அதனை குடித்த சிறுமி சிறுது நேரத்தில் மயங்கி விட்டதாக தெரிகிறது. இதையடுத்து சிறுமியை தனது வீட்டுக்குள் தூக்கிச்சென்ற ஜோதிடர் சுதர்சனன், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் கடைக்கு சென்றிருந்த சிறுவன் திரும்பிவந்ததும், அறையில் இருந்த சிறுமியை மயக்கம் தெளியவைத்து வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டார்.
இந்நிலையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததை ஜோதிடர் சுதர்சனன் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்ததாக தெரிகிறது. அதனை காண்பித்து சிறுமியை பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த விவகாரத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என்று ஜோதிடர் மிரட்டியதால், அதுபற்றி தனது பெற்றோர் உள்ளிட்ட யாருக்கும் சிறுமி தெரிவிக்காமல் இருந்துள்ளார்.
ஆனால் ஜோதிடரின் அத்துமீறல் நாளுக்குநாள் அதிகரித்தபடியே இருந்துள்ளது. இதனால் உடலளவில் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி, தனது நிலை குறித்து தன்னுடைய நண்பர்கள் சிலரிடம் கூறியிருக்கிறார். அதனை அவர்கள், சிறுமி படிக்கும் பள்ளியின் ஆசிரியர்களிடம் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், சிறுமியின் தாயை அழைத்து சிறுமிக்கு நேர்ந்த கொடுமையை விளக்கினர். அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் குடும்பத்தினர், ஜோதிடர் சுதர்சனனிடம் சென்று கேட்டுள்ளனர்.
அப்போது தன்னிடம் உள்ள சிறுமியின் படுக்கையறை படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று கூறி மிரட்டியிருக்கிறார். சிறுமிக்கு நேர்ந்த கொடுமை குறித்து சைல்டுலைன் அமைப்பு மற்றும் வைக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட சிறுமி மாஜிஸ்திரேட்டு முன்பு ரகசிய வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து ஜோதிடர் சதர்சனனை போலீசார் கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்தனர்.
தந்தையின் நண்பர் என்பதை பயன்படுத்தி சிறுமியிடம் ஜோதிடர் சுதர்சனன் அத்துமீறியிருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
- இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமி ஒருவருடன் வாலிபருக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
- போலீசார் வழக்குப்பதிந்து அனூப்பை கைது செய்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பரவூர் பகுதியை சேர்ந்த வாலிபர் அனூப்(வயது23). இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமி ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த சிறுமியை நேரில் சந்தித்து பழகி வந்துள்ளார். அப்போது அந்த சிறுமியை அனூப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருக்கிறார்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து அனூப்பை கைது செய்தனர். இந்த வழக்கு பரவூர் விரைவு கோர்ட்டில் நடந்துவந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வாலிபர் அனூப்புக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், 15ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
- ஆசை வார்த்தை கூறி 14 வயது சிறுமியை முன்னாள் ராணுவ வீரர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
- புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு மகளிர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து லாரன்சை கைது செய்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டை சேர்ந்த 14 வயது சிறுமி அரசு பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் அந்த சிறுமி தனக்கு வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து பெற்றோர் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சென்று சோதனை செய்தபோது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்த போது அவர் கூறியது பெற்றோரை அதிர்ச்சி அடைய செய்தது.
இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்திய போது சிறுமியின் தாயார் திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் லாரன்ஸ்(வயது 65) என்பவர் வீட்டில் வீட்டு வேலை செய்து வந்தார். பள்ளி விடுமுறை நாளின் போது அந்த சிறுமி ராணுவ வீரர் வீட்டிற்கு சென்று சிறு சிறு வீட்டு வேலைகளை செய்து வந்துள்ளார்.
அவ்வாறு வேலைக்கு செல்லும்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முன்னாள் ராணுவ வீரர் லாரன்ஸ் சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதன் மூலம் அந்த சிறுமி 2 மாதம் கர்ப்பமானதும் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக திருப்பூர் வடக்கு மகளிர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து முன்னாள் ராணுவ வீரர் லாரன்சை கைது செய்தனர்.
- பாலியல் சித்திரவதைக்கு உள்ளானது குறித்து சிறுமி புகார் செய்தார்.
- குற்றம் சாட்டப்பட்ட பிஜூ பிரான்சிசுக்கு 4 பிரிவுகளுக்கு ஆயுள் தண்டனையும், 6 பிரிவுகளுக்கு 15 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி சோமன் தீர்ப்பு வழங்கினார்.
திருவனந்தபுரம்:
கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஞாறக்கல் வெளியதம்பரம்பு பகுதியை சேர்ந்தவர் பிஜூ பிரான்சிஸ் (வயது 41). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.
அந்த பெண்ணின் வீட்டிற்கு பிரான்சிஸ் அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அந்த பெண்ணின் மகளான 11 வயது சிறுமி மீது அவருக்கு ஆசை ஏற்பட்டுள்ளது. அந்த சிறுமியை அவர் ஓராண்டு காலமாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கிறார்.
இதற்கு இந்த சிறுமியின் தாயும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. பாலியல் சித்திரவதைக்கு உள்ளானது குறித்து சிறுமி புகார் செய்தார். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிந்து போக்சோ சட்டத்தின் கீழ் பிஜூ பிரான்சிசை கைது செய்தனர்.
அவர் மீது 10 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கு எர்ணாகுளம் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது.
அதில் குற்றம் சாட்டப்பட்ட பிஜூ பிரான்சிசுக்கு 4 பிரிவுகளுக்கு ஆயுள் தண்டனையும், 6 பிரிவுகளுக்கு 15 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி சோமன் தீர்ப்பு வழங்கினார். மேலும் அவருக்கு ரூ 5.50 லட்சம் அபராதமும் விதித்தார்.
சிறைதண்டனையை பிஜூ பிரான்சிஸ் ஒரே நேரத்தில் அனுபவிக்கலாம் என்றும், அபராத தொகையை சிறுமிக்கு செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க மாவட்ட சட்டபணிகள் ஆணையத்துக்கு உத்தரவிட்டார்.
மேலும் நீதிபதி தனது கருத்தில், இது போன்ற சம்பவம் மிகவும் கொடூரமானது. அதனால் தான் கடுமையான தண்டனை விதிக்கப்படுகிறது என்று தெரிவித்தார். கேரளா மாநிலத்தில் சமீபத்திய போக்சோ வழக்குகளில், தற்போது வழங்கப்பட்ட தண்டனையே அதிகபட்ச தண்டனை என்று கூறப்படுகிறது.
- வீடியோ காட்சிகளை அடிப்படையாக வைத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கற்பழித்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.
- வீடியோ பதிவு செய்ய பயன்படுத்திய மொபைல் கேமிராவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
டெல்லியில் உள்ள புராரி பகுதியை சேர்ந்த 68 வயது முதியவர் ஒருவருக்கும், அவரது 40 வயது மகனுக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் தந்தை தனக்கு சூனியம் செய்வதாக அவரது மகன் சந்தேகப்பட்டுள்ளார். இதனை கண்டுபிடிப்பதற்காக அவர் வீட்டிலேயே தந்தைக்கு தெரியாமல் அவரை கண்காணிப்பதற்காக வீட்டில் மொபைல் கேமிரா பொருத்தி உள்ளார்.
இந்நிலையில் அந்த கேமிராவில் பதிவான காட்சிகளை பார்த்த மகனுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அந்த முதியவர் பக்கத்து வீட்டை சேர்ந்த ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்வது மொபைல் கேமிராவில் பதிவாகி இருந்தது.
இதை பார்த்த மகன் அதிர்ச்சியடைந்தார். பின்னர் வீடியோவில் இருக்கும் பெண் குறித்து அவர் விசாரித்த போது தான் அது பக்கத்து வீட்டை சேர்ந்த 16 வயது சிறுமி என்பதும், அந்த சிறுமியை முதியவர் ஆசை வார்த்தைகள் கூறி வீட்டுக்கு வரவழைத்து ஒரு அறைக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.
இதையறிந்த முதியவரின் மகன் வீடியோ காட்சிகளை பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தைக்கு அனுப்பி உள்ளார். இதைப்பார்த்து சிறுமியின் தந்தை அதிர்ச்சியடைந்தார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக போலீசில் எதுவும் புகார் அளிக்க வேண்டாம் எனவும் அவர் சிறுமியை மிரட்டி உள்ளார். எனினும் சிறுமியின் தந்தை இதுபற்றி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
பின்னர் வீடியோ காட்சிகளை அடிப்படையாக வைத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கற்பழித்த முதியவரை கைது செய்தனர். மேலும் சிறுமியின் தந்தையை மிரட்டியதாக அவரின் மகனையும் போலீசார் கைது செய்தனர்.
இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், கைதான முதியவர் சிறுமியின் குடும்பத்தினருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். அப்போது சிறுமியிடம் நைசாக பேசி அவரை பலாத்காரம் செய்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 20-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. கைதான முதியவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல சம்பவத்தை வீடியோ பதிவு செய்து பகிர்ந்ததற்காகவும், அதனை மறைத்து வைத்து மிரட்டியதற்காகவும் அவரது மகனும் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீடியோ பதிவு செய்ய பயன்படுத்திய மொபைல் கேமிராவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.
- சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
- மதுவுக்கு அடிமையான தந்தை தலைமறைவாக இருப்பதாக அறிந்த போலீசார் அவரை தேடிவருகின்றனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கிராம பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி.
இவரது தாய் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் தந்தை மதுவுக்கு அடிமையானார். இதன்காரணமாக அந்த சிறுமியை பாதுகாக்கா யாரும் இல்லாமல் தனிமை இருப்பதுபோல் வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் சிறுமியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த ஊர் பொதுமக்கள் அந்த சிறுமியின் தந்தையையும் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
அதில் 4 பேர் 17 வயது சிறுமியிடம் பாலியல் தொடர்பு கொண்டதாகவும் அதனால் அச்சிறுமி 4 மாத கர்ப்பம் ஆனதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த பாலியல் தொடர்பில் இருந்த தனது உடன்பிறந்த அண்ணன் மற்றும் பெரியப்பா மகன், உறவினர் சந்திரசேகரன் (42), தமிழ்வண்ணன் (29) ஆகிய 4 பேரும் சிறுமியை சீரழித்தது என தெரியவந்தது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் ஊத்தங்கரை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சிறுமியின் 2 அண்ணன்கள், சந்திரசேகரன், தமிழ்வண்ணன் ஆகிய 4பேர் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவர்கள் 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் அந்த சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் மதுவுக்கு அடிமையான தந்தை தலைமறைவாக இருப்பதாக அறிந்த போலீசார் அவரை தேடிவருகின்றனர். இச்சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சிறுமி வீட்டிற்கு பின்புறம் உள்ள மாட்டுக்கொட்டைக்கு சென்றார்.
- ரவீந்தர் சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டம், போத்தன் நகர், ஷக்கர் பகுதியை சேர்ந்தவர் 13 வயது சிறுமி.
சிறுமி தனது குடும்பத்தினருடன் வீடு வீடாக சென்று உணவு வாங்கி வந்து சாப்பிட்டு வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாலை 6 மணி அளவில் சிறுமி வீடு வீடாக சென்று உணவு சேகரித்து கொண்டு இருந்தனர்.
அப்போது அதே பகுதியில் உள்ள ரவீந்தர் என்பவர் வீட்டிற்கு சென்றார். சிறுமி வீட்டிற்கு வெளியே நின்று கொண்டு உணவு வழங்குமாறு கேட்டார். அப்போது வீட்டில் இருந்து வெளியே வந்த ரவீந்தர் வீட்டிற்கு பின்புறம் உள்ள மாட்டு கொட்டகைக்கு வந்தால் உணவு வழங்குவதாக கூறினார்.
இதையடுத்து சிறுமி வீட்டிற்கு பின்புறம் உள்ள மாட்டுக்கொட்டைக்கு சென்றார். அங்கு வந்த ரவீந்தர் சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார்.
வீட்டிற்கு சென்ற சிறுமி தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து பெற்றோரிடம் கூறினார். அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் ரவீந்தரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- வேலைக்கு சேர்ந்த மறுநாளில் இருந்து சிறுமியிடம் இருந்து அவரது தாயாருக்கு எந்த தகவலும் வரவில்லை.
- சிறுமியின் தாய் மீண்டும் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மில்லுக்கு வந்து தனது மகள் குறித்து விசாரித்தார்.
கோபி:
திருவண்ணாமலை மாவட்டம் சீனதங்கல் என்ற பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவர் இறந்து விட்டதால் அந்த பெண்ணுக்கும் அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி பரசுராமன் (41) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் அந்த பெண் 17 வயதான தனது மகளுக்கு வேலை தேடி வந்தார். அப்போது ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் உள்ள ஒரு மில்லில் வேலை இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு அந்த பெண் தனது மகளை கோபிசெட்டிபாளையம் அருகில் உள்ள மில்லுக்கு அழைத்து வந்தார். அவர் தனக்கு உதவியாக கள்ளக்காதலன் பரசுராமனையும் அழைத்து வந்தார். பின்னர் மகளை மில்லில் விட்டு விட்டு அவர்கள் மீண்டும் திருவண்ணாமலைக்கு சென்று விட்டனர்.
இந்த நிலையில் வேலைக்கு சேர்ந்த மறுநாளில் இருந்து சிறுமியிடம் இருந்து அவரது தாயாருக்கு எந்த தகவலும் வரவில்லை. இதையடுத்து சிறுமியின் தாய் மீண்டும் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மில்லுக்கு வந்து தனது மகள் குறித்து விசாரித்தார்.
அப்போது சிறுமி வேலைக்கு சேர்ந்த மறுநாளே பரசுராமன் வந்து அழைத்து சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் இது குறித்து கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கவிதாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் மேனகா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சிறுமி மற்றும் சிறுமியை கடத்தி சென்ற பரசுராமனை தேடிவந்தனர். அப்போது அவர்கள் திருப்பூரில் ஒரு வீட்டில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் திருப்பூர் விரைந்து சென்று சிறுமியை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தாயின் கள்ளக்காதலன் பரசுராமனை போச்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து ஈரோடு மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
- அனாதை இல்லத்தில் 4 சிறுமிகள் உள்பட 12 பேர் தங்கி இருக்கின்றனர்.
- போக்சோ மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின்கீழ், பூர்ணானந்தா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
விசாகப்பட்டினம்:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சுவாமி ஞானானந்தா ஆசிரமம் நடத்தி வருபவர் சுவாமி பூர்ணானந்தா. அந்த ஆசிரமத்தில், அனாதை இல்லமும், முதியோர் இல்லமும் இயங்கி வருகின்றன.
அனாதை இல்லத்தில் 4 சிறுமிகள் உள்பட 12 பேர் தங்கி இருக்கின்றனர். அவர்களில், 15 வயதான ஒரு சிறுமி, விஜயவாடாவில் சாமியார் மீது போலீசில் புகார் கொடுத்தார்.
தன்னை சுவாமி பூர்ணானந்தா சித்ரவதை செய்ததாகவும், திரும்ப திரும்ப பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.
அதன் அடிப்படையில், போக்சோ மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின்கீழ், பூர்ணானந்தா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவரை நேற்று கைது செய்தனர்.
- பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி உயிரிழந்ததால் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து செந்திலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே உள்ள வாகையூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் என்கிற செந்தாமரை (வயது 43). இவர் அதே பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 9-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமி தனது தந்தையிடம் கூறி விட்டு திடீரென வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
உடனே பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்த சிறுமியை மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து செந்திலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சிறுமி இறந்தார். இதனை தொடர்ந்து கைதான செந்திலுக்கு ஜாமீன் வழங்க கூடாது. கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம பெண்கள் திட்டக்குடி-ராமநத்தம் மாநில நெடுஞ்சாலையில் வாகையூரில் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த ராமநத்தம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
கைது செய்யப்பட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த மறியல் காரணமாக ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- ஒரு கும்பல் சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து சித்ரவதை செய்தது மட்டுமில்லாமல் அந்த சிறுமியை 15 பேருக்கு விற்பனை செய்துள்ளது.
- கைதான அசோக் பட்டேல் கும்பலின் தலைவராக செயல்பட்டுள்ளார்.
அகமதாபாத்:
குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள கன்பா கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமானார்.
புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வந்த நிலையில் காந்தி நகர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் அந்த சிறுமியை மீட்டனர். சிறுமியிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
ஒரு கும்பல் அந்த சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து சித்ரவதை செய்தது மட்டுமில்லாமல் அந்த சிறுமியை 15 பேருக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி சிறுமியை விற்பனை செய்த கும்பலை சேர்ந்த அசோக் பட்டேல், அவரது மனைவி ரேணுகா (வயது 45), இவர்களது 16 வயது மகன் மற்றும் ரூபல் மெக்வான் (34) என்ற பெண் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இவர்களது கூட்டாளிகளான மான்சா பகுதியை சேர்ந்த மோதி சென்மா (50) மற்றும் பாலன்பூரை சேர்ந்த அம்ரத் தாகூர் (70), சேகர்சிங் சோலங்கி (34) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
கைதான அசோக் பட்டேல் இந்த கும்பலின் தலைவராக செயல்பட்டுள்ளார். மேலும் மெக்வான் சிறுமிகளை ஆசைவார்த்தை கூறி நைசாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் பின்னர் அந்த சிறுமிகளுக்கு நிறைய பரிசுகள் மற்றும் ஆடைகள் கிடைக்கும் என்று கூறி அவர்களை பலருக்கு விற்பனை செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
கடந்த 2015-ம் ஆண்டு முதலே இந்த கும்பல் இதே போன்று சிறுமிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி சம்பாதித்து வந்துள்ளனர்.
மேலும் சில சிறுமிகளை திருமண ஆசை காட்டி மணமகள் என கூறி ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள இந்த கும்பலின் கூட்டாளிகள் மூலம் பல ஆண்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது.
கடந்த 8 ஆண்டுகளில் இந்த கும்பல் 8 சிறுமிகளை கடத்தியதாக கூறப்படுகிறது. இந்த கும்பல் சிறுமிகளை தலா ரூ. 2 லட்சம் முதல் ரூ.2.5 லட்சம் வரை விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து கடத்தல் கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கும்பலின் பிடியில் உள்ள சிறுமிகளை மீட்பதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- வீட்டில் தனியாக இருந்த 9 சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கூலித் தொழிலாளி சந்தோஷை போலீசார் கைது செய்தனர்.
- சந்தோஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
கோவை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையை சேர்ந்தவர் 29 வயது இளம்பெண். இவர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது,
எனக்கு திருமணமாகி கணவரும் 9 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர். சம்பவத்தன்று நானும் எனது கணவரும் வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்றோம். வீட்டில் குழந்தைகள் மட்டும் தனியாக இருந்தனர்.
மதியம் 12.30 மணியளவில் எங்கள் பகுதியில் வசிக்கும் கூலித்தொழிலாளி சந்தோஷ் (வயது 23) என்பவர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார். பின்னர் அவர் எனது மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதில் அதிர்ச்சியடைந்த அவள் சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் வருவதற்கு வாலிபர் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
நான் வந்ததும் எனது மகள் நடந்த சம்பவத்தை என்னிடம் கூறி கதறி அழுதார். இதனை கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். எனவே வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து என் 9 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.
புகாரின் பேரில் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசார் வீட்டில் தனியாக இருந்த 9 சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கூலித் தொழிலாளி சந்தோஷை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்