search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "molested case"

    • அனாதை இல்லத்தில் 4 சிறுமிகள் உள்பட 12 பேர் தங்கி இருக்கின்றனர்.
    • போக்சோ மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின்கீழ், பூர்ணானந்தா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    விசாகப்பட்டினம்:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சுவாமி ஞானானந்தா ஆசிரமம் நடத்தி வருபவர் சுவாமி பூர்ணானந்தா. அந்த ஆசிரமத்தில், அனாதை இல்லமும், முதியோர் இல்லமும் இயங்கி வருகின்றன.

    அனாதை இல்லத்தில் 4 சிறுமிகள் உள்பட 12 பேர் தங்கி இருக்கின்றனர். அவர்களில், 15 வயதான ஒரு சிறுமி, விஜயவாடாவில் சாமியார் மீது போலீசில் புகார் கொடுத்தார்.

    தன்னை சுவாமி பூர்ணானந்தா சித்ரவதை செய்ததாகவும், திரும்ப திரும்ப பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.

    அதன் அடிப்படையில், போக்சோ மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின்கீழ், பூர்ணானந்தா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவரை நேற்று கைது செய்தனர்.

    பலாத்காரம் செய்து சிறுமியை கொன்று புதைத்ததாக கூறப்பட்ட புகாரில் தேவைப்பட்டால் திருநாவுக்கரசு வீட்டில் மீண்டும் சோதனை நடத்துவோம் என்றும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். #PollachiAbuseCase
    கோவை:

    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசு, என்ஜினீயர் சபரிராஜன், சதிஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான மணிவண்ணன் அளித்த வாக்குமூலத்தில் பல பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்திருப்பதாக கூறினார்.

    இதைத் தொடர்ந்து 5 பேர் மீதும் கூடுதலாக இந்திய தண்டனை சட்டம் 376 (கற்பழிப்பு) பிரிவையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேர்த்துள்ளனர்.

    இந்த கும்பலால் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள், மாணவிகள் என 10-க்கும் மேற்பட்டோரை அடையாளம் கண்ட போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது நடந்த சம்பவங்கள் பற்றி அவர்கள் தெரிவித்தனர். ஆனால் எழுத்துப் பூர்வமாக புகார் தெரிவிக்க மறுத்து விட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக அவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்தி, புகார் பெறுவதற்கு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    பாலியல் கும்பல் பற்றி தகவல் தெரிந்தவர்கள் புகார் செய்யலாம் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒரு தொலைபேசி எண் அறிவித்திருந்தனர். அதில் 200-க்கும் மேற்பட்டோர் புகார் செய்த நிலையில் இதுவரை 140 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சிலரை இவ்வழக்கில் சாட்சியாக சேர்த்துள்ளனர்.

    கும்பலால் பாதிக்கப்பட்ட பெண்களின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், கடந்த மாதம் ஒரு ஆடியோவும் வெளியாகி இருந்தது. அதில் பேசிய பெண் ஒருவர் பொள்ளாச்சி கும்பலில் 8 பேர் வரை உள்ளதாகவும், இந்த கும்பல் ஒரு சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றதாவும், உடலை திருநாவுக்கரசின் வீட்டின் பின்புறம் புதைத்துள்ளதாகவும் கூறி இருந்தார்.


    இந்த ஆடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றியது யார்? என்பது குறித்து தகவல் கேட்டு யூ-டியூப், வாட்ஸ்அப் நிறுவனங்களுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடிதம் அனுப்பினர். அதற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை. எனவே அந்த ஆடியோவின் உண்மைத் தன்மை குறித்து விசாரணையில் இறங்கி உள்ளனர். இது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

    இவ்வழக்கில் குற்ற பத்திரிகை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த மாதம் சமூக வலைதளத்தில் வெளியான ஒரு ஆடியோ குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் திருநாவுக்கரசு வீட்டில் மீண்டும் சோதனை நடத்துவோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #PollachiAbuseCase
    கேரள கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பிஷப் பிராங்கோ முல்லக்கல் மீது கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #KeralaNun #FrancoMulakkal
    திருவனந்தபுரம்:

    பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பி‌ஷப்பாக இருந்தவர் பிராங்கோ. இவரது கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த கேரள மாநிலம் கோட்டயம் குரு விலங்காடு கன்னியாஸ்திரிகள் மடத்தை சேர்ந்த ஒரு கன்னியாஸ்திரி தன்னை பி‌ஷப் பிராங்கோ மிரட்டி கற்பழித்து விட்டதாக பரபரப்பு புகார் கூறினார்.

    மேலும் பிராங்கோவை கைது செய்ய கோரி அந்த மடத்தை சேர்ந்த கன்னியாஸ்திரிகளும் போராட்டத்தில் குதித்தனர். இதைத்தொடர்ந்து பி‌ஷப் பிராங்கோ கடந்த அக்டோபர் மாதம் 24-ந்தேதி கைது செய்யப்பட்டார்.

    24 நாள் சிறைவாசத்திற்கு பிறகு பிராங்கோ தற்போது ஜாமீனில் வெளிவந்து உள்ளார். ஆனாலும் அவர் மீதான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதில் போலீசார் தாமதம் செய்வதாக கூறி மீண்டும் கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் பி‌ஷப் பிராங்கோ மீது பாலா முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 1400 பக்கம் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில் 83 சாட்சியங்களும் இணைக்கப்பட்டு உள்ளது.

    இயற்கைக்கு மாறான உறவு, சிறை வைத்து மிரட்டல் உள்பட 5 பிரிவுகளில் பிராங்கோ மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. இந்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் பிராங்கோவுக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.  #KeralaNun #FrancoMulakkal
    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசுக்கு ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. #PollachiAbuseCase #PollachiAssaultCase #JusticeforWomen
    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜோதிநகரை சேர்ந்தவர் சபரி என்கிற ரிஷ்வந்த் (வயது 25).சிவில் என்ஜினீயர். இவர் பொள்ளாச்சி பகுதியில் வசிக்கும் தனியார் கல்லூரி மாணவியுடன் பேஸ்புக்கில் பழகி வந்துள்ளார். நாளடைவில் தொலைபேசியில் பேசும் அளவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 12-ந் தேதி கல்லூரி மாணவியை ஊஞ்சவேலாம்பட்டியில் காத்திருக்குமாறு சபரி தெரிவித்துள்ளார். ஊஞ்சவேலாம்பட்டிக்கு தனது நண்பர்கள் வசந்தகுமார் (24), சதீஸ்குமார் (28) திருநாவுக்கரசு ஆகியோருடன் காரில் சென்ற சபரி காரில் மாணவியை தாராபுரம் சாலையில் அழைத்து சென்று செல்போனில் ஆபாச வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.

    அந்த புகைப்படத்தை காட்டி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடமுயன்றுள்ளனர். மேலும் மாணவியின் கழுத்தில் இருந்த ஒரு பவுன் நகையை பறித்து கொண்டு தேவைப்படும் போது பணம் தர வேண்டும் எனவும் மிரட்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது. மாணவி கூச்சலிடவே தாராபுரம் சாலையில் பெரியாக்கவுண்டனூர் பகுதியில் இறக்கி விட்டு சென்றுள்ளனர்.



    அங்கிருந்து தப்பித்து வீடு திரும்பியவரை திருநாவுக்கரசு மற்றும் குழுவினர் தொடர்ந்து போன் செய்து மிரட்டி வந்துள்ளனர். இதையடுத்து மாணவி பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, கடந்த மாதம் 25-ந் தேதி காலை சபரி, வசந்தகுமார், சதீஸ்குமார் ஆகியோரை கைதுசெய்தனர்.

    பின்னர் 3 பேரையும் பொள்ளாச்சி ஜே.எம்.1., நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 3 பேரின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிந்த நிலையில் 3 பேரும் பொள்ளாச்சி ஜே.எம்.1 மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி வரும் 25-ந் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார்.

    ஆபாச வீடியோ வழக்கில் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் திருநாவுக்கரசு கடந்த 5-ந் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், திருநாவுக்கரசுவுக்கு ஜாமீன் கேட்டு அவரது தாயார் லதா பொள்ளாச்சி ஜே.எம்.1., கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இன்று ஜாமின் மனு விசாரணைக்கு வந்தது.  அப்போது, அவரது ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    குற்றச்சாட்டுகளின் தன்மையின் அடிப்படையிலும், சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளதாகவும் கருதுவதாலும் அவருக்கு ஜாமின் மறுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.   #PollachiAbuseCase #PollachiAssaultCase #JusticeforWomen 
    பொள்ளாச்சி பாலியல் வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றக் கோரி தி.மு.க. சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடக்கிறது. #PollachiAssaultCase
    கோவை:

    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் புகார் கொடுத்த மாணவியின் அண்ணனை மிரட்டிய வழக்கில் கைதான பார் நாகராஜ் உள்பட 4 பேரும் ஜாமீனில் வெளிவந்தனர். இது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளது.

    இதைத்தொடர்ந்து இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றக் கோரி தி.மு.க. சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடக்கிறது. தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், மகளிர் அணியினர் கலந்து கொள்கின்றனர்.

    மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி கோவை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்திய மாணவர் சங்கம் சார்பில் கோவை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். #PollachiAssaultCase
    பொள்ளாச்சி பாலியல் பலாத்கார விவகாரத்தில் ஆளுங்கட்சியினருக்கு எதிராக பேசி அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் என பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரர் கேட்டுக்கொண்டுள்ளார். #PollachiAssaultCase
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி ஒருவரை காரில் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதிஷ், வசந்த குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கில் புகார் கொடுத்த மாணவியின் அண்ணனை மிரட்டிய வழக்கில் செந்தில், ஆச்சிப்பட்டி வசந்த குமார், நாகராஜ், பாபு ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். மாணவி பாலியல் பலாத்காரம் வழக்கில் அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

    இந்த நிலையில் பாலியல் புகார் கொடுத்த மாணவியின் சகோதரர் ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    திருநாவுக்கரசு, சபரிராஜன் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடர்ந்தது நாங்கள்தான். சுயநலத்திற்காக வழக்கு தொடரவில்லை. எனது தங்கை பாதிக்கப்பட்டதுபோன்று வேறு எந்த பெண்ணும் பாதிக்கப்படக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில்தான் வழக்குதொடர்ந்தோம்.

    வழக்கின் ஆதாரமான வீடியோவை போலீசில் ஒப்படைத்தோம். பொள்ளாச்சி சட்டப்பேரவை உறுப்பினரிடம் தெரிவித்தவுடன் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுத்து 3 பேரை கைது செய்தனர்.

    ஆளுங்கட்சியினர் எங்களுக்கு உதவியாக உள்ளனர். ஒரு சில அரசியல் வி‌ஷமிகள் தங்கள் அரசியல் நோக்கத்திற்காக தேர்தல் தேதி அறிவித்தவுடன் ஆளும்கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த இணையத்தில் அவதூறு பரப்புகின்றனர்.

    இப்படி அவதூறு பரப்புபவர்களுக்கு நான் ஒன்று கூறிக்கொள்கிறேன். உங்களிடம் குற்றம் செய்ததற்கான ஆதாரம் இருந்தால் அதை காவல்துறையிடம் கொடுங்கள். அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். உங்களுக்கு தோன்றுவதையோ, ஆளுங்கட்சியினர் மீது எவ்வளவு கெட்டபெயர் ஏற்படுத்தமுடியுமோ அந்த அளவிற்கு இணையத்தில் தவறான பதிவுகளை போடாதீர்கள். உங்களால் முடிந்தால் அந்த 4 பேருக்கும் தூக்கு தண்டனை வாங்கித்தர போராடுங்கள். அரசியல் ஆதாயம் தேடாதீர்கள்.

    இவ்வாறு வீடியோவில் பேசியுள்ளார். #PollachiAssaultCase

    பொள்ளாச்சி கும்பலிடம் சிக்கிய மாணவிகள் மற்றும் பெண்கள் குறித்த வீடியோ காட்சிகளை கொண்டு பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். #PollachiAssaultCase
    கோவை:

    சமூக வலைதளங்கள் மூலம் மாணவிகள், இளம்பெண்களை வலையில் வீழ்த்திய பொள்ளாச்சியை சேர்ந்த ஒரு கும்பல் அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பணம், நகை பறித்த வழக்கில் தினந்தோறும் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி வருகிறது.

    இதுதொடர்பாக கல்லூரி மாணவி ஒருவர் அளித்த புகாரின்பேரில் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்த பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசு(27), என்ஜினீயர் சபரி ராஜன்(25), சதீஷ்(28), வசந்தகுமார்(24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    மாணவியின் அண்ணனை மிரட்டியதாக பார் நாகராஜ், பாபு, செந்தில், ஆச்சிப்பட்டியை சேர்ந்த வசந்தகுமார் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் மணிகண்டன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கைதானவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்களில், ஏராளமான இளம்பெண்களின் புகைப்படங்கள், ஆபாச வீடியோக்கள் இருந்தன. அதில் சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியது.

    அந்த வீடியோவில், ஒரு இளம்பெண்ணை கும்பல் நிர்வாணப்படுத்துவதும், பெல்ட்டால் அடித்து துன்புறுத்துவதும் போன்ற காட்சிகள் இருந்தன. கும்பலிடம் சிக்கிய அந்த இளம்பெண் ‘அண்ணா என்னை விட்டுருங்கண்ணா, உன்னை நம்பி தானே வந்தேன், ஏன் இப்படி செய்கிறீர்கள்?’ என கதறுகிறார். இதேபோல எண்ணற்ற பெண்களை கும்பல் ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய தகவல்கள் வெளியாகி வருகிறது.

    கும்பலிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வீடியோ அடிப்படையில் இவர்களால் பாதிக்கப்பட்ட பெண்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    இதில் புகார் கொடுத்த மாணவியுடன், ஆனைமலை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ள போலீசார், அவர்களுக்கு தேவையான கவுன்சிலிங்கும் அளிக்கின்றனர்.

    இந்த கும்பலால் பாதிக்கப்பட்டவர்களில் சென்னையை சேர்ந்த பெண் டாக்டர், கோவையை சேர்ந்த பல்கலை கழக பேராசிரியை என 50-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். கைதானவர்களின் செல்போன்களில் இவர்கள் குறித்த வீடியோக்கள் இல்லை. அந்த வீடியோக்களை அழித்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    தற்போது, அந்த செல்போன்களை ஆய்வகத்துக்கு போலீசார் அனுப்பி உள்ளனர். ‘ரெக்கவரி சாப்ட்வேர்’ மூலம் அந்த செல்போன்களில் இருந்து அழிக்கப்பட்ட வீடியோக்களை திரும்பப் பெற்று, அதில் உள்ள பெண்களை அடையாளம் கண்டு, அவர்களிடம் இருந்து வாக்குமூலம் பெற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த கும்பல் கடந்த 7 வருடங்களில் 100-க்கும் மேற்பட்ட பெண்களை தங்களது வலையில் வீழ்த்தி, பலாத்காரம் செய்து வீடியோ எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த கும்பலின் பின்னணியில் மேலும் பலர் இருப்பதாக கூறப்படும் நிலையில், கைதான 4 பேரை தவிர வேறு யாருக்கும் இவ்வழக்கில் தொடர்பு இல்லை என போலீசார் மறுக்கின்றனர்.

    இந்த வழக்கில் அரசியல் கட்சி பிரமுகர்கள் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களை தப்ப வைக்க போலீசார் முயற்சி செய்வதாகவும் சமூக ஆர்வலர்கள், மகளிர் அமைப்புகள், பொது மக்கள் குற்றம் சாட்டினர். இவ்வழக்கில் கைதானவர்கள் மீது சாதாரண பிரிவுகளிலேயே போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக பொள்ளாச்சியை சேர்ந்த வக்கீல்களும் குற்றம் சாட்டினர். #PollachiAssaultCase
    விஸ்வரூபம் எடுத்துள்ள பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கும்பல் தலைவனாக செயல்பட்ட திருநாவுக்கரசு கல்லூரியில் படிக்கும் போதே பிளே-பாயாக வலம் வந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. #PollachiAssaultCase
    பொள்ளாச்சி:

    விஸ்வரூபம் எடுத்துள்ள பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கும்பல் தலைவனாக செயல்பட்ட திருநாவுக்கரசு எம்.பி.ஏ. பட்டதாரி ஆவார்.

    வசதியான குடும்பத்தை சேர்ந்த இவர் தற்போது வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.

    சொகுசு கார், பண்ணைத் தோட்டம் என ஆடம்பரமாக வாழ்ந்து வரும் இவர் 2011-ம் ஆண்டு முதல் 2016- வரை கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்த போது ‘பிளே-பாயாக’ வலம் வந்துள்ளார்.

    இவரது தோழி ஒருவர் மூலமாக திருநாவுக்கரசுக்கு ஏராளமான மாணவிகளின் பழக்கம் கிடைத்துள்ளது. அவர்களிடம் இருந்து செல்போன் எண் வாங்கிய திருநாவுக்கரசு, அதனை தனது நண்பரும், என்ஜினீயருமான சபரிராஜனிடம் கூறி உள்ளார்.

    நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் சபரிராஜன் தனது பேச்சால் மாணவிகளை மயக்கி உள்ளார். தனது வலையில் சிக்கிய மாணவிகளை சபரிராஜன் ஜாலியாக ‘பிக்னிக்’ போகலாம் என அழைத்துள்ளார். அதை நம்பி வந்த மாணவிகளை சபரிராஜன், திருநாவுக்கரசின் காரில் ஏற்றி ஆள் நடமாட்டம் இல்லாத ஒதுக்குப்புறமான இடத்துக்கு அழைத்து சென்றுள்ளார்.

    அங்கு மாணவிகளிடம் சபரிராஜன் சில்மி‌ஷ லீலைகளை அரங்கேற்றுவதை திருநாவுக்கரசு மற்றும் அவரது நண்பர்கள் மறைந்து நின்று வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் அந்த வீடியோக்களை காட்டி மிரட்டி மாணவிகளை, திருநாவுக்கரசுக்கு சொந்தமான பண்ணைத் தோட்டத்துக்கு அழைத்து சென்று தங்களது இச்சைக்கு பலியாக்கி உள்ளனர்.

    படித்த, பணம் படைத்த வாலிபர்களான இவர்களிடம் கல்லூரி மாணவிகள் மட்டுமல்லாது, சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் உள்ள பெண்கள் மற்றும் குடும்பப் பெண்களும் சிக்கி சீரழிந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் மானம் கருதி போலீசில் புகார் கொடுக்காதது இந்த கும்பலுக்கு மேலும் வசதியாகி போய் விட்டது.

    தற்போது கைதாகி உள்ள திருநாவுக்கரசு, சபரிராஜன், ஜவுளிக்கடை அதிபர் சதீஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு பாண்டியராஜன் மேலும் கூறியதாவது:-

    இந்த வழக்கில் போலீஸ் விசாரணையில் எந்த பாரபட்சமும் காட்டவில்லை. கைதானவர்களின் செல்போன்களில் 4 வீடியோக்கள் மட்டுமே இருந்தது. அதில் உள்ள பெண்களை அடையாளம் காணவும், அவர்களிடம் இருந்து வாக்குமூலம் பெற்று இவ்வழக்கில் மேலும் ஆதாரங்களை திரட்டவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்தால் அவர்களின் பெயர் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். இந்த கும்பலுக்கு ஒரு பெண் உள்பட யார்-யாரெல்லாம் உதவி செய்தார்கள்? என்று விசாரித்து வருகிறோம். அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    பொதுவாக பெண்கள், மாணவிகள் சமூக வலை தளங்களில் தங்களுக்கு தெரியாதவர்களுடன் பழக வேண்டாம். தேவையில்லாதவர்கள் ‘பிரண்ட் ரிக்வஸ்ட்’ கொடுத்தால் அதை ஏற்க கூடாது. தங்களின் புகைப்படங்கள், வீடியோக்களை தெரியாதவர்களுடன் பகிர வேண்டாம். அதையும் மீறி யாரேனும் தொந்தரவு செய்தால் தைரியமாக புகார் கொடுக்கலாம். உங்களது விவரங்கள் ரகசியமாக வைத்து, புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PollachiAssaultCase
    ஜலந்தர் பி‌ஷப்புக்கு எதிராக போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரிகள் வருகிற 26-ந் தேதிக்குள் ஜலந்தர் ரோமன் கத்தோலிக்க தலைவரை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. #KeralaNuns #bishop
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் அங்குள்ள கான்வென்டில் பணிபுரிந்து வருகிறார்.

    அவர் தன்னை பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பி‌ஷப்பாக பணியாற்றி வரும் பிராங்கோ என்பவர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக போலீசில் பரபரப்பு புகார் அளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக அதே கான்வென்டில் பணிபுரியும் 5 கன்னியாஸ்திரிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள். கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த பி‌ஷப்பை கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து பி‌ஷப் பிராங்கோ கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளி வந்துள்ளார்.

    இந்த நிலையில் உண்ணாவிரத போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரிகள் 5 பேரும் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டனர். ஆனால் அந்த கன்னியாஸ்திரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதை ஏற்க மறுத்துவிட்டனர். தங்களை பழிவாங்கவும், பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு நெருக்கடி கொடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினார்கள்.

    இதனால் இந்த விவகாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் கன்னியாஸ்திரிகளுக்கு ஜலந்தர் திருச்சபை தலைவர் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரிகளில் ஒருவரான நீனா ரோஸ், திருச்சபைக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டதாகவும், திருச்சபை மரபை மீறி செயல்பட்டதாகவும் குற்றம்சாட்டி உள்ளார். வருகிற 26-ந் தேதிக்குள் ஜலந்தர் ரோமன் கத்தோலிக்க தலைவரை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் கூறி உள்ளார்.

    இதற்கிடையே இடமாற்றம் செய்யப்பட்ட 5 கன்னியாஸ்திரிகளும் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு ஏற்கனவே பாதுகாப்பு கேட்டு கடிதம் எழுதியிருந்தனர். அதேபோல பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான கன்னியாஸ்திரியும் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு கேட்டு கடிதம் எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.  #KeralaNuns  #bishop
    நெய்வேலியில் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மாணவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த கூனங்குறிச்சி பகுதியை சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க கல்லூரி மாணவிக்கும், நெய்வேலி ஊ.மங்கலம் பகுதியை சேர்ந்த தொழிலாளி விஜய்(வயது 30) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    இந்தநிலையில் நேற்று காலை கல்லூரிக்கு சென்ற மாணவியை விஜய் ஏமாற்றி தனது மோட்டார் சைக்கிளில் ஆதண்டார்கொல்லை சாம்பல் ஏரி பகுதிக்கு அழைத்து சென்றார்.

    பின்னர் அந்த மாணவியை வலுகட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து கல்லூரி மாணவி நெய்வேலி தெர்மல் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் விஜய்மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். நெய்வேலி பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    அதில் கல்லூரி மாணவியை மோட்டார் சைக்கிளில் விஜய் அழைத்து செல்லும் காட்சி கேமராவில் பதிவாகியிருந்தது. இதைத் தொடர்ந்து விஜயை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த விஜய் தலைமறைவாகி விட்டார்.

    இதைத்தொடர்ந்து நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரவீந்தர்ராஜ், அம்பேத்கார், சப்-இன்ஸ்பெக்டர் கமலஹாசன் மற்றும் போலீசார் விஜயை பிடித்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் கல்லூரி மாணவியை விஜயும், கல்லூரி மாணவர்கள் 3 பேரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து விஜயையும், கல்லூரி மாணவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக திருவண்ணாமலை கோர்ட்டில் ரஷிய பெண் மீண்டும் ஆஜரானார். அப்போது வழக்கு விசாரணையை வருகிற 2-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் ரஷிய நாட்டை சேர்ந்த 21 வயது இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கீழ்பென்னாத்தூர் வேடநத்தம் பகுதியை சேர்ந்த நீலகண்டன் (வயது 35), அவரது தம்பி பாரதி (31), திருவண்ணாமலை செங்கம் ரோட்டை சேர்ந்த மணிகண்டன் (37), பாவாஜி நகரை சேர்ந்த வெங்கடேசன் (30) ஆகியோரை திருவண்ணாமலை டவுன் போலீசார் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

    இந்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட மகிளா கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த 14-ந் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது ரஷிய பெண் கோர்ட்டில் ஆஜராகி தனது தரப்பு வாதத்தை கூறினார். பின்னர் வழக்கு விசாரணையை 17-ந் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

    இதனையடுத்து நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள நீலகண்டன், பாரதி, மணிகண்டன், வெங்கடேசன் ஆகியோரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களிடம் நீதிபதி தேவநாதன் விசாரணை நடத்தினார்.

    மேலும் வழக்கு விசாரணை தொடர்பாக ரஷிய பெண் நேற்று மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடமும் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வருகிற 2-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
    பாலியல் பலாத்கார வழக்கில் நித்யானந்தாவை கைது செய்ய கர்நாடக ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. #Nithyananda
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம், பிடதியில் நித்தியானந்தா ஆசிரமம் உள்ளது. நித்யானந்தா மீது கற்பழிப்பு புகார் எழுந்தது. இதையடுத்து ராமநகர் மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை ராமநகர் கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்த வழக்கு விசாரணையின் போது நித்தியானந்தா ஆஜராகவில்லை. இதை அடுத்து அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து ராமநகர் கோர்ட்டு உத்தரவிட்டது. தனக்கு எதிரான பிடிவாரண்டு உத்தரவை ரத்து செய்யக்கோரி கர்நாடக ஐகோர்ட்டில் நித்தியானந்தா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனு நேற்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.அப்போது இந்த வழக்கு விசாரணையின்போது நித்தியானந்தாவை கைது செய்ய வேண்டாம் என்று வாய்மொழியாக அரசு வக்கீலுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்த மனு மீதான விசாரணை வருகிற 17-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

    ×