search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்சோ நீதிமன்றம்"

    • சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து சுல்தான் பச்சேரி போலீசார் விசாரணை நடத்தினர்.
    • சிறுமியை பலாத்காரம் செய்த கணபதி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் நூல்புழாவில் இருக்கும் கோயாலிபுரா பழங்குடியினர் குடியிருப்பில் உள்ள தேலம்பட்டா பகுதியை சேர்ந்தவர் கணபதி (வயது54). இவர் 16 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    பின்பு அதனை கூறியே மிரட்டி பல முறை சிறுமியை பாலியல் சித்ரவதைக்கு உள்ளாக்கியிருக்கிறார். அதுபற்றி யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டி தாக்கவும் செய்திருக்கிறார். இந்த தாக்குதலில் சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. மேலும் சிறுமியின் கண் பாதிக்கப்பட்டது.

    சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து சுல்தான் பச்சேரி போலீசார் விசாரணை நடத்தினர். சிறுமியை பலாத்காரம் செய்த கணபதி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். இந்த வழக்கு கல்பெட்டா போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது.

    இந்தநிலையில் அந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சுமத்தப்பட்ட கணபதிக்கு பாலியல் வன்கொடுமை, சித்ரவதை, மிரட்டல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 3 ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

    அபராதம் கட்ட தவறினால் கூடுதல் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கூறிய நீதிபதி, 3 ஆயுள் தண்டனைகளை ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    • பாலியல் சித்திரவதைக்கு உள்ளானது குறித்து சிறுமி புகார் செய்தார்.
    • குற்றம் சாட்டப்பட்ட பிஜூ பிரான்சிசுக்கு 4 பிரிவுகளுக்கு ஆயுள் தண்டனையும், 6 பிரிவுகளுக்கு 15 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி சோமன் தீர்ப்பு வழங்கினார்.

    திருவனந்தபுரம்:

    கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஞாறக்கல் வெளியதம்பரம்பு பகுதியை சேர்ந்தவர் பிஜூ பிரான்சிஸ் (வயது 41). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.

    அந்த பெண்ணின் வீட்டிற்கு பிரான்சிஸ் அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அந்த பெண்ணின் மகளான 11 வயது சிறுமி மீது அவருக்கு ஆசை ஏற்பட்டுள்ளது. அந்த சிறுமியை அவர் ஓராண்டு காலமாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கிறார்.

    இதற்கு இந்த சிறுமியின் தாயும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. பாலியல் சித்திரவதைக்கு உள்ளானது குறித்து சிறுமி புகார் செய்தார். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிந்து போக்சோ சட்டத்தின் கீழ் பிஜூ பிரான்சிசை கைது செய்தனர்.

    அவர் மீது 10 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கு எர்ணாகுளம் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது.

    அதில் குற்றம் சாட்டப்பட்ட பிஜூ பிரான்சிசுக்கு 4 பிரிவுகளுக்கு ஆயுள் தண்டனையும், 6 பிரிவுகளுக்கு 15 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி சோமன் தீர்ப்பு வழங்கினார். மேலும் அவருக்கு ரூ 5.50 லட்சம் அபராதமும் விதித்தார்.

    சிறைதண்டனையை பிஜூ பிரான்சிஸ் ஒரே நேரத்தில் அனுபவிக்கலாம் என்றும், அபராத தொகையை சிறுமிக்கு செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க மாவட்ட சட்டபணிகள் ஆணையத்துக்கு உத்தரவிட்டார்.

    மேலும் நீதிபதி தனது கருத்தில், இது போன்ற சம்பவம் மிகவும் கொடூரமானது. அதனால் தான் கடுமையான தண்டனை விதிக்கப்படுகிறது என்று தெரிவித்தார். கேரளா மாநிலத்தில் சமீபத்திய போக்சோ வழக்குகளில், தற்போது வழங்கப்பட்ட தண்டனையே அதிகபட்ச தண்டனை என்று கூறப்படுகிறது.

    • சிறுமிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த பகுதியை அதிகாரிகள் ஆய்வு செய்து, 5 சிறுமிகளை மீட்டனர்.
    • இரண்டு ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    வில்லியனூர் கீழ்சாத்தமங்கலத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவர் கோர்க்காடு ஏரிக்கரை பகுதியில் வாத்துப்பண்ணை நடத்திவருகிறார். மனைவி, மகன் மற்றும் உறவினர்கள் வாத்து பண்ணை பணிகளை கவனித்து வந்தனர். வாத்துகளை மேய்ப்பதற்காக புதுச்சேரியை ஒட்டி உள்ள தமிழக பகுதிகளில் இருந்து சிறுமிகளை வேலைக்கு வரவழைப்பது வழக்கம். இவ்வாறு வாத்து மேய்க்கும் சிறுமிகளை கொத்தடிமை போன்று அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு சித்ரவதைகள் செய்ததாக புகார் எழுந்தது.

    இதுதொடர்பாக குழந்தைகள் நல காப்பகத்தில் அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து குழந்தைகள் நல காப்பக அதிகாரிகள் வாத்துப் பண்ணைக்கு சென்று, சிறுமிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த பகுதியை ஆய்வு செய்து, அங்கிருந்த 5 சிறுமிகளை மீட்டனர். அவர்களிடம் விசாரித்தபோது அவர்களுக்கு கன்னியப்பன் மற்றும் அவரது உறவினர்கள் பாலியல் தொல்லை கொடுத்தாக தெரிவித்தனர்.

    இது தொடர்பாக 2020ஆம் ஆண்டு புதுச்சேரி போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்றது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

    5 சிறுமிகளும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டு, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், வாத்துப்பண்ணை உரிமையாளர் கன்னியப்பன், அவரது மகன் ராஜ்குமார், உறவினர்கள் பசுபதி, அய்யனார் உள்ளிட்ட 7 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். கன்னியப்பன் மனைவி சுபாவுக்கு ஆயுள் தண்டனையும், காத்தவராயன் என்பவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

    மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவருக்கு 7 லட்சம் ரூபாய் இழப்பீடும், மற்ற 4 பேருக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

    • விடுதி ஒன்றில் தங்கியிருந்த சண்முகவேல்ராஜ் அங்கு 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நெல்லை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
    • அதன் பேரில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சண்முகவேலை கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.

    நெல்லை:

    செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி விஷ்ணு பிரியா நகரை சேர்ந்தவர் சண்முகவேல்ராஜ் ( வயது 41).

    இவர் கடந்த 2013-ம் ஆண்டு நெல்லை வந்திருந்தார். அப்போது விடுதி ஒன்றில் தங்கியிருந்த இவர் அங்கு 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நெல்லை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

    அதன் பேரில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சண்முகவேலை கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.

    இது தொடர்பான வழக்கு நெல்லை போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சண்முக வேல்ராஜிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    ×