என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சிறுமியை கர்ப்பமாக்கிய 2 அண்ணன்கள் உள்பட 4 பேர் போக்சோவில் கைது
- சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
- மதுவுக்கு அடிமையான தந்தை தலைமறைவாக இருப்பதாக அறிந்த போலீசார் அவரை தேடிவருகின்றனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கிராம பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி.
இவரது தாய் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் தந்தை மதுவுக்கு அடிமையானார். இதன்காரணமாக அந்த சிறுமியை பாதுகாக்கா யாரும் இல்லாமல் தனிமை இருப்பதுபோல் வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் சிறுமியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த ஊர் பொதுமக்கள் அந்த சிறுமியின் தந்தையையும் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
அதில் 4 பேர் 17 வயது சிறுமியிடம் பாலியல் தொடர்பு கொண்டதாகவும் அதனால் அச்சிறுமி 4 மாத கர்ப்பம் ஆனதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த பாலியல் தொடர்பில் இருந்த தனது உடன்பிறந்த அண்ணன் மற்றும் பெரியப்பா மகன், உறவினர் சந்திரசேகரன் (42), தமிழ்வண்ணன் (29) ஆகிய 4 பேரும் சிறுமியை சீரழித்தது என தெரியவந்தது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் ஊத்தங்கரை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சிறுமியின் 2 அண்ணன்கள், சந்திரசேகரன், தமிழ்வண்ணன் ஆகிய 4பேர் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவர்கள் 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் அந்த சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் மதுவுக்கு அடிமையான தந்தை தலைமறைவாக இருப்பதாக அறிந்த போலீசார் அவரை தேடிவருகின்றனர். இச்சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






