search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய முன்னாள் ராணுவ வீரர் கைது
    X

    14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய முன்னாள் ராணுவ வீரர் கைது

    • ஆசை வார்த்தை கூறி 14 வயது சிறுமியை முன்னாள் ராணுவ வீரர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
    • புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு மகளிர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து லாரன்சை கைது செய்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டை சேர்ந்த 14 வயது சிறுமி அரசு பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் அந்த சிறுமி தனக்கு வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் கூறியுள்ளார்.

    இதையடுத்து பெற்றோர் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சென்று சோதனை செய்தபோது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்த போது அவர் கூறியது பெற்றோரை அதிர்ச்சி அடைய செய்தது.

    இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்திய போது சிறுமியின் தாயார் திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் லாரன்ஸ்(வயது 65) என்பவர் வீட்டில் வீட்டு வேலை செய்து வந்தார். பள்ளி விடுமுறை நாளின் போது அந்த சிறுமி ராணுவ வீரர் வீட்டிற்கு சென்று சிறு சிறு வீட்டு வேலைகளை செய்து வந்துள்ளார்.

    அவ்வாறு வேலைக்கு செல்லும்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முன்னாள் ராணுவ வீரர் லாரன்ஸ் சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    இதன் மூலம் அந்த சிறுமி 2 மாதம் கர்ப்பமானதும் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக திருப்பூர் வடக்கு மகளிர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து முன்னாள் ராணுவ வீரர் லாரன்சை கைது செய்தனர்.

    Next Story
    ×