search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபருக்கு சிறை தண்டனை"

    • இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமி ஒருவருடன் வாலிபருக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
    • போலீசார் வழக்குப்பதிந்து அனூப்பை கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பரவூர் பகுதியை சேர்ந்த வாலிபர் அனூப்(வயது23). இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமி ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த சிறுமியை நேரில் சந்தித்து பழகி வந்துள்ளார். அப்போது அந்த சிறுமியை அனூப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருக்கிறார்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து அனூப்பை கைது செய்தனர். இந்த வழக்கு பரவூர் விரைவு கோர்ட்டில் நடந்துவந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வாலிபர் அனூப்புக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், 15ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

    • அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.
    • கடந்த மாதம் 11-ந் தேதி பாலாஜி அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    கோவை:

    கோவை ராமநாதபுரம் புலியகுளம் ஏரிமேட்டை சேர்ந்தவர் பாலாஜி என்ற வெங்கடாசலம் (வயது24). இவர் மீது அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    இந்நிலையில் இவர், கடந்த மாதம் 9-ந் தேதி கோவை மாநகர (தெற்கு) போலீஸ் துணை கமிஷனர் முன்னிலையில் ஆஜராகி ஒரு வருட காலத்திற்கு எந்த குற்ற செயலிலும் ஈடுபட மாட்டேன் என சட்டப்பிரிவு 110 குற்ற விசாரணை நடைமுறை சட்டத்தின்படி, நன்னடைத்தை உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்துள்ளார்.

    ஆனால் அவர் அதனை மீறி மீண்டும் கடந்த மாதம் 11-ந் தேதி பாலாஜி அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதனைத்தொடர்ந்து நன்னடைத்தை உறுதிமொழி பத்திரத்தை மீறி குற்ற செயலில் ஈடுபட்ட அவரை அடுத்த ஆண்டு 8-5-2023 வரை 325 நாட்கள் ஜெயிலில் அடைக்க கோவை மாநகர (தெற்கு) போலீஸ் துணை கமிஷனர் சிலம்பரசன் உத்தரவிட்டார்.

    ×