என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சான்றிதழ்"
- 600-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
- மாணவர்கள் சிறப்பாக செய்து காண்பித்து சான்றிதழ் பெற்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் வின்னர் மல்டிமியூரல் அகாடமி மற்றும் ஹயாஷிகா கராத்தே கழகம் சார்பில் கராத்தே கலர் பெல்ட் கிரேடிங் தேர்வு ரெட்டிபாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் தஞ்சையில் உள்ள 15-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 600-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் மலேசியாவில் இருந்து வந்த கிராண்ட் மாஸ்டர் ஹன்சி டாக்டர் டோனி பொன்னையா தலைமையில் கராத்தே கிரேடிங் தேர்வு நடைபெற்றது.
இதில் மாணவர்கள் சிறப்பாக செய்து காண்பித்து தகுதிநிலை பெல்ட் மற்றும் சான்றிதழ் பெற்றனர்.
வின்னர் அகாடமியின் தலைமை பயிற்சியாளர் ஷிஹான் ராஜேஷ்கண்ணா தலைமையில் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பயிற்சியாளர்கள் சங்கீதா, அருண், கிருஷ்ண தேவராயன், ரோகித் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
- தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் அங்கிகரிக்கப் பட்ட வேலை வாய்ப்புடன் கூடிய 3 மாத கால இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
- 45 வயதுக்குள் உள்ளவர்கள் இந்த இலவச வேலை வாய்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
விழுப்புரம்:
விழுப்புரம்வழுத ரெட்டி யில் உள்ள இ.எஸ். தொழில் நுட்ப கல்லூரியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் அங்கிகரிக்கப் பட்ட வேலை வாய்ப்புடன் கூடிய 3 மாத கால இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியில் சேர்ந்து படிக்கும் அனைவரும் வேலை வாய்ப்புபெறலாம் என்று கல்லூரியின் தாளா ளர் செந்தில்குமார் தெரி வித்தார். முழுமையாக பயிற்சி முடித்த மாணவர்க ளுக்கு தமிழக அரசின் சான்றிதழ்வழங்கப் பட்டு வேலை வாய்ப்பு பெற்றுத்தர படும். இருச்சக்கர வாகனம் பழுது பார்த்தல், உதவி எலெக்ட்ரீசியன் பணிக ளுக்கு பயிற்சி அளிக்கப்படு கிறது.10-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்த 18 வயதுக்கு மேல் 45 வயதுக்குள் உள்ளவர்கள் இந்த இலவச வேலை வாய்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- கூட்டுறவு கடன் சங்கத்தில் 5 பவுனுக்கு கீழ் தங்க நகை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களுக்கு கடன் முழுமையாக தள்ளு படி செய்து கடந்த 2021 ல் தமிழக அரசு உத்தரவிட்டது.
- பேளுக்குறிச்சி கூட்டுறவு சடன் சங்கத்தில் மொத்தம் 311 நகைக்கடன் காரர்கள் இந்த திட்டத்தில் பயனாளிகளாக கண்டறியப்பட்டனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் கர்ணன், கடந்த 2 தினங்களுக்கு முன்பு மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது-
சேந்தமங்கலம் தாலுகா பேளுக்குறிச்சியில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் கோவிந்தராஜ் (55) என்பவர் கடந்த 2021 ஆண்டு முதல் பொறுப்பு செயலாளராக பணியாற்றி வருகிறார்.
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு கடன் சங்கத்தில் 5 பவுனுக்கு கீழ் தங்க நகை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களுக்கு கடன் முழுமையாக தள்ளு படி செய்து கடந்த 2021 ல் தமிழக அரசு உத்தரவிட்டது. 2021 மார்ச் 31-ந் தேதி வரை கடன் பெற்றவர்களுக்கு மட்டும் இந்த சலுகை என அரசு அறிவித்திருந்தது.
பேளுக்குறிச்சி கூட்டுறவு சடன் சங்கத்தில் மொத்தம் 311 நகைக்கடன் காரர்கள் இந்த திட்டத்தில் பயனாளிகளாக கண்டறியப்பட்டனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் செயலாளராக (பொறுப்பு) பணியாற்றிய கோவிந்தராஜ் சங்க உறுப்பினர் யுவராணியிடம் ரூ. 4 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் அவரது பெயரில் 29.1.2021 ந் தேதியில் 30 கிராம் தங்க நகையை வைத்து பெறப்பட்ட 99 ஆயிரம் கடனை தள்ளுபடி செய்து தருவதாக கூறி உள்ளார். மேலும் அதே சங்கத்தில் நகை கடன் பெற்றிருந்த கீர்த்தனா, சீனிவாசன், சந்திரா, பெருமாள், மற்றும் சிலம்பரசன் ஆகியோரிடமும் நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்டுள்ளார். மேலும் கந்த சாமி என்பவரிடம் நகைக்கடன் தள்ளுபடி செய்ய கடந்த 28.3.2022 அன்று ரூ.1500 லஞ்சமாக பெற்றுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
இந்த புகார் குறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. சுபாஷினி விசாரணை நடத்தினார். இதையடுத்து கோவிந்தராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரை கைது செய்யும் நடவடிக்கையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இறங்கி உள்ளனர்.
- மேலூர் அருகே மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி நடந்தது.
- ரோட்டின் இருபுறமும் சைக்கிள் பந்தய ரசிகர்கள் போட்டிகளை கண்டு களித்தனர்.
மேலூர்
77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்ட சைக்கிளிங் கழகம் சார்பாக சைக்கிளிங் சாம்பியன்ஷிப் 2023 போட்டி மேலூர் நாவினிபட்டியில் நடைபெற்றது. மேலூர் அரசு கலைக்கல்லூரி முன்னாள் மாணவர் பேரவை தலைவர் பொன் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
மேலூர் நகர் மன்ற தலைவர் முகமது யாசின், மதுரை மாவட்ட செயலாளர் மற்றும் தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேசன் சேர்மன் வல்லத்தரசன் முன்னிலை வகித்தார். மதுரை காவல்துறை கண்காணிப்பாளர் சிவ பிரசாத் போட்டியை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேசன் தலைவர் மற்றும் மதுரை மாவட்ட தலைவர் ராஜா, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத் துணைத் தலைவர் வி.வி.ஆர். ராஜ் சத்யன் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.மேலூர் தாலுகா ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் பாலகிருஷ்ணன், தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேசன் கெங்காதரன், மதுரை மாவட்ட சேர்மன் சின்னன், தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேசன் துணைத் தலைவர் ஜான்சன் கலைச்செல்வன், மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன், மேலூர் டி.எஸ்.பி ஆர்லியஸ் ரொபோனி, சப் இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
முதல் 3 இடங்களை வென்றோருக்கு சான்றி தழ்களும், பதக்கங்களும், கோப்பை களும் வழங்கப்பட்டது. போட்டி தூரத்தை நிறைவு செய்யும் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.
நடைபெற்ற போட்டியில் முதல் 2 இடங்களை வென்றவர் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள மாநில சாம்பியன்ஷிப் போட்டியில் மதுரை மாவட்டத்தின் சார்பில் கலந்து கொள்கிறார்கள். சைக்கிள் பந்தயத்தை ரோட்டின் இருபுறமும் சைக்கிள் பந்தய ரசிகர்கள் போட்டிகளை கண்டு களித்தனர்.
- 60 லட்சம் நிதி மதிப்பீட்டில் பணியினை மேற்கொள்ள நிர்வாகம் உத்தரவிட்டு அனுமதி வழங்கியுள்ளது .
- பாராட்டு சான்றிதழை மேயர் தினேஷ்குமார் மற்றும் கமிஷனர் பவன்குமார் ஆகியோர் வழங்கினர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவில் மேயர் தினேஷ்குமார் கொடியேற்றி வைத்து நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறந்த பணியாளர்களுக்கு விருது உள்ளிட்டவற்றை வழங்கினார்.
அப்போது திருப்பூர் மாநகராட்சி 22 - வது வார்டு குமரானந்தபுரம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளிக்கு "நமக்கு நாமே" திட்டத்தின் கீழ் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் சில நாட்களுக்கு முன்பு மேயரிடம் 20,07,500 ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது
அதன் அடிப்படையில் மாநகராட்சி மூலமாக நமக்கு நாமே திட்டத்தின் கீழ் இப்பொழுது 60 லட்சம் நிதி மதிப்பீட்டில் பணியினை மேற்கொள்ள நிர்வாகம் உத்தரவிட்டு அனுமதி வழங்கியுள்ளது .
அதற்காக திருப்பூர் மாநகராட்சியின் சார்பில் சிறப்பான சேவையை பாராட்டி 22 வது வார்டு கவுன்சிலரும், முன்னாள் மண்டல தலைவருமான ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டு சான்றிதழை மேயர் தினேஷ்குமார் மற்றும் கமிஷனர் பவன்குமார் ஆகியோர் வழங்கினர்.
நிகழ்ச்சியில் 21 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பத்மாவதி, 22 வது வட்ட கழக செயலாளர் ராஜ்குமார், வேலுசாமி, ஞானவேல், லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டு சான்றிதழை பெற்று கொண்டனர்.
- சிறப்பாக பணிபுரிந்து மாவட்ட நிர்வாகத்திற்கு பெருமை சேர்த்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள்.
- பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் 76-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கி தேசியக்கொடி ஏற்றி வைத்து, மூவர்ண பலூன்களை பறக்க விட்டார். தொடர்ந்து, கலெக்டர் தீபக் ஜேக்கப், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் ஆகியோர் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டனர்.
முன்னதாக சுதந்திர போராட்ட தியாகிகளை கலெக்டர் தீபக் ஜேக்கப் கவுரவித்தார். தொடர்ந்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
மேலும், பல்வேறு திட்ட பணியில் சிறப்பாக பணிபுரிந்து மாவட்ட நிர்வாகத்திற்கு பெருமை சேர்த்த 125 பேருக்கு கலெக்டர் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.
மேலும், போர், போரை ஒத்த நடவடிக்கையில் உயிரிழந்த மற்றும் ஊனமுற்ற படைவீரர்களுக்கான வருடாந்திர குடும்ப பராமரிப்பு மானியமாக 15 பேருக்கு ரூ.3 லட்சம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மின்கல இயங்கு வாகனம் ரூ.4.24 லட்சம் மதிப்பில் 4 பயனாளிகளுக்கும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் பங்கு பெற்று முதல் பரிசு மற்றும் 2-ம் பரிசு பெறும் பயனாளிகள் 4 பேருக்கு ரூ.40 ஆயிரம், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் ரூ.4.11 லட்சம் மதிப்பில் 5 பயனாளிகளுக்கும், தாட்கோ மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் ரூ. 1.01 கோடி மதிப்பில் 57 பயனாளிகளுக்கு என மொத்தம் 85 பயனாளிகளுக்கு ரூ.1.13 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார்.
பின்னர், பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
முடிவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், ஐ.ஜி. ஜெயச்சந்திரன், ஏ.டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன், கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், கோட்டாட்சியர், தாசில்தார், இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.
- தென்பரை அரசு பள்ளியில் குறுவட்ட அளவிலான சதுரங்கப்போட்டி நடைபெற்றது.
- வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழும் வழங்கப்பட்டது.
திருவாரூர்:
திருமக்கோட்டை அருகே உள்ள தென்பரை அரசு உயர்நிலைப் பள்ளியில் குறுவட்ட அளவிலான சதுரங்கப்போட்டி நடைபெற்றது.
இதற்கு பள்ளி தலைமை ஆசிரியை ராசாத்தி தலைமை தாங்கினார். கோட்டூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியை பாளையக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. இதில் மாநில சதுரங்க கழக துணைத்தலைவர் பாலகுணசேகரன் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழும் வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை தென்பரை அரசு உயர்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் பஞ்சாபிகேசன், பாளையக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.
- 1500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- முடிவில் மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் கேடயம் வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங் கண்ணியில் மாவட்டத்தில் முதன்முறையாக தனியார்பாரம்பரிய வீர சிலம்ப கழகம் சார்பில் 76 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய அளவிலான சிலம்பப் போட்டி நடைபெற்றது. இதில் ஜூனியர், சப் ஜூனியர் ,சீனியர் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடைபெற்ற இந்த போட்டியில் தமிழ்நாடு, கேரளா,பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் தனித்திறன் மற்றும் தொடு முறை, ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, மான்கொம்பு, சுருள்வாள், குத்துவரிசை உள்ளிட்ட போட்டிகள் நடுவர் மேற்பார்வையில் நடைபெற்றன. இதில் ஏராளமான சிறுவர்கள் உட்பட பலர் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர். தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அவர்கள் சர்வதேச அளவில் நடைபெறும் சிலம்பாட்ட போட்டிகளுக்கு தகுதி பெறுவது குறிப்பிடத்தக்கதாகும். நிகழ்ச்சியின் இறுதியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் கேடயம் வழங்கப்பட்டது.
- திருவாரூர் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான கவிதை போட்டி நடைபெற்றது.
- கலெக்டர் சாருஸ்ரீ மாணவனை பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கினார்.
மன்னார்குடி:
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி துறை சார்பில் திருவாரூர் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான கவிதை போட்டி நடைபெற்றது.
இதில் மன்னார்குடி கூட்டுறவு அர்பன் வங்கி நகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவன் யோகேஷ்ராஜ் 2-ம் இடம் பிடித்தார்.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ மாணவனை பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கினார்.
பின்னர், மாணவன் யோகேஷ்ராஜையும், அவரது பெற்றோரையும், மாணவனை போட்டிக்கு தயார் செய்த தமிழாசிரியர் ராசகணேசனையும், மன்னார்குடி நகர்மன்ற தலைவர் சோழராஜன், துணை தலைவர் கைலாசம் மற்றும் நகர்மன்ற உறுப்பினர் ஸ்ரீதர் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
- மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.
- இலவச பாஸ் கிடைப்பதற்காக சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி இன்று தஞ்சை மேம்பாலம் அரசு செவித்திறன் குறையுடையார் பள்ளியில் மத்திய மாவட்ட தி.மு.க மருத்துவர் அணி சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதற்கு மாநில மருத்துவர் அணி துணை அமைப்பாளரும் மாநகராட்சி துணை மேயருமான டாக்டர் அஞ்சுகம் பூபதி தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் டாக்டர் மோகன்ராஜ், மாவட்ட அமைப்பாளர் டாக்டர் வசந்தகுமார், மாவட்டத் தலைவர் டாக்டர் ராஜ் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த மருத்துவ முகாமை மத்திய மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
இதில் செவித்திறன் குறையுடைய மாணவ -மாணவிகளுக்கு பல்வேறு வகையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து செவித்திறன் குறையுடைய மாணவ- மாணவிகள் பஸ், ரயில்களில் இலவசமாக பயணம் செய்வதற்கும், டோல்கேட்டில் செல்லும் போது உடன் செல்பவர்களுக்கு இலவச கட்டணம் ஆகியவற்றிற்கான இலவச பாஸ் கிடைப்பதற்காக சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ, மாநகர செயலாளரும் மேயருமான சண் ராமநாதன், அவைத்தலைவர் இறைவன், செயற்குழு உறுப்பினர் செல்வம், பகுதி செயலாளர்கள் நீலகண்டன், சதாசிவம், கார்த்தி, ஒன்றிய செயலாளர்கள் முரசொலி, செல்வம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, நிர்வாகி தர்மராஜ், மருத்துவர் அணி நிர்வாகிகள் டாக்டர்கள் சதீஷ், சுரேஷ், ராஜா, விக்னேஷ், பாஷா, ராஜராஜன், காயத்ரி, பிரகாஷ், புவனேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ரத்த தான முகாம் நடந்தது.
- 20-க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காரைக்குடி தலைமை மருத்துவமனை மற்றும் த.மு.மு.க. சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ரமேஷ், நகராட்சி ஆணையாளர், காரைக்குடி தலைமை மருத்துவமனை மருத்துவர் அருள்தாஸ், தேவகோட்டை தலைமை மருத்துவமனை மருத்துவர் சிவதானு, தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் அன்சாரி உசேன், அகிலன் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் தேவகோட்டை, காரைக்குடி மருத்துவமனைகளில் இருந்து 20-க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர். ரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
- ஹாதியாவுக்கு ஜாதி, மதம் இல்லை என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
- அதிகாரிகளுக்கு இவ்வாறு சான்று அளிப்பது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை.
கோவை:
கோவை பீளமேடு காந்தி மாநகரை சேர்ந்தவர் பிரலோப். இவரது மனைவி பீனா பிரீத்தி. இவர்களுக்கு 3 வயதில் ஹாதியா என்ற மகள் உள்ளார்.
இந்த நிலையில் தங்களின் குழந்தைக்கு ஜாதி, மதம் இல்லை என்று குறிப்பிடும் வகையில் சான்றிதழ் வாங்க வேண்டும் என அவர்களது பெற்றோர் முடிவு செய்தனர்.
இதற்காக அவர்கள் கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தனர்.
விண்ணப்பங்களை பரிசீலித்த அதிகாரிகள் நேற்று பிரலோப்-பிரீத்தி தம்பதியின் குழந்தை ஹாதியாவுக்கு ஜாதி, மதம் இல்லையென்ற சான்றிதழ் வழங்கினர். அதில் ஹாதியாவுக்கு ஜாதி, மதம் இல்லை என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
எல்லோரும் இந்தியர்கள் என்ற மனநிலை மட்டும் இருந்தால் போதும். எங்கள் மகளை ஜாதி,மதம் என எதை வைத்தும் பிரிக்க வேண்டாம் என முடிவு செய்தோம்.
இவ்வாறு சான்று பெறுவதால் வருங்காலத்தில் ஜாதி ரீதியான இடஒதுக்கீடு உள்ளிட்ட எந்த சலுகையும் எங்கள் குழந்தை பெற இயலாது என்று தெரிந்து தான் விண்ணப்பித்தோம்.
சான்று பெற விண்ணப்பித்து, அதனை பெறுவதில், சிறிது காலதாமதம் ஏற்பட்டது. ஏன் இதை வாங்குகிறீர்கள் என நிறைய கேள்விகள் கேட்டனர். அதிகாரிகளுக்கு இவ்வாறு சான்று அளிப்பது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. தமிழக அரசு ஏற்கெனவே பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும்போது பெற்றோர் விருப்பப்பட்டால், மாற்று சான்றிதழில் ஜாதி, மதமில்லை என்று குறிப்பிடலாம். அல்லது அந்த கேள்விக்கான இடத்தை அப்படியே விட்டு விடலாம் என்று அரசாணை வெளியிட்டு உள்ளது. இது எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை.
எங்களை போல பலரும் தங்களின் குழந்தைகளுக்கு ஜாதி, மதம் இல்லாத சான்றிதழ் பெற விரும்புகின்றனர். ஆனால் இதற்காக எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றிய விவரம் அவர்களுக்கு முழுமையாக தெரியவில்லை. எனவே அரசாங்கம் இதுகுறித்து பொது மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்